உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுகாதார சீர்கேடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதார சீர்கேடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 18, 2011

புகையில் புகைகிறது கடலூர் நகரம் : புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கடலூர் கெடிலம் ஆற்றின் கரையில் எரிக்கப்படும் குப்பைகள்.
கடலூர்:

            குப்பைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லாமல், கொளுத்தப்படும் குப்பைகளால் கடலூர் நகரம் சுகாதாரக் கேட்டில் புதையுண்டு வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்டது கடலூர் நகராட்சி.

              நகராட்சியின் அருகில் உள்ள சில கிராமங்களை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக்கும் முயற்சி ஓராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டு, நின்று போயிற்று. சுகாதாரம் கெட்டுச் சீர்குலைந்து கிடக்கும் இந்த நகராட்சியுடன் இணையத் தயாரில்லை என்று, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கடலூர் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. 

               மக்கும் குப்பை மக்காத குப்பை என்றெல்லாம் அவ்வப்போது பேச்சு அடிபடுகிறது. ஆனால் குப்பைகளை அகற்றுவதற்கு, நவீன அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும், கடலூர் நகராட்சியிடம் இல்லை என்பதுதான் கடலூர் மக்களின் துரதிருஷ்டம். கடந்த 5 ஆண்டுகளில் இந்நகராட்சியின் 45 வார்டு உறுப்பினர்களும், அவர்களின் தலைவரும் அடிக்கடி கூடிக் கலைந்தார்களே தவிர, மக்களின் சுகாதாரம் பற்றியோ, குப்பைகளை நவீன முறையில் அகற்றுவது குறித்தோ, சற்றேனும் சிந்திதார்களா என்றால் இல்லை என்பதுதான் கடலூர் நகர மக்களின் குற்றச்சாட்டு. 

                 குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து, உரமாக மாற்றும் திட்டத்துக்கு, குண்டுசாலையிலும், கடலூர் முதுநகரிலும் சுமார் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டடங்கள், கட்டியநாள் முதல் செயலிழந்து கிடக்கிறது. கம்மியம்பேட்டையிலும், பச்சையாங்குப்பத்திலும் நகராட்சி குப்பை கொட்டும் இடங்கள், மேற்கொண்டு குப்பை கொட்ட இடமில்லாத அளவுக்கு, நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. குப்பைகளை அகற்றத் திட்டம் ஏதும் இல்லாததால், இந்த இரு இடங்களிலும், சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 

               இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 8 வார்டுகள் உள்ளிட்ட 45 வார்டுகளிலும், குப்பைகள் அகற்றும் பணிக்கு 200க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தும், துப்புரவுப் பணி முறையாக நடைபெறவில்லை. பிரதானச் சாலைகளில் குப்பைகளை ஓரளவுக்கு அகற்றுகிறார்களே தவிர, மற்றத் தெருக்களில் அகற்றுவதே இல்லை. தொழிலாளர்கள் திடீரென்று ஞானோதயம் பெற்றவர்கள்போல் சில தெருக்களுக்கு வருவதும், குப்பைகளை கூட்டி, அங்கேயே சில இடங்களில் போட்டு தீவைத்து எரிப்பதும், கடலூரில் வாடிக்கையான செயல். கடலூர் நகரில் ரயில்வே மேம்பாலத்தின் இரு முனைகளிலும் டயர்களைப் போட்டுக் கொளுத்துவதால் உருவாகும் புகை, வானில் 100 மீட்டர் வரை உயர்ந்து நிற்பதை அனுதினமும் காணமுடியும். 

             அதே போல் கெடிலம் மற்றும் பெண்ணை ஆற்றங்கரைகளில், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அங்கேயே எரிப்பதும் அன்றாட நிகழ்வாயிற்று. இதனால் காலை நேரங்களில் கடலூர் நகரமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. பல தெருக்களில் காலை முதல் மாலை வரை குப்பைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. தெருக்கள் எப்போதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன. தெருக்களில் நகர மக்கள் வைத்து வளர்க்கும் மரங்கள் பலவும் இதனால் எரிந்து பட்டுப்போகிறது என்கிறார், நகர அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.

                 குப்பைகளை அகற்ற நவீன, அறிவியல் பூர்வமான திட்டமோ அதுபற்றிய சிந்தனையோ கடலூர் நகராட்சியிடம் இல்லாததே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். 

குப்பைகளை எரிப்பது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா கூறுகையில், 

             டயர்களைக் கொளுத்துவதால் ஏற்படும் டயாக்ஸின் என்ற நச்சுப் புகையை சுவாசிப்போருக்கு, புற்றுநோய், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். குப்பைகளை எரிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. பெரும்பாலான குப்பைகள் பாலித்தீன் பொருள்கள் கலந்தவை. அவற்றை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும் என்றார் அவர்.










Read more »

வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி நகர பகுதியில் வீதிகளில் குப்பைகள்

ண்ருட்டி:

      பண்ருட்டி நகர நிர்வாகம் நகர பகுதியில் குப்பைகளை அகற்றாததால் நகரத்தில் உள்ள 33 வார்டு வீதிகளில் எங்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

           பண்ருட்டி நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 17 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகளை கொட்ட உரிய இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தராததால் கடந்த பல ஆண்டுகளாக நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புகழ்பெற்ற கெடில நதியில் கொட்டியும், பள்ளம் தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுசூழல் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

           இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 110-க்கும் மேற்பட்டோர் இருந்து, நகரப் பகுதியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணியியும் பெயரளவில் கூட நடைபெறவில்லை. இதனால் நகரப் பகுதியின் வீதிகள், பள்ளிகள், அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனை என எங்கு பார்த்தாலும் குப்பைகள் காற்றில் பறந்துக் கொண்டுள்ளது. 

          மேலும் சில இடத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் இடத்தில் இருந்து பல்வேறு புகார்கள் மனுக்கள் வந்த போதும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

இது குறிதது நகராட்சி அலுவலக ஊழியர்கள் கூறியது 

             நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளுவதற்கு 8 வாகனங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் பராமரிப்பு என தீர்மானம் நிறைவேற்றி பணம் எடுத்ததுடன் சரி வாகனத்தை பழுது பார்க்கவோ, பராமரிக்கவோ இல்லை. இதனால் வாகனங்கள் மிகமோசமான நிலையில் ஓடாமல் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய ஓரிரு வாகனம் மட்டும் இயங்குவதால் 33 வார்டு பகுதியிலும் குப்பைகள் அகற்ற முடியவில்லை என கூறினர். பண்ருட்டி நகர நிர்வாகம் சீர்கெட்டு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் வசதிகளை நிறைவேற்றவில்லை.

            து குறித்து நகர மற்றும் மாவட்ட அதிகாரிகளும் கவலைப்படவில்லை என்பதே உண்மை. பண்ருட்டி நகர நிர்வாகம் புத்துயிர் பெற அதிகாரிகள் முன்வருவார்களா?





Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

கொசு உற்பத்தி கேந்திரமாகிய நகராட்சி வணிக வளாகம் !

கடலூர்:

                  கடலூர்  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டதால், அந்த இடம் தற்போது நகர மக்களுக்கு கொசுக்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிலையமாக மாறி இருக்கிறது.

                  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட வணிக வளாகம், சிதிலம் அடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.அதில் வணிகம் செய்தவர்கள் சிலருக்கு பஸ் நிலையத்தின் அருகே தாற்காலிக இடம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது.இதில் எழுந்த நீதிமன்ற வழக்குகள் காரணமாக, வணிக வளாகத்தை மீண்டும் கட்டுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

                   இதனால் அதில் வணிகம் செய்த வியாபாரிகள்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற நிலை மாறி, தற்போது வணிக வளாகம் இருந்த இடத்தால், கடலூர் மக்களே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது.  வணிகவளாகம் இருந்த இடம் சாக்கடை கலக்கவும், குட்டையாகவும், பஸ் நிலையத்தில் வணிகம் செய்வோர் குப்பைக் கொட்டும் இடமாகவும் மாறி இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால், அந்த இடம் வற்றாத குளமாக மாறிவிட்டது. 

                     வணிக வளாகம் இருந்த இடத்தில் சாலையோர, நடைபாதைக் கடைக்காரர்களால் ஆக்கிரமித்து கூறுகட்டி பழங்கள் வியாபாரம், அழகுசாதனப் பொருள்கள், துணிகள் விற்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது.அவர்கள் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்தக் குட்டையில்தான் சங்கமமாகின்றன. பழைய வணிக வளாகம் இருந்த இடத்தை, ஆக்கிரமித்துக் கொண்ட நடைபாதைக் கடைக்காரர்களை, போலீசார்  எத்தனை தரம் முயன்றாலும், அவர்களின் அரசியல், தொழிற்சங்கப் பின்னணி காரணமாக அகற்ற முடியவில்லை.இனி இங்கு வணிக வளாகம் கட்ட நடைபாதைக் கடைக்கார்களே அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

                             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சுகாதாரக் கேடாகத் திகழும், நடைபாதைக் கடைகளை ஒழிக்க, தற்போது இருக்கிற அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. இனிமேலும் வரும் அதிகாரிகளாலும் அது இயலாத காரியம் என்கிறார்கள் பொதுமக்கள். எனினும் வணிக வளாகம் இருந்த இடம், சாக்கடை தேங்கும் குட்டையாக மாறி இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Read more »

சனி, ஆகஸ்ட் 28, 2010

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு


மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.
 
பண்ருட்டி:
               பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை உடைத்து மழை நீரை உள்ளே திருப்பிவிட்டதால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
              புதுப்பேட்டை, பேட்டை வீதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.புதுப்பேட்டை சுற்று வட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் சுண்ணாம்புக்கார குட்டையில் சென்று கலக்கும். இக்குட்டையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி புதுப்பேட்டை பகுதியில் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
 
              மழைக் காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கும்.அண்மையில் பெய்த மழையால் புதுப்பேட்டை பகுதியில் மழை மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றதால், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மழை நீரை வெளியேற்ற வேண்டி பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு பள்ளி வளாகத்தினுள் மழை நீரை திருப்பி விட்டுள்ளனர்.
 
             இதனால் பள்ளி வளாகம் மழை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.தற்போது மழை முடிந்து 3 நாள்கள் ஆகியும் பள்ளி மைதானத்தில் தேங்கிய நீர் வற்றவில்லை. இதனால்  மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை மற்றும் கழிவுநீரில் மாணவர்கள் விளையாடுவதால் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 
 
                     "பள்ளி சுற்றுச் சுவர்களை உடைத்து மழை நீரை பள்ளி வளாகத்தினுள் திருப்பி விட்டுள்ளனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் நிற்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. பைக்கா போட்டியும் நடத்தப்படவில்லை. பள்ளி சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாணவர் நலம் பாதிக்கப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என வேதனையுடன் கூறினர்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் சாலையோரம் ஆடுகள் அறுக்கும் அவலம்

விருத்தாசலம் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் பெரும்பாலான இடங்களில் திறந்த வெளியில் ஆடுகளை அறுக்கும் அவலம் நடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடம் பயனற்ற நிலையில் உள்ளது.

                     சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தரமான, சுத்தமான ஆட்டிறைச்சிகள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆடு அறுக்கும் கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இக் கூடங்களில் நோய் வாய்பட்ட ஆட்டிறைச்சி விற்பனையை தடுக்கும் வகையில் கால்நடை டாக்டரைக் கொண்டு ஆடுகளை பரிசோதிக்கும் நடைமுறையும் உள்ளது. டாக்டர் அனுமதித்த பின்னர் தான் அந்த ஆட்டினை அறுத்து அதன் இறைச் சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண் டும்.

                     ஆனால் இந்த நடைமுறைகள் எந்த ஊரிலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக சாலையோரங்களிலும், தெருக்களிலும் ஆடுகள் அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. விருத்தாசலம் நகரில் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள நவீன ஆடு அறுக்கும் கூடம் நகராட்சி பகுதி திட்டம் 2008- 09ம் ஆண்டு நிதியின் கீழ் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இங்கு ஆடுகள் அறுப்பதற்கு தனி கட்டடம், ஆடுகளை பரிசோதிக்கும் டாக்டருக்கு தனி கட்டடம், கழிவறை, தண்ணீர் வசதி, காம்பவுண்டு சுவர் என அனைத்து வசதிகளும் உள்ளது.

                   இந்தக் கூடம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக பயன்பாட் டிற்கு வந்துள்ளது. விருத்தாசலத்தில் 22க்கும் மேற் பட்ட வியாபாரிகள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100க்கும் அதிகமான ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகிறது. இருந்தும் நாள் ஒன்றுக்கு ஐந்திற்கும் குறைவான ஆடுகளே இந்த கூடத்தில் அறுக்கப்படுகிறது. மற்ற வியாபாரிகள் அனைவரும் தாங்கள் கடை வைத்துள்ள இடங்களிலேயே அறுத்து விற்பனை செய்கின்றனர்.

                       இதனால் நகரத்தில் சுகாதார சீர்கேடு அதிகரிப்பதோடு, நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அதேப்போன்று நெல் லிக்குப்பம் மார்க் கெட்டில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கடலூரில் ஆடு அறுக்கும் கூடம் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலானோர் கடலூர் - நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, திருவந் திபுரம் சாலை மற்றும் செம் மண்டலம் ஆகிய இடங் களில் சாலையோரத் திலேயே கடைகள் அமைத்து அங்கேயே அறுத்து விற்பனை செய் கின்றனர்.

                     சிதம்பரத்திலும் சொற்ப அளவிலான வியா பாரிகளே கூடத்தை பயன் படுத்துகின்றனர். ஸ்ரீமுஷ் ணத்தில் பழைய கட்டடம் இருந்தும் கடந்த சில ஆண் டுகளுக்கு முன் 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கடைக் கும் ஆடு அறுக்கும் கூடத்திற் கும் ஒன்னரை கி.மீ., தூரம் இருப்பதால் வியாபாரிகள் அங்கு சென்று அறுப்பதில்லை.

பயன்படுத்தாததன் காரணம் குறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், 

                      "கூடத்தில் நல்ல வசதிகள் உள்ளன. இருந்தும் ஆடுகளை தொங்க விட்டு அறுக்க போதுமான கம்பிகள் இல்லை. அதேப் போல் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலே வழுக்கி விழும் அபாயம் உள்ளது. குறைகளை அதிகாரிகள் சரி செய்து கொடுத்தால் பயன் படுத்துவோம்' என்கின்றனர்.

                நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளின் சிறிய குறைகளை போக்கி, கட்டாயமாக கூடத்தில் தான் ஆடுகளை அறுக்க வேண் டும் என உத்தரவிட வேண் டும். மேலும் டாக்டர்களைக் கொண்டு ஆடு களை அறுப்பதற்கு முன் கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதார சீர் கேட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, மாவட்டத் தில் ஒவ்வொரு ஊரிலும் 20 லட்சம், 27 லட்சம் என பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களும் முழு பயன்பாட்டிற்கு வரும்.

Read more »

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் டயர் எரிப்பதால் சீர்கேடு

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஓமக்குளம் அருகே பழைய டயர்களை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

              சிதம்பரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓமக்குளம் பகுதியில் கொட்டி மக்க வைக்கப்படுகிறது. இதில் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் உள்ளது. சிலர் டயரை கொளுத்தி அதில் கிடைக்கும் கம்பிகளை விற்பனை செய்ய பழைய டயர்களை கொளுத் தவதால் புகை மூட்டத்துடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல் லும் நிலையில் உள்ளனர். துர்நாற்றத்துடன் கூடிய புகை மண்டலத்தால் மூச் சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

பஸ் நிலைய கடைக்காரர்களை தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியரைக் கண்டித்து கடையடைப்பு

பண்ருட்டி : 

          பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியரைக் கண்டித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு செய்தனர். பண்ருட்டி பஸ் நிலைய நகராட்சி கட்டடத்தில் வாடகைக்கு கடை நடத்தி வருபவர்கள் குணசேகரன், ராஜா. இவர்களது  கடைகளில் துப்புரவு பணியாளர் கள் இருவர்  கடை முன் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசியதுடன்  கொலைமிரட்டல் விடுத்தனர். இதனை கண்டித்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு பஸ்நிலைய பகுதி கடை உரிமையாளர்கள் 100 பேர் தீடீரென  கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
 
                    இதுகுறித்து மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம்,  அதிகாரிகளுடன்  பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 4.30 மணிவரை நகராட்சி கமிஷனர் வராததால் வியாபாரிகள் பஸ்நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த  இன்ஸ் பெக் டர் செல்வம்,  நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி வியாபாரிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.  அதில் வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியர் ள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் விரைவில் சீரமைப்பதாக கமிஷனர் உமாமகேஸ்வரி உறுதி கூறினார்.  இதனையடுத்து கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் கை விட்டு 5.30க்கு கடையை திறந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior