உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

சென்னை பல்கலை. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்

                சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய வகை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
 
            மேலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர் பெற்றுள்ள மதிப்பெண்ணுக்கேற்ப கிரெடிட் புள்ளிகள், கிரேடு புள்ளிகள், கிரேடுகள் ஆகியவையும் சான்றிதழில் இடம் பெறுகின்றன. அதன்படி, 50-59 மதிப்பெண்ணுக்கு 5.0-5.9 கிரேடு புள்ளியும், ஆ கிரேடும், ஆவரேஜ் என்றும் குறிப்பிடப்படும்.60-69 மதிப்பெண்ணுக்கு 6.0-6.9 கிரேடு புள்ளிகளும், அ கிரேடும், குட் என்றும் குறிப்பிடப்படும்.70-74 வரை மதிப்பெண்ணுக்கு அ+ கிரேடும், வெரி குட் என்றும், 75-79 வரையுள்ளவற்றுக்கு ஈ கிரேடும் டிஸ்டின்க்ஷன் என்றும், 80-89 வரையிலான மதிப்பெண்ணுக்கு ஈ+ கிரேடும், எக்ùஸலென்ட் என்றும், 90-100 வரையுள்ள மதிப்பெண்ணுக்கு 9.0-10 கிரேடு புள்ளிகளும், ஞ கிரேடும் அவுட்ஸ்டாண்டிங் என்றும் சான்றிதழில் குறிப்பிடப்படும்.
 
            பல்கலைக்கழகம், அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் 2009-10-ம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகத்தின் 2009 நவம்பர் பருவத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளன.தற்போது பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2010 பருவத் தேர்வு முடிந்து, அதன் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கும், 2009 நவம்பர் தேர்வுக்கும் சேர்த்து புதிய  மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
 
           இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் 10 நாள்களுக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள எல்லா கலை அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த 2008-09-ம் கல்வி ஆண்டில் இருந்து விருப்பார்ந்த தெரிவுமுறை பாடத் திட்டம் (சி.பி.சி.எஸ்.) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான தமிழ், ஆங்கிலம், துணை பாடங்கள், முதன்மை பாடங்கள் ஆகியவற்றோடு விருப்பப் பாடங்கள், சாப்ட் ஸ்கில்ஸ் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன.இவ்வாறு சேர்க்கப்பட்ட பாடங்களில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை எடுத்து தேர்ச்சி பெற்றால்தான் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதாகக் கருதி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். 
 
                 2008-09ம் ஆண்டிலேயே சி.பி.சி.எஸ். திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் கிரெடிட் மட்டுமே இடம் பெற்றிருந்தன. கிரேடு புள்ளிகள், கிரேடு, குட் என்பன போன்ற குறிப்புகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மேல்படிப்புக்குச் செல்வது, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பணிக்குச் செல்வது ஆகியவற்றுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கலை கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை செயல்படுத்தப்படுவதால் பாரதிதாசன், பாரதியார் போன்ற பல்கலைக்கழகங்களிலும் சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழின் மாதிரிதான் பயன்படுத்தப்படவுள்ளன.

Read more »

800 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்தையா முரளிதரன் சாதனை


காலே:
 
          இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை காலே மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டின்போது அவர் இந்த சாதனையைப் படைத்தார்.இந்த டெஸ்ட்டுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ள 38 வயதான முரளிதன் 800-வது விக்கெட்டாக இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவை வீழ்த்தினார்.

Read more »

காவிரி நீர் இல்லை, காய்கிறது குறுவை கொள்ளிடத்தில் வீணாகிறது மழை நீர்


கொள்ளிடம் ஆற்றில் முட்டம்- மணல்மேடு இடையே கட்டப்பட்டு வரும் பாலத்துக்காக, அமைக்கப்பட்டு உள்ள தாற்காலிக பாலத்தை உடைத்துக் கொண்டு ஓடும் வெள்ளம்.
 
கடலூர்:
 
          காவிரி நீர் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. எனவே குறுவை நெல் பயிர் தண்ணீரின்றி காய்ந்து கொண்டு இருக்கிறது. 
 
           ஆனால் கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கன அடிக்கு மேல் மழைநீர், வீணாகக் கடலில் கலந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்காக காவிரி நீரை நம்பி இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியும் அதைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியும் நடைபெறும். ஆனால், காவிரி நீரை வழங்குவதில் கர்நாடகம் தகராறு செய்யத் தொடங்கியதும், தமிழகத்தின் டெல்டா நிலங்கள் தரிசாகும் நிலை உருவாகி விட்டது. கடந்த 3 மாதங்களில் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வர வேண்டிய, 47 டி.எம்.சி. தண்ணீர் வரவில்லை. எனவே மேட்டூர் அணை நிரம்பாததால், இந்த ஆண்டும் ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்கப்படவில்லை. எனினும் மேட்டூர் அணை நிரம்பி கொஞ்சமாவது தண்ணீர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் ஆழ்குழாய்க் கிணறுகளையும், தென்மேற்குப் பருவ மழையையும் நம்பி, டெல்டா மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து இருக்கிறார்கள் நமது விவசாயிகள். 
 
             கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான அழ்குழாய்க் கிணறுகளில் உவர் நீராக இருப்பதாலும், போதிய மழையின்மையாலும் குறுவை நெல்பயிர் காய்ந்து கொண்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சம்பா சாகுபடிக்காவது முன்னரே தண்ணீர் திறக்க வேண்டும் என்று, 20 நாள்களுக்கு மேலாக டெல்டா விவசாயிகள் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். காவிரி நீர் கேட்டு, கர்நாடகத்துக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். கல்லணையில் இருந்து குடிநீருக்காகத் திறக்கப்படும் சிறிதளவு நீருடன், மழைநீரும் கலந்து வந்து, கொள்ளிடத்தில்  பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டு இருக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் இந்த வெள்ளம், கொள்ளிடம் முட்டம்- மணல்மேடு இடையே கட்டப்படும் பாலத்துக்காக அமைக்கப்பட்ட, தாற்காலிக பாலத்தைச் சிதைத்து, ஓடிக் கொண்டு இருக்கிறது. 
 
           இந்த நீரை கீழணையில் தேக்கி பாசனத்துக்குத் திருப்பி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்போம் என்கிறார்கள், கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள். ஜூன் 12-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் (கீழணை ஷட்டர்களைப் பழுதுபார்த்தல், வடவாறு கரைகள் சீரமைப்பு வேலைகள்) இன்னமும் நீடித்துக் கொண்டு இருப்பதே தண்ணீரைத் தேக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயமூர்த்தி கூறுகையில்,
 
            கடந்த 3 நாள்களாக கொள்ளிடத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வீணாக ஓடிக் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. இதைத் தேக்கி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திருப்பி இருந்தால் சிறிய குளங்கள் நிரம்பும். ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.  கிராம மக்களின் குடிநீர் பிரச்னை தீரும். வாடும் குறுவைப் பயிருக்குச் சிறிதேனும் தண்ணீர் கிடைத்து இருக்கும். வடவாறில் தண்ணீர் திறக்க முடியாவிட்டாலும், ராஜன் வாய்க்காலில் திறந்து இருக்கலாம் என்றார்.
 
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
              ஜூன் 12-ம் தேதிக்குள் மராமத்துப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. அதை ஏனோ அதிகாரிகள் பின்பற்றவில்லை. மழைநீரை தேக்கிவைத்து விநியோகிக்க தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார். கீழணை மற்றும் வடவாறில் மராமத்துப் பணிகள் நடப்பதை பொதுப்பணித்துறை கொள்ளிடம் கீழணை செயற்பொறியாளர் செல்வராஜ் உறுதி செய்தார். இப்பணி ஆகஸ்ட் 15-ல் முடிவடையும் என்றும், மேட்டூர் அணை திறப்பதாக இருந்தால் வேகமாகப் பணிகளை முடித்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more »

ஊராட்சி மன்றத் தலைவருக்கு விருது: ஆட்சியர் பாராட்டு

கடலூர்:
           கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.செல்வராசனுக்கு 2008-09-ம் ஆண்டுக்கான சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான உத்தமர் காந்தி விருதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வழங்கினார்.  இதற்காக செல்வராசனை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தார். மேலும் சிறப்பாகச் செயல்படுமாறு வலியுறுத்தினார்
 

Read more »

கடலூர் சமூக சேவகிக்கு இந்திய மருத்துவச் சங்க விருது

கடலூர்: 

           கடலூர் சமூக சேவகி சுஜாதா சீனிவாசனுக்கு இந்திய மருத்துவச் சங்கம் விருது வழங்கி  கௌரவித்து உள்ளது.

             டாக்டர் பி.சி.ராய் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை ஆண்டுதோறும் சிறந்த சேவை புரியும் மருத்துவர்களுக்கும், மருத்துவத் துறை அல்லாத ஒருவருக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கி கெüரவித்து வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான மருத்துவர்கள் தின (டாக்டர் பி.சி.ராய்) விருதுகள் வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த சேவை புரிந்த மருத்துவர்கள் 6 பேருக்கும், மருத்துவத் துறையில் அல்லாத சமூக சேவகி கடலூர் சுஜாதா சீனிவாசனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

            சுஜாதா சீனிவாசனுக்கு டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவச் சங்க தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார் தலைமையில் நடந்த விழாவில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த விருதை சுஜாதா சீனிவாசனுக்கு வழங்கிப் பாராட்டினார். ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கங்களில் பணியாற்றி, சமூகத்துக்குத் தேவையான சட்டம் சார்ந்த சேவைகளை, குறிப்பாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் சார்ந்த சேவை ஆற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுனாமி பேரலைத் தாக்குதலின் போது அவர் ஆற்றிய சேவைகளுக்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. சுஜாதா சீனிவாசன் இன்னர்வீல் சங்க மாவட்ட ஆளுநராகவும், ரோட்டரி சங்கத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்து இருக்கிறார். கடலூர் சென்ட்ரல்  ரோட்டரி சங்க சாசனத் தலைவராகவும், சிறார் நீதிமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் தத்து எடுத்தல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Read more »

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்: புறம்போக்கில் குடியிருக்கும் 1,354 பேருக்கு மனைப்பட்டா

கடலூர்,:

          கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வசதியாக, கடலூர் மாவட்டத்தில் புறம்போக்கில் குடிசை வீடுகளில் வசித்து வரும் 1,354 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது.

           மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இதில் அரசுப் புறம்போக்கில் குடியிருக்கும் சிலருக்கு வீட்டு  மனைப் பட்டா இல்லாமல் உள்ளது. எனவே அவ்வாறு அரசுப் புறம்போக்கில் வசித்து வரும் 1,354 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
 
           அவர்களில் 536 பேருக்கு திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தகுதியான மீதமுள்ள அனைவருக்கும் விரைவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு உள்ள தகுதியான அனைவருக்கும் 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 மனுக்கள் பெறப்பட்டன.

             பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 27 பேருக்கும், சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் 9 நபர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

Award for local body chief

CUDDALORE: 

            Orathur panchayat president R. Selvarajan was recently given the Uthamar Gandhi Award for 2008-2009 in recognition of his services rendered for the improvement of the local body. Collector P. Seetharaman felicitated him.

Read more »

Income ceiling lifted

CUDDALORE: 

          Collector P. Seetharaman has said the income ceiling has been lifted for differently abled persons for availing themselves of benefits of government schemes. He said from the current financial year, 2010-11, the economic criterion as a qualifying clause has been deleted. Regardless of the income level, the differently abled can now get educational aid, free artificial limbs, motor-fitted sewing machine, battery-operated scooters, free bus pass and maintenance allowance, he said.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாதிரிப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தேர்வு முடிவு வெளியீடு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ள மாதிரிப் பள்ளிகளுக்கு 9-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி அறிவித்தார்

அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான பண்ருட்டி, நல்லூர் ஒன்றியங்களில் 2010-11-ம் கல்வி ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மாதிரிப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இதற்காக 18-ம் தேதி கடாம்புலியூர், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 690 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

            மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, தேர்வு மையங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் ஒட்டப்பட்டு உள்ளது. 11-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கு காடாம்புலியூர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

வருங்கால வைப்பு நிதி விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம்


               ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்.எம்.எஸ்., வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனம் எஸ்.எம்.எஸ்., மூலம் ஊழியர்கள், உறுப்பினர்கள், பென்ஷன் வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த சேவை மூலம் பென்ஷன் கடன் விண்ணப்பம் மற்றும் செட்டில்மென்ட் குறித்த நிலை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

            நிறுவனங்கள் பணம் செலுத்திய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையை பெற, உறுப்பினர்கள் தங்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் தங்கள் ஊழியர்களின் மொபைல் எண்கள் குறித்த விவரங்களை உரிய நபரின் கையெழுத்துடன், மண்டல அலுவலகங்கள் அல்லது துணை மண்டல அலுவலகங்களில் தாக்கல் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மேலும் விவரங்களை http://www.epfindia.nic.in.., http://www.epfochennai.tn.nic.in.. என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

மதுரை காமராஜர் பல்கலை பி.பி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு


    மதுரை காமராஜர்  பல்கலையில் கடந்த ஏப்ரலில் நடந்த பி.பி.ஏ., (அல்பருவம்) தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் www.mkuniversity.org என்ற முகவரியில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், இணையதள முகவரியிலேயே விண்ணப்பம், மதிப்பெண் பட்டியலை பெறலாம். அதை பூர்த்தி செய்து ஆக. 10ம் தேதிக்குள் தேர்வாணையருக்கு விண்ணப்பிக்க வேண்டுமென கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

திட்டக்குடி வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்பணைக்கு ரூ.233 கோடி அனுமதி


திட்டக்குடி : 

            வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத் தடுப்பணை அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இதில், வலுவிழந்த கரைப் பகுதியான 1,700 முதல் 2,500 மீட்டர் வரையிலான 800 மீட்டர் கரைப் பகுதியை சீரமைத்து, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இப்பணிகளை நேற்று மதியம் நேரில் பார்வையிட்ட வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், கூறியதாவது: 

                   வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை நீரை வீணடிக்காமல் இந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு செய்யப்படும். வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கி, 2012 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு நஞ்சன் கூறினார்.

Read more »

தனியார் பங்களிப்புடன் சிறிய துறைமுகங்களை மேம்படுத்த திட்டம்


            தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்கள் தற்போது தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், புதிய தொழிற்சாலைகள் உருவாகவும்; நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு பெருகவும்; பொருளாதாரம் வளர்ச்சியடையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

           தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் என மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இந்த மூன்று பெரிய துறைமுகங்கள் தவிர, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், பாம்பன், குளச்சல், வாலினோக்கம், கன்னியாகுமரி, எண்ணூர், புண்ணக்காயல், திருக்கடையூர், பி.ஒய்-3 ஆயில் பீல்டு, காட்டுப்பள்ளி, திருச்சோபுரம், மணப்பாடு, கூடங்குளம் உள்ளிட்ட 15 சிறிய துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. சிறிய துறைமுகங்களை மேம்படுத்தினால் கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டு, தமிழக கடல்சார் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறிய துறைமுகங்களை மேம்படுத்தினால், அவைகளைச் சுற்றி எண்ணெய் தொழிற்சாலைகள், அனல் மின் நிறுவனங்கள், நங்கூரம், சங்கிலி போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவை உருவாகும்.

          துறைமுகம் மற்றும் அதன் அருகில் தொழிற்சாலைகள் ஏற்படுத்துவது குறித்து கடந்த 2007ம் ஆண்டு மாநில அரசு கடல்சார் கொள்கை ஒன்றை அறிவித்தது. இதன்படி, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட துறைமுகம் அருகிலேயே தொழிற்சாலைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 2006ம் ஆண்டில் 15 என இருந்த சிறிய துறைமுகங்கள் தற்போது 20 ஆக அதிகரித்துள்ளன. சென்னையில் இருந்து 200 கி.மீ., தெற்கே உள்ளது கடலூர் துறைமுகம். தமிழக கடல் சார் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த துறைமுகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் கடல் அரிப்பை தடுக்கும் தடுப்பு சுவர்கள், நிர்வாக அலுவலகம், கப்பல்கள், படகுகள் நிறுத்துமிடங்கள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டது. நிதி பிரச்னை காரணமாக இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, தனியார் மூலம் இத்துறைமுகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

             துறைமுகத்தை மேம்படுத்துதல், பராமரித்தல், பகிர்வு, பரிமாற்றம் ஆகியவற்றிற்காக 30 ஆண்டுகள் சலுகை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பிளாஸ்ட் நிறுவனம், தனது நிறுவனத்திற்கு தேவையான பாலி வினைல் குரோரைடு கையாளுவதற்காக கடலூர் துறைமுகத்தில் மெரின் டெர்மினல் வசதிகளை செய்துள்ளது. கடலூர் பவர்ஜென் கார்ப்பரேஷன் நிறுவனம் 325 கோடி ரூபாய் செலவில் கடலூர் துறைமுகத்தில் கப்பல் சரக்குகளை வைக்குமிடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயை சுத்திகரிக்கவும், சரக்குகளை கையாளவும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் தேவையான கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மற்ற துறைமுகங்களும் தனியார் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சிறிய துறைமுகங்களின் இன்றைய நிலை

காட்டுப்பள்ளி: 

           எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் செலவில் கப்பல் கட்டும் பணி உள்ளிட்ட தனியார் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முகையூர்: 

              மாமல்லபுரம் அருகே உள்ள முகையூர் ஒரு சிறிய துறைமுகம் என சமீபத்தில் அரசு அறிவித்தது. இங்குள்ள துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் செலவில் கப்பல் பழுது பார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

பரங்கிப்பேட்டை: 

               ஐ.எல்., மற்றும் எப்.எஸ்., லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்டுள்ள இத்துறைமுகத்தில், ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையாளப்பட உள்ளது.

திருசோபுரம்: 

             கடலூர் மாவட்டம், திருசோபுரத்தில், ஆயிரத்து 800 கோடி ரூபாயில் துறைமுகம் அமைக்க நாகர்ஜுனா எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு குரூட் ஆயில் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை இறக்குமதி செய்து, அந்த நிறுவனம் சுத்திகரிக்கும்.

சிலம்பிமங்கலம்: 

             கடலூர் மாவட்டம், சிலம்பிமங்கத்தில் 500 கோடி ரூபாயில் துறைமுகம் அமைத்துக் கொள்ள குட்எர்த் ஷிப் பில்டிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 75 ஆயிரம் டன் எடை வரையுள்ள கப்பல்களை நிறுத்தலாம்.

காவேரி: 

              நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் அருகே பெல் பவர் என்ற தனியார் நிறுவனம் 200 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 320 மெகாவாட் மின் நிலையம் அமைக்கிறது. இதற்கு தேவையான நிலக்கரியை கையாளக்கூடிய வகையில் காவேரி துறைமுகத்தை இந்நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

வானகிரி: 

             நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா அருகே என்.எஸ்.எல்., பவர் என்ற தனியார் நிறுவனம் 250 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கையாளக்கூடிய வகையில் இத்துறைமுகத்தை சீரமைத்து வருகிறது.

திருக்கடையூர்: 

             நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூரில் பி.பி.என்., பவர் ஜெனரேட்டிங் என்ற தனியார் நிறுவனம் 330 மெகா வாட்மின் உற்பத்திநிலையத்தை துவக்கியுள்ளது. இத்தொழிற்சாலைக்கு நாப்தா மற்றும் இயற்கை வாயுவை கொண்டு வருவதற்காக கடந்த 1996ம் ஆண்டு துறைமுகம் அமைக்கப்பட்டது.

திருக்குவளை: 

               நாகப்பட்டினம் மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு என்ற இடத்தில் டிரிடெம் போர்ட் மற்றும் பவர் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் 650 கோடி ரூபாய் செலவில் 2000 மெகாவாட் மின் நிலையம் அமைத்துள்ளது. இதற்கு தேவையான நிலக்கரியை கையாள வேண்டி, 276 ஏக்கர் நிலத்தில் துறைமுகம் அமைக்க இந்த நிறுவனத்திற்கு ஆண்டு குத்தகை அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மணப்பாடு

                தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடில் சிறிய துறைமுகம் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இந்தியன் பவர் புராஜக்ட் என்ற தனியார் நிறுவனம் 2 ஆயிரம் மெகாவாட்டில் காஸ் டர்பைன் மின் உற்பத்தி நிலையத்தை நிறைவேற்ற உள்ளது. இதற்காக இந்த நிறுவனத்திற்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம்: 

               திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இதற்காக, இத்துறைமுகத்தில் ஒரு கிலோ மீட்டர் நீளம் 500 மீட்டர் அகலத்தில் கடல்நீரை சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது. பவர்பிளாண்ட், ஆர்.சி.சி., ஜெட்டி ஆகியவை 340 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

பனையூர்: 

             இங்கு கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் 4 ஆயிரம் மெகாவாட் மின்திட்டத்திற்கு தேவையான நிலக்கரி கையாளப்படும் அளவிற்கு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.


உடன்குடி: 

                 சென்னை உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், இத்துறைமுகத்தில் 600 கோடி ரூபாய் செலவில் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குமிடம் கட்ட உள்ளது. சூப்பர் அனல்மின் நிலைய திட்டத்தின் ஆயிரத்து 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இந்த துறைமுகத்தில் கையாளப்படும்.

முதலில் சாலை...! அடுத்தது துறைமுகம்...! 

             வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நாட்டில் உள்ள முக்கிய சாலைகளை நான்கு மற்றும் ஆறு வழி போக்குவரத்து கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதன் மூலம், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகியவை தற்போது "தங்க நாற்கர சாலை' திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள், பல ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு நான்கு, ஆறு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. 

               இதனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான சாலை மேம்பாட்டு திட்டங்களில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாட்டில் உள்ள துறைமுகங்களையும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read more »

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியீடு


             பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த மாதம் நடந்த உடனடித் தேர்வில் கலந்து கொண்டனர்.

              விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், ஓரிரு நாளில் முடியும். எனவே, அடுத்த வாரத்தில் 30ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு உடனடித்தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கடலூர் : 

          வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள் ளதை பயன்படுத்திக் கொண்டு பெயர் சேர்க்குமாறு அமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் 1.7.2010 அன்று வெளியிட்டுள்ளது. புதிய வாக்காளர் கள் சேர்த்தல், நீக்குதல் பணிகள் கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. தற்போது தேர்தல் ஆணையம் வரும் 26ம் தேதி நீட்டித்துள்ளது. எனவே பெயர் இல்லாதவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுத்து பெயரினை சேர்த்துக் கொள்ளவும். படிவம் 7ல் பெயர் நீக்குவதற்கும், படிவம் 8ல் பெயர் திருத்தம், புகைப் படம் மாற்றம் போன்ற இனங்களில் பூர்த்தி செய்து கொடுக்கவும். 

              ஆகவே 1.1.2010 அன்று 18 வயது நிரம்பியவர்கள் முன்பு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதியதாக குடிவந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற் கும், வேறு இடங்களுக்கு சென்றவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கும் படிவங்களை பூர்த்தி செய்து பொதுத் தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடி மையங்களின் களப்பணியாளர்கள் மற்றும் தாலுகா,  நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை கொடுக்கலாம். இப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் தவறாமல் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Read more »

கடலூரில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டம்

கடலூர் : 

           தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் மனித சங்கிலி  போராட்டம் நடத்தினர்.

         தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் குடும்பத்துடன் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலூர் பெரியார் சிலையிலிருந்து புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் வரை மனித சங்கிலியில் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். காமராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சரவணன் இயக்கம் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ராஜாமணி, ஜாஸ்மின் மாநிலத் தலைவர் சிங்காரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக : மீனவர்களுக்கு ரூ.4.19 லட்சம் வழங்கல்

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக 524 குடும்பத்தினருக்கு 800 ரூ. வீதம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்பட்டது.

             கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு  கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு தடை கால நிவாரணமாக கடந்த ஆண்டு 500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 300 ரூபாய் உயர்த்தி 800 ரூபாயாக வழங்க அரசு அறிவித்தது. கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 மீனவ குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வழங்க ஒரு கோடியே 13 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் முதற் கட்டமாக  சுனாமியால் பாதிக்கப்பட்ட  கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பட்டரையடி பகுதியைச் சேர்ந்த 524 குடும்பத் தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கிள்ளை காளியம்மன்கோவில் சமுதாய கூடத்தில் நடந்தது.

                கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளம்பரிதி,மீன் ஆய்வாளர் நாபிராஜ், நீதிமணி, அருணகிரி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங் கேற்று பயனாளிகளுக்கு ரூபாய் 800 ஐ வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

Read more »

கருணை அடிப்படையில் கல்வித்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மனு

திட்டக்குடி :

          கருணை அடிப்படையில் கல்வித்துறையில் பணி நியமன ஆணையை வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் திட்டக்குடி வட்டத்தலைவர் ராமசாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

            தமிழக கல்வித்துறையில் கருணை அடிப்படையில் வேலை கோரிய விண்ணப்பங்கள் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். கடந்த பத்து ஆண்டாக கல்வித்துறையில் மட்டும் கருணை அடிப்படை வேலை சரிபார்ப்பில் காலம் தாழ்த்தி வருகிறது. இதர துறைகளில் விரைவான நடவடிக்கையால் இவ்வகை நியமனம் துரிதமாக செயல்படுத்தி வருகிறது. அனைத்து அலுவலகங்களிலும் கணினி செயல்பாடுகள் உள்ள நிலையில் காலிபணியிடத்தில் அரசு ஆணைப்படி கருணை அடிப்படை நியமன ஒதுக்கீடு 25 சதவீதம் கண்டறிவது மிகவும் எளிதானது என்பது தெளிவானது. கால தாமதமாவதால் ஒருங்கிணைந்த சான்று திருத்தம் அவ்வப்போது செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்நியமனத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் முதிர் கன்னியாக இருந்து வரும் நிலையும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு துரித நடவடிக்கையாக பணி நியமனம் முழுமையாக அனுமதித்து உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டி: 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

          அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

               கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 30 வயதினருக்கு 100 மீ., 3,000 மீ.,  40 வயதினருக்கு 100 மீ., 1,500 மீ., ஓட்டம், 50 வயதினருக்கு 50 மீ., ஓட்டம், 3,000 மீ., நடை, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீ., நடை போட்டியும், இவற்றுடன் அனைத்து பிரிவினர்களுக்கும் நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறும்.பெண்கள் பிரிவில் 30 வயதிற்குட் பட்டவர்களுக்கு 100 மீ., 800 மீ., 40 வயதினருக்கு 100 மீ., ஓட்டம், 3,000 மீ., நடை, 50 வயதினருக்கு 50 மீ., ஓட்டம், 1,500 நடை, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீ., நடை இவற்றுடன் அனைத்து பிரிவினருக் கும் நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.

              இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அரசுப் பணியாளர்கள் தங்களது பிறந்த தேதி, வயது மற்றும் பங்கேற்க உள்ள விளையாட்டை குறிப்பிட்டு தாங்கள் பணி புரியும் அலுவலகம் மூலமாக வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு கிடைக்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்குவதுடன் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior