உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

new-year-animated-fireworks4.gif image by ns-mymyspacelayouts

Read more »

Glitter Graphics

Read more »

விளையாட்டு - நிகழ்வுகள் 2009



பிப். 1 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது,  இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை!

பிப். 5

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 9-வது ஒரு நாள் போட்டியை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 

மார்ச் 24
 
மக்களவை தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்திலேயே இரண்டாவது இந்தியன் ப்ரீமியர் லீக்கும் நடக்க விருந்ததால், அந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை அளித்தது.

ஏப்.6
 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார், இந்தியாவின் ராகுல் டிராவிட். அவர் 183 கேட்ச்களுடன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹின் சாதனையை முறியடித்தார். 

ஏப்.7 

நியூஸிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை  வென்று வரலாறு படைத்தது.

மே 24
 
தென் ஆப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியை வீழ்த்திய ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூன் 7
   
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை 3ஆம் தரவரிசையில் உள்ள இந்திய - செக்.குடியரசு இணையான லியாண்டர் பயஸ் - லூகாஸ் லூயி இணை வென்றது.

ஜூன் 20

இந்தோனேஷியாவில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 21 

இலங்கிலாந்தில் இரண்டாவது இருபது ஓவர் உலகக் கோப்பை நடைபெற்றாது. பரபரப்பான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, பாகிஸ்தான் அணி 2009-ன் சாம்பியன் ஆனது.

ஜூலை 5 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. 

ஜூலை 5

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், 15-வது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி, பீட் சாம்ப்ராஸ்சின் உலக சாதனையை முறியடித்தார். 

ஜூலை 20 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. லாட்ஸ் மைதானத்தில் 75 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றதால் புதிய சரித்திரம் படைத்தது அந்த அணி
.

ஜூலை 23
 
முதல் தரப் போட்டிகளில் 28,067 ரன்களைக் குவித்து, 60 ஆண்டுகாலமாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் மேதை டான் பிராட்மேன் வைத்திருந்த சாதனையை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர்  முறியடித்தார். இதுவே முதல் தர போட்டிகளில் அதிக பட்ச ரன்களாகும். 

ஆக. 20 

உலகின் அதிவேக மனிதன் என்று போற்றப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்  200 மீட்டர் ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்
.
செப். 6 

உலகிலேயே மிக அதிக அளவில் வருவாய் ஈட்டும் முதல் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது, பிரபல ஃபோர்ப்ஸ் இதழ். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடம் பெற்றார்.

செப். 7

சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் அறிவித்தார். 

செப். 7
 
2009-ஆம் ஆண்டுக்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி தங்க பதக்கம்  வென்றுள்ளார். கடந்த 139 ஆண்டுகள் பில்லியர்ட்ஸ் விளையாட்டில், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தில் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் இவரே. 

செப். 15 

குஜராத் கிரிக்கெட் வாரியத் தலைவராக, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார்.

செப். 23
 
டென்மார்க்கில் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டிகளின் 74 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ரமேஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக சாம்பியன் போட்டிகளில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரமேஷ் குமார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். 

அக். 5 

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் 6-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து  முடிந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றது.

அக். 28
 
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பல வென்ற ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி போதை மருந்து  பயன்படுத்தியதை 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார். அவர் எழுதி உள்ள புத்தகத்தில் இதை தெரிவித்தார்.  டென்னிஸ் உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நவ. 8
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

நவ. 10

இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை ஹீரோ மொகீந்தர் அமர்நாத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 2008-09 ஆம் ஆண்டிற்கான சி.கே. நாயுடு வாழ் நாள் சாதனைக்கான விருதை வழங்கி கௌரவித்தது.

நவ. 14


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20-வது ஆண்டை நிறைவு செய்தார். இதையொட்டி, அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

நவ. 26

கான்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 77  ஆண்டுகள் டெஸ்ட் விளையாடி வரும் இந்திய அணிக்கு கிடைத்த 100-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

டிச.3
 
நடப்பு ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் தேர்வு செய்யபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மகளிருக்கான சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிச. 4

இல‌ங்கை‌க்கு எ‌திரான மூன்றாவது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் அபாரமாக ‌விளையாடிய இ‌ந்‌திய ‌வீர‌ர் சேவா‌க் 293 ர‌‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம்  இழ‌‌ந்தார். இதனால் முச்சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை 7 ர‌ன்‌னி‌ல் நழுவ வி‌ட்டா‌ர்.

டிச. 6
 
மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐ.சி.சி.  டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்தது.

டிச. 12 

உலகின் நம்பர் ஒன் கோஃல்ப் வீரரான டைகர் உட்ஸுக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதை  ஒப்புக்கொண்ட் உட்ஸ், சர்வதேச கோல்ஃப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

டிச.24
 
கோல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது. இதில், கோக்லி தனது முதல் சதத்தை அடித்தார்.

Read more »

சர்வதேசம் - நிகழ்வுகள் 2009

ஜன. 2 

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் தீவிர மடைந்த நிலையில், புலிகளின் தலைமையகமான  கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.


ஜன. 8

இலங்கை அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து எழுதிவந்த, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழான  சண்டே லீடரின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, அடையாளம் அறிமுடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜன. 20 

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறை என்ற சரித்திர சிறப்பைப் பெற்றார். 

ஜன. 27 

இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். 

மார்ச் 3
 
பாகிஸ்தானின் லாகூரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சங்ககாரா, மெண்டிஸ் உள்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர், கிரிக்கெட் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு பத்திரமாக  இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

மார்ச் 23 

புற்றுநோயால் அவதியுற்று வந்த இங்கிலாந்து டி.வி. நடிகை ஜேட் கூடி மரணமடைந்தார். நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற  பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியால் உண்டான சர்ச்சைகள் மூலம் வெகுவாக அறியப்பட்டவர், ஜேட் கூடி. 

ஏப்.14 

மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது.  

ஏப். 26 

உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இன்று முதல் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தது. ஆனால், அதனை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்தது.

மே.18 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததாக, இலங்கை அரசு தொலைக்காட்சி சேனல் தகவல் வெளியிட்டது. இலங்கை அரசு தரப்பில் இருந்து அந்த தகவல் வந்தது. 

முன்னதாக , விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களான என்.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மரணமடைந்ததாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.   பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டணியின் உடலை, இலங்கை ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முடிவில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக, இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து.

மே 19 

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலைக் கண்டுபிடித்துள்ளதாக, இலங்கை ராணுவம் அறிவித்தது.  அதுதொடர்பான, வீடியோக்களும் படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. எனினும், பிரபாகரன் மரணத்தில் சர்ச்சைகள் தொடர்ந்தன.

மே 30

உலகில் 53 நாடுகளைச் 15,510 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. பல நாடுகளிலும் பன்றிக் காய்ச்சல் பரவியது. இதனால், மூன்று மாதங்களுக்கும் மேலாக பீதி நிலவியது. 2009-ல் உலகை உலுக்கிய நிகழ்வுகளுள் பன்றிக்காய்ச்சலுக்கு முக்கியப் பங்குண்டு. பின்னர், டிசம்பர் மாதத்தில் இந்நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 11,500 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மே 27 

ஆஸ்திரேலியாவில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷரவண் குமார் என்ற மாணவன் கடுமையாக தாக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஆண்டு முழுவதும் 40க்கும் மேற்பட்ட முறை இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. இது தொடர்பாக இரு நாட்டு தரப்பில் பேச்சுவார்த்தைகளும் அவ்வப்போது நடைபெற்றன. 

ஜூன் 1
 
பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 228 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 25 

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார். அவரது இழப்பு, உலகம்  முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பின், மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்த சர்ச்சை  தொடர்ந்தது.

ஆக. 6  

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராகவும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராகவும் செயல்பட்டு வந்த கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்தது. 

ஆக. 23 

பஹாமஸ் நாட்டின் அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நடந்த அழகிப் போட்டியில் 18 வயது வெனிசுலா நாட்டு அழகி  ஸ்டெஃபானியா, 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆக. 31 

இலங்கைப் போர் நடவடிக்கைகளில் அரசை விமர்சித்து எழுதிவந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக  உலக அளவில் பல்வேறு சமூக அமைப்புகளும் குரல் கொடுத்தன. திசநாயகத்தை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வலியுறுத்தியிருந்தார்.
செப். 6 
காஷ்மீரில் லடாக் பகுதியில் மவுண்ட் கயா என்ற குன்று அருகே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த விவகாரம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்திய பகுதிக்குள் தங்களது ராணுவம் அத்துமீறி ஊடுருவவில்லை என்று சீன அரசு மறுத்தது.
    
செப். 30 

நியூஸிலாந்து அருகேயுள்ள அமெரிக்க சமோயா தீவு அமைந்துள்ள தெற்கு பசிபிக் கடலுக்கு அடியில் கடுமையான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதையடுத்து, சமோயா மற்றும் அமெரிக்கன் சமோயாவில் சுனாமி தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

அக். 7
 
2009-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோனாத் ஆகியோரும் இவருடன் பரிசை பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.  வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் கிடைத்ததில், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே கொண்டாடியது.

அக். 9
 
அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

அக். 17
 
புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக, மாலத்தீவு நாட்டில் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் அதிபர் முகமதுநஷீத் தலைமையில் அமைச்சர்கள் ஸ்கூப் உடை அணிந்து கலந்து  கொண்டனர். புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவ. 8
 
இலங்கையில் முப்படைகளின் தளபதி சரத் ஃபொன்சேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர், எதிர்வரும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. 

நவ. 8
 
இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைதான டெவிட் ஹெட்லி, தஹாவுர் உசைன் ராணா ஆகியோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. 

நவ. 13
 
"ராணுவ புரட்சி நடத்துவேன் என பயந்து அதிபர் ராஜபக்சே என்னை பணிமாற்றம் செய்தார். அத்துடன் ராணுவத்தை உஷார்  நிலையில் வைத்துக் கொள்ளுமாறு இந்தியாவையும் அவர் கேட்டுக் கொண்டார்," என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி  சரத் பொன்சேகா அடுத்தடுத்து புகார்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நவ. 14
 
பிரதமரின் தூதுவராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்றார். அங்கு அவர் பேசுகையில் "அனைத்து  தரப்பினரும் பயனடையும் வகையில் இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்," என்று  வலியுறுத்தினார்.

நவ. 26 

இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாவை பொது  வேட்பாளராக நிறுத்தப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

நவ. 27 

இலங்கையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

டிச. 18 

புவிவெப்பமடைவதை தடுக்கும் நடவடிக்கையாக, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. மொத்தம் 113 நாட்டுத் தலைவர்களும்  பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. வளர்ந்த நாடுகள்,  முக்கிய வளரும் நாடுகள் மற்றும் சிறிய ஏழை நாடுகள் இடையே எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை. எனினும் இந்தியா,  சீனா உள்ளிட்ட பேசிக் நாடுகளுடன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக  அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த மாநாடு தோல்வி என்பதே உண்மை.

டிச.21
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இலங்கை அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டது.

டிச. 25
 
ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தானு‌க்கு கூடுத‌ல் படைகளை அனு‌ப்ப‌ப் போவதாக அமெ‌ரி‌‌க்கா அ‌றி‌வி‌த்திருந்த நிலையில், அமெ‌ரி‌க்கா‌வுக்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்போவதாக தா‌லிபா‌ன் பயங்கரவாத அமைப்பு ‌அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டிச. 25

வாடிகனில் கி‌றி‌ஸ்தும‌ஸ் ‌தின‌ச் ‌சி‌ற‌ப்பு ‌பிரா‌த்தனை‌யி‌ன் போது போ‌ப் ஆ‌ண்டவ‌ர் ‌மீது ஒரு பெ‌ண் தா‌க்குத‌ல் நட‌த்‌தினா‌ர். இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்தார், போ‌ப் ஆ‌ண்டவ‌ர் 16 ஆ‌ம் பெனடி‌க்‌ட். பின்னர், அவரை பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்தார். அவருக்கு காயமேதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரைத் தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச. 26
 
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அவர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இதனால், இந்தியர்கள் பலரும் பயன்பெறுவர்.

Read more »

தமிழகம் - நிகழ்வுகள் 2009

ஜன. 12

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, திருமங்கலம் இடைத்தேர்தல். இதில், தி.மு.க. வேட்பாலர் லதா அதியமான் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஜன. 18
 
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன். பின்னர், நான்காவது நாளில் தமிழக  தலைவர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை அவர் கைவிட்டார்.

ஜன. 23
 
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்து, தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையைத் துவக்க  வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முத்துக்குமாரின் உயிர்த் தியாகம்!


ஜன. 29 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார். இந்தத் துயர நிகழ்வு, இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் விவகாரத்தில் முத்துக்குமாரின் குருதியால் புதுரத்தம் பாய்ந்தது. ஆனால், போராட்டங்களுக்கு பல்வேறு வடிவங்களில் முட்டுக்கட்டைகள்
வந்தன.

பிப்.1 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, தமிழக முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்  போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, மாநிலம் முழுவது‌ம் அரசு, த‌னியா‌ர் க‌ல்லூ‌ரிகளையு‌ம், அதனோடு இணை‌ந்த விடு‌திகளையு‌ம் மறு உ‌த்தரவு வரு‌ம் வரை‌யி‌ல் மூடு‌ம்படி த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. 

பிப். 3 

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செ‌ய‌ற்குழு‌வி‌ல் ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது. 

பிப். 4
 
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 
காக்கி - கறுப்பு மோதல்!

பிப். 19 

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டத்தில்,  நீதிமன்ற வளாகமே போர்க்களமானது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட பலரும் காயமடைந்தனர். இது, மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிப். 20

இந்திய இறையா‌‌ண்மை‌யைக் குலைக்கும் வகையில் பே‌சியதாக வழக்கு பதிவு செய்து, காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்த  திரைப்பட இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் நெ‌‌ல்லை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் மு‌ன்பு சர‌ண் அடை‌ந்தா‌ர்.

மார்ச் 9 

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

மார்ச் 19 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு  ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ச் 26  

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

ஏப். 23

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெகுவாக ஆதரவைப் பெற்றது. 

ஏப். 27 

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இலங்கையில் இருந்து சாதகமான  தகவல் வந்துள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது உண்ணாவிரதத்தை மதியம் முடித்துக் கொண்டார். 

மே 13 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இலங்கைப் பிரச்னையை முன்வைத்து பல்வேறு கட்சிகளும் பிரசாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 

மே 28 

மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மே 29
 
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  கவர்னர் மாளிகை வெளியிட்டது. 

ஜூன் 25  

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

இந்த கப்பலை இலங்கையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்  கருணாநிதி கடிதம் எழுதினார். இந்த நிலையில், வணங்காமண் கப்பல் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.

ஜூலை 23

இந்தியாவில் முதல் முறையாக ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜூலை 29 

அ.தி.மு.க.வில் இருந்து நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் 'அனிதா'  ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.  

ஆக. 5  

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை  விதித்து மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆக. 22 

தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 

ஆக. 26
 
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின், சமச்சீர் கல்வி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு அவ்வப்போது அரசு தரப்பில் இருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆண்டு முழுவதுமே சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் நீடித்தன. 

செப். 10
 
இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்  செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்தார். சென்னையில் நிருபர்களை சந்தித்தவர்,  "இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அ‌ங்கு‌ள்ள தமிழர்கள் உரிமை இலங்கை மண்ணில்  நிலைநாட்ட காங்கிரஸ் பாடுபடும்," என்றார் ராகுல் காந்தி.  தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினால் வரவேற்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்ததும் தலைப்புச் செய்திகளாயின.

செப். 14 

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைவார் என்று வெளியான வதந்திகள் முடிவுக்கு வந்தது. தற்போதைக்கு அரசியலில் குதிக்கும்  எண்ணம் இல்லை என்றும், ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் ரசிகர் மன்றங்களுடன் கலந்து ஆலோசித்தப்  பிறகே முடிவெடுப்பேன் என்றும் நடிகர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.  

செப். 16 

தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும், பதில் தரவும் அனுமதி  தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டீ. ஆச்சாரி தெரிவித்தார்.

செப். 23

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை குறித்து ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அக். 3
 
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு  நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக  தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

அக். 4 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக, பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அக். 7
 
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 9
 
அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'உலக கலை படைப்பாளி' விருது வழங்கப்பட்டது.

 அக். 10
 
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது. இந்தக்குழுவில் எதிர்க்கட்சியினர் இல்லாதது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இது அரசு குழுவல்ல, தி.மு.க. கூட்டணி கட்சி குழு என்று முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்தார்.

அக். 14 

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் செய்த எம்.பி.க்கள் குழு சென்னை திரும்பியது. 15 நாட்களுக்குள் 50 ஆயிரம் தமிழர்களை  சொந்த இடம் திரும்ப ஏற்பாடு செய்திருப்பதாகவும், மற்ற 2 லட்சம் பேர் படிப்படியாக சொந்த ஊர்களில்  குடிஅமர்த்தப்படுவார்கள் என்றும் அதிபர் ராஜபக்சே தமிழக குழுவிடம் உறுதி அளித்திருப்பதாக முதலைமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.  

அக். 16
 
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய  நிறுவனத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில், மாநாட்டை ஜுன் 24-ம் தேதி முதல் 4 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அக். 17
 
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 பேர் கருகி இறந்தனர். இது தொடர்பாக  அதிகாரிகள் - காவல்துறையினர் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அக். 18 

சென்னையில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை தமிழர் நலவாழ்வுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்று கூறினார்.

அக். 19 

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணியை கேரள அரசு தொடங்கியது. கேரள அரசின்  நிலையை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் வற்புறுத்தினார். இதற்கு முதலமைச்சர்  கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
 
அக். 29
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில், சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட  4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக். 31
 
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோயிலில் வழிபாடு செய்தார். இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள்  என்று நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.

நவ. 2
 
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களின் மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர்  கருணாநிதி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நவ. 8

நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது. இதில் மண்சரிவு மற்றும் விபத்துகளில் 14 பேர்  பலியானார்கள். ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் 29 பேர் பலியானார்கள்.

நவ. 12
 
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் துயரங்களை களைய ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதென்று அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.


நவ. 12

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

டிச. 3 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானதில் 9 குழந்தைகள்  பலியாகினர். இந்த விபத்தின் போது 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநில முழுவதும் துயரத்தில் ஆழ்த்தியது.

டிச. 5 

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையேயான மோதல் வழக்கில், 4 போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

டிச. 7 

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து  செய்ய மாட்டோம் என்றும் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

டிச. 10 

கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.

டிச. 23
 
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

டிச.26

தஞ்சையில் உலகத் தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை இரண்டு மாநாடும் தொடங்கி நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.

Read more »

இந்தியா - நிகழ்வுகள் 2009


 ஜன. 8
 
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். சர்வதேச பொருளாதார வீழ்ச்சி மற்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விவகாரம் போன்ற பின்னடைவுகளின் எதிரொலியால், ஐ.டி.  நிறுவனங்களிலும் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும் செய்யப்பட்டதால் பலர் பாதிப்படைந்தனர்.


ஜன. 27 


முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தனது 98 ஆவது வயதில் காலமானார். தஞ்சையில் பிறந்த இவர்,  நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். 

ஜன. 27

இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.


பிப். 18
 
நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

மார்ச் 5 

நாட்டின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, நவீன் சாவ்லாவை மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனத்துக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஒப்புதல் வழங்கினார்.


மார்ச் 6

நியூயா‌ர்‌க்‌கி‌ன் பழ‌ம்பொரு‌‌ள் கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் இருந்த மகா‌த்மா கா‌ந்‌தி‌‌ பய‌ன்படு‌த்‌திய க‌ண்ணாடி, பா‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு ஜோடி  கால‌ணிக‌ள், த‌ட்டு, குவளை ஆகிய ஐந்துப் பொரு‌ட்க‌ளை, அவற்றின் உ‌ரிமையாள‌ர் ஜே‌ம்‌ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில்  விட்டார். அவற்றை 8 லட்ச அமெரிக்க டாலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் வாங்கினார். 

மார்ச் 18

உத்தரபிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வருண்காந்தி,  சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31

1993 மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்ற இ‌ந்‌தி நடிக‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்‌துக்கு, ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடுவதற்கு அனும‌திய‌ளி‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

ஏப். 2

கடந்த 1984 ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜகதீஷ் டைட்லரை குற்றமற்றவர் என சிபிஐ விடுவித்தது. இது, எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 ஏப். 7

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் ஒருவர் செருப்பை வீசியதால், டெல்லியில் இன்று பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் டைட்லர் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்  ஒருவர் இந்த செய்கையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரலில் 16 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்  கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

ஏப். 27:

இலங்கையில் போரினால் பாதிப்புக்குள்ளான தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார்.

ஏப். 29

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து குவாத்ரோச்சியின் பெயரை சி.பி.ஐ. நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மே 17

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 261 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

மே 22

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் 18 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்றது, தொடர்ந்து இரண்டாவது முறையாகும்.

மே 25

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சீக்கிய மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானாவில் கலவரம் வெடித்தது. ரயில்கள், பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

ஜூன் 3

மக்களவை சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் மக்களவை  சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 ஜூன் 12

எச்1என்1 வைரஸ் கிருமியால் உண்டாகும் பன்றி காய்ச்சல் நோய், இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெகுவாக பரவியது.  இந்தியாவில் 15 பேருக்கு இந்நோய் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பீதி நிலவியது. பன்றி  காய்ச்சல் நோயை நினைத்து பீதி அடைய வேண்டாம், அந்நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்று மத்திய அரசு கூறியது. ஆண்டின் இறுதி வரை பன்றிக் காய்ச்சலின் தாக்குதல் இருந்து கொண்டே இருந்தது. இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஐ தொட்டதாக டிசம்பர் 26-ல் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.


ஜூன் 13

நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். இந்த யோசனைக்கு ஆதரித்தும் எதிர்த்தும் குரல்கள் எழுந்தன. பல்வேறு விவாதங்களும் நடத்தப்பட்டன. பின்னர், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.


ஜூன் 30

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் விசாரணை கமிஷன் அறிக்கை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 2
 
இயற்கைக்கு மாறானது என்ற வகையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கலாம் என்று கூறும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 377-வது பிரிவு இனி செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தைத் தூண்டியது.

ஜூலை 20

மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது கைதான பயங்கரவாதி முகமது அஜ்மல் கஸாப் தன் மீதான குற்றங்களை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பின்பு ஆண்டின் இறுதியில், தாம் குற்றமற்றவன் என்று பல்டியடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
  
ஜூலை 20

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்வேஸ் நிறுவனம் பாதுகாப்பு  சோதனைக்கு உட்படுத்தி விவாகரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பின்னர், அந்த  நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதால் பிரச்னை ஓய்ந்தது.

ஜூலை 26

ரூ.14 ஆயிரத்து 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை, பிரதமர்  மன்மோகன் சிங் இயக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.

ஜூலை 27
 
ஜம்மு - காஷ்மீரின் சோஃபியான் என்ற இடத்தில் 2 இளம் பெண்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக், கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இந்த வழக்கில் போலீசாருக்கு தொடர்பு இல்லை என்று டிசம்பரில் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.

ஆக. 4

நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆக. 9

பெங்களூருவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல் அமைச்சர் கருணாதி திறந்து வைத்தார். அதன்  தொடர்ச்சியாக, சென்னையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கன்னட கவிஞர் ச‌ர்வ‌க்ஞ‌ர் ‌சிலையை, க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர்  எடியூர‌ப்பா திற‌ந்து வை‌‌த்தா‌ர்.


ஆக. 19
 
முகம்மது அலி ஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து, அதன் மூத்தத்  தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார். அவரது புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக,  பி.ஜே.பி.யை சாடி பல கருத்துகளை ஜஸ்வந்த் சிங் வெளியிட்டது தலைப்புச் செய்திகளாயின.

ஆக. 30

நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து,  சந்திராயன் 1 திட்டப் பணிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், சந்திராயன் தனது பணிகளில் 95 சதவீதத்தை அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தில் முழு வெற்றியே  கிட்டியுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.

 அந்த நிலையில், செப். 24-ல் சாதகமான செய்தி வெளியானது.  நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை இந்தியா அனுப்பிய 'சந்திரயான்-1' செயற்கைக்கோள் கண்டுபிடித்தது. இது,  இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு மை௦ல்கல்லாகும். இந்த செய்தியை வெளியிட்ட  இஸ்ரோ தலைவர் மாதவன்  நாயர், "வேறு எந்த நாட்டு செயற்கைக்கோள்களும் இத்தகைய தடயங்களைத் திரட்டியது இல்லை," என்றார். 

செப். 3

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சுமார் 26 மணி நேர தீவிரத்  தேடுதலுக்குப் பிறகே, ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 5  பேரும் பலியானதை, இந்திய விமானப் படை உறுதி செய்தது.


செப். 7

2009-10 ஆம் கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அதற்கு பதிலாக, கிரேடிங் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்பட்டால் பொதுத்தேர்வு எழுதலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

செப். 11

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை வழக்கில் இருந்து மொனீந்தர் சிங் பந்தேரை விடுவித்து, அலகாபாத் உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், அவரது வேலைக்காரர் சுரீந்தர் கோக்லியின் தண்டனையை ஐகோர்ட் உறுதி  செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப். 19

சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு சுறுசுறுப்பானது. 'காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி விமானத்தில் குறைந்த கட்டண வகுப்பில் பயணம்', 'காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ரயிலில் பயணம்,'  போன்ற சிக்கன நடவடிக்கைகள் முதல் பக்க செய்திகளாயின. 
பிறகு, விமானத்தில் எகனாமிக் கிளாஸை கால்நடை வகுப்பு என்கிற ரீதியில் கிண்டல் செய்து டிவிட்டரில் எழுதினார்,  இணையமைச்சர் சசி தரூர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவருக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் எழுந்தன. இறுதியில், அவர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

செப். 30

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக, இத்தாலிய தொழில் அதிபர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

செப். 30
 
தமிழக-கேரள எல்லையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்புப் படையினர் 3 நாட்களாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மொத்தம்  68 பேர் இறந்தது தெரியவந்தது.

அக். 2
 
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் அமோசி தரன் பைரா என்ற கிராமத்தில் புகுந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள், கிராமத்தினர் 16 பேரை சுட்டுக் கொன்றனர். ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளில் அச்சுறுத்தல் தொடர்ந்தது.


அக். 7

முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 22
 
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

அக். 28
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சீதாபுரா என்ற இடத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அணைக்க முடியாமல் ஐந்து நாட்கள் கொழுந்துவிட்டு தீ எரிந்தது. இதனால்  ரூ.150 கோடி மதிப்புள்ள பெட்ரோல், டீசல் எரிந்து நாசமானது. 12 பேர் பலியானார்கள்.

நவ. 2
 
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட உச்ச நீதிமன்றத்தின் 21 நீதிபதிகள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட்டனர்.

நவ. 2

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள கால்சியான் கிராமத்தில், தனது வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதியின் துப்பாக்கியை பறித்து,  அவனையே சுட்டுக் கொன்ற வீரப்பெண் ருக்சானாவுக்கு காஷ்மீர் போலீசில் சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது.

நவ. 2
 
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மீது ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்தது. இது, நாடு முழுவதும்  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட மதுகோடாவிடம், வருமான வரித்துறை  அதிகாரிகள் 72 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நவ. 16

மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்பன போன்ற முழக்கங்களுக்கு மத்தியில், 'மும்பை அனைவருக்கும் சொந்தம்' என்று  பேசினார் சச்சின் தெண்டுல்கர். இந்தக் கருத்துக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து  பால்தாக்கரேவுக்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவ. 19

கரும்பு விலையை மாநில அரசுகள் நிர்ணயிக்க முடியாது என்ற மத்திய அரசின் ஆணையை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில்  மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் செய்தனர். இதற்கிடையே தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கரும்பு விலை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

நவ. 23

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியானதால்  மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பே வெளியானதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

நவ. 24

லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாரதிய ஜனதா மூத்த  தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்பட 68 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்ததால் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தன.

நவ. 25

இந்திய விமானப்படையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் அதிநவீன 'சுகோய்-30' ரக போர்  விமானத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தார்.

நவ. 26

2011 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள  மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நவ. 30

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தங்களது கேள்விகளை கேட்க வேண்டிய உறுப்பினர்கள் 28 பேர் அவையில்  இல்லாததால், மக்களவை கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைத்த சபாநாயகர் மீராகுமார், "கடந்த 20  ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை," என்றார்.

டிச. 9
 
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால், தனி தெலுங்கானா போராட்டம் தீவிரம்  அடைந்த நிலையில், தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தெலுங்கானாவைச் சுட்டிக் காட்டி, மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  வலுவாகியது. மேலும் சில மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் பிரிவினைக் குரலை எழுப்பின.

டிச. 10

தனி தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால், ஆந்திராவில் வேறு வடிவில் பிரச்னைகள் தீவிரமாயின. தனி மாநில முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவின் கடலோர மட்டும் ராயலசீமா பகுதிகளில் தொடர்ச்சியாக முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றது. இதனால் நெருக்கடுக்குள்ளான மத்திய அரசு, இவ்விவகாரத்தில் சுமுக முயற்சி ஏற்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.

டிச. 10

கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.

டிச.17

தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

டிச. 19

பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தேசிய தலைவராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பதவியேற்றுக் கொண்டார்.

டிச.23
 
தனி தெலுங்கானாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டங்கள் வலுபெற்ற நிலையில், தனி மாநிலம் அமைக்கும் திட்டத்தை நிற்த்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு அடித்த பல்டியை அடுத்து, ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இரண்டு நாள் பந்த் அறிவித்தது. பின்னர், கிறிஸ்துமஸை ஒட்டி, டிச.25 பந்த் வாபஸ் பெறப்பட்டது.

டிச. 25

தெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால், தெலங்கானா பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்தது. பேரு‌ந்துக‌ள், ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு ‌தீ வை‌ப்பு, கலவரத்தை ஒடுக்க தமிழகம், டெல்லியில் இருந்து கூடுதல் படைகள் விரைந்தன. 
  
த‌னி‌த் தெல‌ங்கானா கோ‌ரி தெல‌ங்கானா பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த 13 ஆ‌ந்‌திர அமை‌ச்ச‌ர்க‌ள் த‌ங்களது பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக முடிவு செய்தனர். 26

டிச.26

ஹரியானாவில் இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தற்கொலைக்குத் தள்ளப்பட்ட வழக்கில், முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்தோருக்கு எதிராக போர்க்கொடி எழுந்தன. இந்தச் சூழலில், ரத்தோரின் போலீஸ் பதக்கத்தைப் பறிகக்வும், ஓய்வூதியப் பயன்களைக் குறைக்கவும் உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு ரத்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிச.26
 
ஒரு புறம் ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் அனல் பறக்க மற்றொரு புறம் ஆளுனர் மீதான செக்ஸ் புகார் பிரச்னையை கிளப்பியது. பாலியல் புகாருக்கு ஆளான ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அக்கடித்தத்தில் தனது உடல்நலக் குறைவால் விலகுவதாக குறிப்பிட்டிருந்தார். 

டிச. 26

தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான கால வரம்புடன் கூடிய உறுதிமொழியை மத்திய அரசு அறிவிக்க வேண்டு்ம் என்றும், அவ்வாறு அறிவிக்கத் தவறினால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெலங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்தது. இதனிடையே, உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

டிச.26
 
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரன், தனக்கு ஆதரவு தரும் 43 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பித்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு அளித்துள்ளது.

Read more »

2009-ல் பிரபலமாக பேசப்பட்ட 10 நிகழ்வுகள்



இந்த வருடத்தில் நிகழ்ந்த பிரபல 10 நிகழ்வுகள்



1 காங்கிரசின் தேர்தல் வெற்றி.
2 வோடபோன் விளம்பரங்களில் துள்ளி விளையாடும் பொம்மைகள்.
3 ஓரின சேர்க்கை குறித்த ஆதரவுகள்.
4 மும்பை கடல் பாலம்.
5 SWINE FLU காய்ச்சல்.
6 குறைந்த விலை காரான NANO வரவு.
7 மும்பை தாக்குதல் சம்பவம்.
8 பத்தாம் வகுப்பு தேர்வுகள் நீக்கம்.
9 நிலவில் நீர் உள்ளது என்ற சந்திராயனின் கண்டுபிடிப்பு.
10 வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் தாக்கல்.

Read more »

ஆட்டோ-லாரி மோதல்: 3 மாணவர்கள் காயம்

காட்டுமன்னார்கோவில்:

                  ஆட்டோ மீது லாரி மோதியதில் மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை காட்டுமன்னார்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில் தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல் (12) உள்ளிட்ட மூன்ற மாணவர்களும், செல்லக்கண்ணு (50) என் பவரும் பயணம் செய்தனர். குமராட்சி கோப் பாடி மதகு அருகே ஆட்டோ சென்றபோது எதிரில் வந்த லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ஆட்டோ கவிழந்ததில் படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு முதியவரையும் காப் பாற்றி குமராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Read more »

வீடு இடிந்து விழுந்தது: நான்கு பேர் படுகாயம்

நெல்லிக்குப்பம்:

                 வீடு இடிந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மோகன் (45). இவரது கூரை வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நின்று சுவர் ஈரமாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மோகன் (45), அவரது மனைவி இந்திராகாந்தி (35), மகள் திவ்யா (16), கிருபாகரன் (4) பலத்த காயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இடிந்த வீட்டை கவுன்சிலர் நிர்மலா, அங்கமுத்து, ஆர்.ஐ. ரபீகுதீன், வி.ஏ.ஓ., ரகோத்தமராவ் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Read more »

டீக்கடையில் திருடியவர் கைது

சிதம்பரம்:

                டீக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த லால்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அதே பகுதியில் உள்ள இவரது டீக்கடையில்  கடந்த 28ம் தேதி பணம் மற்றும் "டிவி' உள்ளிட்ட பொருட் கள் திருடு போயின. சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மணலூர் சோமுவை (30) கைது செய்தனர்.

Read more »

.திடீர் தீ விபத்தில் கூரை வீடு சேதம்

திட்டக்குடி:

               திட்டக்குடி அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத் தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த கோழியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கந்தசாமி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை திடீரென எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Read more »

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டுள்ளது: பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ பேட்டி

கடலூர்:

               நோய்களுக்கு யூகத்தின் அடிப் படையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என பொது சுகாதாரத்துறை  இயக்குனர் டாக்டர் இளங்கோ தெரிவித்துள்ளார். நோய்கள் மற்றும் கொசுக் களை கட்டுப்படுத்துல் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் கடலூரில் நடந்தது. முதன்மை பூச்சியில் வல்லுனர் ஸ்ரீதரன், மண்டல பூச்சியில் வல் லுனர் கஜபதி, மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

                    கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் இளங்கோ  கூறியதாவது: 

                    தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தில் கொசுக்களால் வரக்கூடிய நோய்கள் அதிகரித்துள்ளது. டிசம்பர் பனி பொழிவு காலம். ஆனால் மழை பெய்துள்ளது. இதனால் மக்களுக்கு நோய் தாக்கமும், பூச்சிகளுக்கு இனபெருக்க சுழற்சியில் மாற்றம் ஏற்படும் என உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித் துள்ளது. எனவே கொசு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. பருவநிலையில் சிறு மாற்றம் ஏற்பட் டாலும் மனிதனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பிரிட்ஜ், ஏ.சி., உள்ளிட்ட குளிர்சாதனங்களில் தண்ணீர் வடியும் "பான்களில்' உள்ள தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் தான் டெங்கு, மலேரியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

                        "நமது நலம் நம் கையில்" திட்டம் மூலம் கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை மாவட்டங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. அதில், முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றியம் தேர்வு செய்து கொசுக் கள் குறித்த விழிப்புணர்வு, கருத்தரங்கம், பயிற்சி, கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலில் இதுவரை 3016 பேர் பாதித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக செப்டம்பரில் 913 பேரும், டிசம்பரில் நேற்று வரை 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

                      சாதாரணமாக 10 சதவீதத்தினருக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கும். 2007ம் ஆண்டில் 37,05,683 பேரும், கடந்தாண்டு 30,43,893 பேரும், இந்தாண்டில் 27,43,955 பேர் காய்ச்சலில் பாதித் துள்ளனர். காய்ச்சல் அதிகம் காணப்படும் மாதங்களான செப் டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மட்டும் 50 சதவிதம் பேர் பாதித்துள்ளனர்.  காய்ச்சலுடன் மூட்டு வலி அறிகுறி இருந்தால் சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை அறிகுறி  இருந்தால் காமாலை அல்லது எலி காய்ச்சல் இருக்கும். ரத்தகசிவு இருந்தால் டெங்கு, வயிற்று வலி இருந்தால் டைபாய்டு, குளிர் ஜூரம் இருந்தால் மலேரியா, வலி இருந்தால் வைரஸ் காய்ச்சல் இருக்கும். நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். டாக்டர்கள் யூகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க கூடாது. ரத்தம், சிறுநீர் சோதனை மூலம் நோயிற்கான காரணத்தை கண்டறியலாம் என்றார்.

Read more »

தொழில் முனைவோருடன் கடன் வழங்கல் கலந்தாய்வு கூட்டம்

கடலூர்:

                         தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு  அதிபட்சமாக 25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங் குவதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. அதில் 200 தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

                  அவர்களின் விண்ணப்பங்களை குழுவின் உறுப்பினர்களான மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கபிலன், கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநர் வாசன், சென்னை கதர் கிராம தொழில் ஆணையத்தின் கண்காணிப்பு அதிகாரி ராமசுப்ரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் துளசிதரன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior