உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

அகில இந்திய கராத்தே போட்டி: குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம்

குறிஞ்சிப்பாடி: 

              ஐயப்பன் ஷீட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் 33ம் ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டியில் குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம் பெற்றார்.

                      வேலூரில் இயங்கி வரும் ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் அகில இந்திய அளவிலான 33ம் ஆண்டு கராத்தே போட்டிகள் நடந்தது. வேலூர் ரீகா இயக்குனர் டாக்டர் அகமத் தலைமை வகித்தார். குருபிரசாத், டாக்டர் ரெட்டி முன்னிலை வகித்தனர். வேலூர் ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஜப்பான் கிராண்ட் மாஸ்டர் டோஷிரோ இணகாகி மாஸ்டர்ட் ஜக்கா கிபிகாஜி போட்டிகளை நடத்தினார். இதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சென்சாய் கராத்தே பள்ளி மாணவி இனியால் கருப்புப் பட்டைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவியை சென்சாய் ராமமூர்த்தி, கண்ணதாசன் பாராட்டினர்.

Read more »

இறகுப் பந்து கழக உள்விளையாட்டு அரங்கு திறப்பு

கடலூர்: 

                   கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் என்.ஜி.ஓ., இறகுப்பந்து கழக உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடந்தது.

                   இறகுப் பந்து கழக தலைவர் அகில்பாட்சா தலைமை தாங்கினார். செயலாளர் ரகு வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் செல்வம் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். உள்விளையாட்டரங்கை முன்னாள் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட இறகுப் பந்து கழக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் குத்துவிளக்கேற்றினார்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் கோஷ்டி மோதல்: ஏழு பேர் கைது

குறிஞ்சிப்பாடி: 

             முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் தாக்கிக் கொண்டதில் 26 பேர் மீது வழக்குப் பதிந்து 7 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.

                 குறிஞ்சிப்பாடியில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு பாட்டுக்கச்சேரி நடந்தது. இதில் அயன்குறிஞ்சிப்பாடி காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே தகராறு ஏற் பட்டது. இதனையடுத்து அயன்குறிஞ்சிப்பாடி வழியாக கல்குணம் சென்றவர்களை 30க்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் கந்தவேல் (40), சம்பத்குமார் (20), சபரிராஜன் (18), ரஞ்சித்குமார் (18) உட்பட ஏழு பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

                    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அயன்குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், சேகர், முத்தையன், கோடிநாதன், தயாளன், சுப்ரமணியன், வடிவேலு ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior