உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 23, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம்

கடலூர்: 
 கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். 

தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு படித்த கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஃபெனிட்டாஷெர்லி 1180 மதிப்பெண்களும், 

அதே பள்ளி மாணவி எஸ்.ஏ.சாஜிதாபானு 1179 மதிப்பெண்களும்,

 நெய்வேலி செயின்ட் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ,கே.கவிப்பிரியா 1178 மதிப்பெண்களையும் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் மூதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 

இதில் கடலூர் புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

முதல் மூன்று இடங்களை

 எஸ்.ஃபெனிட்டா ஷெர்லி, 
எஸ்.ஏ.சாஜிதாபானு, 
ஏ.கே.கவிப்பிரியா ஆகியோர் பெற்றுள்ளனர். 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்

 ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரேம்குமார் 1170 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஜெசிகா 1154 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரிச்வானாபேகம் 1148 மதிப்பெண்களை

 பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.


அரசுப் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் விவரம்

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.முல்லைகொடி 1142 மதிப்பெண்ணும், 

சிதம்பரம் என்.தமிழ்ச்செல்வி 1139 மதிப்பெண்ணும்,

 வடலூர் ஆர்.உதயராணி 1120 மதிப்பெண்ணும்,

 விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 

ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஏழிலரசி 1139 மதிப்பெண்ணும்,

 திட்டகுடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.புவனேஸ்வரி 1088 மதிப்பெண்ணும்,

 லால்பேட்டை பள்ளி மாணவன் எம்.இம்தியாஸ்ஹமீது 1069 மதிப்பெண்ணும் பெற்றும் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.


நிதிஉதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்: 

கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.மகேஷ் 1176 மதிப்பெண்ணும், 

கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஏ.வைத்தீஸ்வரி 1150 மதிப்பெண்ணும்,

ஆர்.கீத்துஅபிநயா 1149 மதிப்பெண்ணும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.


விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில்

 காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.எம்.விக்னேஸ்வரன் 1140 மதிப்பெண்ணும்,

 எறுமனூர் வி.ஈ.டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.மனோகரன் 1135, 

பி.அபிநயா 1132 மதிப்பெண்களை பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.



Read more »

பிளஸ் 2 தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கடலூர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி, 
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 

மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, 
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.



 40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்



 கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, 
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior