உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 30, 2011

புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் நெய்வேலியில் யோகா பயிற்சி முகாம்

புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும்  புதிய  தலைமுறை  மாத  இதழ் சார்பில் நெய்வேலியில் 5 நாள்  யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

 பயற்சி  நடைபெறும்  நாள் :

மே 6, 2011 முதல் மே 10, 2011வரை 

இடம் : 

Seventh Day Matriculation School, 
A .K .S Nagar,
Kangaikondan, 
Neyveli - 2

நேரம் :

  காலை நேர பயிற்சி  - 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை 
  மாலை நேர பயிற்சி - 5.00 மணியில் இருந்து 6.30 மணிவரை

பயிற்சி கட்டணம் :

ரூபாய் 200 /- மட்டும் ( ஒரு நபருக்கு )

முன்பதிவு செய்ய கடைசி நாள் :

மே 4, 2011

விதிமுறைகள் :

சரியான நேரத்திற்கு பயிற்சிக்கு வரவேண்டும் 
தொடர்ச்சியாக பயிற்சிக்கு வரவேண்டும் 
முறையான உடை அணிந்து வரவேண்டும் 

யோகா பயிற்சியின் பலன்கள்

ஞாபக சக்தி அதிகரிக்கும்
கற்றல் திறன் அதிகரிக்கும்
மனதை ஒருமுகப்படுத்தும் 
கவலை மற்றும் மன அழுத்தம் குறையும் 
கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் 
உடல் மற்றும் மனம் பலம் பெரும்

முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள 


இரா. பாரதிதாசன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
கடலூர் மாவட்டம் 
புதிய தலைமுறை அறக்கட்டளை
கைபேசி எண்: 8754417304

கவனிக்க :


****முதலில் முன்பதிவு செய்யும் 120 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், அவற்றில் காலை வகுப்பில் 60 நபருக்கும் மாலை வகுப்பில் 60 நபருக்கும் அனுமதி அளிக்கப்படும். 











Read more »

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


                           உலக மக்கள் அனைவருக்கும் மே தின  வாழ்த்துக்கள்.


Read more »

பி.எட்.எம்.எட்.மாணவர்களுக்கு மே 27ல் தேர்வுகள் தொடக்கம்

           பி.எட்., எம்.எட்., பயிலும் மாணவர்களுக்கு மே 27 தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி தெரிவித்தார்.

பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்ற மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி  பேசுகையில்,

            பி.எட்., எம்.எட். பாடத் தேர்வுகளுக்கு பிறகு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். முதல்முறையாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உள்ளோம்.இப்பயிற்சி சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மையத்தில் நடக்கவுள்ளது. இதில் கருத்தியல், செய்முறை விடைத்தாள்களை எப்படி திருத்துவது, மதிப்பெண் அளிப்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாகவும், குறைபாடு இல்லாமல் இருக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Read more »

கடலூர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-


              சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதி மீறல்களை கண்காணிப்பதற்காக தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக் குழு, பறக்கும்படை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 3 குழுக்களும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் விதி மீறல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளன.

              அந்த வீடியோ பதிவுகளை தொகுதி வாரியாக பிரித்து வீடியோ பதிவை பார்வையிடும் குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அந்த குழு ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் எவ்வளவு தேர்தல் செலவு ஏற்பட்டுள்ளது என்பதை நிழற்பதிவேட்டில் பதிவு செய்கின்ற பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதில் 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

             இந்த பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யக் கோரி மே முதல் வாரத்தில் நோட்டீசு அனுப்பப்படும். அதன் பின்னர் அவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த தேர்தல்களை போல அல்லாமல் இந்த தேர்தலின்போது வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை பராமரிக்க தனியாக ஏஜெண்ட் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

            மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்வதற்காக அவர்களுக்கு 3 வகையான பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வெள்ளை நிற பதிவேட்டில் அன்றாட கணக்குகளை எழுத வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள பதிவேட்டில் ரொக்கம் குறித்தும், மஞ்சள் நிற பதிவேட்டில் வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
வேறுபாடுகள் இருந்தால்.. 
 
             அதன்படி செலவு கணக்கை தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்கள் இந்த 3 பதிவேடுகளையும் கொண்டு வரவேண்டும். வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கை எங்களிடம் உள்ள நிழற்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள செலவு கணக்கோடு ஒப்பிட்டு பார்ப்போம். அதில் ஏதாவது வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான ஆவணங்களை வேட்பாளர்களிடம் ஒப்படைப்போம்.

                 பின்னர் அவற்றை திருத்தி செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.   எனவே வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்போது உண்மை யான செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த பின்னர் அவற்றை தேர்தல் செலவின பார்வையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்கள் கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். பொதுப் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

                மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு லேப்டாப் மூலம் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளர்களும் வருகிற 11-ந் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

Commuters hopes dashed post-gauge conversion


The railway station at Cuddalore lacks basic amenities.


CUDDALORE: 

           Commuters in Cuddalore and Chidambaram were hoping that after the gauge conversion, new train services would be introduced, besides restoring the original services, but in vain.

           However, many of the train services now being operated on this new track are missing these stations, even though Cuddalore happens to be the district headquarters and Chidambaram, a religious and tourist town. A few trains that halt at these stations are overcrowded and the stations lack basic amenities. Though adequate funds have been earmarked in the Railway Budget for giving a facelift to these stations, the works are progressing, if at all, sluggishly.

           The Federation of All Resident Welfare Associations-Cuddalore and the Consumer Guild of Tamil Nadu have voiced displeasure over the state of affairs at the Cuddalore and Chidambaram stations. In a representation addressed to the General Manager of the Southern Railway, Federation general secretary M. Maruthavanan said that the Thirupadiripuliyur and the Old Town railway stations in Cuddalore lacked basic amenities. The very entrance to the Thirupadiripuliyur station presented an unseemly sight with garbage dump on one side, puddles of water all over and approach roads full of potholes. The booking counter needed a redo and platforms had become a dumping yard. The solitary water tap on the platform provided muddied water.

            The toilets were not opened to public use and works going on at the foot overbridge rendered it unfit for use. Guild secretary C.D. Appavau in his representation urged the General Manager to restore services such as the Tirupati Express, Sengottah Express and 110 Fast Passenger, besides increasing the frequency of the Villupuram-Mayiladuthirai services from twice a day to six times a day, and running the Sendur Express daily instead of once a week. The Pune Express should have a halt at Chidambaram, and, the Mysore Express and the Tirunelveli Fast Passenger should commence their journey from Chidambaram.

Read more »

T-shirts given away by the Tanfac Industries Ltd

CUDDALORE: 

          The management of the Tanfac Industries Ltd., here gave away T-shirts to 40 residents of the Seva Illam here on Thursday. The girls are undergoing football training in the 25-day summer camp organised under the aegis of the Indira Gandhi Academy of Sports and Education (IGAS) at the Anna Stadium here.On the occasion, J. Sampath Kumar, Senior Officer (Administration), Tanfact Industries Ltd, said that the girls had won many laurels in the national and international football events and, hence, definitely they deserved all kinds of support.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு மே 16 முதல் விண்ணப்பம்

              தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ்.) விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து வழங்கப்படுகின்றன.

              தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 1653 இடங்களும், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வு மூலமான சேர்க்கைக்கு 635 இடங்களும் உள்ளன. ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வின் மூலமான சேர்க்கைக்கு 891 இடங்களும் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 15-ல் வெளியாகிறது. விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து ஜூன் 2 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 2. மாணவர்களின் தகுதிப் பட்டியல் ஜூன் 21-ல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஷீலா கிரேஸ் கூறியது:

            இந்த கல்வி ஆண்டுக்கான (2011-12) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்குகிறது. அன்று சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 1 முதல் பொதுவான கலந்தாய்வு நடைபெறும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பம் மே 16 முதல் ஜூன் 2-ம் தேதி வரை வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசம். மற்ற மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. 

              விண்ணப்பத்தை இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு தட்டுப்பாடியின்றி விண்ணப்பப் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு...

                  பொறியியல் கல்லூரிகளுக்கும் மே 16 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாணவர்கள் அவதி

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி செல்வோருக்கு காவலர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

                விருத்தாசலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறை கட்டடத்தை சுற்றிலும் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸôர் மையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கல்லூரியில் தற்போது மாணவர்களுக்கு அரசு பல்கலைக் கழகத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. 

                இத்தகைய நிலையில் பலத்த பாதுகாப்புகள் இருந்தும் கல்லூரி செல்லும் மாணவர்களை சோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் அனுப்புகின்றனர்.தற்போது தேர்வுகள் நடைபெறுவதால் இதுபோன்ற நிலை ஏற்படும் போது மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை என அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும் போலீஸôர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை கையாளும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு காலந்தாழ்ந்து செல்லும் அவலமும் நிலவுவதாக கூறுகின்றனர்.

                ஜங்ஷன் சாலையில் உள்ள கல்லூரி முதன்மை நுழைவுவாயிலில் காவலர்கள் சோதனைசாலை அமைத்து இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என மறுக்கின்றனர். இதனால் கல்லூரி வழியில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு சுமார் 500 மீட்டர் தூரத்துக்குச் சுற்றி வர வேண்டிய நிலையும் உள்ளது. மேலும், கல்லூரி வழியாக கல்லூரி நகர், நாச்சியார்பேட்டை, கல்லூரி மாணவர் விடுதி, நகர விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்களிடம் காவல்துறையினர் சோதனை என்ற அடிப்படையில் அவர்களின் காலத்தை வீணடிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். 

                  இதனால் பொதுமக்கள் காவல்துறையினர் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலகட்ட பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மையம் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறையும், தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வரும் மற்ற துறை கட்டடங்களும் வெவ்வேறு பகுதியில் இயங்கி வருவதால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, மாணவர்களையும், மாணவர்களை தேடிவரும் பெற்றோர்களையும், கல்லூரி அலுவல் நிமித்தமாக வருபவரிடமும் காவல்துறையினர் கெடுபிடிகள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என கருதுகின்றனர்.

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:
            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன ஆலைகளை அகற்றக் கோரி, கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மூடப்பட்ட அந்த ஆலை, ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.சிப்காட் ரசாயன ஆலைகள் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமலும், விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்று முறையாகக் அதிகாரிகளால்  கண்காணிக்கப் படாததாலும், இந்த ரசாயன ஆலைகளால் கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் சுற்றுச்சூழல், வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
                  எனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ரசாயன ஆலைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குடிகாடு ரவி, வீரமணி, ராஜு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

Sathya Sai Baba remembered in Cuddalore

Tamil Nadu Brahmins Association paying homage to Sri Sathya Sai Baba in Cuddalore on Thursday

CUDDALORE: 
            The Tamil Nadu Brahmins' Association organised special bhajans here on Thursday to condole the demise of Sri Sathya Sai Baba of Puttaparthi.

          Devotees paid homage to flower-bedecked portrait of Baba kept on the premises of the Manjakuppam branch of the Association. As Baba liked spotless white, an empty chair covered with a snow white cloth was put beside the portrait. A white scarf decorated with a rose was placed on the chair and a white silken cloth was spread along the path leading to the chair. K.Thirumalai, branch president, lit the lamp.

          K. Thirumurthy, a nonagenarian, recalled that since Baba preached love and brotherhood he could not be confined to any religious sect. His appeal was universal because he had propagated the ideal that service to humanity was service to God. His concern for the well being of the people transcended the geographical limits and the salient example in this regard was his generous monetary assistance extended to Tamil Nadu for the implementation of the canal project for bringing the Krishna water to Chennai. The multi-specialty hospitals set up by him had been rendering yeomen services to the poor and the needy.

         Cleanliness was next to godliness and this principle was close to the heart of Baba as it could be gauged by the spick and span premises of the Prasanthi Nilayam at Puttaparthi and also the neat surroundings of all his establishments. Mr Thirumalai said that Baba had rendered unparalleled social services for the betterment of humanity, and, his warmth and humaneness swelled the rank of his followers.

Read more »

வியாழன், ஏப்ரல் 28, 2011

Cuddalore Colleges - Dr. S. Ramadoss Arts and Science College


Dr. S. Ramadoss Arts and Science College
Periyavadavadi, 
Vriuddhachalam - 606 002
Cuddalore District
Ph: 04147 - 292515 


Affiliated by Thiruvalluvar University  



Read more »

Cuddalore Colleges - C. Kandasamy Naidu College for Women

C.Kandaswami Naidu College for Women, 
Nellikuppam,
Cuddalore - 607001
Phone 04142 - 230 408, 232 408
Fax 04142 - 232 408

Courses Offered
  Under Graduate
  • B.A. Economics
  • B.A. English
  • B.A. History
  • B.A. Tamil
  • B.Sc. Botany
  • B.Sc. Chemistry
  • B.Sc. Computer Science
  • B.Sc. Mathematics
  • B.Sc. Zoology
  • B.Com. (Regular)
  Post Graduate
  • M.A. History
  • M.Sc. Mathematics

Read more »

Cuddalore Colleges - B. Padmanabhan Jayanthimala Arts and Science College

B.Padmanabhan Jayanthimala College of Arts and Science, 
Srimushnam,
Cuddalore - 608307
Ph: 04144 - 245359

B.Com Regular
BBA Business Administration
BCA Bachelor of Computer Application     

Affiliated by Thiruvalluvar University  




 

Read more »

Cuddalore Colleges - Aries Arts and Science College for Women


Aries Arts and Science College for Women
Karunkuzhi, 
Vadalur - 607303.
Cuddalore District
Ph: 04142-647077, 259859

Affiliated by Thiruvalluvar University

Read more »

மஞ்சள் சாகுபடி முறை


கடலூர் மாவட்டம் அடரியை அடுத்த கொளவாய் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள மஞ்சள்.
 
விருத்தாசலம்:
 
              நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் கோமுகி நதி உபவடி நிலப் பகுதி விவசாயிகளுக்கு மஞ்சள் பயிர் சாகுபடிக்கு அரசு 65% மானியமாக வழங்குகிறது.
 
இதுகுறித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது:
 
             தமிழகத்தில் உள்ள 63 ஆற்றுப்படுகை பகுதியில் பாசனப் பரப்பை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோமுகி நதி பாயும் கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டப் பகுதிகளில் மஞ்சள் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அரசு 65 சதவீத மானியம் வழங்குகிறது.
 
நேர்த்தி முறைகள்: 
 
               நல்ல வடிகால் வசதியுள்ள, மணற்பாங்கான செம்மண், வண்டல் மண் ஆகியன மஞ்சள் பயிரிட ஏற்ற மண்ணாகும். களர் அல்லது நீர் தேங்கும் மண் நிலங்கள் மஞ்சள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் அல்ல.
 
நடவு வயல் தயாரிப்பு முறைகள்: 
 
              மஞ்சள் பயிரிடும் நிலத்தை உளி கலப்பையால் நன்கு உழவு செய்து இதை தொடர்ந்து சட்டிக் கலப்பை மூலம் உழுது, கொக்கி கலப்பை கொண்டு 3 முறை உழவு செய்யவேண்டும்.1 ஹெக்டேருக்கு 30 டன்கள் என்ற அளவில் தொழு உரம், சூப்பர் பாஸ்பேட் 281 கிலோ ஆகியவற்றை கலந்து அடி உரமாக இடவேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் முறையே 10 கிலோ வீதம் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். வேப்பம் பிண்ணாக்கு அல்லது கடலைப் பிண்ணாக்கு ஒரு ஹெக்டேருக்கு 200 கிலோ என்ற அளவிலும், பெரஸ் சல்பேட் 30 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 15 கிலோ என்ற அளவிலும் அடி உரமாக இடுவது சிறப்பானதாகும். 4 அடி அகலமும், 1 அடி உயரமும் கொண்ட மேட்டுப் பாத்திகளை அமைத்து சொட்டுநீர்ப் பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப் பாத்தியின் மையத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். 
 
விதை ஊன்றுதல், நடவு இடைவெளி முறை: 
 
            மஞ்சள் பயிர் ஒரு ஹெக்டேருக்கு, நன்கு முதிர்ச்சியடைந்த ஆரோக்கியமான நோய்த் தாக்குதல் இல்லாத விதை மஞ்சள் 2,000 கிலோ தேவை. கிழங்குகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 10 கிலோ என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யவேண்டும்.விதை நடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக கார்பன்டாசிம், 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் நனைத்து பின்பு உலர்த்தி நடவு செய்யவேண்டும். விதை ஊன்றுவதற்கு 8-12 மணி நேரம் முன்பாக மேட்டுப் பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனம் மூலம் முழுவதுமாக நனைக்க வேண்டும். விதைகளை மேட்டுப்பாத்தியில் 3 வரிசை முறையில் 60ஷ்45ஷ்15 செ.மீ. என்ற இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். 
 
மஞ்சள் அறுவடை
 
         மஞ்சள் விதைத்த 9-வது மாதம் இலைகள் பழுத்து காய்ந்து மடியத் தொடங்கும்போது அறுவடை செய்ய வேண்டும். 1 ஹெக்டேருக்கு 7முதல் 9 டன்கள் வரை பதப்படுத்தப்பட்ட மஞ்சள் கிடைக்கும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
 
 
 

Read more »

மரவள்ளிப் பயிரை பராமரிக்கும் முறைகள்



               பருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. விவசாயிகள் தொடர்ந்து கோடை மழை பொழியுமா என்று காத்திருக்கிறார்கள்.

           இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் எத்தகைய பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்பதை விளக்குகிறார் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்.

புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது: 

                மரவள்ளி நடும்போது நல்ல வளர்ச்சி அடைந்த குச்சியை நட வேண்டும். மரவள்ளிக் குச்சியில் டார்ச் அளவு 33 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காது. குச்சியைப் படுக்க வைத்து நடக்கூடாது. நேராகவும் நடக்கூடாது. சாய்வாக நட வேண்டும். அப்போதான் சாறு உறிஞ்சும் பூச்சுகள் தாக்காது. வைரஸ் நோயும் வராது. விதை கரணைகளை இப்படி தேர்வு செய்து நட்டால் பூச்சி தாக்குதலைக் குறைக்க முடியும். உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

              உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளி வேர்ப்பகுதியில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மரவள்ளி, கிழங்கு வகை பயிர். பணப்பயிரும்கூட. 9 மாதம் வயது உடையது. 3 முதல் 4 மாதம் உள்ள செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் குறிப்பாக செஞ்சிலந்தி,மாவு பூச்சி, வெள்ளை ஈ மற்றும் செதில்பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இந்த எல்லா பூச்சிகளுக்கும் பற்கள் இல்லை. அதனால் மரவள்ளி இலை, தண்டு பாகத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்ணும் பழக்கம் உடையவையாக இருக்கின்றன. 

             இதனால் இவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. சாறு உறிஞ்சும் பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் பச்சை நிறத்தில் உள்ள இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. ஒளிசேர்க்கை தடைப்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படலாம். 

பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்: 

              வெள்ளை ஈ என்ற பூச்சி மொசைக் வைரஸ் என்ற நச்சு உயிரி நோயைப் பரப்பும். மரவள்ளி வயலில் முதல் 4 இலைகளை மட்டும் வெள்ளை ஈ தாக்கும். கீழ் இருக்கும் எல்லா இலையையும் மாவு பூச்சி தாக்கும்.செஞ்சிலந்தி தாக்குதல் குறைந்து இருந்தால் டைகோ பால் என்ற மருந்தை 1.5 மி.லி. அளவு எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து அல்லது டெகாசஸ் என்ற மருந்தை 2.5. மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து இலையின் மீது படும்படி மரவள்ளி நடவு செய்த 3, 5, 7 மாதங்களில் தெளிக்க வேண்டும். செஞ்சிலந்தி தாக்குதல் அதிகமாக இருந்தால் புராபர்கைட் 1.5 மி.லி. எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 2 கிராம் பெவிஸ்டின் மருந்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செஞ்சிலந்தி தாக்குதல் இருந்தால் இலைகள் கீழ்ப்பக்கமாக வளைந்திருக்கும். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மரவள்ளி வயலைச் சுற்றி மணத்தக்காளி செடி நடலாம். வெள்ளை ஈக்கு அதிகமாகப் பிடித்து மணத்தக்காளி. 

               அந்தச் செட்டியில் ஒட்டிக் கொள்ளும். இது எளிதான வழி. துத்தியும் நடலாம். வெள்ளை ஈ தாக்காத ஒரு மரவள்ளி ரகம் இப்போது வந்துவிட்டது. கோ டிபி4 என்பது அந்த ரகத்தின் பெயர். இது வெள்ளை ஈக்கு எதிர்ப்புத் தன்மை உள்ள ரகம். புதுச்சேரி பகுதியில் கேரளம், ரோஸ் மரவள்ளி பயிர்கள்தான் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி 1 ஏக்கருக்கு 40 வரப்பு ஓரங்களில் வைப்பதால் வெள்ளை ஈ கவரப்பட்டு அதில் ஒட்டிக் கொள்ளும்.வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக இருக்கும் வயல்களில் டைமீதோஏத் என்ற மருந்தை 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பயிரில் களைகளை அப்புறப்படுத்த வேண்டும். 

              மாவு பூச்சியை அழிக்க மீன் எண்ணெய் சோப்பு 40 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அந்த மாவு பூச்சியின் வெண்மை நிற படலம் கீழே கொட்டிக் கொள்ளும். முசுக்கொட்டை செடி அல்லது பப்பாளி, நெய்வேலி காட்டாமணக்கு வரப்பு ஓரங்களில் வளர்க்க வேண்டும். அதில் மாவு பூச்சி ஒட்டிக் கொள்ளும். தாக்குதல் நிறைய இருந்தால் புரோபனோபாஸ் 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த காஸ்டிக் சோடா 150 கிராம், மரபிசின் 500 கிராம், தண்ணீர் 4 லிட்டர் கலந்து தெளிப்பதால் இதை அழிக்கலாம். செயற்கை தன்மையுள்ள பைரித்திராய்டு மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. 

            ஏனென்றால் அவை சாறு உறிஞ்சும் பூச்சுகளை மறு உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை என்கிறார் விஜயகுமார்.

Read more »

எம்.சி.ஏ, எம்.பி.ஏ.படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

           எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., - எம்.டெக்., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்க்கை நடத்துவதற்கான போட்டித் தேர்வு, வரும் மே மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று மாலையுடன் விண்ணப்பம் வழங்கப்படுவது முடிந்துள்ள நிலையில், இதுவரை இப்படிப்புகளில் சேர, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் செலவு பற்றிய நிழல் படிவம் தயாரிப்பு

கடலூர் : 

             வேட்பாளர்களின் செலவு விவரப்பட்டியலின் நிழல் படிவம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

             தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் கண்டபடி செலவு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு சிக்கன நடைமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்கள் மற்றும் நிகழ்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக்குழு, பறக்கும் படை ஆகிய மூன்று குழுக்களும் தொகுதியில் நடைபெறும் வேட்பாளர்களின் பிரசாரம் முதல் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ படம் எடுத்து வைத்துள்ளனர். 

              இதில் போஸ்டர், சுவர் விளம்பரங்கள், வாகனங்கள், அலங்கார வளைவுகள், மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து வகையான செலவினங்களையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று பறக்கும்படை குழுவிற்கு இதுவரை வந்த புகாரின் அடிப்படையில் எத்தனை இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் நடந்த வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், அதற்கான வீடியோ படம் இவை அனைத்தையும் ஒன்று திரட்டி வீடியோ பார்வையாளர் குழுவால் ஒரே சிடியாக மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

            தொகுதியில் வேட்பாளர் செய்யும் செலவுகளுக்கு முறையான கணக்குகளை எழுதிக்கொடுக்க பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் முறையாக கையாண்டு செலவு கணக்குளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக தேர்தல் ஆணையம் சார்பில் நிழல் பதிவேடு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ படத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த நிழல் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் செலவு பட்டியலும், தேர்தல் ஆணையம் தயாரிக்கும் நிழல் பதிவேடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

           வேட்பாளர்கள் செலவு பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் அதற்கு தக்க வீடியோ ஆதாரத்துடன் வேட்பாளர்களுக்கு காண்பிக்கப்படும். உதாரணமாக பிரசார ஊர்வலத்தில் 5 கார்கள் இடம் பெற்றிருப்பதாக வேட்பாளர்கள் கூறி, நிழல் பதிவேட்டில் 8 கார்கள் பதிவாகி இருந்தால் அவற்றை வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

             வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பற்றிய நிழல் பதிவேடு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வேட்பாளர்கள் செலவு கணக்குகளை பராமரிக்க தனியாக ஏஜன்ட் அமர்த்திக் கொள்ளலாம். செலவுகளை பராமரிப்பதற்காக தனித்தனியாக பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

            தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளை ஒப்படைக்கும்போது, ஆவணம், வங்கிக் கணக்கு, செலவான பதிவேடு கொடுக்கப்பட வேண்டும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வரும் 11ம் தேதி கடலூர் வருகை தருகின்றனர். வேட்பாளர்கள் தரும் செலவு கணக்கு பட்டியலை யார் வேண்டுமானாலும் பக்கம் ஒன்றிக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

Read more »

கடலூரில் ஏப்ரல் 30 ம் தேதி முதல் செயற்கை நகைகள் செய்ய பயிற்சி முகாம்

கடலூர் : 

            கடலூரில் மத்திய அரசின் கே.வி.ஐ .சி., மூலம் செயற்கை நகை செய்யும் பயிற்சி நடக்கிறது. 

           கடலூரில் மத்திய அரசின் அங்கமான கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான செயற்கை அழகு வளையல்கள், முத்து மாலைகள், கம்மல், கொலுசு போன்றவற்றை தயார் செய்யும் குறுகிய கால சிறப்பு பயிற்சி முகாம் வரும் 30 ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாமில் முன்பதிவு செய்யும் முதல் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்குப் பின்னர் மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 20 முதல் 30 சதவீதம் வரை மானியத்துடன் கடன் பெறமுடியும். மேலும் வங்கிக்கடன் எப்படி பெறுவது போன்றவற்றுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 

             இதுகுறித்த தகவல்களுக்கு 93676 22256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அலங்கார செயற்கை நகைகள் குறித்த பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் அக்குபஞ்சர் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

Read more »

Plea to shift polluting units from SIPCOT Industrial Estate


Residents staging a demonstration in Cuddalore on Wednesday.

CUDDALORE: 

           Residents of Eachankadu and Kudikadu on Wednesday staged a demonstration in front of the Collectorate here urging the authorities to shift polluting units elsewhere from SIPCOT Industrial Estate.

         They were led by Senthil Kumar, district secretary of Manitha Urimai Padhukappu Maiyam. The protestors said that unmindful of health hazards posed by the polluting units, the officialdom was permitting these units to continue operation. For instance, a drug and chemical company was sealed when a bromine leak a month ago led to hospitalisation of 71 people. It had resumed operation without any assurance to the people that similar incidents would not recur, the protestors alleged.

         According to Tamil Nadu Pollution Control Board sources, the company had obtained court permission to operate its units except an unauthorised research and development wing, where the leak occurred. The protestors further said that untreated effluents being discharged from chemical, drug and dyeing units in the industrial estate had polluted the environment and soil, besides affecting marine life. They alleged that through enticement of offering jobs, the companies were trying to create a rift among local people and diverting their attention from pollution problem.

Read more »

Bus services operated with police escort


Amid security: Puducherry- bound buses being escorted by police from Cuddalore on Wednesday.

CUDDALORE: 

          With police escort, the Tamil Nadu State Transport Corporation operated its bus services to and from the Union Territory of Puducherry as well as to other destinations via Puducherry.

           The bus services could thus be operated without any disruption owing to a better coordination between the Tamil Nadu and territorial police. They worked in tandem to escort the buses without any difficulty in their respective territories. The State Transport Corporation sources told The Hindu that since the opposition parties in Puducherry had called a bandh for Wednesday, such a precautionary measure had been taken to give protection to the travelling public and to the bus crew.

            The All India Anna Dravida Munnetra Kazhagam and its allies such as the Communist Party of India and the Communist Party of India (Marxist) organised a day-long bandh in Puducherry, demanding the recall of Lieutenant Governor Iqbal Singh for his alleged links with Hasan Ali Khan, who is now in the Central Bureau of Investigation for money laundering charges.

            When Mr. Singh was a Rajya Sabha MP, he reportedly recommended the expeditious issuance of passport to Hasan Ali Khan. The regular commuters to Puducherry felt relieved by the uninterrupted services provided by the State Transport Corporation. Since Puducherry has a peculiar boundary demarcation that interjects intermittently into Cuddalore and Villupuram districts, it had been necessitated for the Tamil Nadu police to escort the buses up to the Puducherry boundary and from there their territorial counterparts took over and vice-versa.

               Such a reciprocity between the police personnel of Tamil Nadu and Puducherry was noticed at Kanniyakoil (Cuddalore-Puducherry boundary), Madakadipattu (Villupuram-Puducherry boundary), and, near Marakkanam on the East Coast Road and on the Tindivanam-Puducherry road (for the buses that had to ply through Puducherry from Chennai, Kancheepuram and Chengalpet to farther destinations such as Chidambaram, Sirkazhi, Kumbakonam and Thanjavur).

          However, the private operators, anticipating problem, withdrew their bus services for the day. Therefore, to meet the increased demand the State Transport Corporation pressed into service additional buses to Puducherry. The uninterrupted bus services came as a great relief to the regular commuters, such as traders, industrialists, students and patients.

Read more »

“Shadow register” to act as yardstick for assessing poll expenses

CUDDALORE: 

             The “shadow registers” being maintained by polling officials will act as yardstick for calculating the real expenses incurred by candidates in the Assembly elections.

           Therefore, individual poll accounts of candidates should not deviate from the “shadow registers.” In case of any variation between the two, the candidates ought to correct their accounts in accordance with the shadow registers, said P. Seetharaman, Collector and District Electoral Officer.

           He told The Hindu that the “shadow registers” were being prepared based on inputs provided by at least four feeder groups such as the model code of conduct committee, flying squads, video surveillance committee and media certification and monitoring committee.

           These committees had filmed all poll-related activities such as spread of publicity materials, including flex boards, posters, graffiti, propaganda by star campaigners, public rallies, vehicle checking and seizure of unauthorised money and other articles, distribution of enticements, and, advertisements in print and electronic media. Mr. Seetharaman said that a “convergence meeting” of these committees was slated to be held in last two days of this week to consolidate the accounts in the shadow registers.

            These committees would convert all their findings into monetary terms and submit their report to the assistant expenditure observers, all accounting specialists. The Collector further noted that candidates ought to maintain three types of registers known by their colours - white register for entering day-to-day expenses; pink, for recording receipt and disbursement of monies by candidates; and, yellow, for bank accounts (specifically opened for elections as all transactions ought to be carried out through the instrumentality of cheques).

            The candidates had also been permitted to appoint “expenditure agents” for keeping their accounts. If the candidates have any doubt or objection over the expenditure valuations made in the shadow registers, the officials would prove their points through compact discs and video recordings on various occasions. Mr. Seetharaman noted that in this streamlined procedures for checking poll expenditure, another salient feature would be the “super check” to be done by people. In other words, they could be present at the time of verification of expenditure registers of the candidates, and if they so desire, they could get copies of the pages at the rate of Re. 1 a page.

            All candidates ought to submit their accounts within a month of counting of votes. Later, Mr. Seetharaman said that as the District Electoral Officer, he would give a date to the expenditure observer (deployed by the Election Commission) for perusal of accounts.

Read more »

புதன், ஏப்ரல் 27, 2011

சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி

சிதம்பரம்:

            கோடை காலத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழ சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி, கொலம்பஸ் ராட்டினம் ஆகியவற்றை தனியார் நிறுவனம் அமைத்துள்ளது.

             சிதம்பரம் மேல வீதியில் உள்ளது கஸ்தூரிபாய் கம்பெனி. இந் நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத கலாட்டா என்ற தலைப்பில் புதுமையாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கோடையை குதுகாலத்துடன் கொண்டாடி மகிழ குற்றால அருவியும், கொலம்பஸ் ராட்டினத்தையும் அமைத்துள்ளது. 

           இந்த குற்றால அருவியில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்குகிறது.கோடையில் குளுமையாக இருக்க வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கிரீம், தர்ப்பூசணி ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

குறைந்த கட்டணத்தில்ஐ.ஆர்சி.டி.சி. சார்பில் கோடைச் சுற்றுலா


               இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்சி.டி.சி.) சார்பில் ஆண்டு தோறும் கோடை காலங்களில் கோடை வாசஸ் தலங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

             ஏழை, நடுத்தர மக்கள் சுற்றுலா செல்ல வசதியாக குறைந்த கட்டணத்தில் ரெயில் டிக்கெட், சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாகன வசதி, தங்கும் இடம் போன்றவற்றை உறுதி செய்து முன்கூட்டியே சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. கோடை விடுமுறையில் குடும்பமாகவும், தனித்தனி யாகவும் சுற்றுலா செல்ல விரிவான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்துள்ளது.

           சென்னை- ஊட்டி, முது மலைக்கு 3 பகல் 4 இரவு கள் கொண்ட சுற்றுலா திட்டத்திற்கு பெரியவர்களுக்கு ரூ. 4850, சிறிய வர்களுக்கு 1850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை வரை ரெயில் மூலமாகவும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

              சென்னையில் இருந்து கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை, சென்னை-தேக்கடி, தேனி, சென்னை-மைசூர், கூர்க், சென்னை- மூணாறு- தேக்கடி, சென்னை- ஆலப்புழா, சென்னை- கன்னியாகுமரி- ராமேஸ் வரம்-மதுரை, சென்னை- கொச்சி- மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல் கிறார்கள். இது தவிர காசி, அலகா பாத், ஹரித்துவார், ரிஷி கேஷ், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட மாநில புனித தலங்களுக்கு செல்லும் சுற்றுலா திட்டமும் உள்ளது.

                  15 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்திற்கு ஒருவருக்கு ரூ. 7700 கட்டணம். தங்கு மிடம், உணவு, ரெயில் கட்டணம் சேர்த்து நிர்ண யிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. சேவை மையம் செயல்படுகிறது. அங்கு நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு பயணம் தொடர்பான விரிவான தகவல்களை பெறலாம். மேலும் 90031-40681 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

Read more »

Right documents help in speedy processing of passport application


Jose K. Mathew.



          Many of us order flight tickets and then think of getting a passport. At a time when even train journeys are booked months in advance, a passport is usually taken for granted. Is getting a citizen's more important and valuable document a nightmare? Or a pleasant experience? L. Srikrishna speaks to Jose K. Mathew, Regional Passport Officer, Madurai.

             It is not at all a complicated business to get a fresh passport, says Mr. Jose. “Walk in with relevant documents, as stipulated by the Ministry of External Affairs, which helps in swift processing of the application.” Normally, – whether educated or illiterate – people just step into the passport office in an unprepared way without carrying documentary proof needed for verification of address of the applicant etc., Actually, 80 per cent of the applicants come prepared. The problem lies with the remaining 20 per cent, who have to be educated. The Regional Passport Office in Madurai has its jurisdiction over Theni, Dindigul, Madurai, Sivaganga, Ramanathapuram, Virudhunagar, Tirunelveli, Tuticorin, and Kanyakumari districts.

           Mr. Jose, who visited The Hindu office on Saturday, interacted with journalists for nearly an hour. “Every day, 400 to 500 people come to the passport office. About 80 per cent of the applications seeking fresh passports are straight away accepted across the counter after due verification. Every applicant spends two to three hours. The documents required are clearly mentioned in the website (passport.gov.nic.in). For those who cannot understand English, we have displayed in Tamil at our office. Photocopies of the documents required are also available in Tamil for the public.” On touts, he said, “basically, we don't have any control outside the passport office. We don't allow touts or for that matter any unauthorised person inside. Only genuine applicants are permitted. Earlier, theft and cheating complaints were reported within the passport office campus. Now, such things are a past. “We do give preference to women carrying infants and senior citizens visiting the passport office,” he said. How do you rate police support in verification? “In the recent months it has improved, I can say. But, on an average, they take 45 to 60 days.

            Though it is 21 days for them to verify and send it back, only 25 per cent stick to the timing. The Theni district police send the verification in 15 to 20 days time. Rest are taking some more time. It is basically the delay in getting PV. Once, we get them, passport is issued within seven working days. We do send a monthly report of pending applications to all the Superintendents of Police in the region.

              “Actually, applicants can submit their applications with the Passport Collection Centres available at every Collectorate. This is much faster as the applications are swiftly processed at the respective districts and sent to us for issuance of passport. Normally, for a public to submit applications with the Passport Office, he or she has to get an appointment through the e-facility. For a person residing in a town say, Nagercoil, he has to travel all the way to Madurai, while it would be easier to submit them at the Kanyakumari district Collector's office,” he explained. To a query, why there is not much response to the adalats held at the passport office, Mr. Mathew said that probably there was not much of grievance or complaints.

             With the support of all the staff, “we are able to stick to the timing of delivery.” “When the Passport Seva Kendra, which is to be launched in Madurai and Tirunelveli, becomes functional hopefully from mid-June, we would link it online with all the office of Superintendents of Police. Thus verification would be done online. This makes the job easy and issuance of passports would be much faster. The PSK is coming up on spacious premises at Kochadai (Madurai) and Vannarpet (Tirunelveli) with state-of-the-art technology. While the front office would be handled by TCS, the passport staff would be responsible for verification among other works.”

            On complaints that many staff handling the applications treated them harshly and getting into the office for genuine reasons was difficult, Mr. Mathew said, “To avoid all such friction, I appeal to the public to come prepared with all relevant documents. I am sure no one would face problems at all.”


Read more »

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கடலூரில் கோடை விடுமுறை குதூகலம்: மாணவர்களை மகிழ்விக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம்


கடலூர்:

            தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டுகளில் கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

               பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மிகப் பெரும் அழுத்தத்தில் இருந்தும், பரபரப்பில் இருந்தும் இப்போது விடுபட்டு இருக்கிறார்கள். ஏனைய மாணவர்களுக்கும் கோடை விடுமுறை குதூகலத்தை கொண்டு வந்திருக்கிறது.  மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்துகிறது கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பட்டு ஆணைய நிர்வாகம்.  

கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் கூறியது:  

               அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கு கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடையில் மேலும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில், நிறைய நேரம் கிடைப்பதால் மாணவிகள் வந்து கலந்துகொள்ளலாம்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிதாக நீச்சல் கற்றுக் கொள்வோருக்கு, அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 15-ம் தேதிமுதல் நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

               15 நாள்களுக்கு பயிற்சிக் கட்டணம் ரூ. 250.  மே 2-ம் தேதிமுதல் மே 22-ம் தேதி வரை 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து மற்றும் அத்லெடிக் விளையாட்டுகளுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சிக்கு வருவோருக்கு முட்டை, பால் வழங்கப்படும்.  மே 8 முதல் மே 22 -ம் தேதி வரை கடலூர் மண்டல, மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுகளில் முதல் 3 பரிசுகளைப் பெற்ற 6,7,8 வகுப்பு மாணவ மாணவியருக்கு, இலவச உணவு, தங்கும் வசதியுடன் விளையாட்டு அரங்கத்திலேயே தங்கவைத்து, சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

 யோகா பயிற்சி குறித்து யோகா பயிற்சியாளர் வெற்றி கூறியது:  

              கடலூர் அண்ணா விளையாட்டு அரங்க மாடியில் சிறப்பு யோகா பயிற்சி முகாம், கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலை 5-45 முதல் 7-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5-30 மணி வரையிலும் அனைத்து வயதினருக்கும் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் 30 நாள்களுக்கு ரூ. 200. யோகா பயிற்சி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் அமைப்புகள் நடத்தும் பயிற்சிகளை விட அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கட்டணம் மிகவும் குறைவு என்றார் வெற்றி.  டென்னிஸ், கிரிக்கெட் விளையாட்டுகளிலும், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

               அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில், பேட்மிண்டன் சிறப்புப் பயிற்சி அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. ஷட்டில் விளையாட்டு சங்கம் நடத்தும் இப்பயிற்சியில் சேர உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 100.  அனைத்து பயிற்சிகளிலும் சேர்ந்து பயனடைய கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம்.    



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior