கடலூர்:
            கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் 750 பேருக்கு, ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.
             மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை கோருதல் உள்ளிட்ட 453 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டன.
                  இக்கூட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளைச் சேர்ந்த 750 பேருக்கு ரேஷன் அட்டைகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். எல்காட் நிறுவனத்தால் கடந்த வாரம் அச்சிடப்பட்ட ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். மகளிர் திட்டம் மூலம் கட்டுமானத் தொழில் பயிற்சி முடித்த 30 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 
            சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒருவருக்கு காப்பீட்டுத் தொகையாக |50 ஆயிரம் வழங்கினார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெற்ற இணையதள கணினி தமிழ் வரைகலைப் போட்டியில் மாவட்ட ஆளவில் வெற்றி பெற்ற, பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர் ஆர்.சுதாகரன், புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவர் சபரிநாதன், திருவந்திபுரம் ஸ்ரீ வித்யா கலாகேந்திரம் பள்ளி மாணவர் கலைச்செல்வன் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.÷மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக