உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 05, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைகேட்பு கூட்டங்கள் மே 16 வரை ரத்து

 கடலூர்:

            சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அனைத்து மக்கள் குறைகேட்கும் கூட்டங்களும் மே 16 வரை நடைபெறாது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார். 

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1-3-2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதால், வாராந்திர மக்கள் குறைகேட்கும் கூட்டங்கள் போன்ற கூட்டங்களை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.எனவே வாரம்தோறும் திங்கள்கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்கள், 16-5-2011 வரை நடைபெறாது. எனினும் பொதுமக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை நிறைவேற்றிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. 

                மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். மனுக்கள் பிரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்காக, உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்

              கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இநத ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடி. கோடை காலத்தில் விவசாயத்தை சமாளிப்பதற்காகவும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கும் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை 44.50 அடிக்கு குறையாமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.

               அதிக அளவு தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக வீராணம் ஏரியை தூர்வார அரசு உத்தரவிட்டது. இதனால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளிடம் கரையை உயர்த்தி பலப்படுத்துவதற்கு வீராணம் ஏரியின் மேல்கரை பகுதியில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை தூர்வார கீழணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வீராணம் ஏரியில் படிப்படியாக நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.
 
            ஆனாலும் சென்னைக்கு வழக்கம் போல் 76 கன அடி தண்ணீர் எந்தவித தடையுமின்றி அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்தது. இதனால் 10 கன அடி தண்ணீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று ஏரியின் நீர்மட்டம் 39.70 அடியாக திடீரென்று குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நேற்று முதல் முற்றிலுமாக நிறுத்தப் பட்டது. மேலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதும் நிறுத்தப்பட்டது.

Read more »

Counting centre inspected by Cuddalore Collector & SP

CUDDALORE: 

            Collector P. Seetharaman, along with Superintendent of Police Ashwin Kotnis, on Friday inspected Periyar Government Arts College, which will be designated as a counting centre for the Assembly elections. The Collector told presspersons that votes polled in the four Assembly constituencies of Cuddalore, Panruti, Kurinjipadi and Neyveli would be counted at this centre. Setting up of a strong room, barricades and posting of security personnel at the centre were reviewed and a report would be sent to the Election Commission in two days. Mr. Kotnis said 100 police personnel would be posted to guard the centre.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior