உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 20, 2010

புதர் மண்டிக் கிடக்கும் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், புதர் மண்டிக்கிடக்கும் நடைப்பயிற்சி செல்வோருக்கான நடைபாதை. (உள்படம்) உடைந்து தொங்கும் சூரிய விளக்குகளில் ஒன்று.
கடலூர்:
                நடைப்பயிற்சி செய்வோர் பாதுகாப்பாக செல்ல முடியாத அளவுக்கு, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் நடைபாதைகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
                 கடலூர் நகரின் மையப் பகுதியில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருப்பது அண்ணா விளையாட்டு அரங்கம். 1970-ல் இந்த விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது. இதில் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், இறகுப்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளுக்கான உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வசதிகள் உள்ளன.
                நடைப்பயிற்சி செய்வோருக்கு வசதியாக பல லட்சம் செலவில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தினசரி நடைப்பயிற்சி செய்வோர் உள்பட சுமார் 1,000 பேர் இந்த விளையாட்டு அரங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். நடைப்பயிற்சி செய்வோர் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபாதைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
               ஆனால், நடைபாதைகள் ஓரம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. புதருக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக, நடைபாதைகளைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கிறார்கள். நடைபாதைகளைச் சுற்றிலும் 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்து, 2வது முறையாக அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் விளக்குகளும் உடைந்து சேதம் அடைந்து கிடக்கின்றன.மைதானத்தில் பல்வேறு விளையாட்டுகளை, இரவு நேரத்தில் நடத்துவதற்கு வசதியாக, உயர் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
                  ஆனால் அவற்றில் விளக்குகள் எதுவும் இல்லை.முதல் கட்டமாக விளையாட்டு அரங்கத்தில் நடைப்பயிற்சி செய்வோருக்கான நடைபாதைகளையாவது, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். விளையாட்டு மைதானத்துக்கு மின் விளக்குகளுக்கான கட்டணச் செலவினத்தை மாவட்ட விளையாட்டு அலுவலக நிதியைக் கொண்டு சமாளிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் கூறியது
                    பராமரிப்புப் பணிகளுக்கு போதிய நிதி இல்லை. விளையாட்டு அரங்கத்தில் 2 ஊழியர்கள்தான் பணியில் உள்ளனர். அவர்களும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களைக் கொண்டு முடிந்தவரை சுத்தம் செய்கிறோம். மேலும் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறோம். சூரிய சக்தி விளக்குகளை எல்லாம் சமூக விரோதிகள் சேதப்படுத்தி விட்டனர். 
                   பகல் நேரங்களில் மாணவர்கள் பலர் கூட்டமாக வந்து, முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். மைதானத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மனமகிழ் மன்றத்தில் இருந்து மது பாட்டில்கள் வீசி எறியப்படுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.இரவு நேரங்களில் மின்விளக்கு ஒளியில் போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக, விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கோபுரங்களில் உள்ள விளக்குகளை, பத்திரமாகக் கழற்றி எடுத்து வைத்து இருக்கிறோம். போட்டிகள் நடத்தும்போது பொருத்தி பயன்படுத்துகிறோம். மைதானப் பராமரிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும்' என்றார்.

Read more »

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

                மாவட்ட துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் உள்ளிட்ட மொத்த 61 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த மே 2-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

                  5 மாதங்கள் ஆகியும் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், குரூப்-1 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2011 ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

Read more »

மழைக் காலம்; கடலூர் மக்களுக்கு சோதனைக் காலம்

கடலூர்:

                இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை காலம், கடலூர் மக்களுக்குப் பெரும் சோதனைக் காலமாக அமைந்து உள்ளது.

                  கடலூர் மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதால், மழைக் காலம் சோதனைக் காலமாக மாறியிருக்கிறது. கடலூர் நகரில் முக்கிய நகராட்சித் தெருக்கள், பிரதான மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சிதைந்துக் கிடக்கின்றன.

                பாதாளச் சாக்கடைத் திட்டத்தைப் பொறுத்தவரை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்னாக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அறிக்கைகள், செய்தித்தாள்களின் கண்டனங்கள் அனைத்துக்கும் இங்கு எந்த மரியாதையும் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.பாதாளச் சாக்கடைத் திட்ட பள்ளங்களால் நிகழ்ந்த விபத்துகளில், இதுவரை 8 பேர் இறந்துள்ளனர்.

                300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இரு சக்கர வாகனங்களும் 4 சக்கர வாகனங்களும் பெருத்த சேதங்களுக்கு உள்ளாகின்றன. நகரில் உள்ள 45 வார்டுகளில் 32 வார்டுகளில் மட்டுமே பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டதும், டெபாசிட் தொகையாக சில ஆயிரங்கள் செலுத்த வேண்டும், மாதாமாதம் ஒரு தொகையை சாக்கடை வரியாகவும் செலுத்த வேண்டும். 

                   இத்தகைய நிலையைப் பார்க்கும் ஏனைய 13 வார்டு மக்களும், எங்களுக்கு இந்தத் திட்டம் வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். சிதைந்துக் கிடக்கும் சாலைகள், இருண்டுக் கிடக்கும் தெருக்களைக் கண்டு பயந்து, ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் பல நகர்களுக்கு வருவதே இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவர்களை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவரும் பெற்றோரும் தினம் தினம் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

Read more »

நெய்வேலியில் குடிநீருக்கு பரிதவிக்கும் மேற்கிருப்பு கிராம மக்கள்

நெய்வேலி: 

             நெய்வேலியை அடுத்த மேற்கிருப்பு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுதாகியதால், அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர்.

               கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சிக்குட்பட்ட மேற்கிருப்பு கிராமத்தில், மேற்கு பகுதி குளக்கரையில் ஒன்றியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் நீரிறைத்து, அதை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமித்து அப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

                 இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் மின்மோட்டார் திடீரென பழுதாகியதால், நீரிறைக்கும் பணி தடைபட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.எம்.பத்மாமணியிடம் முறையிட்டதாகவும், அவர் சரியான பதில் கூறாததால், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டதாகவும் கூறுகின்றனர்.

                      வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமோ, மின்மோட்டாரை சரிசெய்யத் தேவையான நிதி இருப்பில் உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் ஒத்துழைத்தால் அந்த நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மின்மோட்டார் பழுது குறித்தும், நிதி குறித்தும் யாரும் அலுவலகத்தை நாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

                கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இதேபோன்று மின்மோட்டார் பழுதானபோது,கிராம இளைஞர்கள்  ஊர் மக்களிடம் பணம் வசூலித்து, மின்மோட்டரை சரிசெய்து குடிநீருக்கு ஏற்பாடு செய்தனர். தற்போது ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான நிதி இருந்தும் அதை பயன்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் தயங்குவது ஏன் என்பது தான் கிராம மக்களின் கேள்வி.

இதுகுறித்து, ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மணி கூறுகையில், 

                        ""பம்ப் ஆப்ரேட்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், மோட்டார் பழுதுநீக்கும் பணி தாமதமானது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் மோட்டார் பழுது நீக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார்.

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் உண்ணாவிரதம்

கடலூர் : 

                 பயிர் செய்த நிலத்தில், அறுவடை செய்த எதிர் கோஷ்டி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, நியாயம் வழங்க வேண்டும் எனக் கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, உண்ணாவிரதம் இருந்த 74 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் அடுத்த சிந்தாமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவருக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிரை, விரோதம் காரணமாக கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகன் இளவரசன், வாசுதேவன், எழில் ஆகியோர் சேர்ந்து அறுவடை செய்துவிட்டனர். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., பிரமுகர் கோவர்த்தனன், நாகராஜ் ஆகியோரும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தடையை ஏற்படுத்தி வருகின்றனர்.

               கோவிந்தசாமி உள்ளிட்டோரால், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் என் மீது தீண்டாமை, வன்கொடுமை வழக்கு பதிய புகார் செய்வோம் என மிரட்டி வருகின்றனர். இதனால், என் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, நான் விளைவித்த நிலத்தில் அறுவடை செய்து பிரச்னையை ஏற்படுத்தி வரும் கோவிந்தசாமி உள்ளிட்டோர் மீது, நடடிக்கை எடுத்து அறுவடை செய்த நெல்லுக்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி, நேற்று காலை 10.50 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆளவந்தார் உண்ணாவிரதம் இருந்தார்.

                தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் முதியவர் ஆளவந்தாரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி தாசில்தார் இன்னும் 10 நாட்களில் ஆளவந்தார் பிரச்னை முடித்துக்கொடுக்கப்படும் என, உறுதியளித்துள்ளதைத்தொடர்ந்து ஆளவந்தாரை கடலூர் புதுநகர் போலீசார் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Read more »

பாதாள சாக்கடை திட்ட பணி: பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்த வேண்டாம்; கடலூர் கலெக்டர் அறிக்கை

கடலூர்:

Read more »

கடலூர் மாவட்டத்தில் 20,769 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்

                   கடலூர் மாவட்டத்தில் 20,769 மாணவ-மாணவி களுக்கு இந்தாண்டு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசச்ர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

               தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசியது:-


                   குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வடலூர், குறிஞ்சிப்பாடி, கருங்குழி, ஆண்டார்முள்ளிப்பள்ளம், கட்டியாங்குப்பம், குள்ளஞ் சாவடி ஆகிய கிராமங்களில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 9,680 மாணவர்களுக்கும், 11,080 மாணவிகளுக்கும் ஆக 20,769 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.
 

                  கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 68,615 பள்ளி மாணவ-மாணவி களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதைபோல் இலவச கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி களாகவும், 81 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 27 தொடக்கப்பள்ளிகள் நடு நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

                   குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்கிறார்களா என்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் காவல்துறை மற்றும் அலுவலர்களும் பள்ளிகளில், பள்ளி மாணவ-மாணவிகளை கண்காணிக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

                   முதன்மை கல்வி அலுவலகர் அமுதவள்ளி, மாவட்ட கல்வி அலுவலர் பார்வதிமணி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சித்தலைவர் தையல்நாயகி, செய்தி மக்கள் தொட்பு அலுவலர் முத்தையா, கல்விக்குழு தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

19 differently abled students selected for State-level competitions


Differently abled students participating in the sports events held at Anna stadium, Cuddalore, on Friday.


CUDDALORE: 

             Over 500 students of special schools participated in district-level sports events conducted exclusively for the differently abled at Anna Stadium here on Friday.

            Cuddalore constituency MLA G. Aiyappan inaugurated the event. The students took out a march past before the competitions began. Mr. Aiyappan announced a monetary grant of Rs. 1,000 each to 15 special schools from his personal funds. Through the District Welfare Board for the Differently abled Persons, a total of 30,205 national identity cards and 11,441 welfare board identity cards had been distributed.

           Chief Minister M. Karunanidhi had provided several benefits to the differently abled, including a hike in the travelling allowance of government employees from Rs. 300 to Rs. 1,000, he said. The cash award for visually impaired students scoring first rank in Standard X public examinations at the district-level had been increased from Rs. 2,000 to Rs. 6,000. Cash award for the Plus Two student getting top mark had been increased from Rs. 4,000 to Rs. 12,000, Mr. Aiyappan said.

             Marriage assistance for the differently abled had been enhanced from Rs. 20,000 to Rs. 25,000. On the recommendations of Collector P. Seetharaman, the Oasis service organisation, with government support, had started a special school for the mentally challenged students at Kattumannarkoil, Mr. Aiyappan said. Competitions were held in three age groups - 5-8, 9-11 and 12-14. Participants competed in events such as 50 metre sprint, discuss throw, long jump, frog race, bead collection, filling water in bottles, threading the needle, and tri-cycle race.

           In all, 19 persons were selected to represent Cuddalore district at State level competitions to be held later. Joint Director of Health Service P. Kamalakannan gave away prizes to the winners. Welfare Officer for the differently abled persons Srinivasan, Public Relations Officer Pon. Muthiah, representatives and students of special schools were present.

Read more »

Refrain from protest

CUDDALORE: 

             Certain political parties, trade unions and residents' associations have planned a protest rally and public meeting here for November 23 to condemn “official apathy” to the bad condition of roads in the town.

           They have faulted the district administration, Cuddalore Municipality and the Tamil Nadu Water and Drainage Board for “sluggish progress” in the underground drainage project and the resultant difficulties faced by the residents.

            Collector P. Seetharaman, meanwhile, has made an appeal to the people not to organise any protest in this connection because he had instructed the officials to speed up the work. In a statement, he said that the TWAD Board had been implementing the underground drainage project for a total distance of over 132 km covering 324 streets in the town. Of this, drainage pipe had been laid for a distance of over 122 km covering 292 streets. The remaining work on 32 streets would be completed by December 31.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior