உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 30, 2011

தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்கள் நியமனம்

           தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6,872 பட்டதாரி ஆசிரியர்களும் 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிவிப்பு:

            ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித்தொகை அளிப்பது, இலவச சைக்கிள் வழங்குவது, லேப்-டாப் கொடுப்பது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

6 ஆயிரத்து 872 பணியிடங்கள்: 

             மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டுமென்றால், தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:40 என்ற விகிதாசாரப்படி நடப்புக் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 ஆயிரத்து 752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும் கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

              இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.181.36 கோடி செலவாகும்.மேலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதப்படி கூடுதலாக ஆயிரத்து 590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.45.25 கோடி செலவாகும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 ஆயிரத்து 137 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்கள் 1988 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1988 ஜூன் 1-ம் தேதிக்குப் பின் பணி புரிந்த பணிக்காலத்துடன் சேர்க்கப்படும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு ரூ.24.25 கோடி செலவாகும்.

கல்லூரி பேராசிரியர்கள்: 

          அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக நடப்பு கல்வியாண்டுக்கு ஆயிரத்து 661 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவாகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Read more »

Cyclone Thane at 130 kmph to cross near Cuddalore, Puducherry

Cuddalore 


               Cyclone Thane, packing wind speed of 130 kmph, was expected to cross the coast between Cuddalore in Tamil Nadu and Puducherry around 9 am on Friday, officials of the Indian Meteorological Department (IMD) here said. "The cyclone is in the process of crossing between Cuddalore and Puducherry coast. The wind speed is around 130 kmph at Puducherry and Cuddalore. Waves measuring 1.5 metres height are hitting the shoreline," an IMD official told IANS.

          At 2 am the cyclone moved closer to about 90 km east of Puducherry, 125 km south-southeast of Chennai, IMD said. According to IMD, even after landfall the system is likely to maintain its intensity for 12 hours and weaken gradually. Rainfall at most places with heavy to very heavy falls was expected in northern Tamil Nadu and Pudducherry. The Tamil Nadu government has set up 20 teams to monitor the water levels in lakes and other water bodies in Chennai, Thiruvallur and other places. Eight teams of National Disaster Management Force have been sent to the coastal districts. Authorities in Tamil Nadu and Puducherry are on high alert to manage the emerging situation.

Read more »

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கடலூர் :
 
            கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் 26 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்து ம் கூறியது:
 
 
         சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கடலூரில் முதல் முறையாக நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மீதுகட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் எஸ்.பி., அறையில் இவற்றை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரில் நடக்கும் மறியல்,போராட்டங்களை கண்காணிக்கலாம். மேலும் வன்முறை சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யும் வசதியுள் ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை கண்காணித்து, குற்றவாளியை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும்.
 
                தானே புயல் நாளை (இன்று) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன மீட்பு கருவிகளுடன், கடலூரில் 1000 போலீசார், விழுப்புரத்தில் 1500 போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1000 போலீசார் என மொத்தம் 4500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 64 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு தெரிவித்தார். எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., வனிதா உடனிருந்தனர்.

Read more »

புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?

               சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

          இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுட வருகின்றன.

            கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலை, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.  2011ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது.

              இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது. இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஏமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன












Read more »

தானே புயல் காரணமாக சிதம்பரம் - கடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன

சிதம்பரம்:
 
        தானே புயல் காரணமாக சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior