சிதம்பரம்:
            சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் டி கம்பெனி ஊர்க்காவல் படை அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
               விழாவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஷ்வின் எம்.கோட்னிஸ் பங்கேற்று திறந்து வைத்தார். சரக உதவி தளபதி பா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தளபதி ஆர்.கேதார்நாதன் தலைமை வகித்து வரவேற்றார். டிஎஸ்பி மா.மூவேந்தன், துணை வட்டார தளபதி ஜெயந்திரவிச்சந்திரன், ஊர்க்காவல் படை இணை அதிகாரி ஆர்.காமராஜ், கோட்டத் தளபதி ஆர்.கோவிந்தராஜ், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். கோட்ட உதவித் தளபதி ஏ.தண்டபாணி நன்றி கூறினார்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக