உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்


கடலூர் : 

           பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் கூறினார்.

இதுகுறித்து அவர்  கூறியதாவது: 

                  விலைவாசி உயர்வை கண்டித்து நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்பையொட்டி கடலூர் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நமது மாவட்டத்தில் ரோந்து சுற்றி வருவதற்காக ஏற்கனவே 136 வாகனங்கள் உள்ளன. மேலும் 20 வாகனங்கள் போலீசார் ரோந்து வர பயன்படுத்தப்படும். முழு அடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வியாபாரம், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். வியாபாரிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மார்க்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பஸ்கள் வழக்கம்போல் ஓடும். தேவைப்பட்டால் பஸ்கள் 'கான்வேயில்' இயக்கப்படும். பஸ்கள் மீது கல்வீசி தாக்குவது மற்றும் பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் அவர்கள் மீது பொது சொத்து சேதப்படுத்தியதாக (பி.பி.டி., ஆக்ட்) வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது. அவ்வாறு அடாவடி செய் யும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior