உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 28, 2012

பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு புதிய வசதிகள்

தமிழ்நாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) பாஸ்போர்ட்டை நிரப்ப வரும் பொதுமக்கள் ரூ.100 கட்டினால், அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பிக்கொடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு சேவை வழங்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.100 கட்டணம் செலுத்தினால் அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பி, பாஸ்போர்ட் அதிகாரியிடம் நேர்முக பேட்டிக்கு நேரம் வாங்கி தரும் ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். இதன் மூலம் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். தற்போது சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர்:

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:


   தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., -ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகள், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தம், சீக்கியர் மற்றும் பாரசீகிய மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


        இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, இதர அரசு சார்ந்த துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

         குடும்பத்தில் அதிக பட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேல்நிலை பள்ளிக் கல்வி பயில்பவர்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது) புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையத்தில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தமிழக அரசின் மாணவர்களுக்கான சலுகைகள் தகவல் பலகையில் எழுதும் பணி


பண்ருட்டி:


    பள்ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரப் பலகைகளில் எழுதும் பணி நடந்தது.தமிழக அரசு மாணவி, மாணவிகள் படிப்பறிவு அதிகப்படுத்த அரசு பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசின் சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

            இதில் விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, மதிய உணவு திட்டம், காலணி, இலவச பஸ் பாஸ், பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி, 1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு வண்ண பென்சில்கள், 6ம் வகுப்புகளுக்கு கணித உபகரணப் பெட்டி, விலையில்லா புவியியல் வரைபட நூல்கள். 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 இடைநின்றல் குறைப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்தவர் குடும்ப குழந்தைகளுக்கு நிதியுதவி என அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனைபள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவல் பலகை எழுதும் பணி நடந்தது

Read more »

புதன், ஜூன் 27, 2012

கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

.விருத்தாசலம்:

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவங்கியது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நேற்று முன் தினம் முதல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகள், விளையாட்டு  பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 34 பேர் தேர்வு  செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய பி.ஏ., ஆங்கிலம் கலந்தாய்வில் 140 பேர் பங்கேற்றனர். இதில் காலை நேர வகுப்பிற்கு 70 பேரும், மாலை நேர வகுப்பிற்கு  70 பேரும் சேர்க்கப்பட்டனர். இன்று27ம் தேதி பி.எஸ்சி., கணிதம், கம்பியூட்டர் சயின்ஸ், 28ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து  ஜூலை 2ம் தேதி பி.காம்., பி.ஏ., தமிழ், 3ம் தேதி பி.ஏ.,வரலாறு, பி.எஸ்சி.,  தாவரவியல் (இந்த கல்வியாண்டு முதல் இப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது) ஆகிய  பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரைகலந்தாய்வு நடக்கிறது.
...

Read more »

மாணவியர் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவியர் விடுதி திறக்க கோரிக்கை

விருத்தாசலம்:


விருத்தாசலம் அரசு கல்லூரியில் மத்திய அரசின் பல்கலை மானியக்குழு, தமிழக அரசு பங்களிப்புடன் கட்டப்பட்ட மாணவியர் விடுதி 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி பாழாகி வருகிறது. அதிக மாணவியர் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

        மாவட்டத்தில் மாணவியர் அதிகம் படிக்கும் ஒரே அரசு கல்லூரி இது தான். கடந்த கல்வியாண்டில் இக்கல்லூரியில் படித்த 2,700 பேரில், 1,900 பேர் மாணவியர்.கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட 9 இளங்கலை படிப்புகள் மற்றும் எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், எம்.ஏ., தமிழ், எம்.பில்., பி.எச்டி.,உள்ளிட்ட முதுகலை படிப்புகளும் உள்ளன.புதிய பாடப்பிரிவு துவக்கம்நடப்பு கல்வியாண்டில் புதிதாக பி.எஸ்சி., தாவரவியல் (ஆங்கில வழி), எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.எஸ்சி., விலங்கியல், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீண்ட தூரத்திலிருந்து கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவிகளுக்காக விடுதி தேவை என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். விடுதிக்கு ரூ.14.6 லட்சம் நிதிமத்திய அரசின் பல்கலை., மானியக்குழுவின் 60 சதவீத நிதி மற்றும் தமிழக அரசு 40 சதவீத நிதியில் 2002ம் ஆண்டு 14.6 லட்சம் ரூபாய் மதிப்பில் 75 மாணவியர் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் விடுதி கட்டப்பட்டது.பல்கலை., மானியக்குழு நிதியில் விடுதி கட்டப்பட்டதால் கட்டணம் செலுத்தி தான் தங்க வேண்டும். ஆனால் கட்டணம் செலுத்தி மாணவியர் யாரும் தங்குவதற்கு முன்வரவில்லை. இதனால் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.

         பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் விடுதிக் கட்டடம் பாழடைந்து வருகிறது.

தமிழக அரசு கவனிக்குமா?


 கிராமப்புற மாணவியரின் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கட்டப்பட்ட விடுதி தற்போது யாரும் தங்காமல் பயனின்றி உள்ளது. தொலை தூரத்திலிருந்து கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவியர்கள், தினமும் நெடுந்தூரம் பயணம் செய்ய சிரமமடைந்து வருகின்றனர். மாணவியர் நலன் கருதி, இலவசமாக தங்கும் வகையில், விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,

உணவு மற்றும்தங்கும் வசதியுடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு 1,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.  கிராமப்புற ஏழை மாணவியர் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் தங்குவதற்கு தயங்குகின்றனர். பத்து ஆண்டுகளாக விடுதி பூட்டிக் கிடப்பதால் 14.6 லட்சம் ரூபாய் நிதி வீணாவதுடன், பராமரிப்பின்றி கட்டடமும் பாழாகி வருகிறது என்றார்.

கல்லூரி மாணவிகள் கூறுகையில்,

பல்கலை., மானியக்குழு கிராமப்புற மாணவிகளின் உயர்கல்வியை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று தான் எங்களை படிக்க வைக்கின்றனர். மாதம் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்துவது என்பது சிரமம். மாணவியர் இலவசமாக தங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Read more »

வெள்ளி, ஜூன் 22, 2012

முதுநகர் : கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள்

கடலூர் முதுநகர் :


கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் நின்று செல்கிறது. கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (22ம் தேதி) முதல் 6 மாத காலத்திற்கு பரிச் சார்த்தமாக கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது. சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16175) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 3 மணிக்கு நின்று 3.01 மணிக்கு புறப்படும். காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16176) இரவு 12.41 மணிக்கு நின்று 12.42 மணிக்கு புறப்படும். வாரம் இரு முறை இயக்கப்படும் திருப்பதி- மதுரை எக்ஸ்பிரஸ் (16779) இரவு 8.52 மணிக்கு நின்று 8.53 மணிக்கு புறப்படும். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16780) இரவு 1.26 மணிக்கு நின்று 1.27 மணிக்கு புறப்படும்.
.

Read more »

வியாழன், ஜூன் 21, 2012

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க கட்டுப்பாடுவிதிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த டிஜிட்டல் பேனர் கலாசாரம், தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி விட்டது. தனி நபர் பிறந்த நாள் விழா முதல் மரண அறிவிப்பு மற்றும் நினைவஞ்சலி உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது. இதனை முறைப்படுத்த தமிழக அரசு கடந்த நவம்பர் 16ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

முன்னோடி நகராட்சி

தமிழக அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த கடலூர் நகராட்சி முன்வந்துள்ளது. அதனையொட்டி பொது இடங்களில் பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி, அதனை செயல்படுத்திட நகர மன்றத்தின் ஒப்புதல் பெற்றிட தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

விண்ணப்பம்

பொது இடங்களில் பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுவுடன், பேனர் வைக்கப்பட உள்ள இடத்தின் உரிமையாளர் அல்லது அரசாங்க இடம் எனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் தடையில்லாச் சான்று. போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் இல்லை என அந்தப்பகுதி போலீஸ் ஸ்டேஷனின் தடையில்லாச் சான்று. பேனர் வைக்கப்பட உள்ள இடத்தை சுற்றியுள்ள சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள் அடங்கிய சார்பு வரைபடம். அனுமதி கட்டணமாக 100 ரூபாய் மற்றும் வைப்புத் தொகை (ஒருபேனருக்கு) 50 ரூபாய் நகராட்சி கருவூலகத்தில் செலுத்தி அதன் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அனுமதி

மனுவை கலெக்டர் பரிசீலனை செய்து, முழு விவரம் இருப்பின் 6 நாட்களுக்கு (பேனர் வைக்கும் நாள் முதல் அகற்றப்படும் நாட்கள் உட்பட) அனுமதி வழங்கப்படும். விவரம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அனுமதி பெற்ற நபர் வைக்கும் பேனர்களின் கீழ் பகுதியில் ஒரு அங்குலம் அளவில் கலெக்டரின் அனுமதி எண் மற்றும் காலக்கெடு, அனுமதிக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.

பேனர் அளவுகள்

நூறடிக்கு மேல் உள்ள சாலையில் 15 அடி உயரம், 24 அகலம்; 60 முதல் 100 அடி சாலையில் 12 அடி உயரம், 20 அடி அகலம்; 40 முதல் 60 அடி சாலையில் 10 அடி உயரம், 16 அடி அகலம்; 20 முதல் 40 அடி சாலையில் 8 அடி உயரம், 5 அடி அகலம்; 10 முதல் 20 அடி சாலையில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம்; சாலை மையத் தடுப்புகளில் 4 அடி உயரம் இரண்டரை அடி அகலம். சாலையோரம் அல்லது மையத் தடுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பேனர் வைக்க அனுமதி வழங்கப்படும். 10 முதல் 40 அடி சாலைகளில் ஒருபுறமும், 40 அடிக்கு மேற்பட்ட சாலைகளில் இருபுறமும் பேனர்களை சாலையின் வாட்டத்திற்கே அமைக்க வேண்டும். ஒவ்வொரு பேனருக்கும் குறைந்தது 10 மீட்டர்இடைவெளி இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்

கல்வி நிறுவனங்கள், மத சார்பான இடங்கள், உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனைகள், புராதான சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சாலை - தெரு சந்திப்பின் 100 மீட்டருக்குள் பேனர் வைக்கக் கூடாது.

அபராதம்

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் அகற்றப்படுவதுடன் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்படும். அதேப்போன்று அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் அரசுக்கு எதிராக இருந்தால் அந்த பேனருக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்வதோடு, அவை உடனடியாக அகற்றப்படும். பேனர் வைப்பவர்கள் விதிகளை மீறினாலோ, காலக்கெடுவிற்குள் அகற்றாவிட்டாலோ, பேனர் அமைக்க சாலை உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

விதிவிலக்கு

வர்த்தக நிறுவனங்கள் தங்களது விளம்பர பலகைகளை கட்டடத்தின் முகப்பில் அல்லது கட்டடத்தின் மேலும், அதேபோன்று விழா நடைபெறும் கட்டடத்தின் முகப்பு அல்லது கட்டடத்தின் மேலே வைத்துக் கொள்ளலாம். பேனர் கலாசாரத்தை முறைப்படுத்த மாவட்டத்தில் முன்னோடியாக கடலூர் நகராட்சி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை பிற நகராட்சிகளும் பின்பற்ற முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.




Read more »

புதன், ஜூன் 20, 2012

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட் முன்பதிவு வசதி

.சிதம்பரம் :

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட்  முன்பதிவு வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என தலைமை அஞ்சல் துறைக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை அஞ்சல்துறை தலைவருக்கு, பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனு:


இந்திய ரயில்வே மற்றும் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் ரயில்வே நிலையங்களில் சென்று காத்திருக்க  வேண்டிய அவல நிலையில் இருந்து விடுபடவும், அஞ்சல் நிலையங்களிலேயே ரயில்வே,  விமான டிக்கெட் போன்றவற்றிற்கு முன்பதிவு மேற்கொள்ள தக்க வசதிகள்  உருவாக்கியுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் அஞ்சல்துறை கொடுத்துள்ள அறிவிப்பு பாராட்டத்தக்கது. சிதம்பரம் தலைமை  அஞ்சலகத்தில் இவ்வளவு காலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு நடக்கவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் அண்ணாமலைப்  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவிற்காக நீண்ட  நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அஞ்சல்துறை  அறிவித்ததுபோல் சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு வசதியை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.

Read more »

திங்கள், ஜூன் 18, 2012

கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்

கடலூர்:

கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு வழங்கிய மனுவில் கூறியிருப்பது:


கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் பெருமாள் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மூலம் 40 கிராமங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சகடுகள் மற்றும் மண் கலந்த நீரால் 16 கி.மீட்டர் நீளம், 1 கி.மீ அகலம் உள்ள ஏரி இன்று 8 கி.மீ அளவிற்கு தூர்ந்துவிட்டது. ஏரி தூர்ந்து கொண்டே வருவதால் 3 போகம் நெல் சாகுபடி செய்த காலம் போய், இன்று 1 போகம் செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது.


இந்நிலையில் திருச்சோபுரம் பெரியபட்டில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தேவையான நீரை பெருமாள் ஏரியில் இருந்து பயன்படுத்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக அறிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை ராட்சத போர்வெல்கள் மூலம் எடுக்கப்படுமானால் நிலத்தடி நீர் வெகுவாக குறையும், கடல் நீர் உட்புகுந்து உப்புநீராக மாறி, சுற்றியுள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிடும். இதனால் 40 கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பெருமாள் ஏரியிலிருந்து தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்கக் கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர ஆதிதிராவிட மாணவ, மாணவிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரால் 36 மாணவர் விடுதிகளும், 23 மாணவியர் விடுதிகளும் இலவச உணவு, உறை விடத் துடன் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இட ங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள விடுதி காப்பாளர் அல்லது ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்குள்ளும், கல்லூரி, முதுகலை பட்டதாரி விடுதிகளில் சேர விரும்புவோர் 30ம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதி வசதி கோருவோரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விடுதிக்கும், வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம்5 கி.மீ., தூரம் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த தூர நிபந்தனை பொருந்தாது.

பள்ளி விடுதிகளில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதுகலை பட்டதாரி, கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பல்கலைக் கழகத்தில் பயிலும்மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் 5 இடங்கள் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Read more »

சனி, ஜூன் 16, 2012

அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

விருத்தாசலம்:

அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பதியலாம்.

விருத்தாசலம் வேளாண் அறிவியல் மைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடப்பாண்டில் (2012 -13) வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த் தவும் இலவச பயிற்சியளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.அதில், அறுவடை பின்சார் தொழில் நுட்பங் கள் மற்றும் மதிப்பூட்டப் பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியளிக்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பதிய வேண்டும். முன்பதிவின் அடிப்படையில் அட்டவணை தயாரித்து, பயிற்சியளிக்கப்படும்.


மேலும் தகவல்களுக்கு

 இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
 வேளாண்மை அறிவியல் நிலையம்,
விருத்தாசலம்

என்ற முகவரியில் நேரிலும், 04143 -238353 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

வெள்ளி, ஜூன் 15, 2012

கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் ராஜீவ், மூப்பனார் சிலை அமைக்க அடிக்கல்

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. நேரு பவன் என பெயரிடப்பட்டுள்ள இவ்விடத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலை தற்பொழுது அமைக்கப் பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி னார். காங்கிரஸ் மாநில துணை தலைவர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் ஞானசந்திரன், மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர்கள் அன்பு, சரவணன், அலமு தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 8.25 அடி உயரத்தில் நிறுவப்பட உள்ள ராஜீவ், மூப்பனார் வெண்கல சிலைகள் வரும் ஆகஸ்ட் மாதம் திறப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.




Read more »

புதன், ஜூன் 13, 2012

Maoist leader lodged in Cuddalore prison stages fast

CUDDALORE:

 A Maoist leader, who was arrested on charges of indulging in anti-national activities and lodged at Cuddalore central prison, began an indefinite fast from Wednesday morning demanding proper amenities and free movement in the high-security prison. In a petition submitted to the superintendent of prison, Vivek, 47 complained of poor basic amenities in the prison and declared that he will fast unto death if the prison administration fails to extend proper amenities.



Read more »

பண்ருட்டியில் கொசு ஒழிப்புக்கு 4 புதிய இயந்திரங்கள்

பண்ருட்டி:

பண்ருட்டி நகர பகுதியில் கொசுக்களை அழிக்க நான்கு புதிய கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கொசு புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர நிர்வாகம் சார்பில் 4 கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, அனைத்து வார்டு பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொசு புகை மருந்து அடிக்கும் பணியை திங்கள்கிழமை துவக்கி வைத்தார். அதிமுக நகர செயலர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, சுகாதார அலுவலர் பி.குமார், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், திண்ணாயிரமூர்த்தி, வட்டப் பிரதிநிதி கருப்பையா, சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Read more »

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற தாசில்தார் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள்

சிதம்பரம் :

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை கல்லூரியிலேயே உதவி தொகை பெற்றனர்.  இந்த ஆண்டு முதல் சமூக நலத்துறை மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உழவர் பாதுகாப்பு திட்ட கார்டு வைத்துள்ள குடும்பத்தில் இருந்து  கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., சான்று,  கல்லூரியில் படிக்கும் ஆதாரச் சான்று, குடும்ப உழவர் கார்டு, ஜாதிச் சான்று நகலுடன் தாசில்தார் அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு துறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை பார்வையிட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது. நேற்று சிதம்பரம் சமூக நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக் கவும், கல்வி  உதவி தொகை பெறவும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குவிந்தனர். பொறியியல் படிக்கும் மாணவருக்கு 2250 ரூபாய், மாணவிக்கு 2750 ரூபாய், பட்டப்படிப்பு படிக்கும் மாணவருக்கு 1750 ரூபாய், மாணவிக்கு 2250 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெற்று உதவி தொகைக்கான காசோலைகளை சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன் வழங்கினார்.

Read more »

வியாழன், ஜூன் 07, 2012

24 மணிநேர தானியங்கி இயந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை

கடலூர் : 

மின் நுகர்வோர்கள் இனி மின் கட்டணத்தை 24 மணிநேர தானியங்கி இயந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். 

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மின் நுகர்வோர்கள் 6 வழி முறைகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். நடப்பு, நிலுவைத் தொகை மற்றும் முன் பணம் ஆகியவற்றை இணைய தள வங்கி சேவை (நெட் பாங்க்கிங்) மற்றும் வங்கி கட்டண நுழைவு மற்றும் வங்கி பண அட்டை (டெபிட் கார்டு) மூலமும் செலுத்தலாம். மேலும் நடப்பு மற்றும் நிலுவைத் தொகையை இந்திய தபால் அலுவலக சேவை முகப்பு, சிட்டி யூனியன் வங்கியின் சேவை முகப்பு மூலமும் பணம் கட்டலாம். நடப்பு கணக்கு மட்டும் 24 மணி நேர தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் மூலமும் பணம் செலுத்தலாம் 





Read more »

புதன், ஜூன் 06, 2012

Three drown as boat capsizes in Cuddalore


CUDDALORE: 

A boat capsized in the Uppanar River near Cuddalore killing three persons, others were rescued and admitted at the Cuddalore Government Hospital. Twenty persons were on the boat when the accident happened. People of Nochikadu went to the Sangolikuppam village to participate in a festival at the Amman temple. After the musical orchestra and drama festival concluded, people of Nochikadu got onto a boat to cross the river and return home around 4.30 am. Their village is 5 km away by road. A bridge is being constructed over the river to help people reach their village faster.

The boat capsized while returning because of overload. All passengers on the boat had to struggle since it was dark and difficult to help each other. Two women, Ambika (25) and Loganayagi (75), drowned and their bodies were recovered. The body of Nadanasabapathy (14) was missing till evening. Locals and fire department personnel searched all day long and they found the body around 4.30 pm. Twelve persons were taken to the government hospital. Villupuram range DIG Shanmugavel, DSP Vanitha, Minister M C Sampath visited the spot. Sampath, VCK’s Thamaraiselvan, PMK’s Thamaraikannan and MDMK’s Ramalingam met the victims in the hospital.

Last year, the same boat, carrying school children, had capsized in the same river but close to the bank, because of which all the students were rescued.

Sampath said, “

The bridge work is still pending. I will consult with the PWD minister and the contractors regarding this. I assure that the bridge work will be completed soon.” Pazhaniammal (60) of Nochikadu, who was on the boat when the accident took place, rescued four of her grandchildren but could not rescue her daughter.
“When the boat capsized, I held the two children, Dinesh (8) and Ganesh (4), and brought them to the river bank which was around 40 metres away. Then I went back to rescue the other two children, Athilakshmi (5) and Divya (2). Somebody was holding them in water. All the children were born to my first daughter Ambika. “While I swam towards the bank for the second time, I heard my second daughter, Rathika, shouting for help. But when I prepared to go back into the river, I saw somebody carrying Ambika’s body,” Pazhaniammal said.


Read more »

Tribunal rejects IL&FS' plea to allow work on Cuddalore plant


The National Green Tribunal has refused to stay its order suspending the environment clearance granted to IL&FS Tamil Nadu Power Company Ltd for its 3,600 MW thermal power plant in the state's Cuddalore district. The Tribunal rejected IL&FS' fresh plea for keeping its May 23 order for suspension of the environment clearance (EC) in abeyance and to allow it to carry out construction works for the project. The tribunal had suspended the May 31, 2010 EC on May 23, this year and had directed the Ministry of Environment and Forests (MoEF) to review its decision based on a cumulative impact assessment study and stipulate additional environmental conditions, if required. Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) had sought a stay on the Tribunal's May 23 order contending that preparatory civil works like construction of storm water drainage and levelling of the site must be completed before the onset of monsoon in mid September 2012. The tribunal rejected its plea saying a rapid cumulative impact assessment study can be completed before the onset of monsoon and "civil works referred to by IL&FS may not take very long to complete if planned and executed properly". "In view of the importance of cumulative impact study in decision making, in the case on hand and the logistic reasons with regard to completing the civil works, we see no reason to provide relief as sought in the application," a bench headed by Tribunal Acting Chairperson Justice A S Naidu said. 

Read more »

செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் மாநிலத்தில் 3 வது இடம்

கடலூர்: 

தமிழக அளவில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். தான் ஐஏஎஸ் ஆக விரும்பு வதாக தெரிவித் துள்ளார்.

கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3 வது இடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இம்மாணவன் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 

ஆங்கிலம்-96, 
கணிதம்- 100, 
அறிவியல்- 100, 
சமூக அறிவியல்-100,
 ஹிந்தி 99.

மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவன் சிவாஜி கூறியது:


எனது தந்தை சிவாஜி பாபு ராவ் கட்கர். நகை மதிப்பீட்டாளர். தாய் மாதவி. மகாராஷ்டிர மாநிலம் சொந்த ஊர். கடலூரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர் என அனைவரும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். பொழுது போக்கு அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆக விரும்புகிறேன் என்றார். மாணவன் சிவாஜியை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, முதல்வர் சிவானந்தம், துணை முதல்வர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Read more »

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி முதலிடம்

சிதம்பரம்

10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதீஸ்வரி சிதம்பரம் நகரில் முதலிடமும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். 

இம்மாணவி 

அறிவியலில் 100, 
கணிதம், சமூக அறிவியல், பாடங்களில் தலா 99,
 தமிழில்-96, 
ஆங்கிலத்தில்-97 


மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 


இப்பள்ளியில் தேர்வு எழுதிய 434 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி 81% தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


நகரில் முதலிடம் பெற்றுள்ள ஜோதீஸ்வரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கணேசன் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.

ஜோதீஸ்வரி அளித்த பேட்டி 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுப்பேன் என நம்பிக்கையுடன் இருந்தேன் 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டது. பள்ளியில் தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் அனைவரும் நன்கு பயிற்சி அளித்தனர். வீட்டில் இரவு, பகலாக படிப்பதற்கு பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். வருங்காலத்தில் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.அதிக மதிப்பெண் பெற்ற ஜோதீஸ்வரிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜன் மற்றும் ஆசிரியர்கள் நினைவுபரிசு வழங்கி பாராட்டினர்.



Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 5 பேர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்ட அளவில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தினார். இதேபள்ளி மாணவி கலைவாணி, நெய்வேலி புனித ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இளமதி, கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ், சரண்யா, சேத்தியாதோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர் சி.கே ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி மாணவர் பார்த்தசாரதி, கடலூர் ஏர்.ஆல்.எல்.எம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் செந்தில்ராஜ், நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏழிசை, சஞ்சனா ஆகியோர் தலா 492 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அள வில் மூன்றாம் இடம் பிடித்தனர். கடலூர் மாவட்ட அள வில் சாதனை படைத்த பத்து மாணவர் களையும், ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ இன்று பாராட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கடலூர்: 

தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாவட்டத்தில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.10 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

மாவட்ட அளவில் சாதனை: 

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும்,

 அதே பள்ளியை சேர்ந்த மாணவி கலைவாணி 493,

 நெய்வேலி குளூனி மெட்ரிக் பள்ளி மாணவி இளமதி, 

கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ்,

 சரண்யா, சேத்தியாத்தோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரவினா ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி மாணவர் செந்தில்ராஜ், சி.கே. பள்ளி மாணவர் பார்த்தசாரதி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஏழிசை, சஞ்சனா 492 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்தியில் முதலிடம்: 

இந்தியை மொழிப்படமாக எடுத்து படித்த கடலூர், லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி மாணவர் ஓன்கார் சிவாஜி கட்கார் 495 மதிப்பெண் பெற்று ஒட்டுமொத்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், இந்தியில் 99 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாணவிகள் தொடர் சாதனை: 

மாவட்டத்தில் 18 ஆயிரத்து 572 மாணவர்களும், 19 ஆயிரத்து 89 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 813 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.52 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் மாணவிகளை விட மாணவர்கள் 517 பேர் குறைவாக பங்கேற்றனர். முடிவில் மாணவிகளை விட 565 மாணவர்கள் அதிகமாக தோல்வி அடைந்துள்ளனர்.




Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 425 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 425 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

 இதில் பள்ளி மாணவி கிருத்திகா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 
இவர் 
தமிழ் 98, 
ஆங்கிலம் 97,
 கணிதம் 97,
 அறிவியல் 99, 
சமூக அறிவியல் 99 மதிப்பெண்களுடன் 490 மதிப்பெண்கள் பெற்றார். 

மாணவர் ரேவந்த்குமார் 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம், 

மாணவி தேவிபாலா 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும்,

 475 மதிப்பெண் களுக்கு மேல் 32 மாணவர்களும், 

450 மதிப்பெண்களுக்கு மேல் 95 மாணவர் களும்,

 213 மாணவர்கள் 400க்கு மேல் எடுத்தனர்.

 அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் 19 பேரும், கணிதத்தில் ஒரு மாணவரும், சமூக அறிவியலில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தமிழில் முதல் மதிப்பெண் 98ம், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலர் வழக்கறிஞர் விஜயக்குமார்,செயல் அதிகாரி டாக்டர் சிரீஷா கண்ணன் பாராட்டினர்.





Read more »

சனி, ஜூன் 02, 2012

50 ஆண்டுகளை நிறைவு செய்த என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம்

நெய்வேலி:

ரஷிய தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன்கொண்ட என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் முதல் அலகு 50 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையிலும் தொடர்ந்து முழு மின்னுற்பத்தி அளவான 50 மெகாவாட் மின்சாரத்தை தடங்கலின்றி உற்பத்தி செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளது.

காமராஜரின் முயற்சியால், 1956-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று என்.எல்.சி. நிறுவனம் வர்த்தக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜரின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவந்த நேரு, 1957-ம் ஆண்டு மே 20-ம் தேதி நெய்வேலிக்கு வந்து, ஆண்டுக்கு 35 லட்சம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கத்தையும் மற்றும் மணிக்கு 6 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யும் அனல்மின் நிலையப் பணியையும் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து 1959-ம் ஆண்டு அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த டெக்னோபுரோம் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இந்த முதல் அலகின் கட்டுமானப் பணிகள் முடிந்து 1962 மே 23-ம் தேதி 50 மெகவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது. மின்னுற்பத்தி தொடங்கப்பட்ட முதல் அலகின் 50 மெகாவாட் மின்னுற்பத்தியானது 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அப்போதய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால், அன்றைய என்.எல்.சி. தலைவர் டி.எம்.எஸ்.மணி அவர்களின் முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அத்தகைய முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு இம்மாதம் 22-ம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனிடையே 9 அலகுகளின் கட்டுமானப் பணிகளிலும் நடைபெற்று, அனல்மின் நிலையத்தின் முழு மின்னுற்பத்தித் திறனான 600 மெகாவாட் 1970-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதல்அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 23.05.1962-ல் தொடங்கி 22.05.2012 வரை ஒரு கோடியே 43 லட்சத்து 2 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைவாய்ந்த முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகினை நினைவுகூறும் வகையில் முதல் அனல்மின் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கலந்துகொண்டு நினைவுக் கல்வெட்டை திறந்துவைத்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர்:


 கடலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில்,

 தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 64 விடுதிகள் செயல்படுகின்றன. 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி விடுதியிலும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியிலும் சேர தகுதி உடையவர்கள். விடுதியில் எந்த செலவும் இல்லாமல், உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். 


விடுதியில் சேர தகுதிகள்:

 பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பள்ளி 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். (தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது).விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2012-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2012-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விடுதியில் சேரும்போது மட்டும் சாதி, வருமான சான்று வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இச்சலுகையை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Read more »

வெள்ளி, ஜூன் 01, 2012

List of Teacher Training Colleges in Cuddalore District

Annai Madha College of Education 
Edicheruvai, Akkanur Post 
Tittagudi Taluk, 
Cuddalore

Blessy College of Education 
Navalingam Nagar, 
Chidambaram Taluk, 
Cuddalore 
608 001





C.S Jain College of Education 
Thethampet Village, Chidambaram Main Road, 
Srimushnam, 
Cuddalore 
608 703.



D.V.C. College of Education 
Thirumurugan Nagar, Srimushnam, 
Kattumannarkoil Taluk, 
Cuddalore

J.S.J.V.College of Education 
Jayaram Nagar, 
Chellankuppam, 
Cuddalore 
607 003.



Kamaraj College of Education (Women) 
70, Vengan Street 
Chidambaram 
Cuddalore 
608 001

National College of Education 
"Neyveli Educational Trust Campus" Kumbakonam Main Road 
Keelakollai, Marungur Po, Panruti Tk 
Cuddalore 
607 103

New Millennium College of Education 
Kumarapettai Pathirikuppam Post, 
Thirvanthipuram Village, 
Cuddalore 
607 401.

O.P.R Memorial College of Education 
Neyveli Main Road, 
Vadalur, 
Cuddalore

Sandaravadhanam College of Education 
Pazhanchanallur & Post, 
Kattumannar Koil Taluk, 
Cuddalore 
608 301.

Senthil College of Education 
Periya Vadavadi 
Vriddhachalam Taluk, 
Cuddalore 
606 001

Shree Ragavendra College of Education 
West Car Street, Keezhamoongiladi Post, 
Chidambaram Taluk, 
Cuddalore 
606 108

Sree Arumugam Teacher Training College 
Raja Nagar, Vaithinathapuram, 
Tholudur, 
Cuddalore 
606 303.

Sri Vekkaliamman College of Education 
Kazhudur Village & Post, 
Tittakudi Taluk, 
Cuddalore 
606 304

Sri Vengateswara College of Education 
Anna Nagar, Kazhudur & Post, 
Tittagudi Taluk, 
Cuddalore 
606 304

Sri Viruthambigai College of Education 
Cuddalore Main Road (Opp), 
Kuppanatham Po, Vriddhachalam. 
Cuddalore 
606 001


Vivekananda College of Education 
Seplanatham, 
Neyveli, 
Cuddalore 
607 802

Omm Muruga College of Education 
Pottaveli Village, Viruppatchi Panchayat 
Kurinjipadi, Cuddalore 
Cuddalore 
607 302

S.B.G. College of Education 
Thenpathy Colony Road, 
Srimushnam 
Cuddalore 
608 703


M.K.Raman College of Education 
Valayamadevi & Post, 
Pinnalur via, Chidambaram Taluk 
Cuddalore 
608 704


















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior