உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

மாணவர்களை தாக்கியவர்கள் கைது

ராமநத்தம்:

                 ராமநத்தத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன் மகன் வினோத்ராஜ் (20). இவர் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன் றாமாண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார்.

                நண்பர்களுடன் ராமநத்தம் சென்றுவிட்டு, ரூமிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் காலனியை சேர்ந்த பெரியசாமி மகன் பழனிவேல் (40), கோவை மாதம்பட்டியை சேர்ந்த சந்தனதுரை மகன் நாகேந்திரன் (21) இருவரும் குடிபோதையில், வினோத்ராஜ், அவரது நண்பர்களை ஆபாசமாக திட்டி தாக்கினர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேல், நாகேந்திரனை கைது செய்தனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior