உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சி.ஐ.டி.யூ.,பொதுச் செயலராக சவுந்தரராசன் மீண்டும் தேர்வு

கடலூர் :

                  கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., 11வது மாநில மாநாட்டில் பொதுச்செயலராக சவுந்தரராசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                         கடலூரில் கடந்த 4ம் தேதி  இந்திய தொழிச்சங்க மையத்தின் 11வது தமிழ் மாநில மாநாடு துவங்கியது.  இறுதி நாளான நேற்று நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக சவுந்தரராசன், பொருளாளராக குமார், உதவி பொதுச் செயலர்களாக சிங்கரவேலு, பழனிவேலு, குமார் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ரங்கராஜன், வைத்தியநாதன், சந்திரன், ராஜாங்கம், தியாகராஜன், இந்திரா, செல்லப்பன், சேகர், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், விஜயன்,  மகாலட்சுமி ஆகியோரும், செயலாளர்களாக மாலதி, லதா, கருமலையன், சுகுமாறன், கணேசன், அசோகன், அண்ணாதுரை, சுப்ரமணியன், சந்திரன்(திருப்பூர்), சுந்தர்ராஜன், அப்பனு, விக்ரமன், திருச்செல்வன், பகவதி, ஜானகிராமன், ரசல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read more »

அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது

கடலூர் :

                        கடலூர், சிதம்பரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவக்கியது.

                       கடலூர் நகரம், நெல்லிக்குப்பம் நகரம் மற்றும் கடலூர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனுக்களை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் வளர்மதி பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட மேற்பார்வையாளர்களாக எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் செல்வம்,  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜகோபாலன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் நடராஜன், அச்சரப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பூவராகமூர்த்தி செயல் பட்டனர். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி இருந்தால் அவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.

                   சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நகரம், ஒன்றியம், பேரூராட்சிகளுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று 5 இடங்களில் நடந்தது.  சிதம்பரம் கீழவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நகர பொறுப் பாளர்கள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு தேர்தல் பார் வையாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர் திருவள்ளூர் மாவட்ட பேரவை செயலாளர் ரமணன் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடந்தது.

                       நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், புவனகிரி எம்.எல்.ஏ.,செல்வி ராமஜெயம், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதே போன்று  அண்ணாமலை நகர் பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர்.

Read more »

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி ஆட்சியர் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி பொறுப்புடன் கூடிய ஆட்சியர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                   இதுகுறித்து எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நலச் சங்க துணைத் தலைவர் வீரசோழன், முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஒரு ஆண் டாக ஆட்சியர் பணியிடம் காலியாக உள் ளது. இந்த ஆலைக்கு நியமிக்கப்படும் ஆட்சியர்கள் ஏதேனும் காரணங்களை கூறி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் இரண்டாம் கட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

                  இதேபோன்று ஆலைக்கு ஆணி வேராக விளங்கும் கரும்புத் துறையின் தலைமை கரும்பு அலுவலர் பணியிடமும் ஓராண்டாக காலியாக உள்ளது. தற்போதைய தலைமை கரும்பு பொறுப்பு அலுவலர் முந்தைய கரும்பு அலுவலர் என்பதால் அவரை அதிகாரியாக யாரும் ஏற்க மறுத்து வருகின்றனர்.
தனது துறையை பற்றி சிந்திப்பதை விட இதே பதவியை தக்க வைக்கவே அவர் போராடி வருவதால் கரும்புத்துறை முழுவதுமாக சீர் குலைந்து ஆலை நலிவை நோக்கி சென்று விட்டது. ஆலையை நலிவிருந்து மீட்டிடவும், விவசாயிகள் நலனை காத்திட ஆட்சியர் மற்றும் தலைமை கரும்பு அலுவலர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior