உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 14, 2012

கடலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்தகுதியானவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

    கடலூர் மாவட்டத்தில் 2012-13 ஆண்டிற்கு ஊட்டச்சத்து பாதுகாப்பின் வழியாக தீவிர ஆறு தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு பணி நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2013 வரை ஆறு மாதங்கள் பணி புரிய இரண்டு பணியிடங்களுக்கு பி.எஸ்சி., (விவசாயம்) அல்லது பட்டயப்படிப்பு (விவசாயம்) கல்வித் தகுதியாக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் 8,000 ரூபாய் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை

வேளாண் இணை இயக்குனர்,
செம்மண்டலம்,
கடலூர் - 607 001

என்ற விலாசத்திற்கு வரும் 25ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பி.எஸ்சி., (விவசா யம்) படித்தவர்கள் எவரும் விண்ணபிக்காத நிலையில் பி.எஸ்சி., (அறிவியல்) பட்டப்படிப்பு முடித்தவர்கள், பட்டயப் படிப்பு (விவசாயம்) ஓய்வு பெற்ற பி.எஸ்சி., (விவசாயம்) நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior