உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 20, 2012

கடலூர் தாலுகாவில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி

நெல்லிக்குப்பம் :

      கடலூர் தாலுகா காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதிகளில் பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி நடந்தது.
 
 
      தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித் தொகைகள் தபால் நிலையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் காலதாமதம், முறைகேடுகளை தவிர்க்க பயோ மெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனாளியின் 10 கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட கார்டு வழங்கப்படும். வங்கியின் தொழில் பரிவர்த்தனை அலுவலர் அந்தந்த கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்கள். ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் இந்த நபர் எடுத்துவரும் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பயனாளிகள் சிரமம் தவிர்க்கப்படும் இதற்கான பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணியை வெள்ளப்பாக்கத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன் துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., பாஸ்கரன் உடனிருந்தார்.
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior