உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூரில் வடகிழக்குப் பருவ மழையால் காணாமல் போன சாலைகள்


கனமழை காரணமாக புதை குழிகளாக மாறிப்போன, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் பாரதி சாலை (தேசிய நெடுஞ்சாலை).
கடலூர்,:

              கடலூரில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. 

               சட்டப் பேரவை, உள்ளாட்சி என இரு தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. பல அரசியல் கோட்டைகளை உடைத்தெரிந்து கடலூர் மக்கள் இயல்பாக வாக்களித்து விட்டர்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களில் இருந்து, கடலூர் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்ப வில்லை. இது இப்படித்தான் நடக்கும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம் என்ற அதிகார வர்க்கத்தினரின் மனக்கோட்டையைத் தான் மக்களால் இன்னமும் உடைக்க முயவில்லை. 

              வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 25-ம் தேதி முதல் கடலூரில் 3 நாள்கள் கனமழை பெய்தது. இந்த 3 நாள் மழையையே கடலூர் மக்களால் தாங்க முடியவில்லை. இயல்பு வாழ்க்கை பெரிதும் பதிக்கப்பட்டது.இதற்கு காரணம் நகரச் சாலைகள். கடலூர் நகரின் பிரதானச் சாலைகள் அனைத்தும், பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு, முறையாக மூடப்படாததால், மழை பெய்ததும் நிலைமை மிக மோசமாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சாலைகள் சிதைக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழை காலத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை கடலூர் மக்கள் அனுபவிப்பது இது 4-வது ஆண்டாகும். 

               அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகளின் அறிவிப்பு, காற்றில் கரைந்து போயிற்று. கடலூர் முதுநகர் மணிக்கூண்டு முதல் புதுநகர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சுமார் 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலைக்கு மாறி இருக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூறியது 

                    தற்காலிக சீரமைப்புக்கூட மழைக்காலம் முடிந்த பிறகுதான் என்று கூறிவிட்டனர். அப்படியென்றால், 2012 ஜனவரி மாதம் வரை கடலூர் நகரின் துயரம் நீடிக்குமோ, அதை தாங்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 










Read more »

கடலூர் மத்திய சிறையில் பொன்முடியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/641b10de-216a-4c76-a561-617dc2989095_S_secvpf.gif
 
கடலூர்:
 
       நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

இதன் பின் அவர் பேட்டியளித்தார்
 
கேள்வி: 
 
முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டும்.  

கேள்வி: 
 
         தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வென்று உள்ளது. இதனால் நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில்: சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனமாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்று இருக்கலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்.

கேள்வி: 
 
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. பிடித்து இருப்பதால் தமிழக அரசு தவறு செய்தால் யார் தட்டி கேட்பார்கள்?

பதில்: ஏற்கனவே இது சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். ஆனால் இப்போது கேள்வி கேட்க்க கூடிய இடத்தில் பத்திரிகைகள்தான் உள்ளன.  

கேள்வி: 
 
  உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்ததற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: தேர்தல் ஆணையம் மட்டும் உடந்தை இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் உடந்தையும் உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

            அப்போது புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆதி.சங்கர் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், இள.புகழேந்தி, செஞ்சி கண்ணன், உதயசூரியன், குழந்தை தமிழரசன், நந்தகோபால கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா, தங்கராசு, தொ.மு.ச. ராஜா, தங்க ஆனந்தன், பழனி, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:

        விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும் உள்ளனர்.













Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக மணிமேகலை பதவி ஏற்பு

கடலூர்:

              கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை (அ.தி.மு.க.) சனிக்கிழமை பதவி ஏற்றார். 

              கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வார்டுகள் 33. இதில் 20 வார்டுகளை அ.தி.மு.க.வும், 4 வார்டுகளை தே.மு.தி.க.வும், 5 வார்டுகளை சுயேச்சைகளும், 2 வார்டுகளை பா.ம.க.வும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலை ஒரு வார்டையும் கைப்பற்றின. சுயேச்சைகளில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். எனவே அ.தி.மு.க.வின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சுயேச்சையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

                தலைவர் பதவிக்கு 22-வது வார்டு உறுப்பினர் மணிமேகலையும், துணைத் தலைவர் பதவிக்கு 1-வது வார்டு உறுப்பினர் பாலாம்பிகையும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வேறு யாரும் இரு பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சனிக்கிழமை பதவி ஏற்றனர்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை அ.தி.மு.க. கடலூர் ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமியின் மனைவி ஆவார். துணைத் தலைவர் பாலாம்பிகை கடலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துகுமாரசாமியின் மனைவி ஆவார்.  

            ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை கடலூரை அடுத்த குமழங்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.வில் 1991-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். கணவர் பழநிசாமி 1991-க்கு முன்னர் குமழங்குளம் அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராவும் 1991 முதல் 98 வரை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்தார். 2002 முதல் கடலூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior