உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 29, 2012

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அகில இந்திய ஹாக்கி போட்டி

கடலூர் :


     திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹாக்கி அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூரில் நடந்தது.

         பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அகில இந்திய ஹாக்கி போட்டி வரும் நவம்பர் மாதம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்துகிறது. இப்போட்டியில் பங்கேற்க திருவள்ளுவர் பல்கலைக்கழக அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.

           கடலூர் மற்றும் வேலூர் மண்டலங்களைச் சேர்ந்த கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரிகள், நெய்வேலி ஜவகர், கடலூர் செயின்ட் ஜோசப், குடியாத்தம் கே.எம்.சி., வேலூர் ஊரீஸ், திருவண்ணாமலை சன் கலைக்கல்லூரி, திருவண்ணாமலை சண்முகா கல்லூரி, மேல்விசாகம் அப்துல் லக்கீம், திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் ஆகிய 12 கல்லூரிகள் பங்கேற்றன.போட்டியை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி செயலர் ரட்சகர் துவக்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் அமுல்தாஸ் முன்னிலையில் போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம் செய்திருந்தார்.






Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பு

சி.முட்லூர்  :

          சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரிக்கு போதிய ஆசிரியர்கள், குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று அடிப்படை வசதிகள் கோரி அனைத்து மாணவ, மாணவிகளும் வகுப்பிற்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு கோஷம் எழுப்பினர்.



Read more »

தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு

கடலூர் :


        ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு பெற்றுள்ளனர்.

        சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார்கள் மணிகண்ட பிரபு, சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.அவர்களில் மணிகண்ட பிரபு 100 அடி பிரிவில் தங்கப்பதக்கமும், சுதாகர் 300 அடி பிரிவில் வெண்கலமும், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் 350 அடி பிரிவில் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற போலீஸ்காரர்கள் மணிகண்ட பிரபு, சுதாகர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோரை எஸ்.பி., பகலவன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.




Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம் :

       விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேர்முக பொது வாய்மொழித் தேர்வு நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு, தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வகுமாரன் தேர்வாளராகவும், திருவெண்ணெய்நல்லூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கதுரை நெறியாளராகவும் இருந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட நரிக்குறவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த நேர்முக பொது வாய்மொழித் தேர்வில் தமிழ்த்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று, கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.







Read more »

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் விழா

குறிஞ்சிப்பாடி :


குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் விழா நடந்தது.

நிர்வாக அதிகாரி முத்துகுமரன் தலைமை தாங்கினார். வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத்துறை தலைவர் சிவசங்கரன் வரவேற்றார். நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன், முதல்வர் முத்துகருப்பன், தேசிய தரநிர்ணயக்குழு ஒருங்கினைப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜோதிமணி பழனி, பேராசிரியர் கலியமூர்த்தி எழுதிய வணிக பொருளியல் பாட புத்தகத்தை பி.காம்., இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் பழனி பாபு, பேராசிரியர் கலியமூர்த்தி ஆகியோர் இலவசமாக வழங்கிப் பேசினர்.ஆங்கில துறைத் தலைவர் வசந்தி டேனியல், வேலை வாய்ப்புக் குழு உறுப்பினர் நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.
 





Read more »

சனி, ஆகஸ்ட் 25, 2012

ஆலப்பாக்கம் அருகே எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிர் இழப்பு

கடலூர்:

       கடலூர்  மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


       கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள்.  24.08.2012 காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக தனது தாயாருடன் காத்திருந்தாள். அப்போது அந்த வழியாக கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். கடலூர் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          செவ்விழி இறந்த தகவல் அறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி குழந்தைகள் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.






Read more »

கானூரில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு:


சேத்தியாத்தோப்பு அடுத்த கானூரில் மாணவர்களுக்கு இலவச  மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த  விழாவிற்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர்சுப்ரமணியன் தலைமை  தாங்கினார். ஊராட்சி தலைவர் தில்லைராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருப்பன், ஒன்றிய சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் குணசீலன் வரவேற்றார்.காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாணவர்களுக்கு அரசின் இலவச  மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். பேரூராட்சி சேர்மன் எம்.ஜி.ஆர். தாசன்,  ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கடலூர் மாணவிகளுக்கு .25 ஆயிரம் ஊக்கத் தொகை

கடலூர்:


        அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கடலூர் தூய வளனார் கல்லூரி கால்பந்தாட்ட மாணவிகள் மற்றும் கபாடி வீரருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற்றனர். கடலூர் நகரில் தூய வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் கால்பந்தாட்ட மாணவிகள், கபாடி வீரர்கள் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

        சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா அண்மையில் நடந்தது. இவ்விழாவில், கடலூர் தூய வளனார் கால்பந்தாட்ட மாணவிகள் கே.தேன்மொழி, ஆர்.கண்ணாத்தாள், ஆர்.பத்மாவதி, எஸ்.சரண்யா, கே.இந்துமதி, வி.வினிதா, டி.சூர்யா, பி.மகாலட்சுமி, எஸ்.பிரதீபா ஆகியோருக்கும், கபாடி வீரர் எஸ்.மணிகண்டனுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலர் ஜி.ஏ.ராஜ்குமார், ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் இ.இரட்சகர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் அ.அமுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆர்.இராஜமாணிக்கம், எஸ்.மாரியப்பன் ஆகியோரை கல்லூரி செயலர் பாராட்டினார்.





 

Read more »

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

"இக்னைட் 2012' போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர்:

தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம் நடத்தும் தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்படும் அகமதாபாத் தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம், பள்ளி மாணவர்களின் சுயமான தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியை நடத்துகிறது.


இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 31ம் தேதிக்குள்

தேசிய புத்தாக்க நிறுவனம்,
 ஸ்டேட்டி லைட் காம்ப்ளக்ஸ்,
அகமதாபாத்-380 015.
குஜராத் மாநிலம்

      என்ற முகவரிக்குஅனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் வயது, பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி, வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். போட்டி முடிவுகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும். விருதுகள் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Read more »

சனி, ஆகஸ்ட் 18, 2012

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல்:

கடலூர்:


வண்டிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலைபேசிகளை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். கடலூர், வண்டிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 595 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவதை தடுக்கவும்,மாணவர்களின் நடவடிக்கையை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமையாசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட ஓழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இத்தகவலை தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி
      
          நேற்று காலை இறை வணக்கத்தின் போது அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஒழுங்கு  நடவடிக்கை குழுவினர், மாணவர்கள் அலைபேசி வைத்துள்ளார்களா என சோதனை செய்து இரண்டு மாணவர்களிடம் அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். சற்று நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு சோடியம் விளக்குகளை  கல்வீசி உடைத்தனர். உதவி தலைமையாசிரியர் கோமதி கொடுத்த தகவலின் பேரில், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை  நடத்தினர்.

அப்போது ஆசிரியர்கள் கூறுகையில்,


மாணவர்கள் தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மிரட்டல்  விடுக்கின்றனர். வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் கட்சி பெயர், கட்சி  தலைவர்களின் பெயர்களை எழுதி வைக்கின்றனர் என புகார் கூறினர். மாணவர்களோ, ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சரியாக வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்றனர்.


சரியும் மாணவர் சதவீதம்

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு  ஆண்டிற்கு முன் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்தனர். மாணவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டனர். இதனால் தற்போது இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 595 ஆக குறைந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி மீது தனிக்கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை  எடுக்க முன் வர வேண்டும்.

...

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

கடலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:

  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்துத் தேர்வு வினாத்தாள் கடலூரில் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.

          ஈரோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூரிலும் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய பகுதியில் 49 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினர்.


       கடலூர் புனித வளனார் கல்லூரி தேர்வு மையத்தில், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கம்பன் நகரைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் தேர்வு எழுதினார்.
 தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் போன்று கையால் எழுதப்பட்ட 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் நகல் கிடந்ததை பார்த்து எடுத்தார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்கள் சரியாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து ராஜாகண்ணு கூறியது:


       எம்.காம். பட்டதாரியான நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் விடைகள் அடங்கிய வினாத்தாளை கண்டெடுத்தேன். இதை வைத்து தேர்வு எழுதியவர்கள் எளிதில் தேர்ச்சிப் பெற்று வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னைபோன்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடும். முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.


         கடலூரில் கேள்வித்தாள் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணை முடிந்தால்தான் உண்மை நிலை தெரியும் என்றார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.








Read more »

சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் அழிந்துவரும் கோவில் சுடுமண் சிற்பங்கள்

சிறுபாக்கம்:


     பழமை வாய்ந்த கோவில்களில் சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பிரதான கோவில்களில் பண்டை காலத்தில் கிராமத்தினையொட்டி ஆண்டவர், ஐயனார், எல்லையம்மன், கருப்பையா, மதுரைவீரன் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இயற்கை சூழலுடன் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

           இங்கு கிராம மக்கள் தை முதல் சித்திரை மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஊரணி பொங்கலிட்டு திருத்தேர்விழா நடத்துவார்கள். முக்கிய விழாக்கள் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் போதிய மழை பெய்து வேளாண்மையில் அதிக மகசூலை பெறவும், கிராமம் அமைதியாக இருக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உண்டு. கிராமப்புற திறந்த வெளி கோவில்களில் குலதெய்வமாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவிடவும், பிள்ளை பேறு அடையவும் வேண்டுதல் வைத்து அவை நிறைவேறியவுடன் சுடுமண்ணால் அமைக்கப்பட்ட குதிரைகள், யானைகள் அமைத்து கிடா பூஜையுடன் நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். இதுபோன்ற கோவில்களில் கம்பீரமாக அலங்கரித்த சுடுமண் சிற்பங்கள் அண்மைக் காலமாக சிதைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன. மே லும் சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவதும் குறைந்து வருகிறது.


     சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோவிலில் சேலம், ஈரோடு, ராசிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தது போன்று பெரிய மற்றும் சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவது குறைந்து விட்டது. பழமை வாய்ந்த சுடுமண் சிற்பங்கள் முற்றிலும் அழிந்து விடாமல்தொல்லியல்துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி

நெல்லிக்குப்பம்:


நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க ஆள் இல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய பிட்டர் இளங்கோ இரண்டு மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.நகரம் முழுவதும் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். நடப்பு ஆண்டு அந்த டெண்டரும் விட வில்லை. கடந்த ஒரு வாரமாக 10வது வார்டு கந்தசாமி தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குளம்போல தேங்கி நிற்கிறது.கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளதால் நோய் பரவும் சூழல் உள்ளது. நோய்  பரவும் முன் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சியில் குடிநீர் குழாய்கள் உடைந்தால்  ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. மக்களின் அடிப்படை தே வையான குடிநீர்   குழாய்களை பராமரிக்க ஆட்கள் நியமிப்பதில் கவனம் செலுத்த வே ண்டும்.



.

Read more »

சனி, ஆகஸ்ட் 11, 2012

தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் ஆளுமைத் திறன் பயிற்

திட்டக்குடி:


தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆர்வத்திறன் மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டு  பயிற்சி நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.  முகாமில் லேம்ப்ஸ் இன்ஸ்டியூட் ஆப் லாங்வேஜ் லேர்னிங் நிறுவனத்தின்  பயிற்சியாளர்கள் மாணிக்கம், டேவிட் ஜெயக்குமார், சண்முகம் மற்றும்  சிவசங்கர் பயிற்சியளித்தனர். கல்லூரி செயலர் ராஜபிரதாபன் சிறப்புரை  ஆற்றினார்.  ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் செய்திருந்தார். துணை முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.



Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

2013 ஜனவரி மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்யக் கழிவு மாவட்டமாக மாற்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர், :


        பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணிக்கொடிகளை பயன் படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் ஆட்சியர்ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசுகையில்


         ‘சமுதாயத்திற்கு முன்னோடியாக இருக்கும் அரசியல் கட்சியினர் வரும் காலங்களில் கொடி தோரணங்கள் போன்றவற்றை துணிகளில் வடிவமைக்க வேண்டும். அதன் காரணமாக சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும். துணிக்கொடிகளை திரும்பவும் பயன்படுத்தலாம். அதை போல பிளக்ஸ் போர்டுகளையும் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும். 2013 ஜனவரி மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்யக் கழிவு மாவட்டமாக மாற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

சிதம்பரம் :


             அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக் கழக மின்னியல் துறையில் 2003-2007ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம்சிதம்பரத்தில் கடந்த 5ம் தேதிநடந்தது. இதில் வெளிமாநில மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடவுள் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் மாணவர்கள் தங்கள் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுடன் பயின்று இறந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். பல்கலைக் கழக மாணவர்களின் சாதனை பேட்டி, குறுஞ்சித்திரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.ஏற்பாடுகளை இன்ஜினியர் வில்வசபேசன், விஜயகாந்த், சபரி, செந்தில்ராஜா, முருகன், வினோத், முருகானந்தன், சரத்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


Read more »

புதன், ஆகஸ்ட் 08, 2012

மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள்

கடலூர் :
 
கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.


இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வரும் 2013ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு பயிற்சி மாணவர்களை தேர்வு  செய்வதற்காக வரும் அக்டோபர் 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது. அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பாக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடலூரில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி வரைவிண்ணப்பங்கள் வழங்கப்படும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை.5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர பிரிவினர் எழுத்து மூலமாக மனுவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, பி.ஏ.,பி.எஸ்சி., பி.காம்., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்), அங்கீகரிக்கப்பட்டபட்டப்படிப்புகள் படித்து  முடித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப் பிடம்ஆகிய சான்றிதழ்களுடன் நகல்களை சரிபார்த்த பின்னர் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும், பொது பிரிவினர் 30  வயதிற்குள்ளாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 33 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில்தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

STATE BANK OF INDIA - Requirement (2012)


STATE BANK OF INDIA - Requirement (2012)


Recruitment to Clerical Cadre in Associate Banks of SBI


Advt No. CRPD/ABCL/2012-13/01 dated 25-07-2012

(Written Examination on 07.10.2012 and 14.10.2012)



◦On-line Registration of Application : 30.07.2012 to 13.08.2012

◦Payment of Fees – Offline (at SBI Branches) : 01.08.2012 to 17.08.2012

◦Payment of Fees – Online : 30.07.2012 to 13.08.2012




 NOTIFICATION

http://www.statebankofindia.com/webfiles/uploads/files/1343129241717_SBI_ABCL_ADVT_ENGLISH.pdf


APPLY ONLINE


http://ibpsreg.sifyitest.com/sbiclkjul12



Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் ஓராண்டுப் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம்:

 சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் ஓராண்டுப் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமை வகிக்கிறார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சி.வெங்கசடேசன், ஒன்றியச் செயலர்கள் பி.மாசிலாமணி, (குமராட்சி), ஆர்.சதானந்தம் (புவனகிரி) உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நிறைவு உரையாற்றுகிறார். அண்ணாமலைநகர் பேரூராட்சிச் செயலர் எஸ்.ராஜா நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர் பி.கற்பனைச்செல்வம் செய்துள்ளார்.








Read more »

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

Dell employees volunteered their time toward the disaster relief work in the Cuddalore district


         Dell has committed another $2.4 million as a part of its Corporate Social Responsibility (CSR) programme. Over the last few years, Dell has funded $6.5 million in CSR related activities. As a part of this initiative, Dell Learning in India which is funded by Dell works with more than 13 NGOs to equip them with digital learning resources such as desktops or laptops through Dell Learning centres in 390 Indian schools.

 Adding to its sustainability initiatives in India, Dell recently launched a free laptop battery recycling programme across India to increase the awareness of e-waste disposal among consumers. Besides, Dell's employees like other technology companies based out of India have done their bit of CSR work. According to Dell, as of January 2012, close to 13,000 Dell employees in India contributed more than 52,500 hours of volunteering work. Dell's goal was to double the participation or get at least 50 per cent of the workforce to volunteer over the previous year and the goal was accomplished, with 57 per cent engaged in community service.

C          ontributing towards the cause of disaster relief, Dell announced a funding of Rs.23 lakhs towards rebuilding homes and providing rehabilitation to those affected by a cyclone in South India. Dell partnered with Habitat for Humanity, a global nonprofit organisation dedicated to the elimination of poverty housing to aid in the process. In addition, Dell employees volunteered their time toward the disaster relief work in the Cuddalore district of Tamil Nadu which benefited nearly 5000 families in the affected region.

         Also, earlier this year, Dell awarded a health grant to the Cancer Institute (WIA) in Chennai, to support the research on MRD (Minimal Residual Disease) for the treatment of Pediatric Leukemia patients in India. The grant is expected to directly benefit at least 500 children with Acute Leukemia and increase MRD research to significantly improve the treatment of Leukemia patients in India.

Read more »

கடலூர் அரசு பள்ளிகளில் செல்போனுக்கு தடை

கடலூர் :
    கடலூர் அரசு பள்ளிகளில் செல்போன் வைத்திருக்கிறார்களா? என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீரென சோதனை நடத்தினர்.


    தமிழகம் முழுவதும் பள்ளியில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடம் திடீரென சோதனை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கடலூரில் உள்ள முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆசிரியர்கள் மாணவிகள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். இந்த சோதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னிலையில் நடந்தது. முதுநகரில் தலைமை ஆசிரியர் சம்பந்தம், திருப்பாதிரிப்புலியூரில் நாகராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் வகுப்பு ஆசிரியர்கள் மாணவிகளின் பையில் செல்போன் உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர்.



இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் கூறியது:-


      தமிழக அரசின் 261 அரசாணைப்படி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கு இது பொருந்தும். இந்த அரசாணை முதலில் 2007-ல் வந்தது. அதன் பின் 16.2.2012 பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவு மூலம் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்களின் செல்போனை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஏனென்றால் சில மாணவர்கள் செல்போன் வைத்திருப்பது அவர்களின் பெற்றோருக்கே தெரியாது. மாணவர்களின் பெற்றோர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் கல்வி அலுவலர், மற்றும் இதர அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது செல்போன் தடைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனை அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்




Read more »

ஆடிப்பெருக்கையொட்டி தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை

கடலூர் :


ஆடிப்பெருக்கையொட்டி இன்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் 6.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தபால் துறை இணைந்து தங்கக் காசுகள் விற்பனையை தபால் அலுவலகங்கள் மூலம், திருச்சி மண்டல தபால் நிலையங்களில் நடத்தி வருகிறது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 6.5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயங்களை விற்பனை செய்யப்படஉள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி அதிக பலன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நாணயங்கள் அரை கிராம், 1, 2, 5, 8 மற்றும் 20, 50 கிராம்களில் 99.9 சதவீதம் தூயத் தன்மையுடன் வழங்கப்படுகிறது. இந்த நாணயங்களுக்கு உலக கவுன்சில் தரச் சான்றிதழ் உள்ளது.


        வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Read more »

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா

சிதம்பரம் :


      சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா நடந்தது.

     கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் மணிமேகலை, நிர்வாக செயலர் பாபு, ஆங்கிலப்புல முனைவர் அப்துல் ரஹீம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அண்ணா துரை வரவேற்றார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி தொகுத்து வழங்கினார். மாநில கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் இளங்கோ திருக்குறள் காட்டும் ஒழுக்கம் என்ற பொருளில் கருத்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் காப்பியங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிகள் எனும் தலைப்பில் பேசினார். கல்லூரி மாணவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior