உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 23, 2010

தீவிரமடைகிறது என்எல்சி ஸ்டிரைக்


 
நெய்வேலி:
 
                 என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 5-ம் நாளாக தொடர்கின்ற நிலையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 27-ம் தேதி மனிதசங்கிலிப் போராட்டமும் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியடைந்தது.இதையடுத்து தொமுச, அதொஊச, பாதொச உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஸ்கியூபாலத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
                                இப்போராட்டத்தை வாழ்த்திப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. செம்மலை, தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக செவிசாய்த்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்
 
பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், 
 
                    ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பலமுறை இதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்தியுள்ளேன். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவளிக்கிறோம். எனவே நிர்வாகம் 2 தினங்களுக்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். 
 
                 இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டத்தை செப்டம்பர் 27-ம் தேதி நடத்துவார்கள் என்றார் வேல்முருகன்.உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் உள்ள தொமுச, பாதொச, அதொஊச, எல்எல்எப் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராடத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உண்ணாவிரதப் போராட்டம் பேச்சுவார்த்தை விளக்கப் பொதுக்கூட்டம் என அறிவிக்கப்பட்டது. 
 
                         கூட்டத்தின் இறுதியில் பேசிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், இது உண்ணாவிரதப் போராட்டம்தான் என்றார்.ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் மெயின்பஜார் காமராஜ் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

                 சத்துணவுக் குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம், கடலூர் மாவட்டத்தில் 20-9-2010 முதல் அமல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை, கடலூர் ஒன்றியம் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் திட்டம் அப்பள்ளியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

                    முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாள்களும் வாழைப்பழம் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் மாணவர்களுக்கு கொண்டக்கடலை அல்லது பச்சைப்பயறு 20 கிராம் வழங்கப்படும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் உருளைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 2.52 லட்சம் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்படும் என்றும் ஆட்சியரின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டப் பணிகள்

கடலூர்:

              கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

                     கடலூர் ஒன்றியம் வழிசோதனைப் பாளையம் கிராமத்தில் வீடுகள் கட்டும் பணியை, மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில்,  முதல்வரின் சிறப்புத் திட்டமான வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளன. கடலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 ஊராட்சிகளில் 2,435 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் கட்டடப்படும் வீடுகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார் என செய்திக் குறிப்பு கூறுகிறது.

Read more »

கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இழுபறி : தேர்தலுக்குள் முடியுமா என்பது கேள்விக்குறி

கடலூர் : 

                  கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளைக் கடந்தும் இழுவையாக இழுத்து வருகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குள் பணிகள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியினர் மக்களை சந்தித்து சாதனைகளை எடுத்துக் கூற வேண்டிய சூழ்நிலையில்  நகரத்தில் தோண்டிய பள்ளங் களே சரியாக மூடப்படாமல் உள்ளன.

                           குழாய் பதிப்பதற்காக தோண்டிய மண் மேடுகள் யாவும்  மக் களை எரிச்சலடையச் செய்துள்ளது. இந்த மண் மேடுகள் மழை பெய்தவுடன் சகதியாகவும், வெயிலடித்தால் புழுதி நகரமாகவும் மாறிவிடுகிறது. மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆழம் குறைத்து  3.15 மீ., ஆழத் தில் குழாய் பதிக்கப்படுகிறது. புதுப்பாளையம் மெயின் ரோடு, பீச் ரோடில் பாதியளவு குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. ஆனால் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக பள்ளம் தோண்டுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. இந்த இரு சாலைகளும் நகரத்தின் முக்கிய சாலையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

                      முதுநகர் நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள் ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக் கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு மாநில நெடுஞ்சாலைகள், மற் றும் அருகில் உள்ள தார் சாலைகளை  உறுதியானதாக மாற்றி தயார் படுத்த வலியுறுத்தியுள்ளது. பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத்துறை இதுவரை அனுமதி கொடுக்காததால் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கவில்லை. சென்னையில் உள்ள சீனியர் செயற்பொறியாளர் சாஸ்திரி கடந்த மாதம் கடலூர் முதுநகர் நெடுஞ்சாலையை பார்வையிட்டுச் சென்றார். அனுமதி கிடைத்துவிடும் என நம்பி இருந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திடீரென "நகாயி'டம் அனுமதி பெறவேண்டும் என கழற்றிக் கொண்டது.

                        முக்கிய சாலையில் பணிகள் துவங்காததால் எவ்வளவுதான் பணிகள் செய்தாலும் முடிந்த மாதிரி தெரியவில்லை. இன் னும் ஒரு சில வாரங்களில் தென் மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் சாலைகளில் பள்ளம் தோண்ட முடியுமா என்பது கேள் விக்குறியாக உள்ளது. வரும் பொதுத்தேர்தலுக்குள் முடிக்க வேண்டும் என நம்பிய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

போக்குவரத்து மாற்றம்... : 

                        கடலூரில் இருந்து கூத்தப்பாக்கம் சாலையில் வண்டிப்பாளையம் சாலை சந்திப்பிலிருந்து முத் தாலம்மன் கோவில் வரை பாதாள சாக்கடை திட் டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி 27.9.2010 முதல் 6.10.2010 வரை கடலூர் பஸ் நிலையத்திலிருந்து கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல் லும் வாகனங்கள் தேரடி தெரு, போடிசெட் டித்தெரு, அக்கிள்நாயுடு தெரு வழியாக கூத்தப் பாக்கம் சாலை செல்ல வேண்டும்.

                       திருவந்திபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் கான்வென்ட் சாலை, போடிசெட்டித்தெரு, கம்மியம்பேட்டை, ஜவான்ஸ் பவன் புற வழிச்சாலை, அண்ணாபாலம், சீமாட்டி சந்திப்பு வழியாக பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். 10.10.2010 முதல் 13.10.2010 வரை பஸ் நிலையத்திலிருந்து திருவந்திபுரம் வழியாக செல்லும் வாகனங்கள் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலை, கம்மியம்பேட்டை, போடிசெட்டித்தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக திருவந்திபுரம் சாலை செல்லவும்.  திருவந்திபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் மேற் குறிப்பிட்ட சாலையில் வழியாகவே பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior