உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 03, 2011

2006 சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் வெற்றி விவரம்

2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்  

சென்னை 1.ராயபுரம் (அ.தி.மு.க.), 2.துறைமுகம் (தி.மு.க.), 3.ஆர்.கே.நகர் (அ.தி.மு.க.), 4.பூங்காநகர் (அ.தி.மு.க.), 5.பெரம்பூர் (மார்க்.கம்யூ.), 6.புரசைவாக்கம் (தி.மு.க.), 7.எழும்பூர் (தி.மு.க.), 8.அண்ணாநகர் (தி.மு.க.), 9.தியாகராயநகர் (அ.தி.மு.க.), 10.ஆயிரம் விளக்கு (தி.மு.க.).

11.சேப்பாக்கம் (தி.மு.க.), 12.திருவல்லிக்கேணி (அ.தி. மு.க.), 13.மைலாப்பூர் (அ.தி. மு.க.), 14.சைதாப்பேட்டை (அ.தி.மு.க.), 15.கும்மிடிப் பூண்டி (அ.தி.மு.க.), 16.பொன்னேரி (அ.தி.மு.க.), 17.திருவொற்றியூர் (தி.மு.க.), 18.வில்லிவாக்கம் (தி.மு.க.), 19.ஆலந்தூர் (தி.மு.க.), 20.தாம்பரம் (தி.மு.க.).

21.திருப்போரூர் (பா.ம.க.), 22.செங்கல்பட்டு (பா.ம.க.), 23.மதுராந்தகம் (காங்.), 24.அச்சரப்பாக்கம் (தி.மு.க.), 25.உத்திரமேரூர் (தி.மு.க.), 26.காஞ்சீபுரம் (பா.ம.க.), 27.ஸ்ரீபெரும்புதூர் (காங்.), 28.பூந்தமல்லி (காங்.), 29.திருவள்ளூர் (தி.மு.க.), 30.திருத்தணி (அ.தி.மு.க.).

31.பள்ளிப்பட்டு (காங்.), 32.அரக்கோணம் (தி.மு.க.), 33.சோளிங்கர் (காங்.), 34.ராணிபேட்டை (தி.மு.க.), 35.ஆற்காடு (பா.ம.க.), 36.காட்பாடி (தி.மு.க.), 37.குடியாத்தம் (மார்க்.கம்யூ), 38.பேரணாம்பட்டு (தி.மு.க.), 39.வாணியம்பாடி (தி.மு.க.), 40.நாட்ராம்பள்ளி (தி.மு.க.).

41.திருப்பத்தூர் (பா.ம.க.), 42.செங்கம் (காங்.), 43.தண்டராம்பட்டு (தி.மு.க.), 44.திருவண்ணாமலை (தி.மு.க.), 45.கலசபாக்கம் (அ.தி.மு.க.), 46.போளூர் (காங்.), 47.அணை கட்டு (அ.தி.மு.க.), 48.வேலூர் (காங்.), 49.ஆரணி (தி.மு.க.), 50.செய்யூர் (காங்.).

51.வந்தவாசி (தி.மு.க.), 52.பெரணமல்லூர் (பா.ம.க.), 53.மேல்மலையனூர் (பா.ம.க.), 54.பசெஞ்சி (தி.மு.க.), 55.திண்டிவனம் (அ.தி.மு.க.), 56.வானூர் (அ.தி.மு.க.), 57.கண்டமங்கலம் (தி.மு.க.), 58.விழுப்புரம் (தி.மு.க.), 59.முகையூர் (பா.ம.க.), 60.திருநாவலூர் (அ.தி.மு.க.).

61.உளூந்தூர்பேட்டை (அ.தி.மு.க.), 62.நெல்லிக்குப்பம் (தி.மு.க.), 63.கடலூர் (தி.மு.க.), 64.பண்ரூட்டி (பா.ம.க.), 65.குறிஞ்சபாடி (தி.மு.க.), 66.புவனகிரி (அ.தி.மு.க.), 67.காட்டுமன்னார் கோவில் (விடுதலை சிறுத்தைகள்), 68.சிதம்பரம் (அ.தி.மு.க.), 69.விருத்தாச்சலம் (தே.மு. தி.க.), 70.மங்களூர் (வி. சிறுத்தைகள்).

71.ரிஷிவந்தியம் (காங்.), 72.சின்னசேலம் (தி.மு.க.), 73.சங்கராபுரம் (தி.மு.க.), 74.ஓசூர் (காங்.), 75.தளி (காங்.), 76.காவேரிப்பட்டினம் (பா.ம.க.), 77.கிருஷ்ணகிரி (தி.மு.க.), 78.பபர்கூர் (தி.மு.க.), 79.அரூர் (மார்க்.கம்யூ), 80.மொரப்பூர் (தி.மு.க.).

81.பாலக்கோடு (அ.தி. மு.க.), 82.தர்மபுரி (பா.ம.க.), 83.பென்னாகரம் (தி.மு.க.), 84.மேட்டூர் (பா.ம.க.), 85.தாரமங்கலம் (பா.ம.க.), 86.ஓமலூர் (பா.ம.க.), 87.ஏற்காடு (தி.மு.க.), 89.சேலம்-1 (அ.தி.மு.க.), 90.சேலம்-2 (தி.மு.க.).

91.பொன்னமராவதி (தி.மு.க.), 92.ஆத்தூர் (காங்.), 93.தலைவாசல் (தி.மு.க.), 94.ராசிபுரம் (தி.மு.க.), 95.சேர்ந்தமங்கலம் (தி.மு.க.), 96.நாமக்கல் (காங்.), 97.கபில மலை (பா.ம.க.), 98.திருச்செங்கோடு (அ.தி.மு.க.), 99.சங்ககிரி (தி.மு.க.), 100.எடப்பாடி (பா.ம.க.).

101.மேட்டுப்பாளையம் (அ.தி.மு.க.), 102.அவினாசி (அ.தி.மு.க.), 103.தொண்டாமுத்தூர் (காங்.), 104.சிங்கநல்லூர் (அ.தி.மு.க.), 105.கோவை மேற்கு (அ.தி.மு.க.), 106.கோவை கிழக்கு (தி.மு.க.), 107.பேரூர் (அ.தி.மு.க.), 108.கிணத்துக்கடவு (அ.தி. மு.க.), 109.பொள்ளாச்சி (அ.தி.மு.க.), 110. வால்பாறை (காங்.).

ஈரோடு 111.உடுமலைப்பேட்டை (அ.தி.மு.க.), 112.தாராபுரம் (தி.மு.க.), 113.வெள்ளக் கோவில் (தி.மு.க.), 114.பொங்கலூர் (தி.மு.க.), 115.பல்லடம் (அ.தி.மு.க.), 116.திருப்பூர் (மார்க்.கம்யூ.), 117.காங்கேயம் (காங்.), 118.மொடக்குறிச்சி (காங்.), 119.பெருந்துறை (அ.தி.மு.க.), 120.ஈரோடு (தி.மு.க.),

121.பவானி (பா.ம.க.), 122.அந்தியூர் (தி.மு.க.), 123.கோபி செட்டிபாளையம் (அ.தி.மு.க.), 124. பவானிசாகர் (தி.மு.க.), 125. சத்தியமங்கலம் (தி.மு.க.), 126. குன்னூர் (தி.மு.க.), 127. ஊட்டி (காங்.), 128. கூடலூர் (தி.மு.க.), 129.பபழனி (தி.மு.க.), 130. ஒட்டன்சத்திரம் (அ.தி.மு.க.).

131. பெரியகுளம் (அ.தி. மு.க.), 132. தேனி (அ.தி. மு.க.), 133. போடி நாயக்கனூர் (தி.மு.க.), 134. கம்பம் (தி.மு.க.), 135. ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க.), 136. சேடப்பட்டி (அ.தி.மு.க.), 137. திருமங்கலம் (தி.மு.க.), 138. உசிலம்பட்டி (அ.தி.மு.க.), 139. நிலக்கோட்டை (அ.தி.மு.க.), 140.சோழவந்தான் (தி.மு.க.).

141. திருப்பரங்குன்றம் (அ.தி.மு.க.), 142. மதுரை மேற்கு (காங்.), 143. மதுரை மத்தி (தி.மு.க.), 144. மதுரை கிழக்கு (மார்க்.கம்யூ.), 145.பசமயநல்லூர் (தி.மு.க.), 146.மேலூர் (அ.தி.மு.க.), 147.நத்தம் (அ.தி.மு.க.), 148.திண்டுக்கல் (மார்க்.கம்யூ.), 149.ஆத்தூர் (தி.மு.க.), 150. வேடசந்தூர் (காங்.).

151. அரவாக்குறிச்சி (தி.மு.க.), 152. கரூர் (அ.தி.மு.க.), 153. கிருஷ்ணராயபுரம் (தி.மு.க.), 154. மருங்காபுரி (இந்திய கம்யூ), 155. குளித்தலை (தி.மு.க.), 156. தொட்டியம் (காங்.), 157. உப்பிலியாபுரம் (தி.மு.க.), 158. முசிறி (தி.மு.க.), 159. லால்குடி (தி.மு.க.),

160. பெரம்பலூர் (தி.மு.க.), 161. வரகூர் (அ.தி. மு.க.), 162. அரியலூர் (காங்.), 163. ஆண்டிமடம் (தி.மு.க.), 164. ஜெயங்கொண்டம் (அ.தி.மு.க.), 165. ஸ்ரீரங்கம் (அ.தி.மு.க.), 166. திருச்சி-1 (தி.மு.க.), 167. திருச்சி-2  (தி.மு.க.), 168. திருவெறும்பூர் (தி.மு.க.), 169. சீர்காழி (தி.மு.க.), 170. பூம்புகார் (தி.மு.க.).

171. மயிலாடுத்துறை (காங்.), 172. குத்தாலம் (தி.மு.க.), 173. நன்னிலம் (இந்திய கம்யூ.), 174. திருவாரூர் (தி.மு.க.), 175. நாகப்பட்டினம் (மார்க்.கம்யூ.), 176. வேதராண்யம் (தி.மு.க.), 177. திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூ.), 178. மன்னார்குடி (இந்திய கம்யூ.), 179. பட்டுக்கோட்டை (காங்.), 180. பேராவூரணி (அ.தி.மு.க.).

181. ஒரத்தநாடு (அ.தி.மு.க.), 182. திருவோணம் (தி.மு.க.), 183. தஞ்சாவூர் (தி.மு.க.), 184.திருவையாறு (தி.மு.க.), 185.பாபநாசம் (அ.தி.மு.க.), 186.வலங்கைமான் (அ.தி. மு.க.), 187. கும்பகோணம் (தி.மு.க.), 188. திருவிடைமருதூர் (அ.தி.மு.க.), 189.திருமயம் (காங்.), 190.கொளத்தூர் (அ.தி.மு.க.). புதுக்கோட்டை 191. புதுக்கோட்டை (அ.தி.மு.க.), 192. ஆலங்குடி (இந்திய கம்யூ), 193. அறந்தாங்கி (தி.மு.க.), 194. திருப்பத்தூர் (தி.மு.க.), 195.பகாரைக்குடி (காங்.), 196. பதிருவாடனை (காங்.), 197. இளையாங்குடி (தி.மு.க.), 198. சிவகங்கை (இந்திய கம்யூ), 199. மானாமதுரை (அ.தி.மு.க.), 200. பரமக்குடி (காங்.).

201. ராமநாதபுரம் (காங்.), 202. கடலாடி (தி.மு.க.), 203. முதுகளத்தூர் (தி.மு.க.), 204. அருப்புக்கோட்டை (தி.மு.க.), 205. சாத்தூர் (தி.மு.க.), 206.விருதுநகர் (ம.தி.மு.க.), 207.சிவகாசி (ம.தி.மு.க.), 208.ஸ்ரீவில்லிபுத்தூர் (இந்திய கம்யூ.), 209. ராஜபாளையம் (அ.தி.மு.க.), 210. விளாத்திகுளம் (அ.தி.மு.க.).

211. ஒட்டப்பிடாரம் (அ.தி.மு.க.), 212.கோவில்பட்டி (அ.தி.மு.க.), 213.சங்க ரன் கோவில் (அ.தி.மு.க.), 214. வாசுதேவநல்லூர் (ம.தி.மு.க.), 215. கடையநல்லூர் (காங்.), 216. தென்காசி (தி.மு.க.), 217.ஆலங்குளம் (தி.மு.க.), 218.திருநெல்வேலி (தி.மு.க.), 219. பாளையங்கோட்டை (தி.மு.க.), 220. சேரன்மகாதேவி (காங்.).

221. அம்பாசமுத்திரம் (தி.மு.க.), 222. நாங்குனேரி (காங்.), 223. ராதாபுரம் (தி.மு.க.), 224. சாத்தான்குளம் (காங்.), 225. திருச்செந்தூர் (தி.மு.க.), 226. ஸ்ரீவைகுண்டம் (காங்.), 227. தூத்துக்குடி (தி.மு.க.), 228. கன்னியாகுமரி (தி.மு.க.), 229. நாகர்கோவில் (தி.மு.க.), 230. குளச்சல் (காங்.). திருவட்டார் 231. திருவட்டார் (மார்க். கம்ïயூ), 232. பத்மநாபபுரம் (தி.மு.க.), 233. விளவன்கோடு (மார்க்.கம்யூ), 234.கிள்ளியூர் (காங்.).

Read more »

குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு



            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  (மார்ச் - 6) நடைபெறவுள்ளது.

              சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோகஸ் அகாதெமியின் சார்பில் தேர்வு நடைபெறும். அதன் பின், தேர்வுக்குத் தயாராகும் முறை, நேரத்தினை திட்டமிடுதல், பாடப்புத்தகங்களை தேர்வு செய்தல் உள்ளிட்டவற்றில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். 

இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு: 044-3200 0809, 94427 22537.

Read more »

கடலூரில் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

கடலூர் : 

               கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். 

              வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் கடந்த மாதம் 2ம் தேதி முதல் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. 

                இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதேப்போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வில் 7 மாணவர்கள் காப்பி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 10 மாணவர்கள் பிடிபட்டனர். பிளஸ் 2 செய்முறைத் தேர்வு கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று முதல் எழுத்துத்தேர்வு துவங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வான நேற்று விருத்தாசலம் டி.எம்., மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர் ஒருவரும், குமாராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், மேலவன்னியூர் ஆதி திராவிட நலப்பள்ளியில் எழுதிய மாணவர் ஒருவரும் மொத்தம் 4 மாணவர்கள் பிடிபட்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

கடலூர் : 

             தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியது: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்ட சபை தொகுதிகளில் 8,36,633 ஆண் வாக்காளர்களும் 8, 08,501 பெண் வாக்காளர்களும் ஆக 16,45,134 வாக்காளர்கள் உள்ளனர். 1,165 ஓட்டுச்சாவடிகள் பதட்டம், மிகவும் பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டு 1,900 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் தேவை என ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

                கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இன்று (நேற்று) முதல் செயல்படத் துவங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை தெரிவிக்க 04142-220029, 230651 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் 400 முதல் 450 ஓட்டுச்சாவடிகளில் முதன் முதலாக "வெப் கேமரா' பொருத்தி ஓட்டுப் பதிவினை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

             பதட்டம் நிறைந்த, மிகவும் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்து தேர்தலை நடத்துவதற்கு 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர், காவல்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

               இது தொடர்பாக இன்று (நேற்று) மாலை தேர்தல் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டம் நடக்கிறது. நாளை (இன்று) காலை 10 மணிக்கு போலீஸ் திருமண மண்டபத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அனைத்து கட்சிக் கூட்டம் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் படி அரசியல் கட்சிகள் காவல் துறை நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டுமே காவல்துறை அனுமதி பெற்று ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். 

                பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரத்தை நகரப் பகுதிகளில் இரவு 10 மணிக்குள்ளும், கிராமப்புறங்களில் இரவு 11 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். பேட்டியின் போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Read more »

ஜுன் 30 முதல் 25 காசு நாணயம் செல்லாது: இந்திய ரிசர்வ் வங்கி

          25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு எடுத்து உள்ளது. இந்திய நாணய சட்டம் 1906 ன் கீழ், வரும் ஜுன் 30ந் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது. சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் பொதுமக்கள் இந்த நாணயங்களை தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Read more »

Central forces for booth security in Cuddalore district


Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis addressing a press conference in Cuddalore on Wednesday.

CUDDALORE: 

           A total of 1,380 out of 1,945 polling stations in Cuddalore district have been identified as sensitive. These polling stations will be guarded by the Central paramilitary forces and monitored by micro observers and videographed, according to Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis.

           They were addressing a press conference here on Wednesday on preparedness for the Assembly elections scheduled for April 13. They said that instead of classifying the booths as “sensitive, hypersensitive and vulnerable,” problematic booths had been brought under the single head “sensitive,” but with gradation. These booths were so classified depending upon past experience: either these booths fall within the ambit of the constituencies in which high-profile candidates were contesting, or where the polling was either beyond expectations or too low or where malpractices occurred.

          While Bhuvanagiri had the highest number of sensitive booths (188), Cuddalore had the lowest number of problematic booths (73). The Collector said that the micro observers were officials drawn from the Central government undertakings and public sector enterprises. It would be the responsibility of the micro observers to monitor the sensitive booths and inform the happenings to the general and expenditure observers. There would be five general observers, at the rate of one each for every two Assembly segments, and two expenditure observers, at the rate of one for every five Assembly segments.

          The Collector said that on the guidelines of the Election Commission, the “District Election Management Plan” (DEMP) would be readied by Saturday, listing out sensitive booths, security arrangements and the number of polling officials. In the revised electoral rolls, there were 16,45,134 voters in the district, including 8,36,633 men and 8,08,501 women. Of the 49,976 newly enrolled voters, 32,121 were in the 19-20 age group. Non-Resident Indians seeking to vote would have to submit Form-6A, he said.

            The model code of conduct had come into force from Tuesday evening, and hence, the conduct of processions, public meetings and publicity materials should be in conformity with the code. Venues for public meetings had been identified where national, State and district-level leaders and local dignitaries would get priority in that order. The campaign could go on till 10 p.m. in urban areas and 11 p.m. in rural areas. The Collector said that an election control room had been set up at the Collectorate that would function round the clock to register complaints and clear doubts about election related matters.

Read more »

Uproar over change of exam centre for +2 Board Exam

CUDDALORE: 

             Before the commencement of the Plus-Two public examinations, Government Girls Higher Secondary School at Chidambaram witnessed a commotion on Wednesday as parents and teachers gathered there to protest the change of venue at short notice.

           They alleged that without any prior intimation, a section of students originally allotted the Chidambaram Government Girls Higher Secondary School as the examination centre were shifted to a sub-centre in the Rani Seethai Achi Higher Secondary School at Annamalai Nagar, located four km away. They came to know of the change of centre only through newspapers.

        Since they faced logistics problem in reaching the sub-centre, they urged the authorities to retain the original centre. On information, District Educational Officer Bharathamani, Deputy Superintendent of Police Natarajan and Inspector of Police Subramanian reached the spot and held talks with the agitated parents and teachers. The officials told them that after notifying the sub-centre it would not be possible to effect a change.

         However, they said, the parents could request the respective school management to make transport arrangements. Chief Educational Officer C.Amudhavalli told The Hindu that originally it was planned to accommodate 900 candidates in the Chidambaram Government Girls Higher Secondary School. But since the old building was demolished to raise a new structure with NABARD assistance, the school had space for only 500 candidates.

           Hence, for making room for the remaining 400 candidates the department had to look for other sub-centres. When contacted, C.R. Lakshmikandhan, Correspondent of Kamaraj Matriculation Higher Secondary School, said that no formal communication was made to the school to act as a sub-centre.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior