உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் சூரசம்ஹார விழா

கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசாமி கோயிலில் வியாழக்கிழமை, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
கடலூர்:
                கடலூர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கந்தசஷ்டி விழா முருகன் கோயில்களில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
                   கடலூரில் புருகீஸ்பேட்டை முருகன் கோயில், புது வண்டிப்பாளையம் சுப்பிமணியசாமி கோயில், புதுப்பாளையம் முருகன் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) முருகன் திருக்கல்யாண வைபவம் முருகன் கோயில்களில் நடக்கிறது.

Read more »

நெய்வேலி அருகே திறக்கப்படாமல் உள்ள நூலகங்கள்

மந்தாரக்குப்பம் குடியிருப்புப் பகுதியில் ஓட்டுக் கொட்டகையில் உள்ள கெங்கைகொண்டான் அரசுக் கிளை நூலகம். (வலது) கம்மாபுரம் ஒன்றியம் வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள நூலகம் 
நெய்வேலி:
                   நெய்வேலியை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்கீழ் செயல்படும் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் போதிய இடவசதியின்றியும், மழைக் காலங்களில் மழை நீர் நூலகத்தினுள் புகுவதால் புத்தகங்ளை பாதுகாக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
                    கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழைய நெய்வேலி, வடக்குவெள்ளூர், சேப்ளாநத்தம், முதனை உள்ளிட்ட கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தலா 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் கட்டப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அவை எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.
                அதே வேளையில் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, மந்தாரக்குப்பத்தில், என்எல்சியின் பழங்கால கட்டடத்தில் கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த நூலகத்தில் புரவலர்களாகவும், அங்கத்தினர்களாகவும் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்கக் கூட போதிய இடவசதியில்லை. 
                           மேலும் மழைக் காலங்களில் ஆங்காங்கே ஒழுகுவதால் மழைநீர் உள்ளே புகுந்து, புத்தகங்கள் நனைந்து விடுகின்றன.  இங்குள்ள நூலகரும், புரவலர்களின் உதவியுடன் புத்தகங்களின் ஸ்டாண்டு நனையாதவாறு பாலிதீன் பைகளைக் கொண்டு புத்தகங்களை பாதுகாத்து வருகிறார். பல லட்சம் செலவு செய்து, நூலகத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வெற்றிடமாக தூங்குகின்றன. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மழையில் நனைந்த வண்ணம் ஓட்டுக் கொட்டகையில் மிதக்கின்றன. அரசும் நூலகத் துறையும் கவனிக்குமா?

Read more »

பண்ருட்டி வாலாஜா வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

பண்ருட்டி : 

                   பண்ருட்டி அம்பேத்கர் நகரில் வாலாஜா வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. 

                பண்ருட்டி விழமங்கலம் ஆண்டிக்குப்பம் 1வது வார்டில் துவங்கும் வாலாஜா வாய்க்கால் நீர்  திருவதிகை கெடிலம் ஆற்றில் கலக்கிறது. வாலாஜா வாய்க்கால் நகரின் முக்கிய கழிவுநீர் செல்லும் வாய்க் காலாக உள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதிகளவில் வாழும் பகுதியாக உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள இவ்வாய்க்காலில் பிளாஸ்டிக் அடைப்பு காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. 

                     அதேப்போன்று கனமழையின் போது 10 வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீருடன் கலந்து வெளியேறும் போது இப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் அடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் மக்கள் சிக்கிய பின் பொக்லைன் இயந்திரம் மூலம் அடைப்புகளை எடுத்து சீரமைப்பு பணி செய்வதை விட மழை வரும் முன்பே வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் கருத்தரங்கு துவக்கம்

சிதம்பரம் :

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய பல்கலைக் கழகங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் புலம் சார்பில் எம்.எட்., பயில்பவர்களுக்கு இரண்டு நாள்  தேசிய கருத்தரங்கு துவங்கியது. 

                தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில் பி.எட்., பயில்பவர்கள் கல்வி கற்கும் உபகரணங்களை தாங்களாகவே சேகரித்து கொள்வது குறித்து கருத்தரங்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடந்தது.  பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.  கல்வியியல் புல முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். புதுடில்லி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக கல்வியியல் புல பேராசிரியர் டாக்டர் தாஸ் சிறப்புரையாற்றினார். 

                      தொலைதூர கல்வி இயக்கக இயக்குநர் நாகேஸ்வரராவ், கல்வியியல் இந்திய மொழியியல் புல முதல்வர் முத்து வீரப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கருத்தரங்கில் நாட்டில் உள்ள பல்வேறு  பல்கலைக்கழகங்களை சர்ந்த கல்வியியல் புல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாண வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

Programme in business process outsourcing launched

CUDDALORE: 

               Annamalai University, in collaboration with Orion Edutech of Kolkata, has launched an advanced diploma programme in business process outsourcing management. The programme is being offered through the Directorate of Distance Education (DDE) of the university.

             A statement from the university said that West Bengal Minister for Education Abdus Sattar inaugurated the programme in Kolkata on November 3. M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University, S.B. Nageswara Rao, Director of DDE, and, Sanjeev Kumar and Manish Agarwal of Orion Edutech, were present.

Read more »

Compensation given for who died in rain-related incidents in the district

CUDDALORE: 

              Collector P. Seetharaman on Thursday gave away a compensation of Rs. 1 lakh each to the families of six persons who died in rain-related incidents in the district.

             The victims included S. Veeramani (15), R. Satish (16) and K. Muthuraja (15) who were struck dead by lightning while having a bath in the Veeraperumanallur lake near here on Wednesday. Three members of the Tamil Nadu Agricultural Workers' Welfare Board, A. Anjalai (37), D. Amudha (33) and P. Pari (45), had also been killed in lightning.

             While compensation for the first incident was given from the Natural Disaster Funds, funds were provided for the second incident from the Tamil Nadu Agricultural Workers' Welfare Board. The families of the welfare board members were also given Rs. 2,500 each for meeting the funeral expenses. The Collector also handed over Rs. 1,000 each to 22 families whose houses were damaged in the rain, Rs. 10,000 as compensation to the owner of a milch animal that died in lightning and Rs. 2,000 to the owner of a goat that was killed.

Read more »

Premananda hospitalised

CUDDALORE: 

              Controversial godman Premananda, who is serving double life-imprisonment in the Cuddalore Central Prison in connection with rape and murder cases, has been admitted to the government headquarters hospital here. Hospital sources said Premananda was brought from the prison to the hospital on November 8 as he complained of breathing problem and swollen legs. Sources also said that Premananda had several health complications such as cardiac problem, hypertension and diabetics. So, he had been admitted to the intensive care unit with police protection. His condition is said to be stable.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior