உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

சிறுபாக்கத்தில் நாய்கடி மருந்துகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களின் அவரச கூட்டம் நடந்தது.
 
            ஊராட்சி தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவியாளர் பாபுதுரை வரவேற்றார். சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப்பாடின்றி நாய்கடி மருந்துகள் இருப்பு வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களில் சுற் றித்திரியும் வெறிநாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு கூட்டங் களை பிடித்து காப்பு காடுகளில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                     திட்டக்குடியில் இருந்து மங்களூர், ஒரங்கூர், கள்ளக்குறிச்சியில் இருந்து மாங்குளம், எஸ்.நரையூர், விருத்தாசலத்தில் இருந்து ரெட்டாக்குறிச்சி, பொயனப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு டவுன் பஸ்களை திட்டக்குடி தாலுகாவின் குறுவட்ட மைய தலைமை இடமான சிறுபாக்கம் வரையில் நீட்டிப்பு செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சிறுபாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : 

               மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது.
 
                  காட்டுமன்னார்கோவில் வட்டார ஆயங்குடி சுகாதார நிலையம் சார் பில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் ஸ்ரீமுஷ் ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முகாமை பேரூராட்சி சேர்மன் செல்வி துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா, கல்விக்குழு உறுப்பினர் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் குலோத் துங்கசோழன், அறங்காவலர் குழு செல்வகுமார் முன்னிலை வகித்தனர். 

                     இதில் சென்னை நியூ ஹோப் சிறப்பு மருத்துவமனை டாக்டர் கோதண்டராமன் தலைமையில் டாக்டர்கள் ஆண்டனிராஜ், சக்திவேல், சிவானந்தம், மணிமொழி, மகரஜோதி, சந்திரசேகர், நித்யா, சித்ராதேவி, கோமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய் தனர். முகாமில் பங்கேற்ற 499 பேரில் 98 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய் யப்பட்டனர்.

Read more »

திருமண பதிவு சட்டத்தில் விதி விலக்கு ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு தீர்மானம்

விருத்தாசலம் :

                  தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக் கவேண்டும் என ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
 
               விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கூட்டம் நவாப் பள்ளிவாசலில் நடந்தது. நகர தலைவர் அப்துல்மஜீது தலைமை தாங்கினார். நாகூர்கனி, அபுபக்கர், பாஷா முன் னிலை வகித்தனர். கூட் டம் குறித்து செயலாளர் சபியுல்லாஹ் பேசினார். சுக்கூர், முஸ்தபா, யாசீன், அலங்கார், அப் துல் மஜீத், ஜவஹர் கலந்து கொண்டனர்.
 
                      கூட்டத்தில் இந்த ஆண்டு மிலாதுநபி விழாவை ஆலடிரோடு நவாப் பள்ளிவாசலில் நடத்தி அனைவருக்கும் ஊர் விருந்து அளிப்பது, அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -  மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்குவது, தமிழக அரசு அறிவித் துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Read more »

நபார்டு கிராம ஏற்பு திட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் நபார்டு கிராம ஏற்பு திட் டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடந்தது.
 
                   ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார். உழவர் மன்ற உறுப்பினர் ஜெயக் குமார் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத் தையா பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியில் மண்புழுவின் வகைகள், செயல்பாடுகள், உரத்தின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. உதவி பேராசிரியர் தனுஷ்கோடி, ராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் குஞ்சிதபாதம், அம்பலவாணன், உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன்  பங்கேற்றனர்.

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன ஆணையை உடனே வழங்க கோரிக்கை

சிதம்பரம் : 

                    உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழக வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
                சிதம்பரத்தில்  வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்ட குழுவின் சிறப்பு கூட்டம் நடந்தது. 

                                மாநில தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயதேவன் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் 853 உடற் கல்வி ஆசிரிய பணி நியமனங்களுக்கு அரசு ஆணையிட்டும் மூன்று ஆண்டுகளாக அரசு அதிகாரிகளால் தாமதிக்கும் காரணங்களை முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்து பணி நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும், பெண்ணாகரம் இடைதேர்தல், பிளஸ் 2 செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்வை காரணம் காட்டி பணி நியமங்களை தாமதப்படுத்தக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிவக்குமார், கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர்  பங்கேற்றனர்.

Read more »

கக்கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை கூட்டம்

ராமநத்தம் : 

             ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் கக் கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கூட்டம் நடந்தது.
 
           கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திக், அறக்கட்டளை தலைவர் காசிலிங்கம், துணை செயலாளர் ராமு, பொடையூர் மன்ற தலைவர் பால்சாமி முன்னிலை வகித்தனர். ம.பொடையூர் மன்ற பொருளாளர் மதியழகன் வரவேற்றார். இதில் கக்கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி பிப். 7 ம் தேதி திட்டக்குடியில் மக்கள் குறை கேட்க வரும் கடலூர் தொகுதி எம்.பி., அழகிரிக்கு அறக்கட்டளை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிப்பது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ம.பொடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் விபத்தின்றி  சென்று வர பள்ளிக்கு எதிரே துணை வழிச்சாலை அமைக்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முருகேசன் நன்றி கூறினார்.

Read more »

யோகா பயிற்சி

விருத்தாசலம் : 

           விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற அறக் கட்டளை சார்பில் முன்று நாள் மணவளக் கலை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். பயிற்சி துணை பேராசிரியர்கள் மீனலோசினி, சரஸ்வதி, மேகலா, மீனா, விஷ்ணுபிரபா, புஷ்பா, அமலாம்பிகை உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். செயலாளர் விஸ்வநாதன், கனகாம்புஜம், ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மங்களூரில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

திட்டக்குடி : 

               மங்களூர் ஒன்றியத்தில் விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
 
                 இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்த முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுனர்கள் மணிகண்டன், இளஞ்செழியன், சிவகுரு, மஞ்சு, பன்னீர்செல்வம், சரஸ்வதி பயிற்சி அளித்தனர். இதில் விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 160 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

Read more »

மானாவாரி நிலத்தில் ஓமம் பயிர் : சிறுபாக்கம் விவசாயி புதிய முயற்சி

சிறுபாக்கம் : 

               மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் மூலிகை பயிரான ஓமத்தை, தற்போது சிறுபாக்கத்தில் விவசாயி ஒருவர் மானாவாரி நிலத்தில் பயிரிட்டுள்ளார். செழித்து வளர்ந்துள்ள ஓமம் பயிரினால் அப்பகுதி நறுமணம் வீசுகிறது.
 
                 மூலிகை பயிரான ஓமம் மேற்கு தொடர்ச்சி மலை பிரதேசமான தேனி, கம்பம், போடி பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. காரணம் ஓமம் சாரலில் வளரக்கூடியது. பனிப் பொழிவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக மகசூல் கிடைக்கும். இந்நிலையில் சிறுபாக்கத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் புதிய முயற்சியாக தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் மானாவாரி நிலத்தில் ஓமம் பயிரிட்டுள்ளார்.
 
              இதுகுறித்து அவர் கூறுகையில், இலகு ரக பயிரான ஓமம் குறைந்த முதலீட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் பரிட்சாத்தமாக ஓமம் பயிட முடிவு செய்தேன். சாரலில் வளரும் பயிர் என்பதால், பயிர் செய்திடும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்த்து, அண்மையில் பெய்த சாரல் மழை மற்றும் தற்போது பெய்து வரும் பனி பொழிவை கொண்டே பயிரிட்டுள்ளேன்.  பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் நறுமணம் வீசுகிறது. எனது நிலத்தை கடந்து செல்பவர்கள் ஆச்சரியமாக ஓமம் பயிரை பார்த்து செல்கின்றனர். இதன் மகசூலை பொறுத்தே வரும் காலத்தில் ஓமம் பயிரிடுவதை முடிவு செய்ய உள்ளேன் என்றார்.
 
                   மூலிகை பயிரான ஓமம் மானாவாரி நிலத்தில் பயிரிட்டுள்ளதை அறிந்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயி மணிகண்டன் நிலத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். மேலும் இவருக்கு மானியம் வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Read more »

வேலை உறுதியளிப்பு திட்டத்தினால் சமுதாய புரட்சி : கடலூர் எம்.பி., அழகிரி பெருமிதம்

திட்டக்குடி :

                திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் காங்., கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், நகர தலைவர் கனகசபை, மாவட்ட செயலா ளர் செல் வமணி, துணைத் தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர் கந்தசாமி முன் னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
 
          காங்., கொடியை ஏற்றி வைத்த எம்.பி., அழகிரி பேசியதாவது:நாட்டின் நலன் கருதி காங்., ஆட்சி செய்து வருகிறது. ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி உட்பட கோதுமை, எண்ணெய் என மலிவான விலையில் அரசு வழங்கி வருகிறது. எதிர்கட்சிகள் ஆடு, கோழி விலையேற்றம் பெற்றதாக கூறுகின்றனர். மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அரிசி விலை குறைவாக வழங்குகிறோம். 120 கோடி மக்கள் வசித்து வரும் இந்தியாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், அணைகள் மூலம் தண் ணீர், இலவச மின்சாரம், அரசு கஜானாவில் 90 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பயணப் படி, ஓய்வூதியம், தொழில் முனைவோர்க்கு வங்கியில் கடன், சரக்குகள் விரைந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைகள், அகல ரயில் பாதைகள் என ஒவ் வொரு தரப்பினருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவித சலுகைகள் வழங்கி வருகிறது.
 
                    தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினால் மற்ற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். குடும்பத்தால் கைவிடப் பட்ட மூதாட்டிகள் வரை அன்றாட வாழ்க் கையை சுலபமாக நடத் திட நூறு ரூபாய் சம்பளம் வழங்குவதால் சமுதாய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் ஐ.டி., பணியில் மாதம் ஒரு லட்சம் சம்பளமாக வழங்கும் போது, ஏழை மக்களுக்கு தினக்கூலியாக நூறு ரூபாய் வழங்குவதில் என்ன தவறு. முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க  விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மாற்றிட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
 
                 தொடர்ந்து இறையூரில் காங்., கொடியை ஏற்றினார். ஓ.கீரனூரில் பயணிகள் நிழற்குடையை திறந்த வைத்தார். இதில் ஊராட்சி தலைவர் உமையாள்பதிஜோதி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், இளைஞர் காங்., சவுந்தர்ராஜன், பாலமுருகன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சைவ சமய கோட்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் : செங்கோல் ஆதீனம் பேச்சு

சிதம்பரம் : 

                "சைவ சமய கோட்பாட் டின் மூலமாக தீவிரவாதத்தை முறியடிக்க முடியும்' என, செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
 
                சிதம்பரத்தில் நடந்த உலக சைவ மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிறப்புகளில் 84 வகை உள்ளது. அதில் மேன்மையான பிறப்பு, மனித பிறப்பு. மனிதனை தவிர மற்ற பிறவிகள் அனைத்தும் கெட்ட நோக்கங்கள் இல்லாமல் செயல்படுகின்றன. எனவே, மனிதனை நெறிப்படுத்த இங்கு நடத்தப்படும் உலக சைவ மாநாடு பயனுள்ளதாக அமையும். உலகில் உள்ள ஜீவன்கள் அத்தனைக்கும் சமயம் கிடையாது. மனிதனுக்கு மட்டும் தான் சமயம் உண்டு. மனிதனை நெறிபடுத்தும் ஒரே சமயம் சைவ சமயம் மட்டுமே.
 
               மனிதனை தவிர பிற ஜீவன்கள் விதிக்கப்பட்ட முறைப்படி வாழ்கின்றன. அதனால்தான் மனிதனை அறநெறிப்படுத்த வேண்டியுள்ளது. சைவ, சித்தாந்தத் தால் மட்டுமே அது முடியும். இந்து மதத்தில் தான் அதிக மதமாற்றம் நடக்கிறது.  இந்து சமயங்கள் பற்றி மக்களிடம் பிரசாரம் இல்லாததே இதற்கு காரணம். மத மாற்றத்திற்கு சூழ்நிலையும் ஒரு காரணமாக அமைகிறது.
 
             அந்த சூழ்நிலையை கண்டறிந்து முறைப்படுத் துவதன் மூலம் மதமாற் றத்தை தடுக்க முடியும். ஆதீனங்கள், மடாதிபதிகள் மூலமாக இந்த பணியை செய்ய முடியும். தீவிரவாதம், பயங்கரவாதம் அதிகமாக உள்ளது. பிற மதங் கள் கூறும் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் கட்டுப்படுத்தப் படுவதில்லை. இந்து சமயத் தின் சைவ சமய கோட் பாடு மூலம் தீவிரவாதத்தை கண்டிப்பாக முறியடிக்க முடியும். இவ்வாறு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
 
              சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பேசியதாவது: சைவத்தின் பெருமைகளையும், பண்பாட்டையும் மக்கள் பின்பற்றவும், பாதுகாக்கவும் திருமுறைகளை பாதுகாக்க வேண்டிய பணி நமக்கு உள்ளது. யோகானந்தர் இந்த பணியை செய்து வருகிறார். திருமடங்களின் பங்கும் அதிகம்.  சமயத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் அழிந்து கொண்டிருக்கிறது.
 
               இளைஞர்கள் தடம் மாறியும், தடுமாறியும் வருகின்றனர். அவர்களுக்கு சைவ சமயத்தின் தத்துவங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சமய நெறிமுறைகள், சமய ஆகமங்கள், திருமுறைகளை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியருக்கு இந்த பணி பயனுள்ளதாக அமையும்.
 
                  காலம், நேரம், விஞ்ஞானம் என அனைத்தையும் நாம் வென்றுவிட்டோம். மனிதர்களின் வேறுபாடுகளை வெல்ல முடியவில்லை. மனித வாழ்க் கைக்கு உளவியலும், ஆன்மிகமும் மிக அவசியம். சம அளவில் இரண் டும் வேண்டும். ஒன்று சரியில்லை என்றாலும் ரயில் பாதை போன்று தடம் மாறிவிடும். இவ்வாறு குமரகுருபர அடிகளார் பேசினார்.

Read more »

பொன்மணி நெல் கொள்முதல் செய்ய மறுப்பு : ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயிகள் அலைக்கழிப்பு

ஸ்ரீமுஷ்ணம் : 

          ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி நேரடி கொள் முதல் நிலையத்தில் குறிப் பிட்ட ரக நெல் கொள்முதல் செய்ய மறுத்து விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர்.
 
            ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சம்பா பருவ நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அரசு ஸ்ரீமுஷ் ணம்,  ஆனந்தகுடி, குணமங்கலம், கள்ளிப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் நேரடி கொள் முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. அறுவடை சீசன் துவங் கிய நேரத்தில் அனைத்து ரக நெல்லையும் அதன் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து கொள்முதல் செய்தனர். தற்போது வரத்து அதிகரிக்கவே நெல்லை விற்பனை செய்ய நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
 
              இந்நிலையில் கள்ளிப் பாடி மையத்தில் கடந்த  2ம் தேதி வரை கொள்முதல் செய்த பொன்மணி ரக நெல் தரம் குறைவாக இருப்பதாக கூறிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, இனி பொன்மணி ரக நெல்லை  கொள்முதல் செய்ய வேண்டாம். அதனை மீறி கொள்முதல் செய்ய வற்புறுத்தினால் மாதிரி நெல்லை சிதம்பரம் அலுவலகத்திற்கு அனுப்பி சான்று பெற்ற பின் கொள்முதல் செய்ய கூறியுள்ளார்.
 
            இதனால் கடந்த 2ம் தேதி பொன்மணி ரக நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கடந்த நான்கு நாட் களாக நெல்லை விற்காமல், இரவு-பகலாக காவல் காத்து வருகின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற நேரடி கொள் முதல் மையங்களிலும் பொன்மணி ரக நெல் கொள்முதல் செய்யும் போது கள்ளிப்பாடி மையத்தில் மட்டும் மறுப்பது ஏன் என புரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
 
                கள்ளிப்பாடி விவசாயிகளை காத்திட விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பொன்மணி ரக நெல் மூட்டைகளை அதன் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மாவட்டத்தில் 2.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கடலூர் : 

               மாவட்டத்தில் நேற்று 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது. விடுபட்ட குழந் தைகளுக்கு இன்று வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
               இளம்பிள்ளை வாத  நோயை ஒழித்திட ஆண்டிற்கு இருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தி ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண் டிற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில்  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 101 சிறப்பு மையங்கள் உட்பட 1613 மையங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா  மற்றும் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
 
                  கடலூரில் நகராட்சி பயணிகள் விடுதியில்  டி.ஆர்.ஓ., நடராஜனும், கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதுப்பாளையம் நகர் நல மையத்தில் அரசு தலைமை மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் கோவிந்தராஜனும் துவங்கி வைத்தனர். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜெயச்சந்திரன், டாக்டர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். பண்ருட்டி பஸ் நிலைய முகாமை கமிஷனர் உமாமகேஸ்வரி தலைமையில் சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத்தார். இதில் துணை சேர்மன் கோதண்டபாணி, சுகாதார ஆய்வாளர் கள் மணிகண்டன், சுதாகர், ஆல்பர்ட் ஞானதீபம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த முகாமை சேர்மன் கெய்க் வாட்பாபு துவக்கி வைத்தார். இன்ஜினியர் புவனேஸ்வரி, மேலாளர் சம்பந்தம், சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய் வாளர் அரிநாராயணதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
                      சிதம்பரத்தில் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் துணைத்தலைவர் மங்கையர்கரசி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இதில் கமிஷனர் ஜான்சன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த சிறப்பு முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று வீடு தேடி சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Read more »

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா-விடை கையேடு வழங்கவில்லை! தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருத்து

கடலூர் : 

                   மாணவர்களுக்கு வழங்க வேண்டிய  வினா - விடை கையேடு பொதுத் தேர்வு நெருங்கி விட்ட நிலையில் இன் னும் வழங்காததால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்ற அச்சம் தலைமை ஆசிரியர்களிடையே எழுந் துள்ளது.
 
                  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள 30 வருவாய் கல்வி மாவட் டங்களில் கடலூர் மாவட் டம் 29வது இடத்தில் இருந்து வந்தது. பிற மாவட்டங்களைப் போல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து முன்னேற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். 2008-2009ம் கல் வியாண்டில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி "டல் ஸ்டூடண்ட்'களை (மெல்ல கற்கும்) கண்டறிந்து அவர் களுக்காக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வினா - விடை கையேட்டை தயாரித்தார்.
 
                   எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் கையேடு தயாரித்து கடந்த ஆண்டு நவம் பர் மாதம் 24ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வமும், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவும் வெளியிட்டனர். அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு  வழங்கி அதனை கற்பித் திட ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டது.
 
                   இது கடலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், திருவாரூர் உள் ளிட்ட தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றினர். இந்த புதிய முயற்சியின் பலனாக 29வது இடத்தில் இருந்த கடலூர் மாவட் டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சியில்., 26வது இடமும், பிளஸ் 2வில் 24ம் இடத்திற்கும் முன்னேறியது. கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் முறையே 23 மற்றும் 25வது இடத்தை பிடித்தது.
 
                   ஆனால் இந்த ஆண்டு "டல் ஸ்டூடண்ட்'டுகளுக் கான குறைந்தபட்ச மதிப் பெண் பெறுவதற்கான கையேடு கடலூர் மாவட் டத்தில் இதுவரை வழங் கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் வழங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இங்கு வழங்காதது ஏன் என தெரியவில்லை.  பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் இதன் பிறகு  வழங்கினாலும் அந்த கையேட்டை வைத்து மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்பது சந்தேகமே.
 
                 எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதி தேர்வு துவங்குகிறது. அவர்களுக்கேனும்  "வினா-விடை' கையேட்டை வழங்கிட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்'  என்கின்றனர்.

Read more »

அள்ளூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சேத்தியாத்தோப்பு : 

                 சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூர் நெடுஞ் சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
 
            சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி தலைவர் ஞானமணி கொடுத்த தகவலின் பேரில் மண்டல துணை தாசில்தார் விஜயா, நில அளவர் சேகர், வருவாய் ஆய்வாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயராமன், வி.ஏ.ஓ.க்கள் பாண்டியன், சந்திரகாசன் மற்றும் கிராம பொதுமக்கள், ஊராட்சி தலைவர் ஞானமணி, ஒன்றிய கவுன்சிலர் சுதா சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

பாசன மதகில் பைக் மோதல் வாலிபர் பலி: 2 பேர் காயம்

காட்டுமன்னார்கோவில் : 

                  குமராட்சி அருகே மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் இறந்தார்.  இருவர் படுகாயமடைந்தனர்.
              குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (21). நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான மணலூர் வினோத், ராயநல் லூர் மாரித்து ஆகியோருடன் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். மெய்யத்தூர் அடுத்த கோப்பாடி அருகே வளைவில் திரும்பியபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பாசன மதகில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வினோத் (21) இறந்தார். முத்து மற்றும் மாரிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குமராட்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

சிதம்பரம் : 

              சிறுவனை தாக்கி கரும்பு வயலில் தூக்கி போட்ட வாலிபர் கைது செய்யப் பட்டார்.
 
                      சிதம்பரம் அடுத்த ஏ.புளியங்குடியை சேர்ந் தவர் சுந்தரராஜன் மகன் திலிப்குமார் (12). நேற்று முன்தினம் சாலையில் நின்றிருந்தார்.  அப்போது அந்த வழியே வந்த அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்லப்பாண்டியன் (35), சிறுவன் திலிப்குமாரிடம் தகராறு செய்து தாக்கி அருகில் இருந்த கரும்பு வயலில் தள்ளினார். காயமடைந்த திலிப்குமார் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து செல்லப்பாண் டியனை கைது செய்தனர்.

Read more »

பால்தாக்கரே உருவ பொம்மை எரிப்பு : காங்.,கட்சியினர் 17 பேர் கைது

விருத்தாசலம் : 

            விருத்தாசலத்தில் பால் தாக்கரே உருவ பொம்மையை எரித்த காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
 
             மும்பையில் சில தினங்களுக்கு முன் காங்., பொது செயலாளர் ராகுல் காந்திக்கு சிவசேனா கட்சியினர் கறுப்பு கொடி காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கடைவீதியில் இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் காங்., கட்சியினர் பால்தாக்கரே உருவபொம்மையை எரித்தனர். இதுதொடர்பாக அசோக்குமார் உள்ளிட்ட 17 பேரை இன்ஸ்பெக்டர் பசுபதி கைது செய்தார்.

Read more »

மின்கம்பி திருட்டு

பண்ருட்டி : 

                   மின் கம்பியை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் 850 மீட்டர் அலுமினிய கம்பியை கடந்த 21ம் தேதி மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதன் மதிப்பு மூவாயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து உதவி மின் பொறியாளர் சிவக் குமார் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Read more »

அறுவை சிகிச்சையில் இறந்த குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் சிக்கல்

திட்டக்குடி : 

                  அறுவை சிகிச்சையால் இறந்த குழந் தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
 
                 திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது 15 மாத குழந்தை சந்தோசின் ஆணுறுப்பு வீங்கியது. உடன் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு 30ம் தேதி அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் இறந்தார். பின்னர் குழந்தையின் உடன் அவரது சொந்த கிராமத்தில் புதைக்கப்பட்டது.
 
             இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜா டாக்டரின் தவறான அறுவை சிகிச் சையால் குழந்தை இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆனினங்குடியில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்திட அனுமதிகோரி திட்டக்குடி தாசில்தாருக்கு மனு கொடுத்தார். இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜாவின் நிபந்தனையின்படி, சிறப்பு குழந்தை நல டாக்டர், சிறுநீரகவியல் துறை நிபுணர்கள், ரசாயன நிபுணர்கள் இங்கு பணியாற்றாத காரணத்தினால் பிரேத பரிசோதனை செய்திட இயலாது என திட்டக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந் துரை செய்து தாசில்தார் கண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் குழந்தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Read more »

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை பெற இருப்பிட சான்று கோரி மனைவி விண்ணப்பம்

திட்டக்குடி : 

             வெளி நாட்டில் இறந்த கணவரின் உடலைப் பெற, இருப்பிட சான்று கோரி அவரது மனைவி, தாசில்தாரிடம் மனு அளித்தார்.

              மங்களூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (37). இவருக்கு வளர் மதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பக்ரைன் நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்ற கணேசன், கடந்த 5ம் தேதி எதிர்பாராமல் இறந்தார். இது குறித்து கணேசனின் மனைவி வளர்மதிக்கு பக்ரைன் நாட்டிலிருந்து போனில் தகவல் தெரிவிக்கப் பட்டது. தனது கணவர் கணேசன் உடலைப் பெற்று இறுதி சடங்கு செய்திட, இருப்பிட சான்று கோரி திட்டக்குடி தாசில்தார் கண்ணனிடம், நேற்று காலை வளர்மதி விண்ணப்பம் கொடுத்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior