உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

இந்திய மக்கள்தொகை 2050-ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு


             உலக மக்கள்தொகை வரும் 2050-ம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

              இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050-ல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். 

                      ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050-ல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050-ல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியாவில் மக்கள்தொகை 2050-ல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more »

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு



             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய அரசுப் பணியில் உள்ள சாந்தா ஷீலா நாயர், தொழில் மற்றும் வர்த்தத் துறை ஆணையர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் ஓய்வு பெறவுள்ள மற்ற அதிகாரிகளாவர்.
 
தேர்தல் அதிகாரி: 
 
               ஓய்வு பெறும் அதிகாரிகளில் நரேஷ் குப்தா குறிப்பிடத்தக்கவர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது பணிக் காலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனக் கணைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தவர். 
 
தேர்தலில் புதிய யுக்திகள்: 
 
                      வாக்குப் பதிவின் போது பல்வேறு புதிய யுக்திகளை தமிழகத்தில் புகுத்தியவர் நரேஷ் குப்தா.  வாக்குப் பதிவின் போது நடைபெறும் நிகழ்வுகளை வெப்கேமராவில் படம் பிடிப்பது, வாக்காளிக்க வருவோரை படமெடுத்து அதை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச் சாவடி அதிகாரிகள் மணிக்கு ஒருமுறை தெரிவிக்கச் செய்வது போன்

Read more »

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு


சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன்
 
                 வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்யும் புதிய முறை, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
              இதை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளின் பரிமாற்ற விவரங்களுக்கு எந்தவொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் வில்லங்கச் சான்று பெற்றுக் கொள்ள முடியும். வெப் கேமரா மற்றும் பயோ மெட்ரிக்: பத்திரப்பதிவில் முதன்முறையாக வெப் கேமரா,  மின்னணு ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சுரேஷ் ராஜன் தொடங்கி வைத்தார்.
 
சிறப்பு அம்சங்கள்: 
 
            புகைப்படம், கைரேகைகள் மின்னணு கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், ஆவணப் பதிவின் போதுள்ள விண்ணப்பதாரர்களின் தெளிவான படங்கள் ஆதாரமாக சேகரிக்கப்படுகிறது.  ஆவணப்பதிவின்போதே மின்னணு கருவிகளால் புகைப்படம், கைரேகைகள் பதிவு செய்யப்படுவதால் மனிதத் தவறுகள் தடுக்கப்படும். போலி ஆவணப்பதிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் குறைக்கப்படும்.  மின்னணு முறையில் கைரேகைப் பதிவுகள் சேமிக்கப்படுவதால் இதனை தடவியல் போன்ற பிற துறைகளுக்கு எளிதில் அனுப்பி ஒப்பீடு செய்து சரிபார்க்கலாம்.  
 
                புகைப்படம் மற்றும் கைரேகைப் பதிவுகள் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால் அதன் தரம் குறையாமல் திரும்பப் பெற்று சரிபார்க்கவும், தேவை ஏற்படின் சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் வழி ஏற்படும்.  ஒரு நபர் பல ஆவணங்களைத் தாக்கல் செய்யும் அல்லது எழுதிக் கொடுக்கும் சமயங்களில் ஒவ்வொரு ஆவணத்துக்கும் புகைப்படம் எடுத்து ஒட்டும் இப்போதைய நடைமுறைக்குப் மாற்று ஏற்படாக புதிய முறை செயல்படுத்தப்படும். மேலும், மக்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கான செலவு மற்றும் கால விரயம் குறையும்.

Read more »

Railway officials' train blocked at Thirupadiripuliyur



Activists being removed at the Thirupadiripuliyur station in Cuddalore on Thursday. 
 

CUDDALORE: 

           Consumer activists and members of railway passengers' associations blocked a special train carrying Divisional Railway Manager (DRM) P.V. Vaithialingam (Tiruchi) and other officials at the Thirupadiripuliyur railway station here on Thursday.

           A few of them even squatted on the track forcing the engine driver to stop the train ahead of the scheduled halting place. Railway Protection Police personnel accompanying the officials cleared the track by removing the agitators. As they started raising slogans urging the railway authorities to complete the works on the Thirupadiripuliyur railway station soon and take appropriate safety measures, the officials had a quick view of the platform where the Villupuram-Mayiladuthurai passenger train had a rubbing on Wednesday and left.

             Meanwhile, Municipal Chairman T. Thangarasu, office-bearers of the Federation of All Social Welfare Organiasations in Cuddalore, including M. Nizamudeen, Balki, M.Marudhavanan, and, zonal railway users' consultative committee member P.Sivakumar, made representations to the DRM requesting him to put in place all basic amenities at the station and ensure halting of all trains passing through the station. They said that since Thirupadiripuliyur, forming part of the temple circuit, was situated in the heart of the Cuddalore town, it was only appropriate that all trains halted here. At present, only the Kamban Express, the Madurai—Chennai bi-weekly express and the Villupuram—Mayiladuthurai Passenger were halting at the station.

            Three other trains — Cholan Express, Varanasi Express and Bhuvaneswari Express — were just passing through the station. The Municipal Chairman also requested the DRM to erect a foot overbridge linking Kuppankulam and Padaleswarar Temple side. Mr. Nizamudeen told Mr. Vaithialingam that even though a subway was sanctioned, for which the civic body too had adopted a resolution expressing its consent, at the Lawerence Road level-crossing the Southern Railway had not taken any initiative in this regard.

            He said that the railway property was encroached upon on the main bus stand side and had the land been recovered the dangerous curvature at the station could have been averted. Mr Sivakumar called for rescheduling the timing of the passenger trains so as to leave Cuddalore at 9.30 a.m. and, in return direction, leave Chidambaram at 5 p.m. Mr. Vaithialingam promised that he would look into the demands. He would see to it that all trains which had a halt at the station prior to gauge conversion, would have a halt once again.

            However, he said that even though the construction of the subway was beyond his purview, he would write to the Railway Board to do the needful. When presspersons approached the DRM for his comments, he only said that the requests made by the organisations would be considered.

Read more »

Residents adopt Dalit girl student At Cuddalore

CUDDALORE: 

            The Federation of All Residents' Welfare Associations has adopted a Dalit student Kirubavathi of Padhirikuppam near here and has undertaken to defray her educational expenses.

          General secretary M. Marudhavanan told The Hindu that the Federation had adopted the girl when it learnt that though Ms. Kirubavathi's family was living in a hut without electricity connection she scored 472 marks out of 500 in the SSLC examinations by studying under the street lights. She had successfully completed Plus Two and now got admission to the B.E. (Information Technology course) in Thiagarajar College of Engineering, Madurai. Learning about the economic backwardness of the student the Manjakuppam branch of Indian Overseas Bank had extended an educational loan to the tune of Rs 1.92 lakh to her, towards tuition fees for all the four years.

                 Yet, she would have to mete out the hostel expenses to the extent of Rs. 50,000 for which the Federation had come forward to give the monetary help. Mr. Marudhavanan and other office-bearers of the Federation handed over a part amount of Rs. 10,000 to her recently. Mr. Marudhavanan said that Ms. Kirubavathi was desirous of joining the Indian Administrative Service and the Federation would support her in realising her dream.

Read more »

வி.ஏ.ஓ., போட்டி தேர்வுக்கு வயது வரம்பு சலுகை ரத்து : முதிர்ந்த பட்டதாரிகள் பாதிப்பு

கடலூர் : 

             கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு சலுகையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திடீரென ரத்து செய்ததால், பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

              தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்த 21ம் தேதி வெளியிட்டது. இதை பார்த்த முதிர்ந்த பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் மற்றும் அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதைகள் பட்டதாரிகளாக இருப்பின், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பில்லையென இதுவரை தமிழக அரசு அறிவித்திருந்தது. டி.என்.பி.எஸ்.சி.,யும் அவ்வாறே அவர்களை தேர்வு எழுத அனுமதித்தது. கடந்த 2007ம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ., தேர்விலும் இச்சலுகை வழங்கப்பட்டது. 

               அதனால், அனைத்து பட்டதாரிகளும் தேர்வு எழுதினர். ஆனால், இப்போது அறிவித்துள்ள வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்புச் சலுகையை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு அடியோடு திடீரென ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்பதால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.

                 டி.என்.பி.எஸ்.சி.,யின் இந்த திடீர் அறிவிப்பால், பல லட்சம் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை ஐந்தாண்டுகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருந்துகிறது. 45 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வை எழுத முடியும். இன்று அரசு வேலை 40 வயது முதல் 50 வயது வரை தான் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் போட்டித் தேர்வு எழுதி, 57 வயது வரை பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் பறிபோயுள்ளது.

Read more »

சிதம்பரம் ரயில் நிலையம் கலை அம்சங்களுடன்முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது: வைத்திலிங்கம்

சிதம்பரம்:

               சிதம்பரம் ரயில் நிலையம் கோவில் கலை அம்சங்களுடன் முன் மாதிரியாக அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு விடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கூறினார். மயிலாடுதுறை- விழுப்புரம் வரை உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணியை பார்வையிட திருச்சிக் கோட்ட மேலாளர் வைத்தி யலிங்கம், முத்துராமலிங்கம், முருகராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று வருகை தந்தனர்.

                வழியில் உள்ள சிதம்பரம் ரயில் நிலையத்தை ஆய்வுசெய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறையில் உள்ள மின் விளக்குகளை மாற்றி அமைக்கவும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை வரை மரக் கன்றுகளை தவிர மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ரயில் நிலையம் நுழைவு வாயில் அருகில் உள்ள விநாயகர்கோவில் அருகில் ரயில்வே ஊழியர்கள் கட்டி வரும் புதிய கோவிலை அகற்றுமாறு ஊழியர்களிடம் உத்தரவிட்டார்.

             அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பு செயலாளர் விஜயகுமார், ரயில் பயணம் செய்வோர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தனசேகர் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். 

பின்னர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம்  கூறுகையில், 

                சிதம்பரம் ரயில் நிலையம் முழுவதும் புதுமைப் படுத்தி முன்மாதிரி நிலையமாக கோவில் கலை அம்சங்களுடன் சிறப்பாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடை முறைக்கு விடப்படும், பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில் நேரத்தை மாற்ற தலைமையிடத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்படும். புதிய கட்டங்ள் கட்டி முடிந்ததும் பழைய கட்டங்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றார். அப்போது ரயில்வே அதிகாரிகள் செல்வராஜ், வேலுசாமி, கனகராஜ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                 சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் உத்தரவின் பேரில் எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கடலூர் சட்ட முறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் காஸ் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்ய எடுத்துச் செல்லும் போது ஆய்வு செய்தனர்.

                  இதில் வீடுகளுக்கு எடுத்து செல்லும் காஸ் சிலிண் டர்களை எடை வைத்து பார்த்ததில் அளவு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விருத்தாசலத்தில் இரண்டு காஸ் நிறுவனங்கள் மீதும், சிதம்பரத்தில் ஒரு நிறுவனம் மீதும், கடலூரில் மூன்று நிறுவனங்கள் மீதும் எடையளவு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர்கள் தாங்கள் பெறும் காஸ் சிலிண்டர்களை, சிலிண்டர் கொடுக்க வரும் பணியாளர்களிடம் உள்ள தராசின் மூலம் எடை அளவை சரி பார்த்து வாங்க வேண்டும். 

எடை குறைவாக இருந்தால், 

எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி, 
எண் 60, சுப்புராயலு நகர், 
2வது குறுக்கு தெரு, 
கடலூர். 
போன் 223984 

என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் காணாமல்போன துப்பாக்கிகுறித்து போலீஸ் விசாரணை


சிதம்பரம்: 

           சிதம்பரத்தில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன துப்பாக்கி குறித்து சந்தேகத்தின் பேரில் தீட்சிதர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

               பெங்களூரு இந்திரா நகர் கொடிகல்லியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி(39). தொழிலதிபர். இவர் பெங்களூரு மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார். ஜனவரி மாதம் 6ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட தனது மனைவியுடன் வந்தார். அப்போது தனது மனைவி கை பையில் துப்பாக்கியை வைத்து விட்டு சாமி கும்பிட்டு திரும்பி பார்த்தபோது பையில் இருந்த துப்பாக்கி காணவில்லை. பின் பெங்களூரூ சென்றவர் ஜனவரி மாதம் 11ம் தேதி கர்நாடகா மாநில ஐகோர்ட் வக்கீல் மூலம் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார்.சிதம்பரம் போலீசார் விசாரித்து வந்தனர். சிதம்பரம் கீழவீதி தீட்சிதர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் நேற்று போலீசார் விசாரித்தனர்.

Read more »

திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு


திட்டக்குடி:

              திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

              பெண்ணாடம், கழுதூர் உள்ளிட்ட 13 ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியின, சிறுபான்மையின நல அலுவலர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் மனோகரன், தனி தாசில்தார் தனசிங் முன்னிலை வகித்தனர். இதில் பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, கதிர் வாணன் உட்பட அந்தந்த பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள், பெற்றோர் கள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்


கடலூர்:

            கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற் பட்ட மோதலில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

               புதுச்சேரி முதலியார் பேட்டை ரமேஷ் (37), சேலம் ஜியாவுதீன்(37), பாருகான் (37) மூவரும் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் விசாரணை கைதிகளாக கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் நேற்று மாலை சிறை வளாகத்தில் டீ குடித்து கொண்டிருந்த போது சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ஆயுள் தண்டனை கைதியாக உள்ள சீர்காழி அடுத்த வானகிரியைச் சேர்ந்த சந்திரன் (எ) நடுப்பிள்ளை (55) ஏன் சத்தமாக பேசுகிறீர்கள் என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமேஷ், ஜியாவுதீன், பாருகான் ஆகியோர் சந்திரனை சரமாரியாக தாக்கினர். பணியில் இருந்த சிறைக் காவலர்கள் மோதலை தடுத்து சமரசம் செய்தனர். சிறை அலுவலர் வேணுகோபால் புகாரின் பேரில் முதுநகர் போலீசார், ரமேஷ், ஜியாவுதீன், பாருகான் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Read more »

விருத்தாசலம் அருகே கேலி செய்ததால் தகராறு: 18 பேர் மீது வழக்குப்பதிவு


விருத்தாசலம்:

           விருத்தாசலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (14). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த சிவசங்கரன் மகன் செந்தமிழ் கீர்த்தனாவை கிண்டல் செய்துள்ளார். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிவசங்கரனிடம் கூறினார். அதற்கு சிவசங்கரன் மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தியை திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் சிவசங்கரனின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கொட்டகைக்கு தீ வைத்தனர்.

                 இதுகுறித்து முத்தம் மாள் கொடுத்த புகாரின் பேரில் முருகவேல், கலியபெருமாள், தங்கவேல், ராஜசேகர், விஸ்வநாதன், பார்த்திபன், ராமச்சந்திரன், சண்முகம், சக்திவேல், சிவராமன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல் செந்தமிழுக்கும், கிருஷ்ணமூர்த்தி மகன் அருளுக்கும் பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் அருள், அரவிந்த், அயோத்தி, முருகவேல், வேல்மணி, பழனி சேர்ந்து, பள்ளி முடிந்து நிலத்திற்கு சென்று கொண்டிருந்த செந்தமிழனிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக செந்தமிழனின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசார ணை செய்து வருகின்றனர்.

Read more »

ரயில்வே மண்டல மேலாளர் ஆய்வு:கடலூரில் திடீர் மறியலால் பரபரப்பு

கடலூர்:

                அகல ரயில் பாதை பணிகளை திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பொது நல சங்கத்தினர் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் இரண்டாவது பிளாட்பாரத்தை கடந்த போது சிமென்ட் சிலாப்பில் உரசி பெட்டிகள் சேதமடைந்தன. விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே திருச்சி மண்டல மேலாளர் வைத்தியலிங்கம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் வந்த ரயில் கடலூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3.05 மணிக்கு வந்தது.

                     கடலூர் அனைத்து பொதுநல இயக்கத்தினர் மனு கொடுப்பதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வியக்கத்தைச் சேர்ந்த துரைவேலு என்பவர் தண்டவாளத்தில் திடீரென படுத்து மறியலில் ஈடுபட்டார். கூட்டத்தினர் கூச்சலிடவே இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியதால் உயிர் தப்பினார். ரயில்வே போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிறுத்தம் வேண்டும் என பொது நல இயக்கத்தினர் மண்டல மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். நகராட்சி சேர்மன் தங்கராசு விரைவில் சுரங்கப்பாதை பணியை துவங்கவேண்டும் என வலியுறுத்தினார். 

மண்டல மேலாளர் வைத்தியலிங்கம்  கூறும்போது,

                   "ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவும், கடலூர் வழியாக செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Read more »

நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., ஆய்வு

நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பத்தில் ரேஷன் கடைகளில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். 

                    நெல்லிக்குப்பத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். கணக்கு புத்தகங்கள், எடை தராசு சரியாக உள்ளதா என பார்த்தார். புத்தகத்தில் உள்ள இருப்பு அளவுக்கு பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தார். கணக்கில் இருப்பதைவிட குறைவான இருப்பு அளவு பொருட்களுக்கு அபராதம் விதித்தார். சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டுமென கூறினார். அரசினர் ஆண்கள், பெண்கள் விடுதியை பார்வையிட்டு உணவு தரமாக உள்ளதா என சுவைத்து பார்த்தார். சோழவல்லி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று முதியோர் உதவித்தொகை சரியாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் கட்டாயம் இருபது மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண் டும் என்றார்.

Read more »

திட்டக்குடி சினிமா படத்திற்கு எதிர்ப்பு:இளைஞர்கள் திரண்டதால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலத்தில் "திட்டக்குடி' சினிமா படத்திற்கு கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள சந்தோஷ்குமார் தியேட்டரில் "திட்டக்குடி' என்ற சினிமா படம் நேற்று முன்தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படம் விருத்தாசலம் அருகே உள்ள திட்டக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்ட படமாகும். இந்த படத்தின் காட்சி ஒன்றில் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி என்ற கிராமத்தின் பெயர் இடம் பெறுகிறது.

                   ஆபாச காட்சியில் தங்கள் ஊர் பெயர் இடம் பெறுவதாகவும், தங்கள் ஊரை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் 50 இளைஞர்கள் நேற்று காலை தியேட்டர் முன்பு கூடினர். இதனால் தியேட்டர் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ் பெக்டர் சீராளன் போலீசாருடன் அங்கு சென்று செந்தில்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

                     அப்போது இளைஞர்கள் இன்ஸ்பெக்டர் சீராளனிடம் படத்தை திரையிட கூடாது. மீறி திரையிட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என கூறினர்.பின்னர் படத்தின் தயாரிப்பாளர் செல்வம் கார் மாங்குடி என்ற பெயர் உடனடியாக படத்தில் இருந்து எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்ததை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior