உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 05, 2011

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் பலத்த மழை : பலியானவர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கடலூர்:
 
           தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 
 
             கடந்த 25-ந் தேதி கனக்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) மின்னல் தாக்கி பலியானார். நவம்பர் 1-ந் தேதி கடலூரை அடுத்த நாணமேடு கிராமத்தில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து தையல் நாயகி (43) என்ற பெண் பலியானார். நேற்று முன்தினம் (3-ந் தேதி) கடலூரை அடுத்த ஏ. வடுகபாளையத்தை சேர்ந்த ரங்கநாதனின் மனைவி ஜிவா (26) மின்சாரம் தாக்கி இறந்தார்.

          இந்த நிலையில் நேற்று வெள்ளாற்றை கடக்க முயன்ற திட்டக்குடியை சேர்ந்த பெருமாள் (60) ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். வசிஷ்டபுரம் அருகே கரை ஒதுங்கிய அவரது உடலை மீட்க முயற்சித்தபோது மீண்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior