உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

குருப்-1 தேர்வில் முறையற்ற வினாக்கள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி

             தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? உள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.

              டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35 லட்சம் பேர் பங்கேற்றனர். 

               இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.இந்த நிலையில் தேர்வில் ""பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? ஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?'' உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.

இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ், கனகராஜ் ஆகியோர் கூறியது:

                  தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது, மதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி, ஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும், அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.

               பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.






Read more »

கடலூர் துறைமுகம் புத்துயிர் பெற்றது : மியான்மர் நாட்டில் இருந்து மரக்கட்டைகள் வந்தடைந்தது

 கடலூர்:

         மியான்மர் நாட்டில் (பர்மா) இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் கடலூர் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.
 

           கடலூர் துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும், மாநில அரசு போதிய கவனம் செலுத்தாததாலும், கடலூரில் அதற்காக குரல் கொடுக்க சரியான அரசியல் தலைமை இல்லாததாலும், துறைமுகம் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளித்த கடலூர் துறைமுகத்தில், தற்போது 10 தொழிலாளர்களுக்குக் கூட வேலைவாய்ப்பு இல்லை.
 

           துறைமுக அதிகாரிகளின் முயற்சியால் அவ்வப்போது ஓரிரு கப்பல்கள் வந்து போகின்றன. சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் கப்பல்கள் நேரடியாக, அந்த தொழிற்சாலைகள் அமைத்துள்ள சிறிய துறைமுகங்களுக்குச் சென்று விடுகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு தலா 27 ஆயிரம் டன் யூரியா உரம் ஏற்றி வந்த 2 கப்பல்கள் கடலூர் துறைமுகம் வந்தன. துறைமுகத்தில் யூரியாவை சேமித்து வைக்கவும், துறைமுகத்தில் இருந்தே சரக்குகளை, ரயில் வேகன்களில் ஏற்றும் வசதியும் இல்லாததால், யூரியவை இறக்குமதி செய்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 

          எனவே யூரியா கப்பல்கள் தொடர்ந்து வரவில்லை. தற்போது மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட கப்பல் மியான்மரில் இருந்து வந்துள்ளது. மே 28-ம் தேதி மியான்மர் நாட்டின் யான்கேன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட யான்பயோ என்ற இந்தக் கப்பல், சனிக்கிழமை கடலூர் வந்தது. கடலூர் துறைமுகத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நங்கூரமிட்டு உள்ளது. இதில் 2,600 டன் எடை கொண்ட 1,460 காட்டு மரக்கட்டைகள் எடுத்து வரப்பட்டு உள்ளன. 

          இவைகளை பாஜிகள் மூலம் (சரக்கு மிதவை) கரைக்குக் கொண்டு வரப்பட்டு, துறைமுக சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு வரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடலூர் துறைமுகத்தில் இருந்து இந்த மரக்கட்டைகள் டிரக் லாரிகள் மூலம், புதுவையில் உள்ள பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குக் கொண்டு போகப்பட உள்ளன. கப்பலில் இருந்து அனைத்து மரக்கட்டைகளையும் கரைக்குக் கொண்டுவர ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மியான்மர் நாட்டுக் கப்பலில் மரக்கட்டைகள் கடலூர் வந்ததன் மூலம், கடலூர் துறைமுகத்துக்குக் கட்டணமாக ரூ. 5 லட்சம் கிடைக்கும் என்றும் துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

           சரக்கு முறையாகக் கையாளப்படுவதாக புதுவை பிளைவுட் நிறுவனமும், மியான்மர் நிறுவனமும் திருப்தி அடைந்தால், மாதம் இரு கப்பல்கள் கடலூர் துறைமுகத்துக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். கடலூர் துறைமுகத்துக்கு தொடர்ந்து கப்பல்கள் வந்தால் கடலூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சல்

கடலூர்:

            அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் முடிந்த பிறகும், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது. 

          பல ஊர்களில் இன்னமும் 100 டிகிரியில் இருந்து வெப்பம் குறைந்த பாடில்லை. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். ஏழை எளிய மக்களும் வாங்கிச் சாப்பிடும் விலையில் கிடைப்பது வெள்ளரிக்காய்தான். இளநீருக்கு இணையானது வெள்ளரிக்காய் என்று இந்திய மருத்துவம் தெரிவிக்கிறது.
 

           வெள்ளரிக்காய் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைகாலப் பயிராக விளைகிறது. அதிக தண்ணீர் தேவையின்றி, பராமரிப்புச் செலவுகள் இன்றி, விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர் வெள்ளரிக்காய். திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட வடமாவட்டப் பகுதிகளில் ஜெர்க்கி என்ற புதியரக வெள்ளரிக்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகம். ஆனால் பெருவாரியாக நாட்டு ரகமே பயிரிடப்படுகிறது. நாட்டு ரக வெள்ளரிக்காய்தான் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
 

           கடலூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி முடிவுற்றதும், வயல்களில் பெருவாரியாக, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். புவனகிரி, முட்லூர், புதுச்சத்திரம், ஆண்டிக்குழி, வடலூர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் அமோகமாக உள்ளது. வெள்ளரித் தோட்டங்களில் 10 கிலோ கொண்ட கூடை ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
             ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெள்ளரிக்காய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சிறுவியாபாரிகள் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப் பழங்களை வாங்கி வந்து நகர்ப் புறங்களில் விற்பனை செய்கிறார்கள். வெள்ளரிப் பழங்கள் கூடை கூடையாக தற்போது விற்பனைக்கு வருகின்றன. வெள்ளரிப் பழங்களைவிட, காய்க்கே அதிக கிராக்கி உள்ளது.  
           இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியபோது 3 நாள்கள் மழை பெய்ததன் காரணமாக, வெள்ளரிச் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன. அதன்பிறகு விவசாயிகள் மீண்டும் வெள்ளரி சாகுபடி செய்து, தற்போது வெள்ளரிக்காய் வெள்ளரிப்பழம் அறுவடை ஆகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளரிக்காய் சிறந்த நீரிளக்கி. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைத் தணிக்கும். தலைச் சுற்றலைத் தடுக்கும்.

              மூட்டுவலி வீக்கம், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கத் தேவையான ரசாயனப் பொருள் வெள்ளரிக்காயில் உள்ளது. புகைப்பிடிப்போருக்கு குடலில் படியும் நிகோடின் விஷத்தை நீக்கும்.




Read more »

பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.42 கோடி பாக்கி

கடலூர்:

              கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 42 கோடி வரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  

               கடலூர் மாவட்டக் கரும்பு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பயிர்க் கடனாக, கூட்டுறவு வங்கி ரூ. 30 கோடியும், வர்த்தக வங்கிகள் ரூ. 60 கோடியும் வழங்குகின்றன.  வட்டிக்குக் கடன் வாங்கி கரும்பு விளைவித்து, ஆலைக்கு சப்ளை செய்துவிட்டு, ஆலை உரிய நேரத்தில் பணம் வழங்காமல், இன்று நாளை என்று விவசாயிகளை இழுத்தடிக்கும் நிலை, கடலூர் மாவட்டத்தில் காலம் காலமாக நீடித்து வருகிறது.  4 சர்க்கரை ஆலைகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. பெண்ணாடம் சர்க்கரை ஆலை நாளொன்றுக்கு 7,500 டன் கரும்பு அரைவைத் திறன் கொண்டது. 

              இந்த ஆலைக்கு 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள கரும்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட கரும்பு அரைவை, இன்னும் 10 நாள்களில் முடிவடைய இருக்கிறது.  இந்த அரைவைப் பருவத்தில் இதுவரை, 7.40 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. இறுதியாக 31-3-2011 அன்று எந்தெந்த நிலங்களில் முழுமையாகக் கரும்பு வெட்டு முடிவடைந்ததோ, அந்த விவசாயிகளுக்கு ஆலைநிர்வாகம் 11-5-2011 அன்று பணம் வழங்கி உள்ளது. ஆலைக்கு சப்ளை செய்யப்பட்ட சுமார் 2 லட்சம் டன் கரும்புக்கு, இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். 

             சுமார் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 42 கோடி வரை, இந்த சர்க்கரை ஆலை பாக்கி வைத்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.  கரும்பு சப்ளை செய்யப்பட்ட நாளில் இருந்து 14 தினங்களுக்குள், விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் பணம் வழங்கிவிட வேண்டும்  என்று, சர்க்கரை கட்டுபாடுச் சட்டத்தில்  இருந்தும், பல விவசாயிகளுக்கு 70 நாள்கள் ஆகியும் பணம் வழங்கவில்லையாம்.  14 நாள்களுக்குள் கரும்புப் பணம் வழங்கா விட்டால், விவசாயிகளுக்கு வட்டியுடன் ஆலை நிர்வாகம், பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்றும் சர்க்கரைக் கட்டுப்பாடு சட்டம் தெரிவிக்கிறது. 

                 அந்த வகையில் கரும்புப் பணம் பாக்கிக்காக, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய வட்டி மட்டும், ரூ. 86 லட்சம் என்கிறார்கள் விவசாயிகள்.  கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள், கடனை உரியகாலத்தில் திருப்பிச் செலுத்தினால், கடனுக்கு வட்டி இல்லை. பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்தவர்களுக்கு, ஆலை நிர்வாகம் உரிய காலத்தில் பணம் வழங்காததால், விவசாயிகள் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு அறிவித்து இருக்கும் வட்டிச் சலுகையையும் விவசாயிகள் பெறமுடிய வில்லை. மேலும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனுக்கு, அபராத வட்டியாக 8.5 சதம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு, விவாசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.  

இதுகுறித்து வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

               "பெண்ணாடம் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு,  ரூ. 42 கோடி வரை பாக்கி வைத்து உள்ளது.  இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமலும், அரசு அறிவித்து இருக்கும் வட்டிச் சலுகையைப் பெறமுடியாமலும் உள்ளனர்.  மே மாதம் வெட்டிய 1.38 லட்சம் டன் கரும்புக்கு, டன்னுக்கு ரூ. 250 வீதம் வழங்க வேண்டிய வெட்டுக் கூலி கூட ஆலை நிர்வாகம் வழங்க வில்லை. கடனை திருப்பிச் செலுத்தாததால், விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வாங்க முடியவில்லை.

            கடலூர் மாவட்ட ஏனைய சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்குப் பாக்கியின்றி பணம் வழங்கி விட்டன.  கரும்புப் பணம் பாக்கி குறித்து, மாவட்ட ஆட்சியர், வருவாய் மீட்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்குப் பணம் பெற்றுத் தரவேண்டும்.  ஆனால் மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்குக் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை என்றார்.  

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் கூறியது 

                   பெண்ணாடம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புப் பணம் பாக்கி குறித்து, ஆலை நிர்வாகத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். அடுத்த வாரம் மாவட்ட ஆட்சியர் மூலம், முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்து இருக்கிறோம். தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.






Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு (சில்வர் பீச்) சுற்றுலா வந்த இளைஞர் கடலில் மூழ்கி சாவு

கடலூர்:

      கடலூர் சில்வர் பீச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த இளைஞர், கடலில் மூழ்கி இறந்தார்.
 
        பெங்களூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சேகரின் மகன் பாரத் (23). பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.பாரத்தும் அவரது நண்பர்கள் சிலரும், தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுலா சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அவர்கள், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கச் சென்றனர். கடலில் குளித்துக் கொண்டு இருந்தபோது பாரத், அலைகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். உடன் வந்தவர்கள் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் பாரத் உடல் கரை ஒதுங்கியது. சடலத்தை தேவனாம்பட்டினம் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




Read more »

அரசியலில் ஈடுபடும் என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை: என்.எல்.சி. நிர்வாகம் முடிவு

நெய்வேலி:

              அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் உள்ள என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

           என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியர்களாக இருக்கும் பலர் அரசியல் கட்சிகளின் மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகர பொறுப்புகளில் நிர்வாகிகளாக பதவி வகிக்கின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பல நேரங்களில் வெளியூர் செல்கின்றனர். இதனால் அவர்கள் சரிவர பணிக்கு வர முடியாத சூழல் நேரிடுகிறது.  மேலும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் நேரத்தில் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு, பொது நலத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்லவும் நேரிடுகிறது. 

              அவ்வாறு ஒரு ஊழியர் சிறை செல்ல நேர்ந்தால், அது சட்டப்படி குற்றச்செயல் என்பதால், என்.எல்.சி. விதிமுறைகளின்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நிர்வாகம் தள்ளப்படுகிறது.  ÷இது ஒருபுறம் இருக்கையில் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் உள்ள ஊழியர்கள் தினந்தோறும் பணிக்கு வந்தது போன்று தங்களது வருகையை பதிவுசெய்துவிட்டு, அதன்பின் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.  

            அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக வெளியூர்களில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அவர்கள் தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்ட நாள்களில் என்.எல்.சி. பணிக்கு வந்தது போன்று, வருகைப் பதிவு செய்து ஊதியம் பெற்றிருப்பதாகவும் இதனால் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுவதாக மர்மநபர்கள் சிலர் என்.எல்.சி. கண்காணிப்புத் துறைக்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.  

             இதையடுத்து அவ்வாறு அரசியல் கட்சிகளின் பொறுப்புவகிக்கும் என்.எல்.சி. ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவும் தயாராகிவுள்ளது என்எல்சி நிர்வாகம்.  

இது குறித்து சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பொறுப்பு வகிக்கும் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், 

             "இது காலங்காலமாக இருந்துவரும் நடைமுறை. நிர்வாகத்திற்கு இப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டதா? இதையெல்லாம் சிறிது நாள்களுக்குத்தான். எங்களது ஆதரவு நிர்வாகத்துக்கு தேவை. எனவே பயப்படும் படியாக எதுவும் நடைபெறாது' என்றனர்.  நெய்வேலியில் மிகப்பெரிய அலுவலகத்தைக் கொண்டு, ஒரு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் ஒரு தலைமை அதிகாரியுடன்,75-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்துக் கொண்டு இயங்கும் என்.எல்.சி. கண்காணிப்புத் துறை, இத்தனை ஆண்டுகள் கண்டும் காணாமல் இருந்துவிட்டு தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறதோ?






Read more »

The income-tax department relents, furnishes details of former MLA of Kattumannarkoil IT returns

            

         The income-tax department, which had been refusing to furnish details of IT returns to right to information (RTI) applicants, has finally chosen to do so under the RTI Act.

          The department has furnished the I-T returns of D Ravikumar of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), the former MLA of Kattumannarkoil in Cuddalore district, for the accounting years 2008-09, 2009-10, in response to an RTI application by V Gopalakrishnan, an activist in KK Nagar.

          Disclosure of details of Ravikumar's I-T returns gains importance as the department has been rejecting the RTI applications seeking income-tax returns of public servants. Last month, the department dismissed the RTI requests of Gopalakrishnan, when he sought the I-T returns of DMK president M Karunanidhi, Union home minister P Chidambaram, Union textiles minister Dayanidhi Maran, Rajya Sabha MP Kanimozhi and former telecom minister A Raja, as all of them had objected to the disclosure. And, in the case of an RTI query seeking the I-T returns of Union fertilizers minister MK Alagiri, the department rejected it without even calling for his objection.

           The I-T returns of Ravikumar, furnished by the income-tax office in Cuddalore, shows that he got Rs 5.75 lakh as salary and allowances as an MLA during 2009-10 and the value of his assets was about Rs 31 lakh as on March 31, 2010.  However, the income-tax department's Chennai office has refused to furnish the I-T returns of Ravikumar's party as the VCK objected. 

Strongly opposing the applicant's request, the VCK said: 

          "The information sought by the applicant is personal in nature and also consists of important and sensitive details of the party, along with information pertaining to persons and entities associated with the party."  The department in its RTI reply said it had asked the party's objections, if any, under Section 11 of the RTI Act. The provision says that a PIO, where he intends to disclose any information or record on a RTI request which relates to or has been supplied by a third party and has been treated as confidential by that third party, shall give a written notice to such third party. And the objection, if any, of the third party should be considered while taking a decision about disclosure of information.

                While there are arguments that disclosure of I-T returns would amount to an intrusion of one's privacy, Gopalakrishnan cited a ruling of the Central Information Commission in his RTI application saying that the assesses were submitting the returns in consequence of their legal obligation and hence they were public documents. 



Read more »

Push to develop minor ports in Cuddalore, Nagapattinam and Colachel

             Union ministry of shipping welcomed the decision of the state government to improve cargo handling capacity by improving the proposed minor port development projects. The state government declared on Friday that it will develop minor ports along the TN coastline in Cuddalore, Nagapattinam and Colachel.

             The project was first proposed by the central government as part of its National Maritime Agenda to develop minor ports rather than major ports along the countryside. K Mohandas, union shipping secratary, said that it was a welcome move. "We made the suggestion to all states with a coastline. We are looking at improved cargo handling capacity by 2020 by giving more improtance to the development and advancement of minor ports," said Mohandas.  The projects with an aim to increase the trade capacities of the state will be completed in a public-private partnership. 

Read more »

Tamil Nadu Governor launches solid waste management project by Red Cross Society including Cuddalore District

            Tamil Nadu Governor Surjit Singh Barnala today launched a pilot project on solid waste management in Cuddalore, Pudukottai, Tiruvarur, Nagapattinam and Tanjore districts of Indian Red Cross Society. 

            The scheme was one of the three new projects of Indian Red Cross Society that was launched by Barnala at a function held at Raj Bhavan today, an official release here said. Besides the solid waste management project, he also unveiled the installation of napkin vending machines in select Girls Higher Secondary Schools in Cuddalore, Pudukottai and Tiruvarur districts. The Governor also launched a WatSan manual of Indian Red Cross Society (IRCS), the release said. Indian Red Cross Society Secretary General S P Agarwal, IRCS Tamil Nadu Vice-President Harish L Metha were present on the occasion, the release said.




Read more »

சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி . குரூப்-1 தேர்வு: 3,083 பேர் பங்கேற்பு

சிதம்பரம் : 

             சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை 3,083 பேர் ஆர்வமுடன் எழுதினர். சிதம்பரத்தில் 10 மையங்களில் டி.என்.பி. எஸ்.சி., குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. 

          சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, ஆறுமுக நாவலர், நந்தனார் ஆண்கள், பெண்கள், நிர்மலா மெட்ரிக், வீனஸ், காமராஜ், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி என 10 மையங்களில் தேர்வு நடந்தது. ஆண்கள் பெண்கள் என மொத்தம் 4,026 பேர் தேர்வு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,083 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
 
           சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதி, டி.எஸ்.பி., நடராஜன் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தேர்வு நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டார். மேலும் தாசில்தார்கள் ராஜேந்திரன், பாண்டுரங்கன் மற்றும் வருவாய் துறையினர் தேர்வு மையங்களுக்கு தேவையான ஆயத்த பணிகளை செய்திருந்தனர். 




Read more »

Cuddalore Port active after three years

CUDDALORE: 

         After a gap of three years, the Cuddalore Port has become active again owing to arrival of a ship from Yangon, Myanmar, carrying timber cargo. It anchored about a km offshore on Friday night and will remain there for the next four days to unload massive logs.

          The consignment meant for a private company in Puducherry will be later transported by trucks. Official sources told The Hindu that the ship, m.v. Yawn Byae, had brought over 1,400 logs, weighing over 2,600 tonnes. As many as seven private barges were pressed into service on Saturday morning to bring the logs to the shore. While one crane was fixed aboard the ship, another installed on the shore to handle the logs.

         Sources said that the arrival of the ship had created job opportunities to not less than 250 persons, including 150 direct and 100 indirect jobs. Besides this, the port would also earn revenue of about Rs 4 lakh to Rs 5 lakh towards berthing and handling charges. The sources further said that it was in 2008 that the last ship landed at the Cuddalore Port with coal from Indonesia. The sources revealed that hereafter the port would be getting busy as ships would call on the port at regular intervals of two-three months.

            Since the Cuddalore port was said to be nearer to the southern destinations than the Chennai port, routing cargo through the former was said to be less expensive. Moreover, all the infrastructure such as barges, cranes, stacking places, and godowns were available in adequate measure at the Cuddalore port. The port could comfortably handle urea, bulk cargo, packed cargo and timber cargo. However, it could not receive ships carrying containers because it required berthing of the ship closer to the shore and only major ports had put up such a facility.

            The sources observed that since each log was weighing about two tonnes, these would be loaded on to the trucks, at the rate of 10 each, for its onward journey to Puducherry.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior