உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

கடலூரில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி


கடலூர் : 

                      கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென கோடை மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனல் காற்று வீசுவதால் வீட்டிற்குள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை வரும் சூழல் ஏற்பட டது. காலை நேரத்தில் மேகமூட்டத்துடன் இடி மின்னல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கோடை மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து காலை 9.30 மணி வரை பெய்த மழையால் பூமியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடை மழையால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Read more »

சிதம்பரத்தில் இன்று குரூப் 1 தேர்வு 7 மையங்களில் 2,467 பேர் எழுதுகின்றனர்


சிதம்பரம் : 

                       சிதம்பரத்தில் டி.என். பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு இன்று நடக்கிறது. ஏழு மையங்களில் 2,467 பேர் எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு சிதம்பரத்தில் இன்று 2ம் தேதி நடக்கிறது. சிதம் பரம் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி, ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளி, சி.முட்லூர் அரசு கல்லூரி ஆகிய ஏழு மையங்களில் மொத்தம் 2,467 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் 10 முதன்மை மேற்பார்வையாளர்கள், 10 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

                      மையங்களை கண்காணிக்க சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்), மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், டி.எஸ்.பி., மூவேந்தன் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டி.ஆர்.ஓ., நடராஜன் நேற்று தேர்வு மையங்களை பார்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் தேர்வு நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஆய்வு பணி அலுவலர்களுக்கு தேர்வு விதிகளை விளக்கினார். தேர்வு நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் நலன் கருதி மையங்களுக்கு சிறப்பு பஸ் இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிற்ப தொழிலாளர்களுக்கு தனி வாரியம்: அரசுக்கு கோரிக்கை


சிதம்பரம் : 

                   தமிழக அரசு முத்திரையில் கோபுரத்தை மாற்ற சட்டசபையில் கோரிக்கை வைத்த எம். எல்.ஏ., ரவிக் குமாருக்கு திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட் டம் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சிதம்பரத்தில் நடந்தது.

                 பொதுச் செயலாளர் நடராஜன், மாநில தலைவர் சிவானந்தா, பொருளாளர் குணசேகரன், கொள்கை பரப்பு செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில அவைத் தலைவர்கள் சிவகடாச்சம், கோவிந்தராஜன், வக்கீல் சம்மந்தம், டாக்டர் ரங்காச்சாரி பங்கேற்றனர். தமிழக அரசு முத்திரையில் ராஜகோபுரத்தை மாற்ற வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ள எம்.எல்.ஏ., ரவிக்குமாருக்கு கண்டனம் தெரிவிப்பது. சிற்ப தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க அரசை வலியுறுத்துவது உட்பட பல தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை



ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டு வருகிறது.இதில் கண்டியங் குப்பம், தேத்தாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் சமத்துவபுரம் அமைக்க முன்மொழிவு செய்யப் பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் வருகை தந்தார். கண்டியங்குப்பம் மற்றும் தேத்தாம் பட்டு கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை பார்வையிட்டார்.
                   
                மாவட்டத்தில் இந்த அண்டு ஒரு சமத்துவபுரம் அமைக்கப்படும். இதில் பார்வையிட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள இருப்பு, தேத்தாம்பட்டு, கண்டியங்குப்பம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை சமத்துவபுரம் அமைக்க இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என கூறினார். இதில் சிதம்பரம் ஆர். டி.ஓ., ராமராஜி, தாசில்தார் வீரபாண்டியன், மண் டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ. சுந்தரம் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் சூதாடுமிடமாக மாறியுள்ளது: ஒன்றிய கவுன்சிலர் புகார்


பண்ருட்டி : 

                     அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர் இல்லை, குரங்குகள் தொல்லை, சூதாட்ட இடமாக இருப்பதாக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறினர். பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் கவுரிபாண்டியன் தலைமை தாங்கினார். பி.டி.ஒ., க்கள் தமிழரசி, சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் ராமு பேசும் போது, மைக் வசதி இல்லை, யூனியன் அலுவலகத்திலே குடிதண்ணீர் இல்லை. எப்படி கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்ப்பீர்கள் என் றார்.

                       அதற்கு பதிலளித்த பி.டி.ஒ., சுப்ரமணியன் சிண்டக் டேங்க் மூலம் குடிநீர் தொட்டி அமைக்க 85 ஆயிரம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும், மைக் வசதியும் ஏற்படுத்தி தரப்படும் என்றார். தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர் ரேவதி பேசும் போது, கரும்பூர் ஊராட் சிக்கு அமரர் டயர் வண்டி வழங்க வேண்டும் என் றார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு கவுன்சிலர் அனைத்து ஊராட்சிக்கும் அமரர் வண்டி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன் பேசும் போது, ஊராட்சி ஒன்றிய வளாகத் தில் சுற்றுசுவர் இல்லை. சமூக விரோதிகள் சூதாட்டம் விளையாடி வருகின்றனர். சிறுவர்கள்,பெரியவர்கள் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகளை சேதப்படுத்ததி வருகின்றனர். குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த பி.டி.ஒ. சுப்ரமணியன் குரங்குகள் பிடிக்கவும், ஊராட்சி ஒன்றிய வளா கத்தில் சூதாட்டம் விளையாடுபவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கேட்ட இடத்தில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு: எஸ்.பி., அதிரடிக்கு போலீசார் பாராட்டு


கடலூர் : 

                    கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் 250 பேருக்கு நேற்று கவுன்சிலிங் மூலம் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி எஸ்.பி., உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் பணி புரிந்து வரும் போலீசார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல் வழங்கப்படும். இதற்காக முன்கூட்டியே மனு கொடுத்து அதிகாரிகள் மூலமாக சிபாரிசு செய்பவர்களுக்கு மட் டுமே கேட்ட இடத்தில் மாறுதல் கிடைக்கும். மற்றவர்களுக்கு எங் காவது ஒரு இடத்தில் போடுவதுதான் வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பொறியியல் படிப்பிற்கு நடத்தப்படும் கவுன்சிலிங் பாலவே போலீசாருக்கும் நடத்த திட்டமிட்டார்.

                     கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு, சிதம்பரம் என ஏழு சப்டிவிஷன்கள் உள்ளன. மொத்தம் 46 போலீஸ் நிலையங்களில் 3, 7 ஆண்டுகளை கடந்து பணியாற்றி வரும் போலீசார் நேற்று ஜாங்கிட் போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்த கவுன்சிலிங் கிற்கு அழைக்கப்பட்டனர்.அனைத்து போலீசார் முன்னிலையில் ஒளிவு மறைவின்றி கம்ப்யூட்டரில் காலி பணியிடங்கள் எல்.சி.டி., புரஜெக்டர் மூலம் பார்வையில் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. வயது, சீனியாரிட்டி அடிப்படையில் மூன்று ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் முடித்த போலீசார் நேரடியாக அழைக்கப்பட்டு அவர்கள் கேட்ட இடத்திற்கு எஸ்.பி., பணியிட மாறுதல் உத்தரவை வழங்கினார். சொந்த ஊரை தவிர்த்து மற்ற இடங்களுக்கு எந்த தடையுமின்றி உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று நடந்த கவுன்சிலிங்கில் 250 பேருக்கு பொது மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.கேட்ட இடத்தில் மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் போலீசார் கூறுகையில், சீருடையை பொறுத்தவரை எங்கள் சர்வீசில் இது போன்று ஒரு மாறுதல் யாரும் கொடுத்ததில்லை என எஸ்.பி., யை பாராட்டினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior