பண்ருட்டி : 
               பண்ருட்டி லிங்க் ரோடு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு  வருகிறது. 
               பண்ருட்டியில் கடலூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும்  முக்கிய இணைப்பு சாலையாக (லிங்க் ரோடு) உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து  வெளியேறும் பஸ்கள் அனைத்தும்  நான்கு முனை சந்திப்பு வழியாக செல்லாமல்  லிங்க் ரோடு வழியாக வெளியேறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 100 அடி  வரை அகலம் கொண்ட சாலையாக உருவாக்கப்பட்டது. 
                அதன்பின் லிங்க் ரோடு  பராமரிக்ப்படாததால் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் ஆக்கிரமித்ததன.  இதனால் 100 அடி சாலை 10 அடி சாலையாக குறுகியது. கடந்த 1998ம் ஆண்டு கோர்ட்  உத் தரவின்படி லிங்க் ரோடு  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அங்கு  குடியிருந்தவர்களுக்கு மேலப்பாளையம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. 
                  அதன் பின் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும்  லிங்க் ரோடு வழியாக  சென்று வந்தன.  இதனால் கடலூர் சாலை மற்றும் நான்கு முனை சந்திப்பில்  போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த லிங்க்  ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமானதால் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. 
நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட லிங்க் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் வங்கி கடனுதவி திட்டத்தின் கீழ் லிங்க் ரோட்டில் இருபுறமும் வடிகால் வசதியுடன் 9 மீட்டர் அகலத்தில் 1.3 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட லிங்க் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் வங்கி கடனுதவி திட்டத்தின் கீழ் லிங்க் ரோட்டில் இருபுறமும் வடிகால் வசதியுடன் 9 மீட்டர் அகலத்தில் 1.3 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
                  இதற்கான மொத்த செலவான 2.9  கோடி ரூபாயில் 60 சதவீதத்தை ஜெர் மன் வங்கிக் கடனாகவும், 30 சதவீதம்  மானியமாவும், 10 சதவீதம் நிதியை நகராட்சியின் நிதியில் செலவு செய்ய முடிவு  செய்யப் பட்டது. இத்திட்டத்திற்கு நீண்ட இழுபறிக்குப் பின் நகராட்சி நிர்வாக  ஆணையரின் ஒப்புதல் பெறப் பட்டு கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி டெண்டர்  விடப் பட் டது. இந்தப் பணியை திண்டிவனம் வெங்கடேசன் என்பவர் எடுத்தார்.  கடந்த செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டி லிங்க் ரோடு  பணியை துவக்கி வைத்தார்.
பணிகள் துவக்கி 11 மாதங்கள் ஆகியும் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் குறித்த தகவல் பலகை இல்லை. சாலையின் இருபுறங்களில் மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், கோவில்கள், மண்மேடுகள் சமப்படுத்தாமல் கும்பகோணம் சாலை சந்திப்புப் பகுதியில் ஐல்லிகள் பரப்பப் பட்டுள்ளது.
பணிகள் துவக்கி 11 மாதங்கள் ஆகியும் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் குறித்த தகவல் பலகை இல்லை. சாலையின் இருபுறங்களில் மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், கோவில்கள், மண்மேடுகள் சமப்படுத்தாமல் கும்பகோணம் சாலை சந்திப்புப் பகுதியில் ஐல்லிகள் பரப்பப் பட்டுள்ளது.
                    இப்பணிகளை கடந்த மாதம் ஆய்வு  செய்த சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை, செங்கல்பட்டு  நகராட்சி நிர்வாக ஆணையர் தண்டபாணி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க  உத்தரவிட்டனர். ஆனால் அதன் பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் பணிகள்  மந்தமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் வடகிழக்குப் பருவமழை துவங்கினால்  பணிகள் பாதிக்கும். அதற்குள் விரைந்து முடிக்க நகராட்சி மற்றும் மாவட்ட  நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக