உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 31, 2012

தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

கடலூர்:
 
           புயலில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 
 
            புயலினால் கடலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, பருத்தி, எண்ணெய் பனை உள்ளிட்ட பயிர்கள் 92,627.33 ஹெக்டேர் பரப்பளவிலும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பாக்கு, வாழை, மரவள்ளி, வெற்றிலை, மஞ்சள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் 38,155.58 ஹெக்டேர் பரப்பளவிலும் சேதமடைந்து உள்ளன.பயிர் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து புகார்கள் இருந்தால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
 
           கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள புகார் மையங்களை, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  பயிர் சேதத்துக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்த விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
 
           விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரூ. 120.16 கோடி நிதி ஒதுக்கி, நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் பெறப்பட்டு, அவற்றின் நகல்கள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 
 
            பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு முழுத் தொகையும் ஒரே தவணையில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை, வேறு எந்தக் கடனுக்கும் வரவு வைக்கப்படாமல், பிடித்தம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. 28.1.2012 வரை பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.107 கோடி வரை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. புகார் மையங்களில் அளிக்கப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, வேளாண்துறை, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்டு நேரடி விசாரணை செய்யப்படும். தகுதியான மனுதாரர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட்டு நிவாரணத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் ஆட்சியர். 
 
           சார் கிரண் குராலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிருந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன், வேளாண் அலுவலர் பூவராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/6b336bf3-14a2-4019-b1d1-f98709b361c9_S_secvpf.gif

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:

     கடலூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

            தற்போது மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு தானே புயலால் சேதமடைந்த சவுக்கு மரங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடார்ந்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை மூலம் தல ஆய்வு செய்து 50 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த சவுக்கு மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

           எனவே தானே புயலால் பாதிப்படைந்த சவுக்கு மரப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அவர் தொரிவித்துள்ளார்.

Read more »

Thane Cyclone unleashed fury on ageing Garden House in Cuddalore District

RAVAGED: The heritage building where British General Robert Clive lived and which serves as the camp office of the Cuddalore Collector, was partially damaged in the cyclone. Photo: C. Venkatachalapathy
 
RAVAGED: The heritage building where British General Robert Clive lived and which serves as the camp office of the Cuddalore Collector, was partially damaged in the cyclone. 
 
 
          A team from the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) has been called to inspect the damage caused by cyclone ‘Thane' to the 18th Century edifice here that was once the home of British General Robert Clive. Known as the Garden House in colonial parlance, it has been declared a heritage structure and serves as the camp of the District Collector.

       Situated in the heart of Cuddalore town, it had famed sylvan surroundings and thick woods. Tucked away from public view, the magnificent building had come up in the midst of gigantic trees. The mansion, which hosted many a banquet during the heydays of the British, was constructed using bricks and slake lime. Built in 1702 at a cost of Rs.27,500, the building fell into disrepair after the departure of the British.

        It is learnt that the roof collapsed in 1984, forcing subsequent Collectors to move to a modest building on the same campus. It prominently displays a circular plaque stating “This house was occupied by Robert Clive, afterwards created Lord Clive, circa 1756.” The ground floor of the colonial legacy now serves as the camp office and conference hall where the review meetings, including in-camera ones, are held. When the cyclone struck Cuddalore, as many as 60 trees on the campus were uprooted, blocking the approach road. The Collector could come out of the building only after removing the trees obstructing the way.

      The falling trees damaged the tiles on the roofs and chipped away a portion of the balcony. The ferocious winds broke glass panes and wooden frames of windows. The once well maintained garden in front of the building is now in tatters. When contacted, District Collector Rajendra Ratnoo told The Hindu that preliminary estimates showed that the building had suffered damages to the tune of Rs.30 lakh. Since it was a heritage structure renovation work could be entrusted only to experts. He said that the Superintendent of Police's bungalow, near Silver Beach, was another heritage building that was extensively damaged. He had asked the INTACH to send a team to assess the damage and prepare an estimate, in coordination with the Public Works Department and the Tamil Nadu Police Housing Corporation, to restore these heritage structures to their pristine glory.
 
 
 
 
 
 
 
 

Read more »

Rs.1,000-crore Housing project for cyclone-hit districts

      A Rs.1,000-crore project of building one lakh concrete houses in cyclone-hit districts such as Cuddalore and Villupuram was the highlight of Governor K. Rosaiah's address to the Assembly on Monday.

     Mr. Rosaiah, who delivered his first address as Governor since assumption of office in August, said the State would take up the construction immediately to replace the damaged huts in the districts. A detailed memorandum, spelling out the quantum of damage and seeking a special package of Rs.5,248 crore from the National Disaster Response Fund, had been submitted to the Centre.

    Considering the extensive damage suffered by the districts, the Chief Minister had sanctioned Rs.850 crore for restoration, relief measures and disbursal of compensation, the Governor recalled. The very severe cyclonic storm, ‘Thane,' crossed the coast near Cuddalore on December 29.Mr Rosaiah appreciated the State government for using early warning systems to initiate preventive measures and for taking timely action for providing relief. During the northeast monsoon, 177 persons had died, Mr Rosaiah pointed out.

        Chief Minister Jayalalithaa, her Ministerial colleagues, leaders of most of the Opposition parties including the Desiya Murpokku Dravida Kazhagam, Communist Party of India (CPI), CPI-Marxist and Congress were present. Earlier, when the Governor began to deliver his address, Dravida Munnetra Kazhagam legislators, led by M.K. Stalin, staged a walkout. Speaking to reporters outside the Assembly, Mr Stalin complained about the progress of relief works in cyclone-hit districts. A comprehensive programme would be unveiled in the State budget to deal with urban poverty. “Our efforts to mitigate rural poverty through dovetailing of various schemes like the National Rural Livelihood Mission and Pudhu Vazhvu project with State sector schemes will continue,” Mr Rosaiah said. On the front of urban development, the Governor said the government would continue to pay attention to solid waste management in an integrated manner, besides improving other public amenities like roads, streets and parks. The preparation of master plans in the expanded municipal corporations and municipalities would be carried out to ensure balanced and sustainable growth in urban areas. 

             To ensure the effectiveness of the Skill Development Mission, the Government had decided to integrate various skill-building programmes of different departments. Speaker D. Jayakumar read out the Tamil version of the Governor's address. Midway through the speech, the House observed a two-minute silence at 11 a.m. on the occasion of Martyrs' Day.

Read more »

Post 'Thane Cyclone', bird population dwindles in Cuddalore district

Birds have lost their shelters in post 'Thane' in Cuddalore. Photo:C.Venkatachalapathy
          Birds have lost their shelters in post 'Thane' in Cuddalore. 
 
 
 
           Post-cyclone ‘Thane', the bird population in Cuddalore district has significantly come down, both due to untimely deaths and shifting of habitats. The strong winds forced birds such as crows, sparrows, mynahs, parrots and ravens to abandon their usual roosting places and settle elsewhere.

         After the cyclone the carcasses of quite a number of crows were seen in many places and also along the coastline. Caught in the whirlwind they could not wing their way to safety. Deputy Director of the Bombay Natural History Society S. Balachandran, who has conducted studies on birds along the east coast, including Cuddalore, told The Hindu that fortunately for the bird population the cyclone struck in December.

      Had it happened during September-October the migratory birds would have perished in large numbers because that is the time when they fly over the region. Some of the migratory birds choose to spend the winter in Cuddalore district, he said. He said that that the common bird species, which take cover in the thick foliage, were rendered without shelter with several trees being uprooted. This had given rise to a situation in which these domesticated birds would have to find shelter on rooftops, window sills, ventilator chutes, high tension transmission lines and barren branches of truncated trees.

         With the dense canopies gone, the birds now stand fully exposed. These trees once harboured hundreds of birds. Today too many crows are seen sharing a defoliated coconut tree or a rain tree that escaped the ravages of the cyclone. Mr. Balachandran revealed a lesser known fact about Cuddalore: it attracts migratory birds from as far as Russia and the Arctic region and these are seen in groups on paddy fields. The black-tailed godwit, a bird species from the Arctic region, is often sighted plodding through the paddy fields. Sandpipers and plovers are the winged visitors from Russia that wing their way to Cuddalore.











Another species known as Ruff prefers to dwell on marshy land. These shore birds were gravely disturbed by the cyclone and many perished.
In the Pichavaram mangrove forests, Mr. Balachandran said, endemic species such as egrets and herons were affected.
The saving grace was that Cuddalore does not boast of any sanctuary or else the devastation could have been much worse to the fauna.
At the same time, Mr. Balachandran categorically said that the birds had the resilience to survive trying conditions and preen their feathers to get ready for flight.
He was confident that the domestic species would proliferate easily once the green cover was restored and adequate feed available.
 

Read more »

Speeding up the sanitary projects in Cuddalore District

        The much-touted scheme of building and maintaining integrated sanitary complexes in each village panchayat failed to take off as villagers preferred open spaces. The scheme launched way back in 1991 by the AIADMK government has now been revived in Trichy district with a fund allocation of Rs 1.7 crore.

        About 400 of the total 404 complexes are being renovated in Trichy district. A meeting was held on Tuesday under the guidance of additional director of the Women Development Corporation R Rajashree here with women development officers of Trichy, Aiyalur, Perambalur, Tiruvarur, Nagapattinam, Cuddalore, Pudukottai and Thanjavur for speeding up the sanitary projects.

        Trichy district women development officer P Vijaya Lakshmi told TOI after the meeting that the convenience complexes were not maintained during the last regime, and some of the members of women self-help groups (WSH) charged a fee for using the facility which villagers did not take kindly to. However, Lakshmi was of the opinion that anything given free would not work out and said the administration had decided to charge a nominal amount per family in the village for the facility, which would be utilised to supplement toiletries for common good.

         Vijaya Lakshmi said the chief minster had taken keen interest in the matter and this time, instead of the WSH groups, the responsibility of maintenance would be entrusted to the villagers themselves, who would be formed into monitoring groups. To start with, renovation would be carried out at the existing 397 sanitary complexes and the remaining that were damaged, would be reconstructed. Moreover, some villages in Lalgudi, Manapparai, and Mannachanallur town panchayats have also been identified for construction of new sanitary complexes in the second phase in the near future so that the ignominy of defecating in the open would be done away with once and for all, said Lakshmi.










Read more »

ஞாயிறு, ஜனவரி 29, 2012

வடலூர் ஓ.பி.ஆர்.நர்சு கல்லூரி மாணவிகள் கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் மனு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/094b7bec-e094-48b7-87c1-9704bdd2c58e_S_secvpf.gif
கடலூர்:
  

           வடலூர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர். நர்சு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கடந்த  வெள்ளிகிழமை  கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

             இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் நர்சு கல்லூரிகளில் பயின்ற மாணவிகளுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி அரசு பணி வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு நீண்டகாலமாக அரசு பணி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

             இது அரசியல் சாசனத்துக்கு முரணாக இருந்து வந்தது. தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு நர்சு கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

          வெளிநாட்டில், இந்தியாவில் நர்சு பயிற்சி முடித்த நர்சுகளுக்கும் குறிப்பாக தமிழக நர்சுகளுக்கும் அதிக வரவேற்பு உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை கொடுக்காதது பெரிய அவலநிலையாக இருந்தது. உலக அளவில் தமிழக நர்சுகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது.  இதனை உணர்ந்து திறந்த மனதுடன் பரிசீலனை செய்து பயிற்சி பெற்ற 2 லட்சம் நர்சுகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

             தமிழக அரசு சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. குறிப்பாக அரசு நர்சு பயிற்சிக்காக மட்டும் ஒரு சதவீதம் நிதி செலவாகிறது. தனியார் நர்சு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசின் நிதி எதுவும் செலவிடப்படுவதில்லை. இதனால் அரசுக்கு சேமிப்பு ஏற்படுகிறது. இந்த நிதியானது சுகாதாரத்துறையில் மேலும் பயனுள்ள உபகரணங்களை வாங்குவதற்கு பயன்படுத்தலாம். நர்சு பயிற்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். அரசு பணி கிடைக்காத நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது.

         பெண்களின் இந்த நிலையை தாய் மனதுடன் பரிசீலனை செய்து மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளியில் பயிற்சி பெற்றவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நர்சு பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ள முதல்-அமைச்சருக்கு தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற நர்சுகள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.   










Read more »

வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
          தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,. எம்.பிளான்., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் இந்த டான்செட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே சேர்ககை வழங்கப்படுகிறது. 
 
          தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பத்துடன் நுழைவுத் தேர்வுக் கட்டணமாக ரூ.500ஐ (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் ரூ.250) செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செலுத்தும் மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.500 அல்லது 250ஐ ஒரே டிடியாக எடுத்தும் அனுப்பலாம். மாணவர்கள் டிடி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையின் மையங்களில் நேரடியாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
         அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பலாம். இந்த மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 
 
          எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,
 
      எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் மாதம் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
 
       எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 
 
 
 
 
 இணையதளம் 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்


பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:

         கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.

           ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. 

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது. 

            மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

            அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன. 

            நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

            பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

            இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயல் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு



 
 
          "தானே' புயல் பாதிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 6 நாள்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
          இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9.63 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது
 
          பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2 முதல் 20 வரை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை முழுமையாகத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் செய்முறைத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 8 முதல் 25 வரை நடத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
        புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதோடு, பள்ளிகளில் வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதிப்பு காரணமாக பள்ளிகள் ஜனவரி 19-ம் தேதிதான் திறக்கப்பட்டன.குடியிருப்புகள், பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
           ஆனாலும், மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் ஜனவரி 29-க்குள் சீரடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். இருந்தாலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மின் இணைப்பு அவசியம் என்பதால், அந்த மாவட்ட அதிகாரிகள் தேர்வைத் தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. முன்னெச்சரிக்கை அடிப்படையில் விடப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்முறைத் தேர்வுகளை 6 நாள்கள் தள்ளிவைத்துள்ளது.
 
          செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மாசுகளால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகம்

கடலூர்:
          
 
          தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. 
 
           கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் 20-க்கும் மேல் உள்ளன.  மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல ரசாயனப் பொருள்கள், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.  இத்தொழிற்சாலைகள் வெளியேற்றும் திட, திரவ, வாயுக் கழிவுகளால் கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. 
 
          தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும், காற்றில் கலக்கும், சுகாதாரக் கேட்டை விளைவிக்கும், மோசமான ரசாயனங்களால், கடலூரில் சுற்றுச்சூழல் மோசமாகி வருவதாக, சிப்காட் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தி, பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது.  மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான "நீரி' என்ற அமைப்பு 2007-ல் முறையான ஆய்வு நடத்தி, சிப்காட் பகுதியில் காற்றில் கலந்துள்ள மோசமான ரசாயனங்களால், புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் 2 ஆயிரம் மடங்கு அதிகரித்து இருப்பதாக, அறிக்கை வெளியிட்டது. 
 
             எனவே இது குறித்து அப்பகுதி மக்களிடையே முறையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தது.  ஆனால் தொழிற்சாலைகளோ, மத்திய, மாநில அரசுகளோ இப்பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை.  புற்றுநோய் அதிகரிக்கும் அபாயமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று, பெயரளவில் மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தன.  அனைவரின் முகத்திரைகளையும் கிழித்தெறிந்து, உண்மையை உலக்குக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்து இருந்தது, சனிக்கிழமை இந்திய மருத்துவச் சங்கம் அளித்த அதிர்ச்சித் தகவல்.  
 
            இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பிரகாசம், "தானே' புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சனிக்கிழமை கடலூர் வந்தார். 
 
 இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவச் சங்க கடலூர் செயலர் சந்திரலாதன் கூறியது: 
 
            "தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் புற்றுநோய் நோய் அதிகரிகத்து வருகிறது.  பிற மாவட்டங்களை விட கடலூரில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாக உள்ளது. இதற்கு சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியிடும் வாயுக் கழிவுகளே முக்கிய காரணம்.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான், புற்றுநோய் பாதிப்பு பெரும்பாலும் காணப்படும். ஆனால் கடலூரில் 25 வயதினரிடையே அதிகம் புற்றுநோய் காணப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக, புற்றுநோயாளிகள், நாளொன்றுக்கு ஒருவர் வீதம், வருகிறார்கள். 
 
              புற்றுநோயால் 4 கட்டமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 4-வது கட்டத்தில், குணமாக்க முடியாத நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.  காரணம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு உள்ளது.  ரசாயனத் தொழிற்சாலைகளால், புற்றுநோயை உருவாக்கும் மாசுகள் அதிகம் இருப்பதை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்து இருக்கிறோம்.  இது குறித்து விரிவான ஆய்வை, இந்திய மருத்துவச் சங்கம் மேற்கொண்டு இருக்கிறது' என்றார் டாக்டர் சந்திரலாதன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்: 

        கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம், பள்ளி, நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி உத்திராபதி தேசிய கொடியை ஏற்றினார். நீதிபதிகள் முருகன், சண்முகநாதன், செல்வநாதன், நர்சீர்பானு, மாஜிஸ்திரேட் சுகந்தி பங்கேற்றனர்.

          கடலூர் நகராட்சியில் சேர்மன் சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் குமார், கமிஷனர் விஜயக்குமார் பங்கேற்றனர். 

           கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மணிமேகலை, 

          மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா, 

        காங்., அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், செல்லஞ்சேரி, 

             காரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கவேலு ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          தேவனாம்பட்டினம் நகராட்சி பள்ளியில் தலைவர் கடல் நாகராஜன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். 

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேர்மன் சுதாகர்,  வரக்கால்பட்டு சாந்த சூரி காளி பராதி அங்காளம்மன் கோவிலில் நிறுவனர் பன்னீர்செல்வம், 

          எழுமேடு பள்ளியில் ஊராட்சித் தலைவர் குமுதவல்லி, 

         டேனிஷ்மிஷன் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் அன்பு ஐ இன்பராஜ் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

பண்ருட்டி நகராட்சி 

         அலுவலகத்தில் சேர்மன் பன்னீர்செல்வம் தலைமையில் கமிஷனர் அருணாசலம் தேசிய கொடி ஏற்றினார். 

          ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., துரை தலைமையில், சேர்மன் மாலதி தேசிய கொடியேற்றினார்.
 
           அன்னை வேளாங்கண்ணி  பாலிடெக்னிக்கில் சிறுவத்தூர் பள்ளி ஆசிரியர் ரத்தின ஆறுமுகம், 

         பாலவிகார் பள்ளியில் முதல்வர் லோகநாதன், 

      புனித அன்னாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் கணபதி, 

      அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சுந்தரி,

      அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் புலமுதல்வர் செந்தில்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

        நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜானகிராமன், 

         சி.என்.பாளையம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மயிலை குருஜி ஆங்கிலப் பள்ளியில் நிர்வாகி முருகவேல் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர். 

சிதம்பரம்: 

           நகராட்சியில் சேர்மன் நிர்மலா, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதி, நகர போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சதீஷ், 

          அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

        ஆறுமுக நாவலர் பள்ளியில் ஹாஜி முகம்மது யாசின், பச்சையப்பன் பள்ளியில் முதுகலை ஆசிரியை கலாவதி, வீனஸ் பள்ளி, 

         காமராஜர் பள்ளியில் சேர்மன் நிர்மலா, காமராஜ் சிறப்புப் பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைத் தலைவர் கதிரேசன், 

           முஸ்தபா பள்ளியில் ஊராட்சி தலைவர் ஷபிபுன்னிசா அய்யூப், 

          தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் ரவிச்சந்திரன், 

          கீழச்சாவடியில் சேர்மன் அசோகன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லூர் ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது எகையா தேசிய கொடி ஏற்றினார்.
 

           விருத்தாசலம்: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தேசிய கொடியேற்றினார். தாசில்தார் பிரபாகரன் பங்கேற்றார். 

          நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் அரங்கநாதன் தேசிய கொடியேற்றினார். கமிஷனர் மணிவண்ணன் உடனிருந்தார்.

          எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முத்துக்குமார் எம்.எல்.ஏ., கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல்வர் கலாவதி கொடியேற்றினர். 

           மாணவர் விடுதியில் உடற்கல்வி ஆசிரியர் கவாஸ்கர், இன்பேன்ட் பள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன்,

           அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன், பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்தார்தன், 

          புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் தலைமை ஆசிரியர் அதிசயராஜன், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சீராளன் தேசிய கொடியேற்றினர்.

            பெரியகண்டியங்குப்பத்தில் கவுன்சிலர் ராஜ்குமார், 

           புதுக்கூரைப்பேட்டையில் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்க தலைவர் ஜோதி, 

           சிறுவம்பார் காலனி ஊராட்சி பள்ளியில் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன், 

           திரு.வி.க., நகர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் டேவிட்லாசர், 

           பூதாமூர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனாம்பிகை, 

           தென்கோட்டைவீதி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் தாரா தேசிய கொடி ஏற்றினர்.










Read more »

கடலூரில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:
 
           கடலூரில் 63-வது குடியரசு தினத்தையொட்டி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசியகொடியை ஏற்றி வைத்து 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
           கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 63வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு முதல்வர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். தியாகிகளை கவுரவித்த, கலெக்டர் ராஜேந்திர ரத்னு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்துறை சார்பில் 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையும், தானே புயலில் பயிர் பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
 
         படகு சேதமடைந்த 10 மீனவர்களுக்கு நிவாரணம் உள்பட மொத்தம் 183 பேருக்கு 41 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் நடனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கூட்டு உடற்பயிற்சி, வேணுகோபாலபுரம் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், வேலவிநாயகர்குப்பம் பள்ளி மாணவிகள், தேச பக்தி பாடல்களுக்கு நடகமாடினர்
 
             . கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு சான்றிதழ்களை வழங்கினார். எஸ்.பி., பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சேர்மன் சுப்ரமணியன், சப் கலெக்டர் கிரண் குராலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜனவரி 26, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டதெருவிளக்குகள் ரூ.14 கோடியில் சீரமைப்பு

கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, புயல் நிவாரணக் கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்
 
         .புயல் பாதித்த இடங்களில் மின் விநியோகம் சீரமைப்பு குறித்து, மின் வாரிய அதிகாரிகளுடன், அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.மின்வாரிய தலைமைப் பொறியாளர் அப்பாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் புயல் பாதித்த திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் ஆய்வு நடத்தினர். மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர்.
 
பின்னர் அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கூறியது:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க முதல்வர் ரூ. 14 கோடி ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலம் 53 ஆயிரம் குழல் விளக்குகள், 9 ஆயிரம் சோடியம் வேப்பர் விளக்குகள், 2300 சி.எஃப்.எல். விளக்குகள், 125 ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.இப்பணிகளில் ஊராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் இணைந்து ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய மின்இணைப்புகள் 69,783-ல் சனிக்கிழமை வரை 35,343 இணைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.மீதமுள்ள மின் இணைப்புகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தமிழ்நாட்டில் மக்காச்சோளம் விலை உயர வாய்ப்பு


கடலூர்: 

         ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தமிழகத்தில் மக்காச் சோளம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வேளாண்துறை அறிவித்து உள்ளது. 

          2010-11-ம் ஆண்டில் உலக அளவில் மக்காச்சோளம் 167 மில்லியன் எக்டேரில் பயிரிடப்பட்டு, 860 மில்லியன் டன் உற்பத்தி செய்யப் பட்டது. 2011-ம் ஆண்டில் மக்காச் சோளம் பயிரிடும் பரப்பளவும் உற்பத்தியும், வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இது 2001-ம் ஆண்டைவிட பரப்பளவில் 21 சதமும், உற்பத்தியில் 43 சதமும் அதிகமாகும். எத்தனால் தயாரிப்புக்கான மக்காச் சோளத்தின் தேவை அதிகரித்து வருவதே உற்பத்தி அதிகரிக்கக் காரணம். 

            தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எக்டேருக்கு 4.68 டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்து, உற்பத்தித் திறனில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 11.44 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடியில் தமிழகத்தில் பெரிய மாற்றம் காணப்பட்டு வருகிறது. 

            தமிழ்நாட்டில் கோழிப்பண்ணை நிறுவனங்கள் இப்போது மக்காச் சோளத்தை கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தில் மக்காச்சோளம் வரத்து ஆரம்பித்து விட்டதால், கோழிப் பண்ணைகள் டிசம்பரில் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அறுவடையாகும் மக்காச் சோளத்தை உடனே விற்றுவிடலாமா இருப்பு வைத்து பின்னர் நல்ல விலையில் விற்கலாமா என்பது குறித்த ஆலோசனையை விவயாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அறிவித்து உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரத்து, உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதி வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் வரை மக்காச்சோளம் விலையில் மாற்றம் இருக்காது என்று அறிவித்து உள்ளது. 

            புதிய மக்காச் சோளத்தை கோழிப் பண்ணைகள் இருப்பு வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே விலை குறைய வாய்ப்பில்லை. ஏப்ரல் வரை மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.1,050-ல் இருந்து ரூ.1,100 வரை இருக்கும், ஏப்பரல் மாதத்துக்குப் பின், தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் குவிண்டால் ரூ.1,200-ஐ தாண்டும். எனவே அறுவடையாகும் மக்காச் சோளத்தை வசதியுள்ள விவசாயிகள் ஏப்ரல் வரை சேமித்து வைக்க சிபாரிசு செய்யப்படுகிறார்கள். சேமிக்க வசதி இல்லாதவர்கள் மார்ச் வரை விலை உயர வாய்ப்பு இல்லாததால், அறுவடை செய்தவுடன், விற்பனை செய்துவிட பரிதுரைக்கப் படுவதாகவும் வேளாண் துறை அறிவித்து உள்ளது. 













Read more »

புதன், ஜனவரி 25, 2012

கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி

கடலூர் : 
 
          கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் 137 பேர் பங்கேற்றனர். 
 
           தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முதுநிலை தமிழாசிரியர் மஞ்சு வரவேற்றார். இதில் மாவட்டம் முழுவதும் 47 பள்ளிகளில் இருந்து 137 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
 
           மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல் பரிசு 15 ஆயிரமும், 2ம் பரிசு 10 ஆயிரமும் வழங்கப்படும். இன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பெரியார் அரசு கல்லூரியில் நடக்கிறது. 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் தானே புயலில் பாதித்த மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

கடலூர் : 
 
       கடலூர், ஆல்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர், திடீர்குப்பத்தில் தானே  புயலில் பாதித்த பள்ளி மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
 
            நடராஜன் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் குமார், பழனி, கருணாகரன், இளங்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களான மகாவீர்மல் மேத்தா, தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் பண்டரிநாதன், தமிழ் தேசிய விடுதலை பேரவை திருமார்பன், பரிதிவாணன் ஆகியோர் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கினர். அருள், புருஷோத்தமன், சிவா, சந்துரு, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். குப்புசாமி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Railway department has decided to stoppage of several trains at Tiruppadirippuliyur Railway station

       Conceding to the request of Parliamentary standing committee chairman on railways T.R. Baalu, the Union railway ministry on Tuesday announced the stoppage of several trains departing from Chennai.

       According to a statement from Mr Baalu, railway department has decided to stop the 

Chennai Egmore-Tiruchendur Express (train No. 16735/16736) at Tiruppadirippuliyur, 

Egmore-Rameshwaram Express (train No. 16701/16702) at Cuddalore,

Chennai Egmore-Guruvayur Express (16127/ 16128) at Pennadam, 

Mayiladuthurai-Mysore Express (16231/16232) at Papanasam 

and 

Chennai Egmore-Mannargudi Express (16179/ 16180) at Villupuram from February 10.

Bhubaneswar-Rameswaram Express (train No. 18496/18495) will stop at Tiruppadirippuliyur from February 11,

while Vasco-da-gam-Velankanni Express (train No: 17315/ 17316) will stop at Thiruvarur from February 14.

Similarly, Bilaspur-Tirunelveli Express (12787/ 12788) will stop at Coimbatore from March 11, 

while Mumbai CST-Thiruvananthampuram Express (train No: 16331/16332), Chennai Central-Alapuzha Express (train No. 16041/16042), 

Chennai Central-Mangalore Express (train No: 12685/12686) and 

Mangalore-Puducherry Express (train no: 16043/16044) will stop at Coimbatore from July 1.











Read more »

Parangipettai judicial magistrate extended till January 28

          The Cuddalore principal district sessions court Monday extended till January 28 its interim stay on the non-bailable warrant issued by the Parangipettai judicial magistrate court against chief minister J. Jayalalithaa.

          Judge K. Uthirapathy posted the next hearing to January 28 when the court is expected to pronounce its verdict on the NBW issued against Ms Jayalalithaa by a lower court. The matter relates to a case filed by the returning officer of Bhuvanagiri Assembly segment against Ms Jayalalithaa for filing nominations from more than one constituency.

        Former DMK MP C. Kuppusamy had moved the Madras high court seeking action against Jayalalithaa. The court had directed Election Commission to file cases in appropriate courts. Jayalalithaa moved the Supreme Court which stayed the proceedings. However, Parangipettai judicial magistrate Gomathy ordered for the issue of a non-bailable warrant against Jayalalithaa for her non-appearance in court. She had stayed the NBW but did not exempt Jayalalithaa from personal experience. When the case came up for hearing on January 4 the magistrate insisted on Jayalalithaa’s presence. Chief minister’s counsel A. Sankaran of Tindivanam moved the principal district sessions court and obtained an interim stay.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior