உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 21, 2011

கடலூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நெல் விவசாயம்

கடலூர்:

            தொடர்ந்து நெல் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு, தமிழக நெல் விவசாயிகளிடையே ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவும் நெல் உற்பத்தியும், நெல் விவசாயத்துக்கான ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

                இந்த நிலையை மாற்ற நெல் விவசாயிகளுக்கு அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  2010-11-ம் ஆண்டில் 21.5 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு 20.71 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. 81.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு 71.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப் பட்டது. 

               கடலூர் மாவட்டத்தில் சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலும் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது.  தமிழகத்தின் மிகப்பெரிய சாகுபடியான சம்பா நெல் சாகுபடிப் பணிகள், தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 16 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா பாசன நெல் சாகுடி பெரும்பாலும், கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவையும், கர்நாடக அரசின் பெருந்தன்மையின் அளவையும் பொறுத்ததாக மாறியிருக்கிறது.  நெல் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நியாயமான விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்து. 

                அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை என்பது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இதனால் விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறை, விவசாயத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்த போதிலும் மக்களுக்குத் தேவையான அரிசி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்துவிடுவதால், உற்பத்திக் குறைவு பற்றி அரசு, அதிகம் சிந்திக்கும் நிலையில் இல்லை. 

                ஆனால் நெல் விவசாயிகளுக்கோ, இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பரிதாபநிலை. டெல்டா பாசனப் பகுதிகளில் நெல்லை விட்டால் வேறு பயிர்களை பயிரிட முடியாத நிலை. இதனால் எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும், ஆள் பற்றாக் குறை என்றாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், நெல் விவசாயிகளை பெரிதும் சலிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.  சம்பா அறுவடை காலத்தில் நெல் விலை, நல்ல தரமான காய்ந்த நிலையில் அரசு நிர்ணய விலையான ரூ. 1100-ஐ விட, சற்றும் உயரவில்லை. மாறாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொஞ்சம் ஈரப்பதம், கொஞ்சம் தரம் குறைவான நெல் குண்டால் ரூ. 600-க்கும் ரூ. 700-க்கும் அடிமாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப் பட்டது. 

                  சம்பா அறுவடை காலத்தில் பொன்னி புழுங்கல் அரிசி, கிலோ ரூ. 24 முதல் ரூ. 28 வரை இருந்தது, தற்போது ரூ. 28 முதல் ரூ. 32 வரை என உயர்ந்து இருக்கிறது. ஆனால் நெல்விலை இன்னமும் அடிமட்டத்திலேயே உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.  6 மாத சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15 ஆயிரம். அதில் இருந்து கிடைக்கும் நெல்லின் விலை ரூ. 18 ஆயிரம். ஒரு ஏக்கர் நிலம் வைத்து இருக்கும் நெல் விவசாயிக்கு 6 மாதத்துக்கு ரூ. 3 ஆயிரம்தான் வருமானம் வருகிறது என்கிறார்கள் விவசாயிகள்.  

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.வி. கண்ணன் கூறுகையில், 

                 "கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் கருவிகளுக்குப் பயன்படும் டீசல் விலை 300 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்துகள் விலை 150 சதவீதமும், தொழிலாளர்களின் ஊதியம் 200 சதவீதமும், உரத்தின் விலை 45 சதவீதமும் உயர்ந்து இருக்கும் நிலையில், நெல் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் எப்படி நெல் விவசாயம் செய்ய முடியும் என்று சலிப்புதான் ஏற்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டம் வேளாண்மையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல் தமிழகத்திலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களை, வேளாண் பணிகளுக்குத் திருப்ப வேண்டும். அரசு வழங்கும் கூலி போக மீதியை விவசாயிகள் வழங்குவர். வெட்டிய ஏரியை, வாய்க்காலை மீண்டும் மீண்டும் வெட்டிப் பயனில்லை' என்றார் அவர்.  

மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன் கூறுகையில், 

              "பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நெல் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும். பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியும் இழப்பீடு பெறும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் சென்றுவர சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்' என்றார்.  






Read more »

பயறு வகை சேமிப்பில் புதிய தொழில்நுட்பம்


கடலூர்: 

           தமிழகத்தில் 2009-10ம் ஆண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி இலக்கு 110.5 லட்சம் டன்கள். ஆனால் 95 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பயறு வகைகள் 6.90 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, 4.50 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாயின. 

                2010-11-ம் ஆண்டில் 45.5 லட்சம் ஹெக்டேரில் 112 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 12 லட்சம் ஹெக்டேரில் 7.50 லட்சம் டன் பயறு வகை உற்பத்தி செய்ய இலக்கு நிர்யணயிக்கப்பட்டது.  பயறு வகை உற்பத்தி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் உற்பத்தியைப் பெருக்க பயறு வகைகளை ஊடுபயிராக அல்லாமல் தனிப் பயிராக சாகுபடி செய்ய இந்தாண்டில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.


                  ஈடுசெய்ய முடியாத மண் வளச் சீர்கேட்டை மேம்படுத்துவதில் பயறு வகைப் பயிர்களின் பங்களிப்பு அளவில்லாதது.  அன்றாட உணவில் பயறு வகை பருப்புகள் ஒரு நபர் 70 கிராம் உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒரு நபர் 40 கிராமுக்கும் குறைவாகவே உட்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல், வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பயறு வகைகள் எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மை கொண்டவை.

               எனவே பயறு வகைகள் சேதமடைந்து விடாதபடி பாதுகாக்க அறுவடைக்குப் பிந்திய நேர்த்தியில், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.  பயறு வகைகளில் துவரை, உளுந்து பயிர்கள் 80 சதவீதம் விதை முற்றியதும், அறுவடை செய்யப்பட வேண்டும். சில நாள்கள் வைத்து இருந்து, செடிகளில் இருந்து விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பாசிப்பயறு தட்டைப் பயறு போன்றவற்றை, நன்கு முற்றியபின் அவற்றை பறித்துக் காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். 

            உணவுக்கான பயறு வகைகளைச் சேமிக்க, நன்கு காயவைக்க வேண்டும். ஈரப்பதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை இளம் வெயிலில் உலர்த்தி சேமித்து வைக்க வேண்டும். உளுந்து, பச்சைப் பயறு வகைகள் உடைத்து வைத்தால், பூச்சிகளால் அதிகம் சேதம் ஏற்படாது. கெடாமல் இருக்க விஷ மருந்துகளை கலக்கக்கூடாது. மூட்டைகளை பரண் மேல் மூங்கில் பாய் அல்லது பாலித்தீன் விரிப்பில் சேமிக்க வேண்டும்.  

              விதைக்கான பயறு வகைகளில் மாலத்தீயான் 4 சதவீதம் தூள் 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வீதம் கலந்து, பாலித்தீன் உள்பூச்சு உள்ள சாக்குகளில் சேமிக்கவும். 100 கிலோ விதைக்கு அரைக் கிலோ தாவர எண்ணெய் பசை அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து பாதுகாக்கலாம்.  சேமித்து வைக்கப்பட்ட பயறு வகைகளுக்கு ஈ.டி.பி. கலவைப் புகையிடுதல், உலோகக் குதிரில் உறுதியான களஞ்சியங்களில் சேமித்தல், 100 கிலோவுக்கு 15 கிராம் நொச்சி இலைத் தூள், சுண்ணாம்புத் தூள் போட்டும் சேமிக்கலாம். தாவர எண்ணெய்களை பூசுதல் தீங்கற்றது. விஷத் தன்மை அற்றது.

                 உடைத்து பருப்பாக்கும் போது அவற்றை அகற்றுவது எளிதாக இருக்கும். வண்டுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பாக அமையும். சிக்கனமானது. செலவு கட்டுபடியாகக் கூடியது. விரைவில் உலர்ந்துவிடும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். அவை எங்கும் கிடைக்கக் கூடிவை.  

                சிமென்ட் கான்கிரீட் தரைமீது, அல்லது பாலித்தீன் பேப்பரை பரப்பி, அதன்மீது 100 கிலோ விதைக்கு 500 மில்லி எண்ணெய் கொண்டு, அனைத்து பயறுகள் மீதும் சீராகப்படும்படிக் கலக்கி, சற்றே ஆறவைத்த பின் சேமிக்கலாம். எண்ணெய் பூசப்பட்ட  பயறுகளை டப்பா, மண் பாண்டம், மூங்கில் கூடை போன்ற வற்றில் 5, 6 மாதங்கள் வரை சேமிக்கலாம் என வேளாண் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  







Read more »

அனைத்து தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர்:

           அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வலியுறுத்தினார். 

           இ.எஸ்.ஐ. கார்பரேஷன் நிறுவனத்தின் வைரவிழாவை முன்னிட்டு, கடலூரில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு, விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடந்தது.  

விழாவை மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பேசியது: 

           இ.எஸ்.ஐ. வசதிகளை பயன்படுத்திக் கொள்ளத் தகுதியான தொழில் நிறுவனங்கள் பல, கடலூர் மாவட்டத்தில் உள்ளன. மாத வருவாய் ரூ. 12 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை அளிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு இ.எஸ்.ஐ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தும்  நிறுவனங்களில் 10 நபர்களும், இயந்திரங்களை பயன் படுத்தாத நிறுவனங்களில் 20 நபர்களும் வேலையில் இருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். 

             இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் மனைவியருக்கு மகப்பேறு உதவிகள், தொழிலாளர்கள் காயம் அடையும் போதும், உடல் நலம் பாதிக்கப்படும் போதும், மரணம் அடைந்தாலும் உதவிகள் வழங்கப் படுகிறது. இதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.  நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி, சென்னை மண்டல இ.எஸ்.ஐ. கூடுதல் ஆணையர் கே.பத்மஜா நம்பியார், இயக்குநர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 




Read more »

ராமநத்தத்தில் காவலர் குடியிருப்பு: கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பகலவன்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/1b9bd3bf-0954-450e-a1a4-fe0a051690f7_S_secvpf.gif

 
 திட்டக்குடி:
 
          திட்டக்குடியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பொதுமக்களை சந்தித்து காவல்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
 
              கூட்டத்தில் ரோட்டரி சங்க தலைவர் முத்து, செயலாளர் அறவாழி இயக்குனர் வாசு, ஜேசிஸ் தலைவர் புனிதா, இயக்குனர் ஜெய்சங்கர் அரிமா சங்க தலைவர் விசுவநாதன் தொழிலதிபர் பி.டி. ராஜன், அதிமுக நிர்வாகிகள் நீதிமன்னன், மதியழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சுப்ரமணியன், முருகையன், திமுக நிர்வாகிகள் பரமகுரு, செந்தில், அமிர்தலிங்கம், வணிகர் சங்க நிர்வாகிகள் தங்கராசு, சண்முகம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
மனுக்களை பெற்று மாவட்ட எஸ்பி பகலவன் பேசியது:-
 
          தனி நபர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திட்டக்குடி நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளது போக்குவரத்து அதிகரித்துள்ளது இந்த சூழ்நிலையில் விபத்துகளை தவிர்ப்பதை குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவேன். திட்டக்குடி,பெண்ணாடம் பகுதியில் பஸ்கள் பஸ் நிலையங் களுக்குள் செல்வது இல்லை என்பதால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அனைத்து பஸ்களும் பஸ் நிலையங்களுக்குள் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
 
             ஆட்டோ, டாட்டா ஏசி வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து முடிவு செய்யப்படும். பஸ் நிலையங்களில் தள்ளு வண்டிகளின் போக்குவரத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், பஸ் நிறுத்தம் உட்பட பொது இடங்களை மது அருந்தும் இடமாக பயன் படுத்துவோரை அனுமதிக்க இயலாது.
 
          திட்டக்குடி உட்கோட்டத்தில் போக்குவரத்து பிரிவும் மகளிர் காவல் நிலையமும் அமைய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தற்காலிக ஏற்பாடாக மாவட்டத்தின் மற்ற பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார் கொண்டுவரப்பட்டு போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் பள்ளி செல்லும் வழியில் கேலி கிண்டல்களை கட்டுப்படுத்த இரு வேளை களிலும் போலீசார் போடப்படுவர்.
 
              நண்பர்கள் குழு முழுமையாக செயல்பட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். திட்டக்குடியில் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது 6 மாதங்களில் பணி முடியும். நல்ல நண்பர்களை ஊக்குவித்து நண்பர்கள் குழு அமைப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. காவல்துறை என்றுமே நல்லவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நண்பர்களாகவே செயல்படுவர்.
 
            ராமநத்தத்தில் காவலர் குடியிருப்பு கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மாவட்ட எல்லையில் கிராமங்கள் அமைந்துள்ளதால் இராமநத்தம் பகுதிகளில் மதுவிலக்கு பணி செயல் படுத்துவதில் நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது விருதாச்சலத்தில் இயங்கும் மது விலக்கு பிரிவில் இருந்து போலீசார் நிரந்தரமாக இராமநத்தம் பகுதியில் தங்கி மது விலக்கு பணியை மேற் கொள்ளுவர். இவ்வாறு பகலவன் பேசினார்.
 
              கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்பெக்டர் பஞ்சாட்சரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்
 
 
 
 
 

Read more »

Rescued Saudi workers relive ordeal

        A group of nine men mill around restlessly in the Manithaneya Makkal Katchi office. Having recently returned to India from Saudi Arabia, they have suffered over the past year to get to where they are now.

          Promises of a monthly pay of Rs 20,000, free food, lodging, uniforms, trip allowances and an international licence lured these men to Riyadh as drivers. All of them possessed heavy vehicle licences and were interviewed and underwent a driving test before being selected.

       Venkatesan of Vriddhachalam, Cuddalore, paid Rs 80,000 to an agent,Selvam. He had told Venkatesan that the job would his if he paid the amount. “Selvam works for Mumbai-based Vijaya Travels. He is one of many agents in Tamil Nadu. They prey on hardworking people like us, who want to provide for our families and look for better job opportunities,” he says.

         Hired to work for Abdullah Nasir Abdullah Al Dagheen, a company that hires out buses on contract for a school for the differently-abled, the men were paid only once in four months. They were not provided food or water, and the accommodation was woefully inadequate. An international licence was not given, which meant that they would always have to pay to get out of any situation even if it was not their fault. They washed dishes and toilets, just to be able to afford food.

       Ansar Basha of Nellikuppam, Cuddalore, had worked in Kuwait previously and with his knowledge of Arabic, questioned the management. “They beat me up and a few others, and threatened to kill me. They had a gun to my head, but finally put three bullets in the ceiling as a warning,” he said. The owner claimed that he had provided the visas for free to Vijaya Travels, and they were the ones who fleeced the men. On contacting the travel agency, they met another dead end. “They would see a Saudi number calling and hence not answer. After a couple of tries, the phone would be switched off,” says Raja of Villupuram district.

           The men then approached the Indian Embassy. Ganesh, also of Cuddalore, says, “We were treated as if we were of no consequence. They listened to us and then called our employers, who took us back to the quarters and beat us up soundly.” They then contacted the Amma Peravai in Riyadh. This group, along with Manithaneya Makkal Katchi and Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) branches in Saudi, helped them leave the country. The plane fare to Mumbai and bus fare to Chennai from there were taken up by them. Chelladurai of Ramanathapuram says, “We had to pay Rs 40,000 to get out of that place. Some of us paid nearly Rs 1.2 lakh for this job, but we sent back hardly Rs 12,500. How will we face our family, and more importantly, those who lent us money?” The men ask the Chief Minister to ensure the safety of Tamilians abroad, and to look into the way the Indian Embassy treats their own.

          “We do not want anyone to go through what we experienced,” they say. Rajiv Gandhi of Karnatham, Cuddalore says, “Vijaya Travels has to be shut down so they cannot ruin more lives. We have nothing more to lose.”






Read more »

UID teams record fingerprints in select villages of Cuddalore

              The directorate of census operations has begun compilation of biometric parameters, including fingerprints and iris reading of individuals in different parts of the state for the Unique Identification (UID) project. The census department will distribute resident identity cards later, based on the unique number created for every person.

             In the first phase, the department has engaged Bharath Electronics to capture images and fingerprints in select villages of Cuddalore, Puddukottai and Trichy. Armed with scanned sheets of the National Population Register (NPR), the enumeration for which was held in June last year, the teams have spread out in seven taluks in these districts, including Kurinjipadi, Panruti, Chidambaram, Srirangam, Aranthangi, Pudukkottai and Thirumaiyam.

            "As many as 70 teams are at work. The number of teams will be increased to to 300 to cover cities and towns," said S Gopalakrishnan, director of census operations, Tamil Nadu and Pudducherry. Members of the public are called to the local biometric camps, which otherwise acted as polling stations during elections, equipped with men and machinery to capture the images. In each taluk, two villages have been identified and four biometric devices are put to use in each of these villages.

             Every individual above 15 years of age will get the 12-digit unique number from UID, and it will serve as an identity proof for various transactions, besides addressing issues of multiple identities. The census department completed a similar exercise in 229 coastal villages in the state last year. The identity cards are likely to be issued soon to nearly 12.5 lakh people.  As per the plan, the image of an individual will be captured first, followed by the prints of the first four fingers in each hand through biometric devices. Subsequently both thumb fingerprints will be recorded and iris reading done. The entire exercise will be completed in ten minutes. The biometric parameters will be incorporated

             with the NPR data being uploaded by Bharath Electronics in its six centres in the state. "The entire state will be covered in 18 months," Gopalakrishnan added.  The government has authorized village administrative officers as local registrars in villages, tahsildars as taluk registrar and district collectors as district registrar, but such arrangements have not yet been made in cities and towns. The census department expects the state government to soon notify local registrars in cities and towns. 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior