உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 07, 2011

நெய்வேலி என்.எல்.சியில் மாநில இறகு பந்து போட்டி

நெய்வேலி:
           நெய்வேலியில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான மனமகிழ் மன்றம் தான் லிக்னைட் நகர் மன்றம். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இம்மன்றம், முன்பு பூங்கா நகர் மன்றம் என அழைக்கப்பட்டு தற்போது லிக்னைட் நகர்மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இம்மன்றம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

                 அந்த வகையில், தற்போது என்.எல்.சி. விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு இறகுபந்து சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட இறகு பந்து சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மாநில தரவரிசை இறகு பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. லிக்னைட் நகர் மன்றத்தில், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தரத்திலான உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டிகள் தொடங்கியது.  

             நெய்வேலி, 25வது வட்டத்தில் அமைந்துள்ள லிக்னைட் நகர்மன்ற இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குனர் ஆச்சார்யா இப்போட்டிகளை தொடங்கி வைத்தார். லிக்னைட் நகர் மன்றத் தலைவர் சிவஞானம் வரவேற்றார். முடிவில் மன்ற செயலர் டாக்டர் சந்தானம் நன்றி கூறினார்.

             நிகழ்ச்சியில், இப்போட்டிகளுக்கான இணை இயக்குனர் சீனிவாஸ் அறிக்கை சமர்ப்பித்தார். தொடக்க விழாவில், என்.எல்.சி. மருத்துவமனை தலைமைப் பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகசுந்தரம், லிக்னைட் மன்ற பொருளாளர் ஜெயசிங் டேனியல், இணை செயலர் பாலச்சந்தர், நிறுவனத்தின் நியமன உறுப்பினர் ரவிசங்கர், பயிற்சியாளர்கள், என்.எல்.சி. ஊழியர்கள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.  

             இப்போட்டிகளுக்கான தலைமை நடுவராக, கோவையைச் சேர்ந்த வெங்கட் நாராயணன் தமிழ்நாடு இறகுபந்து சங்கம் நியமித்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து மேலும் ஏழு மாநில அளவிலான நடுவர்கள் அவருக்குத் துணையாகப் பணியாற்ற உள்ளனர். இப்போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில், என்.எல்.சி. அதிபர் அன்சாரி பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்க உள்ளார். மொத்தம் ரூ. 98 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

Read more »

நெய்வேலி என்.எல்.சியில் மாநில இறகு பந்து போட்டி

நெய்வேலி:
 
           நெய்வேலியில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான மனமகிழ் மன்றம் தான் லிக்னைட் நகர் மன்றம். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இம்மன்றம், முன்பு பூங்கா நகர் மன்றம் என அழைக்கப்பட்டு தற்போது லிக்னைட் நகர்மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இம்மன்றம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

                 அந்த வகையில், தற்போது என்.எல்.சி. விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு இறகுபந்து சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட இறகு பந்து சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மாநில தரவரிசை இறகு பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. லிக்னைட் நகர் மன்றத்தில், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தரத்திலான உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டிகள் தொடங்கியது.  

             நெய்வேலி, 25வது வட்டத்தில் அமைந்துள்ள லிக்னைட் நகர்மன்ற இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குனர் ஆச்சார்யா இப்போட்டிகளை தொடங்கி வைத்தார். லிக்னைட் நகர் மன்றத் தலைவர் சிவஞானம் வரவேற்றார். முடிவில் மன்ற செயலர் டாக்டர் சந்தானம் நன்றி கூறினார்.

             நிகழ்ச்சியில், இப்போட்டிகளுக்கான இணை இயக்குனர் சீனிவாஸ் அறிக்கை சமர்ப்பித்தார். தொடக்க விழாவில், என்.எல்.சி. மருத்துவமனை தலைமைப் பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகசுந்தரம், லிக்னைட் மன்ற பொருளாளர் ஜெயசிங் டேனியல், இணை செயலர் பாலச்சந்தர், நிறுவனத்தின் நியமன உறுப்பினர் ரவிசங்கர், பயிற்சியாளர்கள், என்.எல்.சி. ஊழியர்கள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.  

             இப்போட்டிகளுக்கான தலைமை நடுவராக, கோவையைச் சேர்ந்த வெங்கட் நாராயணன் தமிழ்நாடு இறகுபந்து சங்கம் நியமித்துள்ளது. அத்துடன் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து மேலும் ஏழு மாநில அளவிலான நடுவர்கள் அவருக்குத் துணையாகப் பணியாற்ற உள்ளனர். இப்போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில், என்.எல்.சி. அதிபர் அன்சாரி பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்க உள்ளார். மொத்தம் ரூ. 98 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழைக்கால நோயை தடுக்க 63 மருத்துவகுழு


கடலூர்:
 
         தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகிளல் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 535 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.  

              தொடர்ந்து பெய்த மழையால் ஏற்கனவே 4 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற் கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

         மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் பெறும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04142-231653 என்ற தொலைபேசி மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

           மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும் என்றும் தயாரித்து 24 மணிநேரத்திற்கு மேலான உணவுகளை உண்ண வேண்டாம் என்றும் கொசுக்களால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் வீட்டின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கலெக்டர் அமுதவல்லி வலியுறுத்தி உள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் வெள்ளாற்றில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து விழுந்தது


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/bc3c4464-2ddf-4d87-965e-bb5f2b3db717_S_secvpf.gif
 
விருத்தாசலம்:

            விருத்தாசலம் வெள்ளாற்றில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று மாலை வெள்ளாற்று தடுப்பணை இடிந்து விழுந்தது.   இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வெள்ளாற்றையொட்டி உள்ள மருங்கூர், காவனூர், கீரமங்கலம், பவழங்குடி உள்ளிட்ட 10 கிராம வயல்களில் புகுந்தது. நெற்பயிற்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior