உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 31, 2011

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - கோரத் தாண்டவம் வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1



https://lh5.googleusercontent.com/-5mwR7ZPKadg/Tv3ckI1zr9I/AAAAAAAABb8/rHvYE5G894Y/s640/P1010066.JPG




https://lh5.googleusercontent.com/-gcxO33Qjj-k/Tv3cl5hgXDI/AAAAAAAABcA/591bpA3KkkE/s640/P1010067.JPG

https://lh3.googleusercontent.com/-VBFGcbSvyGs/Tv3cnyPeCUI/AAAAAAAABcE/npUBxv3pRaE/s640/P1010068.JPG 


https://lh6.googleusercontent.com/-j7w9vqV1hlk/Tv3cpg6CQQI/AAAAAAAABcI/OoNN0H5mZv4/s640/P1010069.JPG




https://lh4.googleusercontent.com/-mizYsGDuv4Q/Tv3ctYxpxjI/AAAAAAAABcQ/te0f0dleruU/s640/P1010071.JPG


https://lh3.googleusercontent.com/-zFkB65aOyMM/Tv3cvgV3s4I/AAAAAAAABcU/E1CO9ndYUHU/s640/P1010072.JPG



Read more »

வெள்ளி, டிசம்பர் 30, 2011

தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்கள் நியமனம்

           தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6,872 பட்டதாரி ஆசிரியர்களும் 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிவிப்பு:

            ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித்தொகை அளிப்பது, இலவச சைக்கிள் வழங்குவது, லேப்-டாப் கொடுப்பது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

6 ஆயிரத்து 872 பணியிடங்கள்: 

             மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டுமென்றால், தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:40 என்ற விகிதாசாரப்படி நடப்புக் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 ஆயிரத்து 752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும் கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

              இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.181.36 கோடி செலவாகும்.மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதப்படி கூடுதலாக ஆயிரத்து 590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.45.25 கோடி செலவாகும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 ஆயிரத்து 137 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்கள் 1988 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1988 ஜூன் 1-ம் தேதிக்குப் பின் பணி புரிந்த பணிக்காலத்துடன் சேர்க்கப்படும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு ரூ.24.25 கோடி செலவாகும்.

கல்லூரி பேராசிரியர்கள்: 

          அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக நடப்பு கல்வியாண்டுக்கு ஆயிரத்து 661 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவாகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Read more »

Cyclone Thane at 130 kmph to cross near Cuddalore, Puducherry

Cuddalore 


               Cyclone Thane, packing wind speed of 130 kmph, was expected to cross the coast between Cuddalore in Tamil Nadu and Puducherry around 9 am on Friday, officials of the Indian Meteorological Department (IMD) here said. "The cyclone is in the process of crossing between Cuddalore and Puducherry coast. The wind speed is around 130 kmph at Puducherry and Cuddalore. Waves measuring 1.5 metres height are hitting the shoreline," an IMD official told IANS.

          At 2 am the cyclone moved closer to about 90 km east of Puducherry, 125 km south-southeast of Chennai, IMD said. According to IMD, even after landfall the system is likely to maintain its intensity for 12 hours and weaken gradually. Rainfall at most places with heavy to very heavy falls was expected in northern Tamil Nadu and Pudducherry. The Tamil Nadu government has set up 20 teams to monitor the water levels in lakes and other water bodies in Chennai, Thiruvallur and other places. Eight teams of National Disaster Management Force have been sent to the coastal districts. Authorities in Tamil Nadu and Puducherry are on high alert to manage the emerging situation.

Read more »

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கடலூர் :
 
            கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் 26 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்து ம் கூறியது:
 
 
         சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கடலூரில் முதல் முறையாக நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மீதுகட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் எஸ்.பி., அறையில் இவற்றை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரில் நடக்கும் மறியல்,போராட்டங்களை கண்காணிக்கலாம். மேலும் வன்முறை சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யும் வசதியுள் ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை கண்காணித்து, குற்றவாளியை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும்.
 
                தானே புயல் நாளை (இன்று) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன மீட்பு கருவிகளுடன், கடலூரில் 1000 போலீசார், விழுப்புரத்தில் 1500 போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1000 போலீசார் என மொத்தம் 4500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 64 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு தெரிவித்தார். எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., வனிதா உடனிருந்தனர்.

Read more »

புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?

               சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

          இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுட வருகின்றன.

            கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலை, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.  2011ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது.

              இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது. இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஏமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன












Read more »

தானே புயல் காரணமாக சிதம்பரம் - கடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன

சிதம்பரம்:
 
        தானே புயல் காரணமாக சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read more »

வியாழன், டிசம்பர் 29, 2011

தானே புயல்: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:
 
         தானே புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.
 
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கூறியது: 
 
          கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரைகளில் வசிக்கும் மக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தங்களது குடிசைகளுக்குள் தங்காமல், பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். 
 
 புயல் பாதுகாப்பு மையங்கள்:
 
                  20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம்: உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் உயர்வு


கடல் சீற்றம் காரணமாக அலைகளால் தாழங்குடாவில் சேதமடைந்தத் தென்னந்தோப்பு. (உள்படம்) கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரம்.
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3-வது நாளாக, கடல் சீற்றம் நீடித்தது. கடலில் அலைகள்  அதிக உயரத்தில் எழுந்து ஆர்ப்பரித்ததால் கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் புதன்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

              படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். கடலூர் சில்வர் பீச் தொடர்ந்து கடல் நீரில் மூழ்கிக் கிடந்தது. கடற்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கடற்கரையில் இருந்த மீனவர்களின் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து இருந்தது. 

                கடலோரப் பகுதிகளான தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்டக் கிராமங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் சவுக்குத் தோப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கானத் தென்னை மற்றும் சவுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கடல் இரைச்சல் அதிகமாக இருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மாவட்ட மீன் அங்காடிகளில் மீன் வரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.


















Read more »

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
 
           முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
 
                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுக்கும் கேரள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க வேண்டும் என கோஷமிட்டனர். கலை, அறிவியல், பொறியியல், இசைத்துறை மாணவ, மாணவிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 
 
            இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: 
 
                 கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தாலுக்கா ஆட்டோ ஒட்டுநர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு சங்கத்தினர், கார் ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகரில் ஆட்டோ மற்றும் வாடகைக் கார்கள் இயங்காததால் நகரில் போக்குவரத்து குறைவாகக் காணப்பட்டது.

Read more »

“தானே” புயல் சின்னம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/4950e2eb-1651-4962-abb9-0a738a60a0e2_S_secvpf.gif
 கடலூர்:

                  கடலூரில் 2-வது நாளாக நேற்று  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.   சுனாமி நினைவு நாளான திங்கட்கிழமை  கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதியில் தஞ்சம்புகுந்தனர்.

               துறைமுகத்தில் நேற்று முன்தினம்  2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் “தானே” புயல் உருவாகியுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் இன்று ராட்சத அலைகள் எழும்பின.  தாழங்குடா பகுதியில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.   அதையடுத்து 2-வது நாளாக நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

            துறை முகத்தின் கரையோரத்தில் படகுகள் தொடர்ந்து ஓய்வெடுப்பதை காண முடிந்தது. சுனாமிதினம் உள்பட 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்தது. இதனால் மீன்விலை அதிகரித்தது. 

Read more »

வெளிநாட்டு வேலை: சவூதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை

           எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.


           அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில் இருதய சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற 3 ஆண்டு பணியனுபவம் பெற்ற 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள், கன்சல்ட்டுகள், பி.எஸ்.சி நர்சிங் படித்த 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.


            விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, மும்பை, காஷ்மீர், ஐதராபாத் போன்ற மாநகரங்களில் நேர்காணல் நடத்தப்படும். அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இப்பணியை வழங்கவுள்ளதால் அதிகப்படியான சம்பளம், சலுகைகள் கிடைக்கும், வெளிநாட்டு வாழ்பவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கும் என குறிப்பிட்ட அரசு குறிப்பு. 

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் 

 அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கம்
48, முத்துலட்சுமி சாலை, 
அடையார், 
சென்னை - 600020 


என்ற முகவரியில் இயங்கிவரும், அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கத்திற்கு வரும் 4ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.


அல்லது, 


http://www.omcmanpower.com/vacancies.htm

www.omcmanpower.com 



http://www.omcmanpower.com/vacancies.htm



என்ற இணையத்தளத்தில் பதிவும் செய்யலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது. 

















Read more »

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்




தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


           தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்,  ஓராண்டிற்கு  நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின்  மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

              குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை  குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.  எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து  இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி சனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

             எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.   அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

            குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

30 coconut trees uprooted in the coastal area of Thazanguda in Cuddalore

CUDDALORE:

      Thirty coconut trees were uprooted due to soil erosion in the coastal area of Thazanguda in Cuddalore on Wednesday. Due to the imminent cyclone, continuous strong waves had been eroding the soil. As a result, the trees fell. Rough sea and heavy waves were also caused havoc in the coastal hamlets and many fishermen said during high tide, water entered their villages.

       The eighth level cyclone warning was issued at Cuddalore port late on Wednesday. Boats had been docked at the fishing port for the fourth consecutive day.Port office source said heavy rains were expected from Thursday and the cyclone would cross Cuddalore and Nellore on Friday morning. Fisheries department had issued warning to fishing hamlets asking them to be on alert. Meanwhile, the coastline near Puducherry also experienced heavy wind and strong waves that lashed the shores.

Read more »

புதன், டிசம்பர் 28, 2011

இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல "109 " ஆம்புலன்ஸ் திட்டம்

             தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல, "109' என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
              தமிழகம் முழுவதும், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டம் என்ற பெயரில், "108' ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து, மாரடைப்பு, பிரசவம் உள்ளிட்ட உயிர் காக்கும் அனைத்து உதவிக்கும், "108' என்ற டெலிபோன் எண் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக, அதிநவீன முதலுதவி கருவிகளுடனும், 400க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு, தலா, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. 
 
              "108'ல் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால், இத்திட்டம் மக்கள் மனதில் தனியிடம் பிடித்தது. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், "108' ஆம்புலன்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சையும், "108'ல் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவசர சிகிக்சை தேவைப்படுவோருக்கு, "108' ஆம்புலன்ஸ் இயங்குவது போல், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல, இலவச ஆம்புலன்ஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உதவி வேண்டுவோருக்காக, "109' என்ற இலவச டெலிபோன் எண்ணை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

"தானே" புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் : 

             கடலூர் துறைமுகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 800 கி.மீ., தூரத்தில், வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து, "தானே' புயல் சின்னமாக மாறியுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. "தானே' புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்குமிடையே, 30ம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "தானே' புயல் உருவாகியுள்ளதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் தூர எச்சரிக்கையைத் தெரிவிக்கும் வகையில், 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

          இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் கடல், கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்தைவிட அலை சீற்றம் அதிகரித்துள்ளது. கடலூரில், தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு திடீரென கடல் நீர், 300 மீட்டர் தூரத்திற்கு ஊருக்குள் புகுந்ததால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். நாளை, கடலூர் மாவட்ட கடலோர பகுதியில், 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, கடலூர் மீன் வளத்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

               படகுகள் சேதம்: கடலூர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, கடல் நீர் திடீரென ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான படகுகள், ஒன்றோடு ஒன்று மோதியும், அதிலிருந்த வலைகள், இன்ஜின்கள் சேதமடைந்தன' என, வந்த தகவலின் பேரில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், கடலூர் அடுத்த புதுக்குப்பம் கடலோரப் பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் புதுக்குப்பம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட படகுகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள், இன்ஜின்கள், படகுகள் சேதமடைந்தது கண்டறியப்பட்டது.
















Read more »

கடலோர கிராமங்களில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம்: எம்.எஸ்.சுவாமிநாதன்

சிதம்பரம்:

           கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், வருவாயைப் பெருக்கும் வகையில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடங்கப்படும் என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

            சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அடிக்கல் நாட்டு விழா, ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடக்க விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையத்தைத் தொடங்கி வைத்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது: 

               படிக்காத மீனவ இளைஞர்களுக்கு கடலோர வள பயிற்சி அளிக்கவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் கடல் நீரிலிருந்து விவசாயம், மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பயிற்சியையும் வழங்கப்பட உவுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சத்துணவு இல்லை. எனவே இப்பகுதி மக்களுக்குச் சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கையை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.÷சுனாமி பேரலையின் போது அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்த பழங்குடியினர் மட்டும் உயிர் தப்பினர். 

               ஏனென்றால் சுனாமி வருவது குறித்த அறிகுறிகளை அறிந்து உயர்ந்த மரத்தின்மீது அமர்ந்து தப்பியுள்ளனர். எனவே நாம் பழமையான விஞஞானத்தையும், புதிய வஞ்ஞானத்தையும் இணைத்து செயல்படுத்த வேண்டும். மீண்டும் சுனாமி பேரழிவிலிருந்து கடலோர மக்களைக் காக்க கடலோரப் பகுதிகளில் சுரபுன்னை போன்ற காடுகளை வளர்க்க வேண்டும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன். 

விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் பேசியது: 

             கடலோர கிராமமான இப்பகுதியில் பெண்கள் வீட்டில் இருந்தவாறு வருமானத்தை பெருக்கும் வகையில் கடல் வண்ண மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.  கடல் நீரில் வண்ண மீன் உற்பத்தி செய்யும் பணி ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தைத் செயல்படுத்த உள்ளது என்றார். 

              விழாவில் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பயனாளிகளுக்கு உமிரி மற்றும் கண்டல் செடிகளை வழங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட மீனவ சமுதாயத்திற்கான அரசு நலத்திட்டங்கள் விளக்க கையேடு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள டீசல் எஞ்சின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்கான விளக்க கையேடு, மீனவர்களுக்கான செயல்முறை விளக்க கையேடு ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன.

               முன்னதாக சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் அஜய்பரீடா வரவேற்றார். சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை தேசியத் திட்ட இயக்குநர் ஏ.செந்தில்வேல், தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டி.எஸ்.சீனுவாசமூர்த்தி, சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், மீனவர் கிராமத் தலைவர் ஏ.அன்புஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கடலோர வள ஆராய்ச்சி மைய இயக்குநர் வி.செல்வம் நன்றி கூறினார்.













Read more »

செவ்வாய், டிசம்பர் 27, 2011

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/1c680c46-e3bd-4436-ade6-f6bacdc62e3c_S_secvpf.gif
 
 
கடலூர்:: 

கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-


              தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 2011-12 ம் ஆண்டிற்கு தமிழக அரசால் முதல் தவணையாக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
                 இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர மையங்கள் கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலை கடைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல் பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகள் தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்கள் சிமெண்டு சாலையாக அமைத்தல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தெருவிளக்குகள் அமைத்தல் மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல், அரசு பள்ளிகள், நூலகங்கள் போன்றவற்றிற்கு புதிய தளவாட சாமான்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகளை எடுத்து செய்யலாம்.

       தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையை சார்ந்த யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்குத் தொகை மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவுத் திட்ட நிதி என்ற பெயரில் கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம்.

             இத்திட்டம் கிராம பகுதி களிலும், நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் செயல் படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more »

நடுரோட்டில் தவித்த கடலூர் சிறுமியை மீட்ட பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/22afe38a-73d9-48b0-8dde-044358249348_S_secvpf.gif
கடலூர்:
 
       கடலூர் திருப்பாபுலியூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சவுமியா (வயது 7). கடந்த 2 வாரங்களுக்கு முன் அவளை காணவில்லை. பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

            பெரம்பலூர் அருகே ரோட்டில் 7 வயது சிறுமியை 4 பேர் வலுக் கட்டாயமாக பிடித்து இழுத்தனர். நீதிபதி அங்கு சென்றபோது 4 பேரும் தப்பினர். சிறுமியிடம் நீதிபதி விசாரித்தபோது கடலூர் திருப்பா புலியூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் சவுமியா என்று குறிப்பிட்டாள். அந்த சிறுமியை நீதிபதி தன்னுடைய காரில் பரங்கிப் பேட்டைக்கு அழைத்து வந்தார்.

நீதிபதி கோமதி கூறுகையில், 
             சவுமியா குறித்து அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். பெற்றோர் வந்ததும் சிறுமியை ஒப்படைப்பேன் என்று கூறினார்.

Read more »

கடலூர் கிழக்கு ராமாபுரத்தில் பா.ம.க.கொடிகம்பம் காணவில்லை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/1a03f849-3b72-42de-8456-7891c71cc19e_S_secvpf.gif
 
கடலூர்:
 
             கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பா.ம.க. கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. நள்ளிரவில் அந்த கொடிகம்பத்தை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டது. காலையில் கட்சி கொடி கம்பத்தை காணாத அந்த பகுதி பா.ம.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

     இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க. தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர். கட்சியின் கொடி கம்பம் திருடப்பட்டதால் அவர்கள் ஆவேசத்துடன் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் பா.ம.க. கிளை செயலாளர் விநாயகமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செயன், ரமேஷ், பழனி, துளசி ஆகிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
 
 
 
 

Read more »

7th Tsunami anniversary: Sea water enters villages in cuddalore District

CUDDALORE:

        Sea water entered about 10 fishing hamlets in Cuddalore late on Monday, the seventh anniversary of the tsunami, creating panic among the people living there. With formation of low pressure over the Bay of Bengal, the sea was rough with strong waves. A cyclone-warning signal has been hoisted at the Cuddalore port. People in the fishing hamlets such as Devanampattinam, Thazanguda, Singarathope and Akkaraikori started panicking as the shore was submerged in sea water entirely. Fishermen who anchored their boats on the shore started shifting them to safer places. They also pulled back a few small boats using ropes to prevent them from being dragged into the sea by the waves.

Read more »

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

The Singarathope Bridge was our saviour when Tsunami struck

CUDDALORE: 

 

         The Singarathope Bridge that saved many lives during the 2004 tsunami is still remembered with gratitude by the residents of Singarathope, Akkarakori and Sonankuppam villages in Cuddalore. The bridge that was constructed two years before the tsunami is the only way to reach these villages. When the tsunami struck, the residents of all three villages climbed onto the bridge to escape the waves.

          “People were screaming and rushing towards the bridge... Thousands of people stood there until the water receded,” said Narayanasamy, an elderly resident of Singarathope. Even after district authorities arranged for temporary shelters, villagers stood on the bridge to guard the villages from outsiders. Residents said this bridge is the reason they survived. “It was our saviour,” said Pavadi, a fisherman.

 

Read more »

7th anniversary of Tsunami - The 'tsunami memory pillar' in Thevanampattinam in Cuddalore district was decorated with flowers

          Relatives of thousands who perished in the December 2004 tsunami on Monday observed the seventh anniversary of the tragedy by lighting candles and offering floral tributes at memorials in Tamil Nadu and Puducherry.

In Chennai, family members of the deceased gathered at Marina beach and offered prayers.  Beaches and coastal villages in Cuddalore and Nagapattinam districts, that bore the brunt of the tsunami, saw relatives of victims offering prayers.

       The 'tsunami memory pillar' in Devanampattinam in Cuddalore district was decorated with flowers, while many poured milk in the sea and performed rituals.  In Puducherry, chief minister N Rangasamy, his cabinet colleagues, Speaker V Sabapathy and opposition Congress legislator K Lakshminarayanan were among those who paid homage to the victims near Mahatma Gandhi statue.

     Sand sculptures depicting the horrors of the tsunami made by artists of Puducherry were on display at the seashore in Veerampattinam coastal village.  In Karaikal, fishermen took out silent rallies on the occasion.  Coastal districts of Tamil Nadu and the Union Territory of Puducherry were badly affected in the Tsunami waves that struck India on this day in 2004 following an earthquake off the western coast of Sumatra in Indonesia.

Read more »

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கொத்தமல்லி (தனியா) சாகுபடி முறைகள்





கடலூர் : 
 
         குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

                கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 
 
               தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது. 
 
              குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. 
 
                 கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம். சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை. முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.
 
                பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும்.  நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். 
 
               கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, டிசம்பர் 23, 2011

Decommissioning of Thermal Power Station I at NLC deferred

CUDDALORE: 

         The 49-year-old Thermal Power Station I at Neyveli, which was nearing its extended life, will not be decomissioned for another five years following requests from the Tamil Nadu government and Tamil Nadu Electricity Board (TNEB), Neyveli Lignite Corporation has said. AR Ansari, Chairman-cum-Managing Director, NLC, said it had been decided earlier to taper down the power generation at the 600 mw power station in phases between 2011 and 2014. The power station was built in 1962 with Soviet assistance and is one of the oldest power plants in the country.

Read more »

வியாழன், டிசம்பர் 22, 2011

கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணி: ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி


 


சுரங்கப் பாதை திட்டத்துக்காக கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தும், ஆபத்தை உணராமல் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள்

கடலூர்:

             கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிக்காக நிரந்தமாக மூடப்பட்ட ரயில்வே கேட்டை, பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

               கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே கேட் நிரந்தமாக மூடப்பட்டு விட்டது. பில்லர்கள் அமைப்பதற்காக குழிகளும் தோண்டப்பட்டு உள்ளன.  ஆனால் அப்பகுதியில் உள்ள சிறிய சந்து வழியாக, 10 அடி ஆழப் பள்ளம் அருகே நூற்றுக் கணக்கான பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பலர் இவ்வழியைப் பயன்படுத்துகிறார்கள்.  எதிர்பாராமல் பள்ளத்தில் விழுவதற்கும், ஓடும் ரயிலில் அடிபடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை பொதுமக்கள் ஏனோ உணரவில்லை.  ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதால், அப்பகுதியை முழுவதுமாக மூட வேண்டும். 

                  ஆனால் அவ்வாறு செய்யாததால் பொதுமக்கள் தொடர்ந்து அந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.  சில வியாபாரிகளின் நெருக்குதல் காரணமாக, காய்கறி மூட்டைகளை எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக, ஒற்றையடிப் பாதை ஒன்றை ரயில் தண்டவாளங்கள் வழியாக அமைக்கும் முயற்சிக்கு, திருப்பாப்புலியூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை அனுமதி அளித்தனர்.  அவ்வாறு பாதை அமைப்பதால், அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை உணர்ந்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அப்பாதை செவ்வாய்க்கிழமை மூப்பட்டது.  ரயில் பயணிகள் இடையூறின்றி ரயில் நிலையத்துக்கு வந்துபோக வசதியாக, மேற்குப் பாதையை திறந்து விடுவதே சரியான தீர்வாக அமையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டியில் சந்தனக்கூடு உரூஸ் விழா




சந்தனக் கூடு விழாவில் பங்கேற்றோர்.
பண்ருட்டி:
 
        ண்ருட்டி வட்டம் கானஞ்சாவடி ஜிந்தாஷா வலியுல்லா தர்காவில் சந்தனக் கூடு உரூஸ் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.  மொஹரம் மாதம் 23, 24-ம் பிறையை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு பரம்பரை முத்தவல்லிகள் எஸ்.கே.பி.மீர்ஹமீது, எஸ்.கே.பி.அமீர்பாஷா தலைமை தாங்கினர்.  முக்கியஸ்தர்கள் காதர்மொய்தீன், சையத் ஆசிப், ரபிக், சையத் கரீம், உசேன் அப்துல் காதர் மற்றும் கானஞ்சாவடி, புறங்கனி, வரிசாங்குப்பம், கானாங்குப்பம், அழகப்பசமுத்திரம், காடாம்புலியூர், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பானுவஜமாக்கள், ரிபாய் தப்ஸ், ராதீபு நடைபெற்றது.  

Read more »

விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பிப்ரவரியில் தொடக்கம்

நெய்வேலி:

            விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என தங்க நாற்கரச் சாலைத் திட்ட அலுவலர் அதிபதி தெரிவித்தார். 

             விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. இச்சாலை அண்மையில் பெய்த மழையால் மிகுந்த சேதமுற்று, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.  குறிப்பாக சேத்தியாத்தோப்பில் இருந்து விக்கிரவாண்டி வரை செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. தஞ்சை, கும்பகோணம், நாகை, சிதம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி வரை தட்டுத்தடுமாறி வந்தாலும் பண்ருட்டிக்குப் பிறகு அரசூர் வழியாக விழுப்புரம் சென்று சென்னை செல்கின்றனர். பஸ்களும் அதே வழியில் தான் செல்கின்றன.  அந்த அளவிற்கு பண்ருட்டி-விக்கிரவாண்டி சாலை குண்டும் குழியமாக மாறி உள்ளது. பண்ருட்டி-விக்கிரவாண்டி இடையேயான 27 கி.மீ தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரமாகிறது.  

இந்நிலையில் சாலைப் பணிகள் செப்பணிடுதல் குறித்து தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் தஞ்சைக் கோட்ட திட்ட இயக்குநர் அதிபதி கூறுகையில், 

                      அண்மையில் பெய்த மழையால் சேதமுற்ற சாலைகளை செப்பனிட ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இப்போது துரித கதியில் நடைபெறுகிறது. ஒப்பந்தம் கோரும் பணி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்குவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.  விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை மார்க்கத்தின் இடையே உள்ள பண்ருட்டி மற்றும் வடலூர் நகர்ப் பகுதிகளில் பைபாஸ் சாலை அமைக்கப்பட இருப்பதாவும் தெரிவித்தார். இதனால் வடலூர், பண்ருட்டி பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior