உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

பஸ்களே வராத பஸ் நிலையம்

கடலூர்:               நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத்தை அண்மைக்காலமாக பஸ்கள் புறக்கணித்து வருகின்றன.   நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பஸ் நிலையத்துக்குள் எந்த...

Read more »

கூலி உயர்வு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி:               வாய்க்கால் தூர்வாரும் பணியில் கூலியை உயர்த்தித் தரக்கோரி கிராம மக்கள் கடலூர்-விழுப்புரம் சாலை மாளிகைமேட்டில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு கிராமத்தில் சித்தேரி கால்வாய் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில்...

Read more »

சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் சாவு

விருத்தாசலம்:            விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் இறந்தார்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த குணாளன் (55) குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, விருத்தாசலத்திலிருந்து கடலூர் சென்றுகொண்டிருந்த அரசு பஸ் மோதியது,...

Read more »

பஸ்கள் மோதல்: 2 டிரைவர்கள் சாவு

பண்ருட்டி:            பண்ருட்டி அருகே திங்கள்கிழமை அதிகாலை அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில், இரு பஸ்களின் ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்களில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் சொகுசு பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 40 பயணிகளுடன்...

Read more »

திட்டங்களுக்குப் பணம் இல்லையா?

கடலூர்:           கடலூர் நகராட்சியில் எந்த திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள் என்று திங்கள்கிழமை நடந்த நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். கடலூர் நகராட்சியின் இயல்புக் கூட்டம் நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:    துணைத் தலைவர் தாமரைச்...

Read more »

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு

கண்டெடுக்கப்பட்ட கோழிச் சின்னம் பொறிக்கப்பட்ட பிரெஞ்சு செப்புக் காசு.​ ​(வலது)​ செப்புக்காசில் புதுச்சேரி என்று எழுதப்பட்ட மறுபக்கம். கடலூர்:                 கடலோர கிராமமான...

Read more »

ஊராட்சி அலுவலகங்களுக்கு தலைவர்கள் வருவதில்லை! மாட்டுத் தொழுவமாக மாறும் அவலம்

கடலூர் :                 ஊராட்சி தலைவர்களின் "ஈகோ' பிரச்னையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் பயன்பாடின்றி பூட்டிய நிலையில் பாழடைந்து, காட்சி பொருளாக உள்ளது.              உள்ளூர் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...

Read more »

சத்யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணம் வருகை

ஸ்ரீமுஷ்ணம் :          ஸ்ரீமுஷ்ணம் பூவராகவாமியை தரிசிக்க உத்திராதி மடத்தின் தற்போதைய பீடாதிபதி நாளை ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் தற்போதை பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் வழி வந்த ஸ்ரீசத் யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள உத்திராபதி மடத்திற்கு நாளை (10ம் தேதி) மாலை வருகை தருகிறார்.நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள் ஸ்ரீமுஷ்ணத்தில்...

Read more »

கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானப்பணி விரைவில் துவக்கம்

கடலூர் :                  கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஒதுக் கப்பட்ட நிதியை ரயில்வே மேம்பாலத்திற்கு செலவிடப்பட்டதால்...

Read more »

கடலூரில் நாளை ஆர்ப்பாட்டம்: ஐக்கிய ஜனதாதளம் முடிவு

சேத்தியாத்தோப்பு :                     விலைவாசி உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் நாளை (10ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த ஐக்கிய ஜனதாதளம் முடிவு செய் துள்ளது. ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயற்குழு கூட்டம் சேத்தியாத் தோப்பில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி, நகர தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர்....

Read more »

பெயரளவில் தமிழில் அர்ச்சனை: குன்றக்குடி ஆதீனம் வேதனை

சிதம்பரம் :                    கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயரளவில் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.  சிதம்பரத்தில் மூன்று நாள் நடந்த 12வது உலக சைவ மாநாட்டின் நிறைவுரையாக குன்றக்குடி ஆதீனம் பேசியதாவது: சைவம் என்பது...

Read more »

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிதம்பரத்தில் சாலை போடும் பணி

சிதம்பரம் :                 சிதம்பரத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போல்நாராயணன் தெரு சாலை 12 லட்சம் ரூபாய் செலவில் போடும் பணி துவங்கியது. சிதம்பரம் நகரில் போக் குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலூர் மார்க்கம் இருந்து சீர்காழி மார்க் கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் போல் நாராயணன் தெருவழியாக திருப்பி விடப் பட்டது.  இதனால் கனரக வாகனங் கள் உள்ளிட்ட...

Read more »

உழவர் சந்தைக்கு வாருங்கள் : வேளாண் அலுவலர் அழைப்பு

விருத்தாசலம் :                பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடையுமாறு வேளாண் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து விருத்தாசலம் உழவர் சந்தை வேளாண் அலுவலர் நந்தினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                     விருத்தாசலம்...

Read more »

கடலூர் இணைப்பு சாலையில் மெகா பள்ளம் : ஒரே பாதையில் வரும் வாகனங்களால் விபத்து

கடலூர் :                கடலூர் ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் "மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல ஒரே பாதையை பயன் டுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.                  கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கம்...

Read more »

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு : பறக்கும் படை கண்காணிப்பு

கடலூர் :               பிளஸ் 2 செய்முறைத் தேர்வை கண்காணிக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக செய்முறைத் தேர்வுகள் இம்மாதம் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் நடந்தது. தொடர்ந்து நேற்று...

Read more »

சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு

சிதம்பரம் :                  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கல்வி சுற்றுலா சென்ற சிறுபான்மை மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகள் கல்வி சுற்றுலா சென்றனர். அதில் புவனகிரியில் இருந்து 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடந்த 2ம் தேதி தென்...

Read more »

இந்திய கம்யூ., பஞ்சர் ஒட்டும் போராட்டம் : அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திட்டக்குடி :                      திட்டக்குடியில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பஞ்சர் ஒட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திட்டக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்காததைக் கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாலை பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்தப் பட இருந்தது.                      ...

Read more »

ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல்பட்டால் இந்தியா முன்னேறும் : எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் :                    ஆசிரியர்கள் கடமை தவறாமல் செயல்பட்டால் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வளர்ச்சியில் முதன்மையாக இருக்கும் என எம்.பி., அழகிரி பேசினார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக் கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஐவதுகுடியில் நடந்தது. விழாவிற்கு சி.இ.ஓ., அமுதவள்ளி...

Read more »

விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு

கடலூர் :             மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும், 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் இரண்டு இடங்களையும், ஈட்டி எறிதலில்...

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயனடைய மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுபாக்கம் :              மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.  இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:                     மங்களூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு...

Read more »

நடுவீரப்பட்டு ஊராட்சி தலைவர் தொடர்ந்து செயல்பட உத்தரவு

நடுவீரப்பட்டு :              பதவி நீக்கம் செய்யப் பட்டவர் மீண்டும் ஊராட்சி தலைவராக தொடர கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியின் தலைவராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். இவர் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய் ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்து கலெக் டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.இதனை ரத்து செய் யக்கோரி ஆறுமுகம்...

Read more »

கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்க விஸ்வகர்ம கைவினைஞர்கள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் :                          கோவில்களில் விஸ்வகர்ம சமுதாயத்தினர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு, மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டை வழங்குதல் ஆகிய...

Read more »

வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் : இந்து மக்கள் கட்சி முடிவு

பண்ருட்டி :                நெய்வேலி 21ம் வட் டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து வரும் 15ம்தேதி ஆர்ப்பாட் டம் செய்ய இந்து மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.               நெய்வேலியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்...

Read more »

15 பேரிடம் லஞ்சம் வாங்கிய கடலூர் பெண் அலுவலர் கைது

கடலூர் :                     தமிழக அரசின் திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகள் 15 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கனகசபை நகர் நடராஜன் தனது மகள் சுபத்திரா திருமணத்திற்காக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைக்காக கீரப்பாளையம் சமூக நலத்துறை...

Read more »

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சிதம்பரம் :                   சிதம்பரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் மேலகுண்டபாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முக்கூட்டு முருகன் (33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. சமீபத்தில் வல்லம்படுகை அருகே வெடிகுண்டு வீசிய வழக்கில் அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். முக்கூட்டு முருகன் தொடர்ந்து...

Read more »

கரும்பு வயலில் தீ: ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் :                  கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு பயிர் எரிந்து நாசமானது. வேப்பூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த கரும்பு பயிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த...

Read more »

பூச்சி மருந்து குடித்து மூதாட்டி சாவு

பரங்கிப்பேட்டை :                 வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.                      புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜகுமாரி (65). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு...

Read more »

தே.மு.தி.க., கொடிகம்பம் மாயம்

பரங்கிப்பேட்டை :                 புதுச்சத்திரம் அருகே தே.மு.தி.க., கொடி கம் பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி எடுத்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு மாதாக் கோவில் அருகே தே.மு.தி.க., கொடி கம்பம் இருந்தது. கடந்த 4ம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் கொடிகம்பத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். காலையில் கொடிகம்பத்தை காணாததால்...

Read more »

மூவரை தாக்கிய இருவருக்கு வலை

சிதம்பரம் :                      அரிசி கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வடக்கு மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியர் பழனிசாமி மூன்று சக்கர சைக்கிளில் அரிசி மூட்டைகளை கடைக்கு ஏற்றிக் கொண்டு வந்தார். கூத்தாடும் பிள்ளையார் கோவில் அருகே...

Read more »

மைத்துனரை தாக்கியவருக்கு வலை

சிதம்பரம் :             கணவன், மனைவி தகராறை தட்டி கேட்ட மைத்துனர் தாக்கப்பட்டார். சிதம்பரம் சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த காந்திமதியின் சகோதரின் கணவர் முருகன், பாலுவை கண்டித்தார். அதில் ஆத்திரமடைந்த பாலு, எனது குடும்ப பிரச்னையில் நீ ஏன் தலையிடுகிறாய் எனக் கேட்டு தாக்கினார். இதுகுறித்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior