உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

இயற்கை உரத்திற்காக இடம் மாறும் கால்நடைகள்

சிறுபாக்கம் : 

              சிறுபாக்கம் அருகே இயற்கை உரத்திற்காக ஆடு, மாடு மந்தைகளை விளைநிலத்தில் பட்டி போட பணம் கொடுத்து விவசாயிகள் அனுமதிக்கின்றனர்.

              சிறுபாக்கம் அடுத்த மங் களூர், மலையனூர், பனையாந்தூர், ஒரங்கூர் மற்றும் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர், நல்லூர், அரியநாச்சி, கழுதூர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகிறனர்.சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய் துள்ள மணிலா, பருத்தி, நெல், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.அறுவடைக்கு பின் காலியான நிலங்களில் பக்க விளைவுகள் இல் லாத தரமான இயற்கை உரத்தினை இடுவதன் மூலம் விளைபொருட்கள் நல்ல மகசூல் கிடைக்கும். இதற்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு மற்றும் மாடு மந்தைகள் இப்பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இவர்களிடம் நாள் ஒன்றுக்கு ஆட்டு மந்தைக்கு 400 ரூபாயும், மாட்டு மந்தைக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயிக்கின்றனர்.இதனையடுத்து வியாபாரிகள் குடும்பத்துடன் தற்காலிக குடில் அமைத்து விவசாயிகளின் விளைநிலங்களில் ஆடு, மாடு மந்தை பட்டி அமைத்து இயற்கை உரத்திற்கு வழி செய்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி பகுதியில் பயிரடப்பட் டுள்ள பயிர் மற்றும் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். பண்ருட்டி வேளாண் வட்டார பகுதியான வையாபுரிபட்டினம், கட்டியம்பாளையம் கிராமங்களில் பயிரிட்டுள்ள விளை நிலங்களை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். அப்போது பயிறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய உளுந்து, துவரை பயிரை தனிப் பயிராகவும், கரும்பு, சவுக்கு, மணிலா, மரவள்ளி பயிரில் ஊடுபயிராகவும் பயிரிட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.வையாபுரிபட்டினத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விதைப்பு செய்த தனிப்பயிர் உளுந்து விதைப் பண்ணைகளையும், கட்டியம்பாளையம் கிராமத்தில் ஐசோபாம் எண்ணெய் பனை பெருக்கு திட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பனை தோப்புகள், கரும்பில் ஊடுபயிராக விதைப்பு செய்த உளுந்து பயிரை ஆய்வு செய்தார்.இதில் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர்கள் பாபு, ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் ஹரிதாஸ், தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர்கள் விஷ்ணுராம்மேத்தி, மலர்வண் ணன், ரவிசேகர் உடனிருந்தனர்.

Read more »

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் : கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூர் : 

          கடலூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் துப் புரவு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையாங்குப்பம் எருக்கிடங்கில் கொட்டப்படும். இதன் எடையை கணக் கிட்டு பணம் வழங்கப் பட்டு வந்தது. தற்போது துப்புரவு பணிக்கு தனியார் எவரும் வராததால் நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை லாரியில் ஏற்றி பச்சையாங்குப் பம் எருக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பாலத் தின் அருகில் கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதில் மார்க் கெட் மற்றும் ஓட்டல் கழிவுகளையும் இங்கேயே கொட்டுவதால் காய்கறி, இலைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.  இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளின் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் அண்ணாபாலம் அருகே ஜவான்ஸ் பவன் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து பரவும் கொசு உள்ளிட்ட கிருமிகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து நீடித்து வருகிறது.
                நகரின் சுகாதாரத்தை காத்திட வேண்டிய நகராட்சி நிர்வாகமே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் ஆற்றில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவது வேதனையளிக்கிறது. இனியேனும் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

திட்டக்குடியில் வரும் 20ம் தேதி 210 சித்தர்கள் சிறப்பு யாக பூஜை

திட்டக்குடி : 

           திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் 210 கலசங்கள், 210 சித்தர்களின் மகா யாகபூஜை நடத்தப்படும் என சித்தர் ராஜ்குமார் தெரிவித்தார். திட்டக்குடி அசனாம் பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணியை பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி நேற்று மாலை பார்வையிட்டார். அப் போது நடராஜர் மண்டபம், ராஜகோபுரம், பிரகார மண்டபம், சுற்றுச்சுவர், தளம் அமைத்தல், புதிய தேர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கோவில் எதிரில் உள்ள குளத்தை சீரமைக்க அறிவுரை வழங்கினார். திருப்பணி விரைவில் முடிய 210 கலசங்கள், 108 சங்காபிஷேகத்துடன் 210 சித்தர்களின் மகா யாகபூஜை வரும் 20ம் தேதி நடத்தப்படும் என்றார். அப்போது தொழுதூர் நாவலர் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி, திருப்பணிக் குழுவினர் ராஜன், வேணுகோபால், கிருஷ்ணன், சிவக்குமார், பாலகிருஷ்ணன், நகர இந்து முன்னணி தலைவர் செந்தில் உடனிருந்தனர்.

Read more »

பின்னத்தூரில் நெல் அறுவடை பிரச்னை : அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்வு

கிள்ளை : 

               அதிகாரிகளின் சமரச முயற்சியினால் பின்னத்தூரில் நெல் அறுவடை பணி நேற்று துவங்கியது.

             சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் நெல் பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கொடிப்பள்ளம் காலனியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4ம் தேதி சாலை மறியல் செய்தனர்.  அதிகாரிகள் பேச்சுவார்த் தையை தொடர்ந்து மறுநாள் அறுவடை துவங்கியபோது கொடிப் பள் ளம் காலனியை சேர்ந்தவர்கள் அறுவடை செய்த இயந்திரத்தை சேதப்படுத்தியதுடன், டிரைவர்களையும் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இருகிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) செல்வராஜ், தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. விவசாய சங்க தலைவர் ராஜாராமன், மாவட்ட கவுன்சிலர் நல்லத்தம்பி, த.மு.மு.க., மாநில துணை செயலாளர் ஜின்னா, அமீர்பாஷா, பின்னத்தூர் ஜமாத் நிர்வாகிகள் முகம்மது ஜக்கரியா, முகம்மது அயூப், கொடிப்பள்ளம் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
                கூட்டத்தில், அறுவடை உள்ள நாட்கள் வரை கூலியாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். விவசாயி பாதிக்காத வகையில் முற்றிய நெற்கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அதனை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து நேற்று முதல் கூலியாட்கள் மற்றும் இயந்திரம் மூலம் தனித் தனியாக நெல் அறுவடை பணி துவங்கியது.

Read more »

வேலை செய்தும் 18 மாதங்களாக சம்பளம் இல்லை : அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கலெக்டரிடம் மனு

கடலூர் : 

               பணி செய்தும் 18 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் அருளரசி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மூவரும் கடலூரில் நடந்த பாதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:விருத்தாசலம் தாலுகா, ஊமங்கலம் ஆதிதிராவிட நல அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2004ம் ஆண்டு முதல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 2008ம் ஆண்டில் நடந்த தணிக்கையின் போது தலைமையாசிரியையான எனக்கும் என்னுடன் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களான ஜெயப்பிரதா, கலைச் செல்வி, சுகந்திசெல்வி ஆகியோருக்கு அரசு ஆணை ஏற்பு எண் பெற்று வழங்காமல் வேறு ஏதோ ஒரு தலைப்பின் கீழ் மாத சம்பளம் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலம் எங்களது மாத சம்பளம் விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரால் 2008 அக்டோபர் முதல் 2010 பிப்ரவரி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.எங்களுக்கு எழுத்துப் பூர்வமான முன்னறிவிப்பு கொடுக்காமல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, தீபாவளி முன்பணம், பொங்கல் பரிசு, அகவிலைப்படி உயர்வு உள் ளிட்ட அனைத்தும் நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பல முறை மனு கொடுத்தும் பலனுமில்லை, அதிகாரிகளிடமிருந்து முறையான பதிலும் இல்லை.கடந்த ஒன்னரை ஆண்டாக சம்பளம் பெறாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் நிலையை கருதி எங்களின் பணி நிலையையும், "போஸ்ட் சாங்ஷன்' செய்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலத்தில் பாசனப்பகுதி மேன்மை நீர் மேலாண்மை திட்ட பயிலரங்கம்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை திட்ட பயிலரங்கம் நடந்தது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த பயிலரங்கத்திற்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். திட்டக்குடி உதவி செயற்பொறியாளர் நடேசன் முன்னிலை வகித்தார்.பாசன பகுதிகளை மேன்மை படுத்துதலில் தொழில் நுட்ப முறைகள் குறித்து பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், பாசன பகுதி மேன்மை இளநிலை பொறியாளர் முருகேசன், இயந்திர கலப்பை பணிமனை உதவி பொறியாளர் விஜயகுமார், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சாத்தையா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி பேராசிரியர்கள் ரஜூ, ஹரிப்பிரியா ஆகியோர் பேசினர்.பாசன சபை தலைவர்கள் வேணுகோபால், ராஜசேகர், தமிழரசன், மருதாசலம், பொன்னுசாமி, ரவீந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.இளநிலை பொறியாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.

Read more »

டி.நெடுஞ்சேரியில் கண் சிகிச்சை முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் அடுத்த டி.நெடுஞ்சேரியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனை மற்றும் நாகோடா பனான்ஸ் இணைந்து நடத்திய முகாமிற்கு காஸ்மோபாலிட் டன் அரிமா சங்கத் தலைவர் கமல்கிஷார் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட கண்சிகிச்சை முகாம் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார்.அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பத்ரா, ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 325 பேரை பரிசோதித்தனர்.54 பேர் அறுவை சிகிச் சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல் லப்பட்டனர்.

Read more »

நாச்சியார்பேட்டை பள்ளியில் சுகாதார கல்வி விழிப்புணர்வு

ஸ்ரீமுஷ்ணம் : 

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதார கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி தலைமை தாங்கினார். வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் விக்டோரியா பள்ளிகளை பார்வையிட்டு கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.ஆசிரிய பயிற்றுநர் பழனிமுத்து, உதவி ஆசிரியர் ரவிசுந்தர், கிராம கல்வி குழு கல்வியாளர் ஜோதிலட்சுமி, செவிலியர் தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கிராம உதவியாளர்களுக்கு இருக்கை : முதல்வருக்கு மா.கம்யூ., மனு

கடலூர் : 

                கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதல்வருக்கு மனு கொடுத்துள்ளனர். 

இது குறித்து கடலூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் மாதவன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                 வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து பணியாற்றும் அவல நிலை உள்ளது.

            அரசு துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் நாற்காலியில் உட்காரும் நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிராம உதவியாளர்களை தரையில் உட்காரவைப்பது. தீண்டாமையை கடைபிடிக்கும் பாரபட்ச அணுகுமுறையாகும்.எனவே முதல்வர் உடன் தலையிட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கிராம உதவியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கடலூர் : 

          கடலூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார்.

         கடலூர் மஞ்சக்குப்பம் அழகப்பா நகரில் எம்.எல். ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் மதிப் பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.  இதன் திறப்பு விழாவிற்கு சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைச் சேர் மன் தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன், கமிஷனர் குமார் முன் னிலை வகித்தனர். கவுன்சிலர் நவநீதம் வரவேற்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன் ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொது வினியோகத் திட்ட துணை பதிவாளர்கள் மகபூப் ஷெரீப், பயிற்சி துணை பதிவாளர் பார்த்திபன், தனி அலுவலர் பாரதி, அவைத் தலைவர் நாராயணன், கவுன்சிலர் இளங் கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

விவசாய தகவல் குழு ஆலோசனைக் கூட்டம்

சிறுபாக்கம் : 

                 நல்லூர் ஒன்றிய வேளாண் வளர்ச்சி அலுவலகத்தில் விவசாய தகவல் (ஆத்மா) மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அப்பன்ராஜ் முன்னிலை வகித்தார். தோட் டக்கலை அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். உறுப்பினர்கள் தங்கதுரை, சக்திவிநாயகம், அண்ணாமலை, ஜெயந்தி, சங்கர், அம்பிகா, ஜெயராமன், வேளாண் அலுவலர்கள் இளவரசன், கங்கைமணி, கால்நடை மருத்துவர் தில்லைகோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒன்றியத் தில் 50 விவசாயிகளை தேர்வு செய்து நாமக்கல், ஈச்சங்கோட்டை உள் ளிட்ட பகுதிகளில் கால் நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கவும், தோட்டக்கலை பயிர்களான வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவது, சிறப்பு கட்டணத்தில் மண், நீர் பரிசோதனை செய்திடுவது குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி பேசுகையில், மாவட் டத்தில் பின்தங்கிய நல் லூர் ஒன்றியத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள விவசாய மானியங்கள் நலத்திட்ட உதவிகளை வேளாண் அலுவலர்கள் தங்களின் களப்பகுதிகளுக்கு சென்று திட்ட பயன்களையும், வேளாண் குறித்த சந்தேகங்களையும் விளக்கி செயலாற்ற வேண் டும் என வலியுறுத்தினார்.

Read more »

மாவட்ட கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

சிதம்பரம் : 

            கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி மற்றும் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது.

            வீனஸ் மெட்ரிக் பள்ளி நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். சேத்தியாத்தேப்பு எஸ்.டி.எஸ்., பள்ளி நிர் வாகி சாமுவேல் முன்னிலை வகித்தார். கியாகாண்டோ கராத்தே பள்ளி நிறுவனர் ரங்கநாதன் வரவேற்றார். மாவட்ட அளவில் ஷாய் மற்றும் கட்டா பிரிவுகளில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலசுப்ரமணியன் பரிசு வழங்கினார். கராத்தே சங்க மாநில தலைவர் பிரான்சிஸ் சேவியர், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார். பின்னர் கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பயிற்சியாளர் இளவரசன் நன்றி கூறினார்.

Read more »

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் அனுமதிச் சீட்டு வழங்கல்

கடலூர் : 

                பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று முதல 13ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

அரசுத் தேர்வுகள் மண் டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  

              மார்ச் 2010ம் ஆண்டு பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கப்படுகிறது. காரைக்கால் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிழை இருந்தாலோ அல்லது அனுமதிச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கூடுதல் செயலாளர் (மேல் நிலை) அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 விலாசத்தில் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

          எழுத்துத் தேர்வு, செய் முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர் வில் தேர்ச்சி பெறாதவர் கள் கண்டிப்பாக எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளை செய்ய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள் பகுதி-1, 2 மொழிப் பாடத்தின் 2ம் தாள் மற்றும் பகுதி-3ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.மொழிப் பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட் டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை வரும் 18ம் தேதிக்குள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வும் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வு எழுதும் முதல் நாளன்று தமது வீட்டு முகவரியுடன் 30 ரூபாய் தபால் தலை ஒட்டிய பெரிய அளவு உறை ஒன்றை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கண்டிப்பாக தபாலில் அனுப்பப்பட மாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

காட்டுமன்னார்கோவில் : 

          காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

           காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் சிவசாமி மகன் குணசீலன் (22). அதேபகுதியை சேர்ந்த வீரப்பன் மகள் அசுபதி (18) கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் இரண்டாண் டாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கலியமலை சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று முன் தினம் இரவு 9 மணி அள வில் பாதுகாப்பு கோரி காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார், இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Read more »

கடலூர் முதுநகரில் தீ விபத்து : ரூ.20 ஆயிரம் பொருட்கள் சேதம்

கடலூர் : 

             கடலூர் முதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.

           க  டலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன். விவசாய கூலியான இவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்த போது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதேப்போன்று சான்றோர்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். அனைவரும் வீட்டில் இருந்த நிலையில் வீடு தீ பிடித்து எரிந்தது.தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த தீ விபத்துகளில் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு : நெடுஞ்சாலைத்துறை அதிரடி

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ் சாலைத்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு, கடைவீதி, கடலூர் ரோடு, சிதம்பரம் ரோடு ஆகிய சாலைகள் அப்பகுதி வியாபாரிகளால் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து கவுன்சிலர் கள் நகர மன்ற கூட்டத் தில் முறையிட்டனர். அப்போது நெடுஞ் சாலைத் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என சேர்மன் முருகன் பதில் அளித்தார். அதன்படி நேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட மேலாளர் தில்லைக் கோவிந்தன் மற்றும் அதிகாரிகள் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் தாசில்தார் ஜெயராமன் முன்னிலையில் பாலக்கரையில் இருந்து பஸ்நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Read more »

இரு தரப்பு மோதல்: 11 பேர் மீது வழக்கு

காட்டுமன்னார்கோவில் :

                  இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த கொத்தவாசலை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சுமதி (45). செட்டிக்கட்டளை ஊராட்சி தலைவரான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்வி, சதீஷ், தட்சணாமூர்த்தி, பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் தெரு விளக்கு எரியவில்லை, குடி தண்ணீர் வரவில்லை என முறையிட்டனர். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து சுமதி மற்றும் அவரது உறவினர்கள் தேவி, தேவகி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அறிந்த சுமதியின் ஆதரவாளர்கள் சிலர், செல்வி மற்றும் ராணியை தாக்கினர். இது குறித்து ஊராட்சி தலைவர் சுமதி மற்றும் செல்வி ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் புத்தூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை புலனாய்வு பிரிவு எஸ்.பி., சாட்சியம்

கடலூர் : 

         வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., கடலூர் மகிளா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். சிதம்பரம் கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் குமார் (29). இவரது மனைவி வசந்தபிரியா(23). திருமணத்திற்கு 25 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக வசந்தபிரியா பெற்றோர் கொடுத்தனர்.இந்நிலையில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு வசந்தபிரியாவை துன்புறுத்தி வந்தனர். விரக்தியடைந்த வசந்தபிரியா, கடந்தாண்டு ஜனவரி 8ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

            இதுகுறித்த புகாரின்பேரில் குமார், அவரது தந்தை மோட்சகுரு, தாய் சந்திராவை சிதம்பரம் போலீசார் கைது செய்து, கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சிதம் பரம் ஏ.எஸ்.பி., (சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,) நரேந்திரன் நாயர், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் வனஜா உள்ளிட்ட 9 பேர் நீதிபதி அசோகன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior