உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 16, 2010

பக்ரீத் நல் வாழ்த்துக்கள்



இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த பக்ரீத் நல் வாழ்த்துக்கள்

Read more »

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் வாங்க 250 கோடி அனுமதி

              தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து விநியோகிக்க  250 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

                 உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனை, பேராசிரியர் எம். விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் சார்பில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடல், கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: 

                 நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்போது 3.5 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த நோய் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சீராக உடல் எடையைப் பராமரித்தல் ஆகியவற்றை தவறாது பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நோய் பாதிப்பைத் தடுக்க முடியும். 

                கிராமப்பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு குறைவாக உள்ளது. ஏனெனில், கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, கடின உழைப்பு, சரிவிகித உணவு ஆகியவையே இதற்குக் காரணங்களாகும். ஆனால், சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வசதி கிராமப் பகுதிகளில் குறைவாக உள்ளது. நகரப் பகுதிகளில் இதற்கான வசதிகள் போதிய அளவில் இருந்தபோதும், வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றார் சிவ்தாஸ் மீனா.

                         முன்னதாக ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், ரத்த சர்க்கரை அளவைக் காட்டும் கருவி, கொழுப்பின் அளவைக் காட்டும் கருவி, ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனம் உள்ளிட்ட 19 பொருள்கள் அடங்கிய பையை (கிட்) அவர் அறிமுகம் செய்தார். (நோயாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான இந்தப் பையின் விலை  6,750 ஆகும்). 

இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. நம்பெருமாள் சாமி பேசியது: 

                     சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் முறையான உணவுப் பழக்கம், போதிய உடற் பயிற்சி, மருந்துகளைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கண் கோளாறுகள் உள்ளிட்ட இதர பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம். நாட்டில் பார்வை இழப்பு அதிகரித்துள்ளதற்கு சர்க்கரை நோயும் முக்கிய காரணமாகும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கண் கோளாறுகள் ஏற்படுவதில் இருந்து 76 சதவீதம் வரை தடுக்க முடியும். 

                  இதே போன்று, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதை 50 சதவீதம் வரை தடுக்கலாம். இவை தவிர நரம்பியல் பாதிப்புகளையும் 60 சதவீதம் வரை தடுக்க வாய்ப்புள்ளது. இதய நோய் பாதிப்பைப் பொருத்தவரை 42 சதவீதம் வரை தவிர்க்க வாய்ப்புள்ளது என்றார் நம்பெருமாள் சாமி.

                     இதன்பின் மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், ஸ்ரீ ராமச்சந்திரா இதய சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ். தணிகாசலம், டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி, இ.வி. கல்யாணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கீதா, டாக்டர் பி.பி. சிவராமன், டாக்டர் கோகுல்நாத், டாக்டர் வர்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

அறிவியல் ஆய்வுக் கட்டுரைப் போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு

கடலூர்:

              கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

               தேசிய அறிவியல் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆண்டுதோறும், குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன.இந்த ஆண்டுக்கான கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு, பண்ருட்டி ஜான் டூயி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 40 பேர் தங்களது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மண் வளத்தை நாசமாக்கும் பாலிதீன் குப்பைகள், வேளாண் பொருள்கள் கொள்முதலில் கடலூர் மாவட்டத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

                கடலூரைச் சுற்றியுள்ள 13 வேளாண் நிலங்களில் கரும்பு, காய்கறி, முந்திரிப் பயிர்களை  மாணவர்கள் ஆய்வு செய்து, பாலித்தீன் குப்பைகள் மண்ணில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை முடிவுகளாக அறிவித்தனர்.கம்மியம்பேட்டை, செல்லங்குப்பம், பட்டாம்பாக்கம், கரைமேடு ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ள பாலித்தீன் குப்பைகளால், குடிநீர் மற்றும் காற்றில் நச்சுக் கழிவுகள் கலப்பதை மாணவர்களின் ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டின. கிருஷ்ணசாமி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் கெüதமன், விஜயகார்க்கி, ஜான்சன் மரியஜோசப், சசிதரன், ராஜேஷ் அரவிந்தகுமார் ஆகியோர் அறிவியல் ஆய்வு அறிக்கைகளைத் தயாரித்தனர்.

                 இப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக டாக்டர் ராஜா ராமண்ணா நினைவு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 6,7,8-ம் வகுப்பு பிரிவிலும் மாணவர்கள் ஆய்வறிக்கை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் டாக்டர் கே.ராஜேந்திரன், முதன்மை அலுவலர் டாக்டர் சிறீஷா கண்ணன், முதல்வர் ஆர்.நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

விளைநிலங்களை அழித்து தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதை தடுக்க கோரிக்கை

சிதம்பரம்:

                சிதம்பரம் அருகே விளைநிலங்களை அழித்து தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா, கோரிக்கை விடுத்தார்.  இது குறித்து கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மனு விவரம்: 
              
                கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாய நிலங்களை சார்ந்து  வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஜீவாதாரமான விவசாய நிலங்கள் அடிமட்ட குறைந்த விலையான ஏக்கர் ரூ.1 லட்சத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று மூலம் வாங்கப்பட்டு வருகிறது. 

              குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களான பூவாலை, வயலாம்பூர், மணிக்கொல்லை, அலமேலு மங்காபுரம், தச்சக்காடு, அருண்மொழிதேவன், சின்னக்குமட்டி, சாமியார்பேட்டை, ஆலப்பாக்கம், தியாகவள்ளி, பெரியக்குப்பம், புத்திரவெளி, சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நல்ல விளைச்சல் தரும் நிலங்கள் தனியார் மின் உற்பத்தி நிலையம், எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவற்றால் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளது. 

                   இதனால் எதிர்காலத்தில் விவசாயம் செய்யக்கூட நிலம் இல்லாத அபாய நிலை உருவாகிவிடும். அதுமட்டுமல்லாது விவசாயத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே விவசாயிகளின் நலன் கருதி புதிதாக தனியார் நிறுவனங்கள் அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.130 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 130 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

                 கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 57வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மிருணாளினி திட்ட விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ., ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்சிஸ்மேரி ஞானமுத்து, நகரமன்ற துணைத் தலைவர் தாமரைச் செல்வன், மாவட்ட விற்பனைக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.

நலத்திட்ட உதவிகள்,  சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் வென்ற  மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் பரிசு வழங்கி பேசியது: 

                   கடலூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 24 ஆயிரத்து 772 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 196 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் 190 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டு 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

                   கடலூர், பண்ருட்டி கூட்டுறவு சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக மாவட்டம் முழுவதும் துவங்கப்படும். 60 பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் சரக துணை பதிவாளர் ஜெயமணி நன்றி கூறினார்.

Read more »

வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் : 20 கிராமங்கள் துண்டிக்கும் அபாயம்

திட்டக்குடி :

                 திட்டக்குடி அருகே பழுதடைந்த வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் இடிந்து விழுந்தால் 20 கிராம மக்களுக்கு போக் குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திட்டக்குடியிலிருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் 20 கிராம மக்களின் நலன் கருதியும், விவசாயத்திற்கான போக்குவரத்தினை கருத்தில் கொண்டும் வெலிங்டன் கடைகால் வாய்க்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய பாலம் கட்டப் பட்டது.
 
                தாலுகாவின் தலைமையிடமான திட்டக்குடியில் தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஜவுளி, ஜூவல்லரி உட்பட ஏராளமான வர்த் தக நிறுவனங்கள் இயங்கி வருவதால் இப்பாலம் வழியே வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

                     திட்டக்குடியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்கு இப்பாலம் வழியே வந்து செல்கின்றனர். மேலும், குமாரை கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற பூமாலையப்பர் சுவாமி கோவிலுக்கு ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் வரும் பக்தர்கள் வாகனங்களும் அதிகரித்துள்ளது. இவ்வழியாகச் செல்லும் சாலை நெடுங்குளம், செவ்வேரி, குமாரை கிராமங்களை கடந்து வேப்பூர் வரை செல்கிறது. வெலிங்டன் கடைகால் ஓடை பாலம் வழியாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களான நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்டவைகளை திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு செல்கின்றனர்.

                     தொடர் மழை, அதிகளவு வாகனங்களின் இயக்கத்தால் பாலம் வலுவிழந்தது. பாலத்தில் தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தற்போது மிகவும் பலவீனமடைந்து இருபுறமும் கற்கள் பெயர்ந்தும், மேல்புறம் குண்டும், குழியுமாகி உள்ளது. வலுவிழந்த பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது இடிந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் மட்டுமின்றி செவ்வேரி, புல்லூர், குமாரை, நெடுங்குளம் உட்பட 20 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே  மக்களின் நலனை கருதி போர்க்கால அடிப்படையில் மாற்று வழி ஏற்பாடு செய்து பாலத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு இலவசம்

கடலூர் : 

              பி.எஸ்.என்.எல்., தரைவழி மற்றும் வில் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ். என்.எல்., ப்ரீபெய்டு சிம்கார்டு  இலவசமாக வழங்கப்படும் என கடலூர் தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் மார்ஷல் லியோ ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் மார்ஷல் லியோ ஆண்டனி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                 கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., தரைவழி மற்றும் வில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பி.எஸ்.என்.எல்., ப்ரிபெய்டு கார்டு "என் நண்பன் சூப்பர்' என்னும் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பி.எஸ். என்.எல்., ஊழியர்கள் நேரிடையாக சென்று சிம்கார்டுகளை வழங்குவார்கள். அவ்வாறு வரும் ஊழியர்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையின் நகல் மற்றும் விலாசத்திற்கான சான்றிதழ் நகல்களை கொடுக்க வேண்டும்.
                 விண்ணப்பங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்தவுடன் சிம்கார்டு இயக்கப்பட்டு வேலை செய்யத் துவங்கும். 66 ரூபாய் மதிப் புள்ள சிம்கார்டு மற்றும் முதல் ரீசார்ஜ் கார்டு இரண்டும் சேர்ந்து இயக்கப்பட்டு 10 ரூபாய்க்கு டாக் டைம் மதிப்புடன் இலவசமாக வழங்கப்படும். இது 180 நாட்கள் கால அளவு மதிப்புள்ளதாக இருக்கும். தேவைப்படும் போது வாடிக்கையாளர்கள் பேசும் தொகையை "டாப்அப்' செய்து கொள்ளலாம்.

                     இந்த சிம்கார்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் இயங்கும் இரண்டு பி.எஸ். என்.எல்.,  மொபைல் எண்கள் மற்றும் ஒரு பி.எஸ்.என்.எல்.,  தரைவழி தொலைபேசி எண்ணிற்கும் "குடும்பம் மற்றும் நண்பர்கள்' திட்டத்தின் கீழ்  பேசிக் கொள்ளலாம். இதில் இரண்டு மொபைல் போன்களுக்கும் நிமிடத்திற்கு 30 பைசாவிற்கும், தரைவழி தொலைபேசிக்கு முற்றிலும் இலவசமாக ப்ரீபெய்டு மொபைலிலிருந்து பேசிக்கொள்ளலாம். 

                   வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது ரோமிங் சார்ஜ் தனியாக இல்லை.  மேலும் மாதம் 200 எஸ்.எம்.எஸ்., இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளிக்கும் சிறப்பான பி.எஸ்.என்.எல்., சிம்கார்டுகளை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரும் 30.11.10 வரை மட்டுமே இலவச சிம்கார்டு வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

Residents block traffic at Kattumannarkoil

CUDDALORE: 

             Over 600 residents from about 10 villages blocked the Tiruchi-Chidambaram road near Kattumannarkoil for over two hours to register their protest against the bad condition of the Puthur stretch.

           Residents of Neyvasal, Thorupuli, Kalikadanthan, Kothangudi and Sozhakkur used to take the Puthur road to reach Chidambaram. However, this road is in bad shape for a distance of seven km, making it difficult even for two-wheeler-riders to pass through. Even ambulances would not ply into this section. The residents alleged that the road remained in poor condition for the past 15 years. Though a representation was made to the former District Collector two years ago no effort was made to set it right. Kattumannarkoil Tahsildar Vijayalakshmi along with police officers reached the spot and pacified the protestors.

Read more »

Office assistants government departments observe fast

CUDDALORE: 

         The office assistants of government departments observed a day-long fast in front of the Collectorate here on Monday.

             They called upon the government to withdraw the order for reducing the number of office assistants and transferring the office assistants who were found in excess of 12:1 ratio to other departments. They urged the government to declare those serving in the municipalities and the panchayat unions as government employees and promote those assistants with requisite qualification as junior assistants.

             Their demands included that pump operators, night watchmen, scavengers, cooks and helpers engaged in all government departments should also be designated as office assistants. The night watchmen employed on a consolidated salary in the temples under the purview of the Hindu Religious and Charitable Endowment should be given time-scale pay. Those who had put in 10 years of service in all departments should be given time-scale pay and pension benefits.

             V.Srinivasan, State vice-president and district president of the Tamil Nadu Government Office Assistants' and Employee's Association, and C.Bhaskaran, State deputy general secretary, Tamil Nadu Registration Department Office Assistants' Association participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior