உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

வெ‌யில‌ை‌த் தா‌‌க்கு‌ப் ‌பிடி‌க்க

                           வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.  உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம். ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும். வே‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க ச‌ந்தன‌த்தை ப‌ன்‌னீ‌ரி‌ல் குழை‌த்து, வே‌ர்‌க்குரு‌க்க‌ள் ‌மீது தடவலா‌ம். ந‌ல்ல ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

downlaod this page as pdf

Read more »

25 லட்சம் பேர் ஈடுபடும் கணக்கெடுப்பு : ஜனாதிபதி மாளிகையில் துவங்கியது

Top world news stories and headlines detail














புதுடில்லி : 

                     தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பிரமாண்ட பணி நேற்று துவங்கியது. முதல் குடிமகன் என்ற அந்தஸ்துடைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனது விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் வழங்கினார். பதினைந்தாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. பதிவாளரும், மக்கள் தொகை ஆணையருமான சந்திர மவுலி, துணை இயக்குனர் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று இப்பணியை துவங்கினர். இதையொட்டி, பிரதிபா பாட்டீலிடம் விவரங்களை சேகரித்தனர். அதன், பின், துணை ஜனாதிபதி அமீது அன்சாரியிடம் சேகரித்தனர். 

இது குறித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியதாவது: 

                 மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் எல்லாரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். இதன் மூலம், தனி நபர் மட்டுமின்றி, நாடும் பல வழிகளில் பயன் பெறமுடியும். இவ்வாறு பிரதிபா பாட்டீல் கூறினார்.

மக்கள் தொகை ஆணையர் சந்திரமவுலிகூறியதாவது: 

                    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, இரண்டு கட்டமாக நடைபெறும். இதற்காக மொத்தம் 5,956 கோடி செலவிடப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும். இப்பணிகளை முடிக்க 45 நாட்கள் ஆகும். அசாம், மேற்கு வங்கம், புதுடில்லி, மேகாலயா மற்றும் கோவா மாநிலங்களில் நேற்று முதல் பணிகள் துவங்கின. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பணிகள் துவங்குவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டாம் கட்டமாக, மற்ற மாநிலங்களில் அடுத்த வருடம் பிப்ரவரியில் பணிகள் துவங்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, எத்தனை பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன, கம்ப்யூட்டர் வைத்துள்ளவர்கள் எத்தனை பேர், இன்டர்நெட் பயன் பாட்டை பெறுபவர் எவ்வளவு, எத்தனை பேருக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளது, எத்தனை பேர் வங்கிக் கணக்குகளை வைத்து உள்ளனர் என்பது போன்ற விவரங்களும் முதன் முறையாக சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சந்திரமவுலி கூறினார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்:

               இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக 102 கோடி மக்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதி என, அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்' என்றார்.


downlaod this page as pdf

Read more »

Toddy Movement plans to sell drink at Tamil conference


CUDDALORE: 

                The Tamil Nadu Toddy Movement has said it will abandon its campaign if the State government proves that Indian Made Foreign Liquor and other heady foreign beverages being marketed through duty paid shops are better than toddy, in terms of health benefits, said S. Nallasamy, State organiser.

                Addressing a press conference here, Mr. Nallasamy said that the Constitution, the Supreme Court judgment, the President's speech in Parliament and the Union budget had expressed identical views that toddy was not an intoxicating liquor but part of food. Therefore, the Movement was determined to sell toddy at the venue of the World Classical Tamil Conference to be held at Coimbatore in June. Mr. Nallasamy said that except Tamil Nadu, no other State had banned toddy tapping and as such it was tantamount to posing hurdles to attaining food security. There were over five lakh palm trees in Tamil Nadu and 10 lakh families of toddy tappers and 50 lakh farmers' families were depending on them. In fact, the State government should have taken the initiative to turn out value added products from toddy and market them the world over globe like Sri Lanka was doing with its Sri Lanka Made Foreign Liquor.


downlaod this page as pdf

Read more »

நெய்வேலி மின்​சா​ரம் முழு​வ​தும் தமி​ழ​கத்​துக்கே!

 சிதம்​ப​ரம்:

                    வேளாண்​மைக்கு தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க,​​ நெய்வேலி மின்சா​ரம் முழு​வ​தை​யும் தமி​ழ​கத்​துக்கே கேட்​டுப் பெற வேண்​டும் என தமி​ழக அரசை தமி​ழக உழ​வர் முன்​னணி வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​

இது குறித்து தமி​ழக உழ​வர் முன்​னணி கட​லூர் மாவட்​டச் செய​லர் சி.ஆறுமுகம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ 

                      ஆள் பற்​றாக்​குறை,​​ விளைப் பொருள்​க​ளுக்கு லாப​மற்ற விலை,​​ கூலி உயர்வு,​​ இந்​திய அர​சின் வேளாண்​மைக்கு எதி​ரான சட்​டங்​கள் ஆகி​ய​வற்​றால் நிலை​கு​லைந்து போயுள்ள விவ​சா​யி​கள் மின்​த​டை​யால் மேலும் அதிர்ந்து போய் உள்​ள​னர்.​ மத்​திய அர​சின் நடு​நிலை தவ​றிய போக்​கால் ஆற்று நீர் சிக்க​லில் நமது தமி​ழ​கத்​தின் உரி​மையை இழந்து நிற்​கும் தமி​ழக விவசாயிகள் நிலத்​தடி நீரை மட்​டுமே நம்பி வேளாண்மை செய்ய வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ள​னர்.​ இதே வேளை​யில் வெளி​நாட்டு பெரும் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் தொடர்​கி​றது.​ நாள்​தோ​றும் புதிது,​​ புதி​தாக வெளி​நாட்டு நிறு​வ​னங்​க​ளோடு தமி​ழக அரசு ஒப்​பந்​தம் செய்து கொள்​ளும் வண்​ணம் உள்​ளது.​ இதன்​படி அந்​நி​று​வ​னங்​க​ளுக்கு சலுகை விலை​யில் தடை​யற்ற மின்​சா​ரம் வழங்க உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​ அ​சா​மில் சல​கதி அனல் மின்​நி​லை​யத்​தில் உற்​பத்​தி​யா​கும் 750 மெகா​வாட் மின்​சா​ரம் முழு​வ​தை​யும் அசா​முக்கே வழங்க மத்​திய அரசு முன்​வந்​துள்​ளது.​ த​மி​ழ​கத்​தில் நெய்வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வ​னத்​தில் உற்​பத்​தி​யா​கும் 11 கோடி யூனிட் மின்​சா​ரம் கர்​நா​ட​கத்​துக்கு நாள் தோறும் அனுப்​பப்​ப​டு​கி​றது.​ ஆனால் தமி​ழ​ருக்கு ஒரு சொட்டு நீர் கூட தர​மாட்​டோம் என கர்​நா​ட​கம் கொக்​க​ரிக்​கி​றது.​ 

                    அ​து​போன்று ஆற்​று​நீரை மறிக்​கும் கேர​ளத்​துக்கு 9 கோடி யூனிட் மின்​சா​ர​மும்,​​ ஆந்​தி​ரத்​துக்கு 6 கோடி யூனிட் மின்​சா​ர​மும் நாள்​தோ​றும் நெய்​வே​லியி​லி​ருந்து அனுப்​பப்​ப​டு​கி​றது.​ த​மி​ழ​கத்​தின் கடு​மை​யான மின்​பற்​றாக்​கு​றையை கருத்​தில் கொண்டு அசா​மைப் போல் தமி​ழக அர​சும்,​​ நெய்வேலி மின்​சா​ரம் முழுவதையும் மத்​திய அர​சி​டம்,​​ தமி​ழ​கத்​துக்கே வழங்க வேண்​டும் என கேட்டு பெற வேண்​டும் என்று தமி​ழக உழ​வர் முன்​னணி வலி​யு​றுத்​து​கி​றது என அறிக்கையில் சி.ஆறு​மு​கம் தெரி​வித்​துள்​ளார்.​


downlaod this page as pdf

Read more »

ஐ.நா.​ சபைக் குழுவுக்கு சிப்​காட் தொழிற்​சா​லை​கள் கண்​ட​னம்

கட​லூர்:

                   அதி​காரப்பூர்​வ​மற்ற நிலை​யில் ஐ.நா.​ சபை உண​வுப் பாது​காப்​புக் குழு ​ கட​லூர் சிப்​காட் தொழிற்​சாலை வளா​கத்​தைப் பார்​வை​யிட்​ட​தற்கு,​​ சிப்​காட் தொழிற்​சா​லை​கள் சங்​கம் கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது.​ 

                       ஆலி​வர் ஷட்​டர் தலை​மை​யி​லான மூவர் கொண்ட ஐ.நா.சபை​யின் உணவு பாது​காப்​புக் குழு,​​ புதன்​கி​ழமை கட​லூர் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யைப் பார்​வை​யிட்​டது.​ தொ​ழிற்​சா​லை​க​ளால் விளை​நி​லங்​கள்,​​ சுற்​றுச்​சூ​ழல் மீன்​பி​டித் தொழில் பாதிப்பு குறித்து ஆராய்ந்து கருத்து தெரி​வித்​த​து​டன் ஐ.நா.​ சபைக்கு அறிக்கை தரப் போவ​தா​க​வும் அறி​வித்து உள்​ளது.​ மக்​கள் பிர​தி​நி​தி​கள்,​​ சுற்​றுச்​சூ​ழல் ஆர்​வ​லர்​கள்,​​ விவ​சா​யி​கள் சங்​கப் பிர​தி​நி​தி​கள் ஆகி​யோ​ரை​யும் இக்​குழு சந்​தித்​தது.​ செய்​தி​யா​ளர்​க​ளுக்​கும் பேட்டி அளித்​தது.​ இக் குழு வரு​கைக்கு கட​லூர் சிப்​காட் தொழிற்​சா​லை​கள் சங்​கம் கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது.​

இது குறித்து சிப்​காட் தொழிற்​சா​லை​கள் சங்​கத் தலை​வர் இந்​தர்​கு​மார் வியாழக்கி​ழமை தெரி​வித்​தது:​ 

                   ஐ.நா.​ சபைக் குழு உறுப்​பி​னர் என்று வருகை தந்த குழு​வி​னர்,​​ தாங்​கள் அதி​கா​ர​பூர்​வ​மற்ற நிலை​யில் வந்து இருப்​ப​தா​கத் தெரி​வித்து உள்​ள​னர்.​ குறிப்​பாக அவர்​கள் சுற்​றுலா விசா​வில் இந்​தியா வந்து இருக்​கி​றார்​கள்.​ சுற்​றுலா விசா​வில் வந்​த​வர்​கள்,​​ தொழிற்​சா​லை​க​ளைப் பார்​வை​யி​ட​வும்,​​ பத்​தி​ரி​கை​க​ளுக்​குப் பேட்டி அளிக்​க​வும்,​​ பல்​வேறு சங்​கப் பிர​தி​நி​க​ளைச் சந்​திக்​க​வும் அனு​மதி அளித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.​15 ஆண்​டு​க​ளுக்கு முன் விளை​நி​லங்​கள் இங்கு தொழிற்​சாலை வளா​கங்​க​ளாக மாற்​றப்​பட்டு உள்​ளன.​ அப்​போ​தைய சந்தை மதிப்​பில் நிலங்​க​ளுக்கு இழப்​பீடு வழங்​கப்​பட்டு இருக்​கி​றது.​÷அ​தைப் பற்றி இப்​போது கருத்து தெரி​விப்​ப​தால் என்ன பயன்?​ கடற்​க​ரை​யோ​ரம் மணல் பாங்​கா​கக் கிடந்த நிலங்​கள் இன்று தொழிற்​சாலை வளா​கங்​க​ளாக மாறி​யி​ருக்​கின்​றன.​ 

                                   அதி​கா​ரப்​பூர்​வ​மற்ற நிலை​யில் இனி யார் வேண்​டு​மா​னா​லும் இங்கு வர​லாமா அதற்கு அர​சாங்​கம் அனு​மதி அளிக்​குமா அப்​ப​டி​யா​னால் தொழிற்​சா​லை​க​ளின் ரக​சி​யங்​கள் காப்​பாற்​றப்​ப​டும் என்​ப​தற்கு என்ன உத்​த​ர​வா​தம்?​ பல நுறு கோடி செல​வில் உரு​வாக்​கப்​பட்ட ரசா​ய​னத் தொழிற்சாலைகளுக்கு,​​ பாது​காப்பு அற்ற நிலை உரு​வாகி இருக்​கி​றது.​ இது பற்றி மத்​திய மாநில அர​சு​கள் விளக்​கம் அளிக்​கக் கட​மைப்​பட்டு உள்​ளன.​ இத்​த​கைய அதி​கா​ரப்​பூர்​வ​மற்ற ஆய்​வு​கள் ​ தடை செய்​யப்​பட வேண்​டும் என்​றார் இந்​தர்​கு​மார்.​



downlaod this page as pdf

Read more »

விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து ​ 11 மையங்​க​ளில் மறி​யல் போராட்​டம்

கட​லூர்:

                            விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் 11 மையங்​களில் மறி​யல் போராட்​டம் நடத்த,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மற்​றும் மார்க்சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் முடிவு செய்து உள்​ளன.​ இவ் ​விரு கட்​சி​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்​டம் கட​லூ​ரில் அண்​மை​யில் நடந்​தது.​ ​

கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​ 

                பெட்​ரோல்,​​ டீசல் விலை உயர்வை ரத்து செய்து,​​ ரேஷன் கடை​க​ளில் அனைத்து அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளை​யும் குறைந்த விலை​யில் வழங்கி,​​ ஊக வணி​கத்​தைத் தடை செய்து,​​ விலை​வாசி உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த வேண்டும்.​ வேலை நிய​மன தடைச் சட்​டத்தை ரத்து செய்து,​​ அர​சுத் துறை​க​ளில் காலிப் பணி​யி​டங்​களை நிரப்ப வேண்​டும்.​ 100 நாள் வேலைத் திட்​டத்தை நக​ரங்​க​ளுக்​கும் விரி​வு​ப​டுத்த வேண்​டும்.​ ​ மேற்கு வங்க அர​சுக்கு எதி​ரான வன்​மு​றை​க​ளைக் கண்​டித்​தும் ஏப்​ரல் 8-ம் தேதி நாடு முழு​வ​தும்,​​ இட​து​சா​ரிக் கட்​சி​கள் சார்​பில் 25 லட்​சம் பேர் மத்​திய அரசு அலு​வ​ல​கங்​கள் முன் மறிய​லில் ஈடு​பட்டு சிறை​களை நிரப்​பத் தீர்​மா​னித்து உள்​ள​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் மறியல் போராட்​டம் கட​லூர்,​​ சிதம்​ப​ரம்,​​ பண்​ருட்டி,​​ நெய்வேலி,​​ விருத்​தா​ச​லம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில்,​​ திட்​டக்​குடி,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ புவ​ன​கிரி,​​ நடு​வீ​ரப்​பட்டு,​​ திரு​முட்​டம் ஆகிய 11 மையங்​க​ளில் நடை​பெ​றும்.​ மறி​யல் கோரிக்​கை​களை விளக்கி 4,5 தேதி​க​ளில் மாவட்​டம் முழு​வ​தும் பிர​சா​ரம் செய்​யப்​ப​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்பட்​டன.​ கூட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம்,​​ ​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செயலா​ளர் டி.மணி​வா​ச​கம் மற்​றும் நிர்​வா​கி​கள் கலந்து கொண்​ட​னர்.​



downlaod this page as pdf

Read more »

ஏப்​ரல் 5-ல் ​ என்​எல்சி 2-ம் சுரங்க விரி​வாக்​கம் நாட்​டுக்கு அர்ப்​ப​ணிப்பு

நெய்வேலி:

                    ஆண்​டிற்கு 45 லட்​சம் டன்​கள் பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் திறன் கொண்ட என்​எல்சி 2-ம் சுரங்க விரி​வாக்​கத்தை வரும் 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்​ப​ணித்து வைக்​கி​றார் மத்​திய நிலக்​கரி மற்​றும் புள்​ளி​யி​யல் துறை இணை​ய​மைச்​சர் ​ பிர​காஷ் ஜெய்ஸ்​வால். மத்தி​யப் பொதுத்​துறை நிறுவன​மான என்​எல்​சி​யில் 3 சுரங்​கங்​கள் உள்​ளன.​ இவற்​றில் பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கப்​பட்டு அனல்​மின் நிலை​யங்​கள் மூல​மாக மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​ப​டு​கி​றது.​ இ​தில் 2-ம் சுரங்​கத்​தின் தற்​போ​தய உற்​பத்​தித் திற​னான ஆண்​டிற்கு 105 லட்​சம் டன் பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கப்​ப​டு​கி​றது.​ இந்த உற்​பத்​தித் திறனை 150 லட்​சம் டன்​னாக உயர்த்​தும் நோக்​கில் ரூ.​ 2 ஆயி​ரத்து 161 கோடி செல​வில் 2-ம் சுரங்க விரி​வாக்​கப் பணி​களை பிர​த​மர் மன்​மோ​கன்​சிங் கடந்த 2006-ம் ஆண்டு தொடக்கி வைத்​தார்.​

                    தற்​போது அப்​ப​ணி​கள் முடிந்து பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது.​ புதிய 2-ம் சுரங்க விரி​வாக்​கத்​தின் மூலம் கூடு​த​லாக ஆண்​டுக்கு 45 லட்​சம் டன்​கள் பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கப்​ப​டும்.​ இங்கு வெட்​டி​யெ​டுக்​கப்​ப​டும் பழுப்பு நிலக்​க​ரி​யைக் கொண்டு 500 மெகா​வாட் திறன் கொண்ட 2-ம் அனல்​மின் விரி​வாக்​கத்​தில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​ப​ட​வுள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​ இப்​பு​திய சுரங்​கத்தை நாட்​டுக்கு அர்ப்​ப​ணிக்​கும் விழா ஏப்​ரல் 5-ம் தேதி 2-ம் சுரங்க வளா​கத்​தில் நடை​பெ​ற​வுள்​ளது.​ இதில் மத்​திய அமைச்​சர் பிரகாஷ் ஜெய்ஸ்​வால் கலந்து கொண்டு நாட்​டுக்கு அர்ப்​ப​ணித்து வைக்​கி​றார்.​ மத்திய அமைச்​சர் வரு​கையை ஒட்டி நெய்​வே​லி​யில் வர​வேற்பு ஏற்​பா​டு​கள் விரை​வாக நடை​பெ​று​கின்​றன.​ இரு தினங்​கள் நெய்​வே​லி​யில் தங்கும் மத்​திய அமைச்​சர் என்​எல்​சி​யின் அனைத்​துத் தொழி​ல​கப் பகு​தி​களையும் பார்​வை​யிட உள்​ளார்.​ என்​எல்சி தலை​வர் ஏ.ஆர்.அன்​சாரி மேற்பார்வையில் நகர நிர்​வாக அதி​காரி சி.செந்​த​மிழ்​செல்​வன் ஏற்​பா​டு​களை செய்து வரு​கி​றார்.​ இந்​நி​கழ்ச்​சி​யில் கட​லூர் தொகு​தி​யின் எம்பி கே.எஸ்.அழ​கி​ரி​யும் பங்கேற்கிறார்.


downlaod this page as pdf

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் ஆறு,​​ ஏரி​களை தூர்​வார கோரிக்கை

 ​சிதம்​ப​ரம்:

                     கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஆறு,​​ ஏரி​களை தூர்​வாரி ஆழப்​ப​டுத்த வேண்​டும் என காட்​டு​மன்​னார்​கோவி​லில் நடை​பெற்ற தமிழ்​நாடு விவ​சாய சங்க 10-வது மாவட்ட மாநாட்​டில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ மாவட்டத் தலை​வர் கே.எஸ்.செல்​வ​ராசு தலைமை வகித்​தார்.​ விவ​சாய சங்க வேலை அறிக்​கையை மாவட்​டச் செய​லா​ளர் எம்.ஜி.ராமச்​சந்​தி​ரன் படித்​தார்.​ தமிழ்​நாடு விவ​சாய சங்க மாநி​லக் குழு உறுப்​பி​னர் பி.எஸ்.மாசி​லா​மணி சிறப்புரை​யாற்​றி​னார்.​

                 இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மாவட்​டச் செய​லா​ளர் டி.மணி​வா​ச​கம்,​​ மாநிலக்​குழு உறுப்​பி​னர் ஏ.பி.நாக​ரா​ஜன்,​​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் ஆர்.சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்​து​ரை​யாற்​றி​னர்.​ மாநாட்டில் புதிய மாவட்​டக்​குழு உறுப்​பி​னர்​கள் 23 பேர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ அதன் பின்​னர் தலை​வர் மற்​றும் நிர்​வா​கி​கள் தேர்​தல் நடை​பெற்​றது.​ 

தேர்வு செய்​யப்​பட்ட புதிய நிர்​வா​கி​கள்:​ 

             மாவட்​டத் தலை​வர்-​ ரங்​க​சாமி ​ சிறப்​புத்​த​லை​வர்-​ எம்.ஜி.ராமச்​சந்​தி​ரன் ​ செய​லா​ளர்-​வி.எம்.சேகர் ​ பொரு​ளா​ளர்-​ எஸ்.பி.கோவிந்​த​சாமி.​

தீர் ​மா​னங்​கள்:​​ 

                       விவ​சா​யி​க​ளின் உற்​பத்​திச் செலவு பல மடங்கு உயர்ந்​துள்​ள​தால் நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.1500-ம்,​​ கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.2500-ம் என அரசு விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும்.​ கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள விவசாய நீர் ஆதா​ரத்தை பெருக்க வெலிங்​டன் ஏரி,​​ வீரா​ணம் ஏரி,​​ நாரைக்​கால் ஏரி,​​ பெரு​மாள் ஏரி உள்​ளிட்ட ஏரி​கள் மற்​றும் ஆறு​களை தூர்​வாரி ஆழப்​ப​டுத்த வேண்​டும்.​ மேலும் ஆறு​க​ளின் குறுக்கே தடுப்​ப​ணை​கள் அமைக்க வேண்​டும்.​ விவ​சா​யத்​துக்கு 24 மணி நேர​மும் தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க வேண்​டும்.​ விலை நிலங்​கள் ரியல் எஸ்​டேட்​க​ளாக மாற்​று​வதை தடை செய்​திட வேண்டும்.​ அரசு நெல் கொள்​மு​தல் நிலை​யங்​க​ளில் நடை​பெ​றும் மோச​டியை தடுத்து நிறுத்த வேண்​டும்.​ பரங்​கிப்​பேட்டை பகு​தி​யில் தனி​யார் மின் நிறு​வ​னத்​துக்கு குறைந்த விலைக்கு நிலம் வாங்கி அதிக விலைக்கு விற்​பனை செய்து மோசடி செய்​த​வர்​கள் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.

downlaod this page as pdf

Read more »

இளம் தமிழ் அறி​ஞ​ருக்கு ரூ.1 லட்​சம் பரிசு


 சிதம்​ப​ரம்:

                  சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக இணைப் பேரா​சி​ரி​யர் முனை​வர் அரங்க.பாரி செம்​மொழி ஆய்வு மையம் சார்​பில் இளம் தமி​ழ​றி​ஞ​ருக்கான குடி​ய​ர​சுத் தலை​வர் விரு​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.​ அவ​ருக்கு சென்​னை​யில் ​ அண்​மை​யில் நடை​பெற்ற செம்​மொழி ஆய்வு மைய விழா​வில் பரி​சுத்​தொகை ரூ.1 லட்​சத்தை முதல்​வர் மு.கரு​ணா​நிதி வழங்​கி​னார்.​

downlaod this page as pdf

Read more »

ரேஷன் கார்​டு​க​ளுக்கு 10 கிலோ கோதுமை

கட​லூர்:

             நியாய விலைக் கடை​க​ளில் ரேஷன் கார்​டு​தா​ரர்​க​ளுக்கு 10 கிலோ கோதுமை வழங்​கப்​ப​டும் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார்.​ 

ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ 

            நியா​ய​வி​லைக் கடை​க​ளில் ரேஷன் கார்​டு​தா​ரர்​க​ளுக்கு,​​ செறி​வூட்​டப்​பட்ட கோதுமை மாவு ஒரு கார்​டுக்கு ஒரு கிலோ ரூ.​ 11 வீதம்,​​ 2 கிலோ வரை வழங்​கப்​ப​டும்.​ கோ​துமை ஒரு கிலோ ரூ.​ 7.50 வீதம் பெற​லாம்.​ ரேஷன் கார்டு ஒன்​றுக்கு 10 கிலோ வரை கோதுமை வழங்​கப்​ப​டும் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

downlaod this page as pdf

Read more »

பெண்ணாடம் மேம்பாலம் மாற்றுப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை


திட்டக்குடி : 

                 பெண்ணாடம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்படும் மாற்றுப் பாதையில் ஆலைகளின் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கோட்டப்பொறியாளர் தெரிவித்தார்.

                   கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில் 18 கோடி மதிப் பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி, நடந்து வருகின்றது. இப்பணியினை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேம்பால கட்டுமான பணிகளின் (திட்டம்) கோட்ட பொறியாளர் செல்வம் நேற்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மேம்பால கட்டுமான பணிகளின் (திட்டம்) கோட்ட பொறியாளர் செல்வம்   கூறியதாவது: 

           கடலூர் ரயில்வே கேட் அருகில் 7.8 கோடி ரூபாயில் சுரங்கப் பாதை, பச்சையாங்குப்பத்தில் 9.8 கோடியில் மேம்பாலம், விருத்தாசலத்தில் ஜங்ஷன் சாலையில் 14 கோடியிலும், உளுந்தூர்பேட்டை சாலையில் 24 கோடியிலும் மேம்பாலம், உளுந்தூர் பேட்டை ரயில்வே கேட்டில் 21 கோடியிலும், திண்டிவனத்தில் 7.8 கோடியிலும், முட்டம் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி 49 கோடி என மொத்தமாக 151.4 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.

                    பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் ஆயிரத்து 79 மீட்டர் தூரத்தில் பொன்னேரி தோமையார் சர்ச் முதல் இறையூர் மத்திய கூட்டுறவு வங்கி வரை அமைய உள்ளது. மாட்டு வண்டிகள் செல்வதற்காக பிரத்யே கமாக சாலை அமைக்கப்பட மாட்டாது. ரயில்வே கேட்டின் நான்கு புறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி, இறங்கி செல்ல முடியுமே தவிர ரயில்வே கேட்டை கடக்க முடியாது. வாகனங்கள் எளிதாக செல்லும் வசதியுடன் மேம்பாலம் அமைக் கப்படும்.இப்பணிகளுக்காக ஒரு மாதத்திற்குள் விருத்தாசலம் - தொழுதூர் நெடுஞ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். பாலத்திற்கு அருகாமையில் ஒரு தற்காலிக சாலையும், கிராமப்புறங்களின் வழியாக ஒரு சாலை என ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வழியாக சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. பணிகளின் விபரம் குறித்து கட்டுமான நிர்வாகம் உடனடியாக போர்டு வைத்திட உத்தரவிட் டுள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.


downlaod this page as pdf

Read more »

பண்ருட்டியில் போலீசாரை கண்டித்து போராட்டம்: இலவச 'டிவி' யை ரோட்டில் உடைத்ததால் பரபரப்பு


பண்ருட்டி:

                 பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமத்தில் போலீசாரைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலவச கலர், 'டிவி' யை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில், இலவச 'டிவி' வழங்காததை கண்டித்து, கடந்த டிச.,  அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் மறியல் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட  37  பேர் மீது இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டார். 

                    இதைக் கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், கீழ்கவரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலர் ஜெய்சங் கர், ஆசைதாமஸ், சச்சிதானந்தம் உள்ளிட்ட 50 பேர், இலவச, 'டிவி' யை திரும்ப ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டு, 30 'டிவி'க்களை எடுத்து வந்தனர். போராட்டத்தின் போது  சச்சிதானந்தம், ஆசைதம்பி ஆகிய இருவரும், அரசு வழங்கிய 'டிவி' யை ரோட்டில் போட்டு உடைத்தனர்.  டி.எஸ்.பி., பிரசன்னகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த டிசம்பரில் நடந்த சாலை மறியலின்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பின் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்தது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

                 இதனால் போலீசாருக்கும் - போராட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் டி.எஸ்.பி., முன்னிலையில் இன்னொரு 'டிவி' யை  உடைத் தனர்.    இதனால்  ஏற்பட்ட பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப் பட்டு அனுமதியின்றி போராட்டம்  நடத்திய ஏழு பெண்கள் உள்ளிட்ட 45 பேரை   கைது செய்தனர்.

மாணவர்கள் பாதிப்பு: 

                     இலவச  'டிவி' யை  திரும்ப  ஒப்படைக்கும் போராட்டத்தின் போது தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., கணித தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

downlaod this page as pdf

Read more »

கள்ளநோட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்ற பரிந்துரை: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தகவல்


கடலூர் : 

             நெய்வேலியில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் குறித்த விசாரணை சி.பி. சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்ற பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

இது குறித்து  எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: 

                   நெய்வேலி வேலுடையான் பட்டு பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விடமுயற்சித்து வருவதாக கிடைத்த தகவலில் பேரில் சேலம் ராஜன், வடலூர் சிவமணியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4.56 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் கேரளா உள்ளிட்ட சில மாநிலத்தை சேர்ந்தவர்களின் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளதால், மேல் விசாரணைக்காக இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி., க்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படும்.

                    மேலும் இது போன்ற பெரியளவில் குற்றம் செய்பவர்கள் ஒன்றுக்கு மேற் பட்ட மாநிலத்தவர்கள் தொடர்பிருந்தால் மத்திய உள்ளதுறை அமைச்சகத்தின்  அறிவுறுத்தல்படி  புதிதாக அமைக்கப்பட் டுள்ள தேசிய புலனாய்வு பிரிவிற்கு வழக்கு குறித்த தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடலூரை அடுத்த நல்லாத்தூரில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து குற்றவாளிகள் யார் என அடையாளம் காணப் பட்டுள்ளது. கொள் ளைக்கு பயன்படுத்திய சுமோ காரை சிறப்பு படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

  4.500 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் நெய்வேலியில் இருவர் கைது

நெய்வேலி  : 

               நெய்வேலியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய் தனர். அவர்களிடமிருந்து கத்தைக் கத்தையாக கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய் தனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கண்டுபிடிக்க தனிப் படை போலீசார்   தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

                    நேற்று காலை 8.45 மணிக்கு வேலுடையான்பட்டு கோவில் தற்காலிக பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிவமணி (26) என்பவரை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 338 எண்ணிக்கை உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம் கொல்லம் ராஜன் (38), மதுரை முரளி (எ) முருகேசன் (36), திருச்சி சுந்தர் (36) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  சிவமணி கொடுத்த தகவலின் பேரில், வடலூர் சபை அருகே பதுங்கி இருந்த ராஜன் என்பவரை போலீசார் கைது செய்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 57 எண்ணிக்கையுள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். இரண்டு பேரிடமிருந்து மட்டும் 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். சிவமணி மற்றும் ராஜன் கொடுத்த தகவலின் பேரில் முரளி (எ) முருகேசன் மற்றும் சுந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

காமராஜ் பள்ளி மாணவிகளுக்கு அமுல் வித்யா பூஷன் விருது


சிதம்பரம் : 

                 மாவட்ட அளவில் அரசு பொதுத்தேர்வில் சாதித்த காமராஜ் பள்ளி மாணவிகளுக்கு அமுல் வித்யா பூஷன் விருது வழங்கப்பட்டது.சிதம்பரம் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிளப் நிறைவு விழா நடந்தது. பள்ளி முதுகலை ஆசிரியை சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் சக்தி, துணை முதல்வர் ஷீலா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிகள் நிவேதா, நந்தினிதேவி ஆகியோருக்கு அமுல் நித்யா பூஷன் விருது வழங்கப்பட்டது.

downlaod this page as pdf

Read more »

குமராட்சியில் மருத்துவ முகாம் 20 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு


சிதம்பரம் : 

                சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் நடந்த  குமராட்சி ஒன்றிய அளவிலான மருத்துவ முகாமில் 20 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடந்த முதலமைச்சரின்  உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான குமராட்சி ஒன்றிய அளவிலான சிறப்பு முகாமில் மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார்.

                  டாக்டர்கள் ஐயப்பன், கிருத்திகாதேவி, பிலிப் உள்ளிட்ட குழுவினர் முகாமில் பங்கேற்று நோயாளிகளை சோதனை செய்தனர். இதில்  உயர் சிகிச்சைக்கு தேர்வான  20 நோயாளிகளில், 10 பேர், புதுச்சேரி மணக்குள வினாயகர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனைக்கும், 10 பேர் சென்னை மலர், எம்.எம்.எம், அடையார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் கைலாஷ், ரவிச்சந்திரன், சரவணன்  உடனிருந்தனர்.


downlaod this page as pdf

Read more »

சேத்தியாதோப்பில் மனுநீதி நாள் ரூ.1.20 லட்சம் மதிப்பில் உதவிகள்


சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பை அடுத்த அழிச்சிக்குடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்.

              புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி கிராமத்திலுள்ள உதவி பெறும் துவக்கப் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைக் கலெக்டர் (பயிற்சி) அழகுமீனா, சிதம்பரம் தாசில் தார் காமராஜ், சமூகநல தாசில்தார் ராமாமிர்தம்  முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ. பழனிச்சாமி வரவேற்றார்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவிதொகை, திருமண உதவி தொகை உள்ளிட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் பேசினார். முகாமில் மண்டல துணை தாசில்தார் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாரங்கபாணி, வி.ஏ.ஓ., க்கள் பாண்டியத்துறை, பழனிவேல், சட்டநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

Read more »

கடலூர் மருந்துக்கடைகளில் ஆய்வாளர் திடீர் ஆய்வு


கடலூர் : 

                 கடலூர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில்  ஆய்வாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மொத்த மருந்து வியாபாரம் செய்து வரும் செல்வவிநாயகர் ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' (இருமல் மருந்து) இருந்ததை  கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் பகுதிகளில் மருந்துக்கடைகளில்  மருந்து ஆய்வாளர் குருபாரதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

                பின்னர் ஆய்வாளர் குருபாரதி கூறியதாவது: சென்னையில் போலி 'கார்டியாஸ்' மாத்திரை, 'ரினிவல்' கேப்சூல்ஸ் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலி மாத்திரைகள், காலாவதியான மருந்துகள் உள்ளதா என கடலூர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் எனது தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோருடன் ஆய்வு செய்து வருகிறோம். அதில் இருமல் சிரப் மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பட் டுள்ளது என்றார்.


downlaod this page as pdf

Read more »

நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கு உதவித்தொகை


நெய்வேலி : 

                நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப், வட்டம்-17ல் உள்ள ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிடும் வகையில்  6 லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிதியை ஹெல்பேஜ் இந்தியா  நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். 

                 ஜவகர் கல்விக் கழக பொருளாளர் மதிவாணன், ஹெல்பேஜ் இந்தியா உதவி இயக்குனர் சிவக்குமாரிடம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜார்ஜ் ஜேக்கப், உறுப்பினர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சந்திரசேகர ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஆதரவற்ற முதியோருக்காக அதிக அளவில் நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு

நெல்லிக்குப்பம் : 

                    பென்னாகரம் இடைத்தேர்தலில் பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை கண்டித்து நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.

                     நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டம் சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமையில் நடந்தது. மேலாளர் சிவசங்கரன், இன்ஜினியர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்து பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ததற்கு நன்றி. பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள், திருமண உதவி தொகை உயர்த்தியது, கரும்பு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பார்த்தசாரதி கூறினார். பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றியதற்கு சேர்மன் நன்றி தெரிவித்து கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

                       பென்னாகரம் இடைத் தேர்தலில்  ஜனநாயக விரோதமாக பணம், அதிகாரபலத்தால் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் வெளியேறினார். சற்று நேரத்தில் மன்றத்திற்கு வந்த தனசேகரன், கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றதற்கு, உடன் சரி செய்யப்படும் என சேர்மன் கூறினார். எனது பகுதியில் அதிக குழந்தைகள் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதாக நிர்மலா கூறியதற்கு, விரைவில் கட்டப்படும் என சேர்மன் கூறினார்.

                     அப்போது , கிருஷ்ணன் தெரு பெண்கள், கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து சேர்மனிடம் கொடுத்தனர். தங்கள் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. சமயத்தில் புழுவும் வருகிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. நோய் பரவினால் அதிகாரிகள் தான் பொறுப்பு என ஆவேசமாக கூறினர். அதற்கு சேர்மன், கூட்டம் முடிந்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  அதன்படி கூட்டம் முடிந்ததும் சேர்மன், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருவள்ளுவர் நகரில் அங்கன்வாடி கட்டடம் இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுவதையும் பார்வையிட்டார்.

downlaod this page as pdf

Read more »

வீடுகளுக்கு தீ வைப்பு: இருவர் மீது வழக்கு


கடலூர் : 

               கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைத்தது சம்மந்தமாக போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் அடுத்த நாயக்கநத்தம் காலனியைச் சேர்ந்த அஞ்சம்மாள், பாலாமணி ஆகியோரது கூரை வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த 9,000 மதிப்புள்ள பொருட் கள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளுக்கு தீ வைத்தது வழிசோதனை பாளையத்தைச் சேர்ந்த பத்மநாபன், குமரேசன் என கூறப்படுகிறது. இது குறித்து அஞ்சம் மாள் கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் பத்மநாபன், குமரேசன் மீது வழக்கு பதிவு செய் துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததில் 7 பேர் படுகாயம்


சிதம்பரம் : 

                       சிதம்பரம் அருகே நள்ளிரவில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். காரைக்காலிருந்து சென்னைக்கு புதுச்சேரி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து வந்த அரசு பஸ் சிதம்பரம் அருகே வேளக்குடி வந்தபோது எதிரில் வந்த டிராக்டருக்கு வழி விட  டிரைவர் பஸ்சை ஒதுக்கினார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இதில், பஸ் டிரைவர்  விஸ்வநாதன்(55),  பயணிகள் பாண்டியன், தமிழரசி, முனுசாமி, சந்திரன், வேலாயுதம், ராஜேந்திரன் காயமடைந்தனர். இவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அண்ணாமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

கவுன்சிலர் தம்பியை கொல்ல முயற்சி: சுமோ கார், வீச்சரிவாள் பறிமுதல்


கடலூர் : 

              முன் விரோதம் காரணமாக தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை கொலை செய்ய வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.

                 கடலூர் முதுநகரில் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த சிலர் சோனங்குப்பம் வாலிபரை வெட்டி கொலை செய்தனர். இப்பிரச்னையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. சோனங்குப்பம் தி.மு.க., கவுன்சிலரின் தம்பி டிரைவர் பாபு (எ)  விஜயகோபால்(35).  இவருக்கும் பனங்காட்டு காலனி சுமோ டிரைவர் பாலு என்பவருக்கும் முதுநகர் துறைமுகம் வேன் ஸ்டேண்டில் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலு தன் நண்பர்கள் டிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோருடன் (டி.என் 20 ஏ.ஜே 2511) சுமோவில் வந்து பாபுவிடம் மீண்டும் தகராறு செய்தனர்.

                   அப்போது அங்கு வந்த தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு சுதர்சனம் ஆகியோரை பார்த்ததும் பாலு தன் நண்பர்களுடன் தப்பிச்சென்றார்.  அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு வீச்சரிவாள்  மற்றும் சுமோ காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ஸ்டாலின், முதுநகர் இன்ஸ்பெக்டர் கோபால், சப் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாபு புகாரின் பேரில் முதுநகர் போலீசார் பாலு, வடிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சோனங் குப்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் முதுநகர் போலீஸ் நிலையம் முன் குவிந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

downlaod this page as pdf

Read more »

ஆசிரியர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

கடலூர் : 

                 கடலூரில் பள்ளி ஆசிரியர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலூர் கம்மியம் பேட்டை கெடிலம் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராமலிங்கம் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் மது அருந்திவிட்டு தூங்கக் சென்றுள்ளதாக தெரிகிறது.  நேற்று காலை வெகு நேரமாகியும் வகுப்புக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். மொபைல் அழைப் புக்கு பதில் இல்லாததை கண்டு சந்தேகமடைந்து ஆசிரியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்த  கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்  திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




Downlaod This Page as PDF

Read more »

திட்டக்குடி அருகே மரம் விழுந்ததில் டிராபிக் ஜாம்

 திட்டக்குடி : 

                   திட்டக்குடி அருகே சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் முறிந்து விழுந்ததால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மஞ்சமுத்தான் கோவில் அருகில் சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் நேற்று மாலை திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விஜய்சங்கர் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் இணைந்து மரத்தினை வெட்டி அகற்றினர். நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் நேற்று மாலை 6.30 முதல் 7.15 வரை விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Downlaod This Page as PDF

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior