உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கடலூர் :

            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

                கடலூர் மாவட்டத்தில் நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி ஊராட்சி, பண்ருட்டி ஒன்றியம், தொளப்பாக்கம் ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், சிலம்பிமங்கலம் ஊராட்சி, விருத்தாசலம் ஒன்றியம், எருமனூர் ஊராட்சி ஆகிய 4 ஊராட்சி தலைவர் பதவிக்கும், விருத்தாசலம் நகராட்சி 3-வது, அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு ஆகிய கவுன்சிலர் பதவிக்கும் மற்றும் கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.

                  தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குபதிவையொட்டி வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில், 

                    "கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இந்த நோய் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை" என்றார். பன்றிக்காய்ச்சல், காசநோய், எய்ட்ஸ், மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more »

கடலூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு தீ வைப்பு

கடலூர் :

            கடலூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சீல் வைத்தனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

               கடலூர் பேருந்து நிலையத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட கடைகள் நகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடிகளுக்கு ஒரு சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். மொத்தம் ரூபாய் நாலரை லட்சம் வரை வாடகை பாக்கி இருக்கிறது. து தொடர்பக பலமுறை அறிவுறுத்தியும் வாடகை பாக்கி செலுத்தபடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு நகராட்சி வருவாய் அலுவலர் திரு. ஜெயராஜ் தலைமையில் கண்காளிப்பாளர் திரு. பாஸ்கர், வருவாய் அலுவலர்கள் திரு. ரவி , திரு. ஞானதேசிகன், திரு. கார்த்திகேயன், மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பாதிரிபுலியூர் காவல்துறை ஆய்வாளர் திரு. ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior