உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் ஓராண்டுப் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம்:

 சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் ஓராண்டுப் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமை வகிக்கிறார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சி.வெங்கசடேசன், ஒன்றியச் செயலர்கள் பி.மாசிலாமணி, (குமராட்சி), ஆர்.சதானந்தம் (புவனகிரி) உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நிறைவு உரையாற்றுகிறார். அண்ணாமலைநகர் பேரூராட்சிச் செயலர் எஸ்.ராஜா நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர் பி.கற்பனைச்செல்வம் செய்துள்ளார்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior