உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கியது

  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்தார்.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டு அரங்கம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

Read more »

செம்மொழி மாநாடு: கலைஞர், பொதிகையில் நேரடி ஒளிபரப்பு


              
            தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மாலையில் நடைபெறும் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வெள்ளிக்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' சிறப்புக் கருத்தரங்கம் ஆகியன கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் செய்திகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. இதைத் தவிர மாநாடு முடியும் வரை தினமும் இரண்டு மணி நேரம் வரையில் முன்தினம் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

Read more »

துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு: மத்திய அதிகாரி பண்ருட்டியில் ஆய்வு


பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சிறுவணிகக் கடையில் ஆய்வு செய்யும் தேசிய துப்புரவு பணியாளர் புனர்வாழ்வு நலவாரியச் செயலர் டி.தீதன் (இடமிருந்து 4-வது).
 
பண்ருட்டி:
 
              தேசிய துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தின் செயலர் டி.தீதன் பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்கள் சிறு வணிகம் செய்யவும், ஆட்டோ வாங்கவும் மத்திய அரசு மானியத்துடன் கடன் வசதி அளித்து வருகிறது. நல வாரியத்தின் செயலர் டி.தீதன், இணைச் செயலர் ராஜேஷ்குமார் ஆகியோர், பண்ருட்டியில் கடன் பெற்ற பயனாளிகளையும் அவர்கள் செய்யும் சிறு வணிகத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 
பின்னர்  தேசிய துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தின் செயலர்   டி.தீதன் கூறியது: 
 
               துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தேசிய துப்புரவு பணியாளர் புனர்வாழ்வு நல வாரியத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் கல்வித் தரம் மற்றும் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலுக்கு தகுந்தாற்போல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை 50 சதவீதம் மானியத்தில் கடன் வசதி அளிக்கப்படுகிறது. 31 மார்ச் 2010-ம் ஆண்டு வரை அளிக்கப்பட்ட கடன் குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் ஆய்வு செய்ததில் கடன் அளித்ததன் நோக்கம் நிறைவேறவில்லை.கடலூர் மாவட்டத்தில் 1264 பயனாளிகளுக்கு ரூ.3.19 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டியில் 96 பயனாளிகளுக்கு ரூ.24.50 லட்சம் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என டி.தீதன் கூறினார். தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் துளசிதரன் உடன் இருந்தார்.


Read more »

கடலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை: உயர் அழுத்தப் பாதையில் 42 இடங்களில் மின் துண்டிப்பு


இடி, மின்னல் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் உடைந்து விழுந்து கிடக்கும் மின் கம்பம்.
 
கடலூர்:
 
              கடலூரில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் கடலூரில் உயர் அழுத்த மின் பாதையில் 42 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலூர் நகரம் இரவில் பெரும்பகுதி நேரம், இருளில் மூழ்கிக் கிடந்தது. கடலூரில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. 
 
                பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மாலை 6-30 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது. அத்துடன் இந்த ஒரு மணி நேரமும் நகரில் இருந்து வானத்தில் எந்த திசையைப் பார்த்தாலும், பளிச் பளிச் என்று மின்னல் கண்ணைப் பறிக்கும் வகையில் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இடி முழக்கம் காதுகளைச் செவிடாக்கும் நிலையில் ஒலித்தது. பல வீடுகளில் ஜன்னல், கதவுகள் பலமாக அதிர்ந்தன. இடி, மின்னல் காரணமாக கடலூரில் இரவு 7 மணி முதல் மின்சாரம் தடைபட்டது. நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த லாரன்ஸ் சாலையில் மட்டும் சில மணி நேரம் மின்சாரம் தடைபடாமல் இருந்தது. இரவு 8-30 மணிக்கு மேல் அங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. இரவு 12 மணிக்கு ஒருசில பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு பெரும்பாலான பகுதிகளிலும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.இடி, மின்னல் காரணமாக கிராமப் பகுதிகளில் சில மின்மாற்றிகள் பழுதடைந்தன. 
 
               கடலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதையில் 42 இடங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டது. ஏராளமான இன்சுலேட்டர்கள் உடைந்து சிதறின. தேவனாம்பட்டினத்தில் மின் கம்பம் ஒன்று தரைமட்டமாகச் சாய்ந்து விழுந்தது.  கடலூர் அரசு மருத்துவமனை அருகே தனியார் அகண்ட அலைவரிசைச் சேவை கோபுரம் ஒன்று பழுதடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலை வரை இதன் சேவை தடைபட்டது. கேப்பர் மலைப் பகுதியிலும் கடலூர் நகரிலும் ஏராளமான தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதம் அடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.    

                கடலூரில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மின்சாரம் ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு ஒருமுறை துண்டிக்கப்படுவதும், 15 அல்லது 20 நிமிடம் கழித்து மீண்டும் வருவதுமாக இருந்தது. இடி தாக்கி கடலூரை அடுத்த தெற்குப் பூவாணிக்குப்பம் முருகேசன் மனைவி ஞானசௌந்தரி  (40) காயம் அடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், புதர்களுக்குள் இருந்த பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடிசைகளுக்குள் நுழைந்தன. கடலூர், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி போன்ற பகுதிகளில் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். கடலூரில் செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடவடைந்த 24 மணி நேரத்தில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

Read more »

தமிழ் வழி பி.இ. படிப்பு பாடத்திட்டங்கள் வெளியீடு

தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட, பெற்றுக் கொள்கிறார்
   
             தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். சென்னை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. 
              இதற்கான பாடப் புத்தகங்கள், பாடத் திட்டங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் பணிகள் அண்ணா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு மேற்கொண்டது. அதன்படி, பாடத் திட்டங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பாடத் திட்டங்களை வெளியிட, அதை கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேசியது: பி.இ. படிப்பின் முதலாண்டின் முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்களான இயற்பியல், கணிதம், வேதியியல், பொறியியல் கிராபிக்ஸ் ஆகியவற்றுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. பாடப் புத்தகங்கள் ஆகஸ்ட் 15-க்குள் வெளியிடப்படும். தமிழ் வழியில் பி.இ.படிப்பைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் வழி மாணவர்கள் மிகுந்த பலனைப் பெறுவார்கள். அவர்களின் சிந்தனைத் திறனும் மேம்படும்.  கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதையடுத்து பல்கலைக்கழகத்தில் குறுந்தொலைவு தொடர் ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. பொறியியல் மாணவர்களிடையே திருக்குறளைக் கொண்டுச் செல்லும் வகையில், கிண்டி பொறியியல் கல்லூரியில் (சி.இ.ஜி) டிஸ்ப்ளே மூலம் திருக்குறள் போட்டுக் காண்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.  கிண்டி சி.இ.ஜி., குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள மாணவர்களின் விடுதிகளின் பெயர்கள் மலர்கள், நதிகள் ஆகியவற்றின் பெயரைக் கொண்டதாக மாற்றப்பட உள்ளன. கல்லூரிகளில் உள்ள துறைகளின் பெயர்கள் தற்போது ஆங்கிலத்தில் உள்ளன. இவை தமிழிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Read more »

நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி பணிகள் தீவிரம்

நெய்வேலி:

              13-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் 18-ம் தேதிவரை நடைபெறவிருப்பதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நெய்வேலியில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியை என்எல்சி நிர்வாகம் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. 

                  இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்று வருகின்றனர். மேலும் கணிணி மென்பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இக்கண்காட்சியில் பங்கேற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது, விழுப்புரம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான புத்தக வாசகர்கள் ஆண்டுதோறும் இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

                  இதுமட்டுமல்லாமல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினந்தோறும் ஒரு எழுத்தாளரும், புத்தகப் பதிப்பாளரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரால் கெüரவிக்கப்படுவதோடு, தினந்தோறும் ஒரு புத்தகமும் வெளியிடப்படுகிறது .புத்தக வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தினமணி மற்றும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குழு இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி, சிறுகதை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி, குறும்படப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகளும் வழங்ப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கு அமைக்கும் பணி முதல், அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                  மேலும் வெளி மாவட்டங்களில் இருந்துவரும் புத்தக வாசகர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்தும் போக்குவரத்துத் துறையினரிடம் புத்தக் கண்காட்சிக் குழுவினருடன் பேசி வருகின்றனர். நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் செயலரான ஜார்ஜ் ஜேக்கப் மற்றும் ஒருங்கிணைப்பாளரான சி.செந்தமிழ்செல்வன் ஆகியோர் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்துவருகின்றனர்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு: ஆட்சியர் அறிவிப்பு


கடலூர்:
 
                கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார். 
 
 கடலூர் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
               கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்காலம் என்று அரசு அறிவித்து உள்ளது.எனவே கடலூர் மாவட்டத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசுப் பணியாளர்கள், சிறப்பு தற்செயல் விடுப்புக்கான, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுத்துவிட்டு, கலந்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்களில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த சிறப்பு தற்செயல் விடுப்புக்கு அரசு ஊழியர்கள் விண்ணப்பித்தபோது அதிகாரிகள், இதுதொடர்பாக தங்களுக்கு அரசாணை வரவில்லை என்று கூறி, விண்ணப்பத்தை வாங்க மறுத்ததாக அரசு ஊழியர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
 

Read more »

பெருந்திரளாக செல்ல தமிழாசிரியர்களுக்கு அழைப்பு

சிதம்பரம்:

              செம்மொழியான தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தமிழாசிரியர்கள் கோவை மாநகருக்கு திரளாக வாருங்கள் என தமிழகத் தமிழாசிரியர் கழகப் பொதுச் செயலாளர் இரா.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

               கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு தமிழாசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம் அமைத்ததும் கருணாநிதி அரசுதான். குமரி முனையில் வள்ளுவரின் 133 அடி உயர சிலை அமைத்ததும் கருணாநிதி அரசுதான். தமிழ்ச் சான்றோர் பதின்மருக்கு சென்னை கடற்கரையில் சிலை அமைத்ததும் கருணாநிதி அரசுதான்.150 ஆண்டுக்கால தமிழர்களின் கனவாகிய தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்று நனவாக்கியவர் கருணாநிதிதான். இத்தகு சிறப்புக்குரிய முத்தமிழறிஞர் கருணாநிதி சீரிய தலைமையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் பெருமை கொள்கிறது என இரா.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Read more »

மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு


கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

                 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ.5 லட்சம் ஒதுக்கலாம் என்று முதல் அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கிடைக்கும் ரூ.45 லட்சம் செலவிடப்படும். 

                கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஆதிதிராவிடர்கள் 50 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது 22 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இனி ஒவ்வொரு வாரமும் இதேபோல் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றார் ஆட்சியர். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் 289 மனுக்கள் பெறப்பட்டன. 2 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க தலா ரூ.25 ஆயிரம், கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் 13 பேருக்கும், வேலைக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகள் முவருக்குத் தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்குத் தலா ரூ.20 ஆயிரம் உதவித் தொகை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல்வருக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும், கடலூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் நன்றி தெரிவித்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Read more »

அரிமா சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:

                சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி நடராஜர் கோயில் அருகே சிதம்பரம் கீழரதவீதி நகராட்சி வரி வசூல் மையத்தில் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட சேவை நிதியிலிருந்த பெறப்பட்ட நிதி உதவியுடன் ரூ.1 லட்சம் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 

                  புதிய குடிநீர் இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட கவர்னர் வி.ரத்தினசபாபதி திறந்து வைத்தார். அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் தலைமை வகித்தார். நகரமன்றத் தலைவி ஹெச்.பௌஜியாபேகம் முன்னிலை வகித்தார். கியானா பேங்கர்ஸ் உரிமையாளர் மதன்ராஜ், மண்டலத் தலைவர் துரைசாமி, வட்டாரத் தலைவர் லலித்குமார் செயலாளர் கே.விஜயகுமார்தாலேடா, பொருளாளர் ஏ.ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more »

பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆபத்தான விளம்பரப் பலகைகள் அகற்றப்படுமா?

பண்ருட்டி:

               பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் ஆபத்தான நிலையில் எந்நேரத்திலும் பயணிகள் மேல் விழும் நிலையில் தொங்கிக் கொண்டுள்ளன. பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் பஸ் நிலையம் எப்போது பரபரப்பாக இருக்கும். 

                 இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த ஒரு துணிக்கடை பண்ருட்டி பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தும் நிழற்குடைக்கு மேல் பகுதியில் உள்ள பெரும்பாலான இடத்தில் தங்கள் விளம்பரப் பலகைகளை அமைத்துள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பலகைகளின் கட்டுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் அரசு பஸ் நேரக் கட்டுப்பாட்டு அறை அருகிலும், கடலூர் பஸ் நிற்கும் இடத்தின் அருகே தனியார் கட்டட சுவற்றிலும் பொறுத்தப்பட்டுள்ள மெகா சைஸ் பேனர் முறிந்து தொங்கிக்கொண்டுள்ளது. இவை எந்த நேரத்திலும் பயணிகள் மேல் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

இது குறித்து நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு. 

                  ஆபத்தான நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளை புதன்கிழமை அகற்றி விடுவதாக கூறினார்.


Read more »

காதல் தகராறில் கத்திக்குத்து: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

 கடலூர்:

                  காதல் தகராறில் பெயிண்டரைக் கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

               கடலூர் புதுப்பாளையம் மீன் அங்காடித் தெருவைச் சேர்ந்தவர் சலீம் (25). அதே பகுதியைச் சேர்ந்த இளம் விதவையை சலீம் காதலித்து வந்தார். ஆனால் அப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரை காதலித்து வந்தாராம்.  ஒருவர் காதல் மற்றவருக்குத் தெரிய வந்ததால், பாஸ்கருக்கும் சலீக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சலீம் 3-1-2009 அன்று, பாஸ்கரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். பலத்தக் காயம் அடைந்த பாஸ்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணம் அடைந்தார். கடலூர் புதுநகர் போலீசார்  வழக்குப் பதிவு செய்து, சலீமைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை கடலூர் கூடுதல் சார்பு நீதிபதி ஜெயக்குமார் விசாரித்து திங்கள்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சலீமுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

Read more »

சிதம்பரத்தில் பதிவுப் பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் தட்டுப்பாடு

சிதம்பரம்:

               சிதம்பரம் பகுதியில் பதிவுப் பத்திரங்கள் மற்றும் விண்ணப்ப ஸ்டாம்புகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் துணைக் கருவூலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. பத்திரம் தட்டுப்பாடு குறித்து துணைக் கருவூல அதிகாரிகளை கேட்டால் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர். 

              சிதம்பரம் பகுதியில் 2,5,10 ரூபாய் ஸ்டாம்புகள் கிடைக்கவில்லை. ரூ.1 ஸ்டாம்பு மட்டுமே கிடைக்கிறது. அதேபோல் 100, 500, 1000 ரூபாய் பத்திரங்கள் கிடைக்கவில்லை. 20, 50 மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் மட்டும்தான் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வெளி மாவட்டங்களிலிருந்து பத்திரங்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. பத்திரப்பதிவு ஊழல் ஏற்பட்டதிலிருந்து வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கப்படும் பத்திரங்கள் மற்ற மாவட்டங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் பத்திரம் வாங்கிய அம்மாவட்ட பதிவாளரிடம் கடிதம் பெற்று வந்தால்தான் சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வீண் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது.  எனவே பொதுமக்கள் நலன் கருதி தங்கு தடையின்றி அனைத்து ருபாய் பத்திரங்கள் மற்றும் விண்ணப்ப ஸ்டாம்புகள் கிடைக்க மாவட்ட கருவூல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

தமிழ் வழக்காடு மொழி: விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

                  விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும். மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை ஏற்றார், வழக்கறிஞர்கள் குமாரசாமி, கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், மணிகண்டன், சிவக்குமார், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Read more »

கடலூர் அருகே தொழிலாளி மர்மச்சாவு

கடலூர்:

             கடலூர் அருகே தொழிலாளி முருகதாஸ் (38) மர்மமான முறையில் இறந்து கிடந்தது, செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.  கடலூர் அருகே சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குருவி என்ற முருகதாஸ். கட்டுமானத் தொழிலில் கம்பி ஃபிட்டராகப் பணிபுரிந்தார். திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்ற முருகதாஸ் இரவு வீடு திரும்பவில்லை. 

                செவ்வாய்க்கிழமை காலையில் பார்த்தபோது, அவர் சுத்துக்குளம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தை கடலூர் முதுநகர் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முருகதாஸின் தம்பி கண்ணன் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இறந்துபோன முருகதாசுக்கு சாந்தி (30) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தகவல் அறிந்ததும் கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்று, முருகதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
 

Read more »

செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்டம்

சிதம்பரம்:

               புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஷிட்டோ-ரியோ இந்தியன் கராத்தே பள்ளியிலிருந்து புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இந்த விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சுடர் ஓட்ட நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.கலைச்செல்வன் தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்களும், கராத்தே பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். முனைவர் சி.ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். முன்னதாக சிதம்பரம் கீழபுதுத்தெருவில் விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.மணவாள ராமானுஜம் தொடங்கி வைத்தார்.


Read more »

“Review implementation of rural job scheme”

CUDDALORE: 

            As labour shortage has been “daunting the farm sector,” the Joint Action Council of farmers' associations has appealed to the government to review the implementation of Mahatma Gandhi National Rural Employment Guarantee (MGNREG) Scheme that takes away a major chunk of the workforce.

         The JAC, which met here on Monday , adopted a resolution. It said that besides the vagaries of weather, what was hindering the growth of the farm sector was the migration of labour or their non-availability. Villagers were now attracted to the MGNREG Scheme or were lured by jobs in the urban areas, thus, starving the farm sector of the workforce.

                Such a situation had affected foodgrains production and productivity, thereby creating a mismatch between food availability and population growth. This, in turn, had triggered inflation and if the rot was not set right in time, food crisis would soon swamp the State, the resolution said. A.P. Ravindran of Uzhavar Manra Koottamaippu pointed out that the downtrend in food production could be ascertained from paddy procurement statistics that had declined from 92 million tonnes in 2007-08 to 62 million tonnes in 2008-09 and slid to 16 million tonnes in 2009-10. Those who participated in meeting included R. Vriddhagiri of Consortium of Indian Farmers' Associations, K.Vijayakumar of the Sethiathope Anaicut Vivasayigal Sangam, M.Arunachalam of Sugarcane Farmers' Association, and, Karmangudi Venkatesan of the Theevalur Anicut Vivasiyigal Sangam.




Read more »

Funds for helping differently abled

CUDDALORE: 

        Collector P. Seetharaman has said that Chief Minister M. Karunanidhi had ordered utilisation of a portion of MLA Local Area Development Funds for support to differently abled persons.

From MLA funds

               Accordingly, it has been proposed to tap a total of Rs. 45 lakh from the local area development funds of nine MLAs in the district, at the rate of Rs. 5 lakh each. Mr. Seetharaman was speaking at a function organised here to give away 16 electric motorcycles, each costing Rs. 35,000, to 13 differently abled students and three employed persons. He also gave away Rs. 20,000 each to five persons who had married differently abled persons and Rs. 25,000 each to two students for joining engineering courses..


Read more »

Screening camp

 CUDDALORE:

            The Neyveli Lignite Corporation has organised a six-week cancer screening camp exclusively for its 1,500 women employees. Services of specialists from Kamatchi Memorial Hospital, Chennai, have been requisitioned for the purpose, according to A.R. Ansari, Chairman-cum-Managing Director of NLC.


Read more »

கடலூர் மாவட்ட ரயில் பாதைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கடலூர் : 

                விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமம் அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

                 இந்நிலையில் தண்டவாளம் தகர்க்கும் சம்பவம் தொடரும் என சேலம் ரயில்வே இன்ஸ் பெக்டருக்கு கடந்த 20ம் தேதி எஸ்.எம்.எஸ்., வந்தது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடலூர் - சேலம், விழுப்புரம் - மயிலாடுதுறை, சென்னை - திருச்சி ஆகிய மூன்று மார்க்கங்களில் 144 கி.மீ., தூர ரயில் பாதையை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்காக 10 இன்ஸ்பெக்டர், 52 சப் இன்ஸ்பெக்டர், 86 போலீசார், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், ரயில்வே போலீஸ் 15, கிராம நிர்வாக அலுவலர்கள் 20, கிராம உதவியாளர்கள் 115, கிராம கண் காணிப்பு குழுவினர் 30, ஊர்க்காவல் படையினர் 20, போலீஸ் நண்பர்கள் குழுவினர் 20 பேர் என மொத்தம் 368 பேரை கொண்டு 77 கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டுள்ளது. 

                 ஒவ்வொரு குழுவிற்கும் ரிவால்வர் அல்லது துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், ரெயின் கோட், டார்ச் லைட்று, சிகப்பு வர்ணம் பூசிய ராந்தல் விளக்கு, ரயில் பாதையில் ஏதேனும் நாச வேலை நடந்திருந்தால் அவ்வழியே வரும் ரயிலை நிறுத்த வசதியாக சிகப்பு துணி வழங்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு குழுவிற்கும் 2 கி.மீ., தூரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவு, பகலாக தொடர்ந்து ரயில் பாதையை கண்காணித்து வருகின்றனர். மேலும், ரயில் பாதையை ஒட்டியுள்ள பாழடைந்த கட்டடங்கள், முட்புதர்களில் ஏதேனும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் தொடர்ந்து ரயில் பாதையில் ரோந்து செல் கின்றனரா என்பதை அந்தந்த பகுதி டி.எஸ்.பி.,க்கள், இரவு ரோந்து செல்லும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சோதனை செய்து வருகின்றனர்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் தொழுதூரில் 105 மி.மீ., மழை பதிவு

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:

தொழுதூர் 105, 
மே.மாத்தூர் 43, 
லால்பேட்டை 41, 
கடலூர் 39.80,
கீழ்செருவாய், லக்கூர் 35,
காட்டுமன்னார்கோவில் 27,
வானமாதேவி 24.20,
புவனகிரி, காட்டுமயிலூர் 17,
பரங்கிப்பேட்டை, வேப்பூர் 15,
குப்பநத்தம் 9.20,
விருத்தாசலம் 7.40,
பெலாந்துறை 7,
பண்ருட்டி 5.20,
சிதம்பரம், கொத்தவாச்சேரி 5,
அண்ணாமலை நகர் 4.40,
சேத்தியாத்தோப்பு 4,
ஸ்ரீமுஷ்ணம் 2 மி.மீ.,

                  அளவு மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரி மழை அளவு 22 மி.மீ., ஆகும்.

Read more »

திட்டக்குடி அருகே பிணம் புதைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் சமாதானம்

திட்டக்குடி : 

                   திட்டக்குடி அருகே பிணம் புதைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட எதிர்ப் பால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி மணல் மேடு பகுதியில் வெள்ளாற்றங்கரையோரம் மயானம் உள்ளது. இங்கு விஸ் வகர்மா சமூகத்தினர் ஒரு பகுதியிலும், குறவர் மற்றும் காட்டுநாயக்கன் தரப்பினர் மற்றொரு பகுதியிலும் பிணங்களை புதைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பேரூராட்சி சார்பில் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. 

                    அப்பகுதி முக்கியஸ்தர்\களின் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு பகுதியில் விஸ்வர்கமா சமூகத்தினரும் மற்றொரு பகுதியில் மாற்று தரப்பினரும் பிணங்களை புதைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை குறவர் பகுதியில் இறந்த சோலைமுத்து (90) என்பவரது உடலை சுற்றுச்சுவர் கட்டிய ஒரு பகுதிக்குள் புதைக்க முடிவு செய்தனர். இதற்கு விஸ்வகர்மா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த திட்டக்குடி போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இறந்த சோலைமுத்துவின் உடலை சுற்றுச் சுவரின் ஒரு பகுதிக்குள் புதைக்கவும், இடம் யாருக்கு சொந்தமென தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்திட போலீசார் அறிவுறுத்தினர்.  இதனையேற்று இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.



Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: பிராமணர் சங்கம் வாழ்த்து

கடலூர் : 

              கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற பிராமணர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடலூர் கிளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

                 தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பல தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்கள், கட்டுரைகள், புதினங்கள் வெளியிட உள்ளனர். இதைக் கண்டு களிக்க உலகமெங்கிலும் இருந்து தமிழ் புலவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொது மக்கள் பங்கேற்று தமிழ்த்தாய்க்கும் நம் நாட்டிற்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுதலையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Read more »

செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இருவர் கைது

கடலூர் : 

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர் .கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

                 மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கின் சுற்றுச் சுவரில் கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து இருவர் போஸ்டர் ஒட்டினர். "உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் மதுரை, சென்னையில் நள்ளிரவில் கைது! சிறையிலும் தொடர்கிறது போராட்டம்! தமிழனுக்குச் சிறை தமிழுக்கு விழாவா? செல்லாத மொழிக்கு எதற்கு செம்மொழி மாநாடு? கைது செய்த வக்கீல்களை உடனே விடுதலை செய்! என்றிருந்தது. உடன் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரபேட்டை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் பாலு (38), உறுப்பினர் சக்திவேல் (35) என தெரியவந்தது. புதுநகர் போலீசார் வழக் குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

பண்ருட்டியிலும் போஸ்டர்: 

                பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வரை கண்டித்து புரட்சிகர இளைஞர் விடுதலை முன் னணியினரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் புரட்சிகர இளைஞர் விடுதலை முன்னணி சார்பில் 'ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க துணை போன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாக காட்ட செம்மொழி மாநாடா ?' என வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் தவமணி அந்த போஸ்டரை கிழித்து விசாரணைக்கு கொண்டு சென்றார். 

விழுப்புரத்தில் இருவர் கைது: 

                 விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட் சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் விழுப்புரம் நகரில் பல இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி மக்கள் தொடர்பாளர் விழுப்புரம் சாலாமேடு மோகன்(29), செயலாளர் வி.மருதூர் செல்வகுமார்(32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Read more »

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து : 2 பேர் பலி

விருத்தாசலம் : 

             லாரி மோதி பைக்கில் சென்றவர் இறந்தார். விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முருகன் (28). இவர் தனது பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து எறும்பனூர் நோக்கிச் சென்றார். எறும்பனூர் பாலம் அருகே எதிரே வந்த லாரி முருகன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் முருகன் அதே இடத் தில் இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் : 

              கடலூரில் மோட்டார் பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் இறந்தார். கடலூரை அடுத்த குணமங்கலம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் நடேசன் (60). இவர் நேற்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து கடலூர் முதுநகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் நடேசன் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி படுகாயமடைந்தார். உடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலின்றி இறந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior