உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

குறிஞ்சிப்பாடியில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பலி

குறிஞ்சிப்பாடி : 

 
              ஓடும் பஸ்சிலிருந்து இறங்க முயன்ற மாணவர் தவறி விழுந்து உடல் நசுங்கி இறந்தார். வடலூர் அடுத்த ராசாக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தவமணி (16). 

                     குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக உள்மருவாய் செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ராசாக்குப்பத்தில் தனது வீட்டின் அருகே பஸ் சென்ற போது, தவமணி ஓடும் பஸ்சின் முன் படிக்கட்டிலிருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் தவமணி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம்: 15 பேர் கைது

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். 

               கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுகிறது. மேலும் கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது என எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் சேத்தியாத்தோப்பு பகுதியில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த 7 மாட்டு வண்டிகளும், ஒரத்தூர் பகுதியில் 3 மாட்டு வண்டிகளும் பிடிபட்டன. அதேப்போல் குள்ளஞ்சாவடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேரும், ஒரத்தூரில் 3, காட்டுமன்னார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், சோழதரம் பகுதிகளில் தலா ஒருவரும், கடலூர் முதுநகர் பகுதியில்  3 பேர் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவங்கியது

கடலூர்  : 

             பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.

                மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் துவக்கி வைத் தார். 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கபடி, கைப்பந்து, கையுந்து பந்து, இறகுப் பந்து, கோ-கோ, செஸ், வளைய பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் 40 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் முதுநகர் அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், உடற் கல்வி இயக்குனர் முருகேசன், உடற் கல்வி ஆசிரியர் வசந்தி ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட் டிகளில் பங்கேற்பர். இன்று (19ம் தேதி) 14 -19 வயதிற்குட்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior