உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

போலீ​சை கண்டித்து பாமக முற்றுகை

கடலூர்,​​ டிச.​ 9:​ ​ 

                     சொத்​துத் தக​ரா​றில் போலீ​ஸôர் ஒரு​த​லைப் பட்​ச​மாக நடந்து கொள்​வ​தா​கக் குற்​றம் சாட்டி,​​ நடு​வீ​ரப்​பட்டு காவல் நிலை​யத்தை பா.ம.க.வினர் புதன்​கி​ழமை ​ 2 மணி நேரம் முற்​று​கை​யிட்​ட​னர்.​
 
           நெல்​லிக்​குப்​பம் அருகே மூலக்​குப்​பம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர்​கள் விவ​சா​யி​கள் நாரா​ய​ண​சாமி மற்​றும் கலி​ய​மூர்த்தி.​ இரு குடும்​பத்​தி​ன​ரும் கடந்த 6-ம் தேதி நிலத்​த​க​ரா​றில் மோதிக்​கொண்​ட​னர்.​ இதில் கலி​ய​மூர்த்தி தரப்​பில் இரு பெண்​கள் உள்​ளிட்ட 7 பேர் காயம் அடைந்​த​னர்.​ அனை​வ​ரும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்ப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கி​றார்​கள்.​ ​ நாரா​ய​ண​சாமி தரப்​பில் 4 பேர் லேசான காயம் அடைந்​த​னர்.​ மோதல் தொடர்​பாக நடு​வீ​ரப்​பட்டு போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​
 
                       இந்​நி​லை​யில் பலத்​தக்​கா​யம் அடைந்து மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்​று​வ​ரும் கலி​ய​மூர்த்தி தரப்​பி​னர் மீது கொலை முயற்சி உள்​ளிட்ட பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து 4 பேரை போலீ​ஸôர் கைது செய்​துள்​ள​னர்.​ நார​ய​ண​சாமி தரப்​பி​னர் மீது சாதா​ரண பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து,​​ யாரை​யும் கைது செய்ய வில்​லை​யாம்.​
 
               எ​னவே கலி​ய​மூர்த்தி தரப்​பில் அவ​ரது ஆத​ர​வா​ளர்​க​ளும் பா.ம.க.​ வின​ரும் சேர்ந்து சுமார் 200 பேர் நடு​வீ​ரப்​பட்டு காவல் நிலை​யத்தை புதன்​கி​ழமை முற்​று​கை​யிட்​ட​னர்.​ ஒன்​றிய பா.ம.க.​ ​ செய​லா​ளர் தட்​சி​ணா​மூர்த்தி தலை​மை​யில் நடந்த இந்த முற்​றுகை சுமார் 2 மணி நேரம் நீடித்​தது.​ கலி​ய​மூர்த்தி தரப்​பி​ன​ரைத் தாக்​கிய நபர்​கள் மீது உரிய பிரி​வு​க​ளில் வழக்​குப் பதிவு செய்து கைது செய்ய வேண​டும்,​​ பிரச்​னைக்​கு​ரிய நிலம் தொடர்​பாக 145 விசா​ர​ணைக்கு உத்​த​ர​விட வேண்​டும் என்​றும் அவர்​கள் கோரி​னர்.​ ​ தக​வல் அறிந்​த​தும் ​ பண்​ருட்டி போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் விரைந்து வந்து முற்​று​கை​யிட்​ட​வர்​க​ளி​டம் பேச்சு நடத்​தி​னார்.​ உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று உறுதி அளிக்​கப்​பட்​ட​தைத் தொடர்ந்து முற்​று​கைப் போராட்​டம் கைவி​டப்​பட்​டது.

Read more »

கட​லூர் அரசு அலு​வ​ல​கத்​தில்​ ஆத​ர​வற்​றுக் கிடந்த குழந்தை

கடலூர்,​​ டிச.​ 9: ​ 
 
            கட​லூர் பொதுப் பணித்​துறை அலு​வ​ல​கத்​தில் ஆத​ர​வற்​றுக் கிடந்த பெண் குழந்​தையை மக​ளிர் காவல் நிலை​யப் போலீ​ஸôர் மீட்டு அரசு மருத்​து​வ​ம​னை​யில் ​ ஒப்​ப​டைத்​த​னர்.​ ​
          
                க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் உள்ள பொதுப்​ப​ணித்​துறை அலு​வ​லக வளா​கத்​தில் உள்ள வர​சித்தி விநா​ய​கர் ஆல​யத்​தில்,​​ திங்​கள்​கி​ழமை இரவு குழந்தை அழும் சப்​தம் கேட்​டது.​
 
                அ​லு​வ​லக ஊழி​யர் வந்து பார்த்​த​போது,​​ பிறந்து 3 நாள்​களே ஆன பெண் குழந்தை குளி​ரில் நடுங்​கி​ய​ப​டிக் கிடந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.​ இது​கு​றித்து தகவல் அறிந்த போ​லீஸ் சப்-​இன்ஸ்​பெக்​டர் சித்ரா விரைந்து சென்று,​​ அந்​தக் குழந்​தை​யைக் கைப்​பற்​றி​னார்.​ சைல்டு லைன் அமைப்​பின் மூல​மாக குழந்தை கட​லூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டது.​ மா​ வட்ட சமூக நலத்​துறை மூலம் இக் குழந்தை அங்​கீ​கா​ரம் பெற்ற குழந்​தை​கள் பரா​ம​ரிப்பு மற்​றும் தத்து கொடுக்​கும் நிறு​வ​னத்​தி​டம் ஒப்​ப​டைக்​கப்​ப​டும் என்று சைல்டு லைன் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் தெரி​வித்​த​னர்.​ ​
 
               பி​றந்து 3 நாள்​களே ஆன இக் குழந்​தை​யைப் பொதுப் பணித்​துறை அலு​வ​லக வளா​கத்​தில் போட்​டுச் சென்​றது யார் என்று கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​
 
           இச் சம்​ப​வத்​தைத் தொடர்ந்து கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் பிறந்த குழந்​தை​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.​ அனைத்து குழந்​தை​க​ளும் சரி​யாக இருப்​ப​தாக தெரி​விக்​க​கப்​பட்​டது.​ ​
 
          அண்​மைக் கால​மாக கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் பிறக்​கும் குழந்​தை​களை முள்​பு​த​ரி​லும்,​​ பொது இடங்​க​ளி​லும் அநா​தை​யாக விட்​டுச் செல்​லும் சம்​ப​வம் அதி​க​ரித்து வரு​கி​றது.

Read more »

பண்​ருட்​டி​யில் வயிற்றுப்போக்கு:​ ஒரு​வர் சாவு

பண்ருட்டி,​​ டிச.​ 9: 
 
                  பண்​ருட்டி விழ​மங்​க​லம் பகு​தி​யில் வயிற்றுப்போக்கு கார​ண​மாக ரங்​க​நா​தன் ​(65) செவ்​வாய்க்​கி​ழமை இறந்​தார்.​
 
                50-க்கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​பண் ​ருட்டி விழ​மங்​க​லம் காலனி பகு​தி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஒரு சில​ருக்கு வயிற்றுப்போக்கு ஏற்​பட்​டது.​ இது மேலும் பர​வி​ய​தைத் தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்​பட்​டோர் பண்​ருட்டி அரசு மருத்​து​வ​மனை மற்​றும் தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்​ற​னர்.​÷இந்​ நி​லை​யில் வயிற்றுப்போக்கால் பாதிக்​கப்​பட்டு அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்ட ரங்​க​நா​தன் ​(65) செவ்​வாய்க்​கி​ழமை இறந்​தார்.​ இத​னால் பண்​ருட்டி பகு​தி​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​
 
 
                        இந்​நோ​ யால் பதிக்​கப்​பட்ட 19 பேர் பண்​ருட்டி அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ மோச​மான நிலை​யில் இருந்த லட்​சுமி ​(60),​ குப்பு ​(55) ஆகிய இரு​வ​ரும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னைக்கு மேல் சிகிச்​சைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​
 
                 நோய் பாதித்த பகு​தி​யில் மருத்​து​வக் குழு​வி​னர் முகா​மிட்டு நோய் தடுப்பு நட​வ​டிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​
 
                   ந ​கர ஆணை​யர் உமா​ம​கேஸ்​வரி,​​ நகர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன்,​​ சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன் ஆகி​யோர் நேரில் சென்று ஆய்வு செய்​துள்​ள​னர்.​
 
                       க​ழி​வு​நீர் கலந்த குடி​நீ​ரால் இந்​நோய் ஏற்​பட்​ட​தாக தெரிய வந்​துள்​ளது.​ இதனை தொடர்ந்து குடி​நீரை ஆய்​வுக்​காக அனுப்​பி​யுள்​ள​னர்.​ மேலும் அப்​ப​கு​தி​யில் கிடந்த குப்​பை​கள் அகற்​றி​யும்,​​ தேங்கி நின்ற கழிவு நீரை வெளி​யேற்​றி​யும்,​​ அடை​பட்ட கால்​வாய்​களை தூர்​வா​ரும் பணி​யி​லும் நக​ராட்சி ஊழி​யர்​கள் ஈடு​ப​டுத்​தப்​பட்​ட​னர்.​ நோய் பாதித்த விழ​மங்​க​லம் பகு​தியை மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் புதன்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.​ அங்கு அமைக்​கப்​பட்​டி​ருந்த மருத்​துவ முகா​முக்கு சென்று தக​வல்​களை கேட்​ட​றிந்​தார்.​ முகாம் அருகே தேங்கி இருந்த கழிவு நீரை அப்​பு​றப்​ப​டுத்​த​வும்,​​ சுகா​தார நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு ஆணை​யர் உமா​ம​கேஸ்​வ​ரி​யி​டம் கூறி​னார்.​
  
பின்​னர் நிரு​பர்​க​ளி​டம் அவர் கூறி​யது:​ 
 
இப்​ப​கு​தி​யில் உள்ள ஒவ்​வொரு குழா​யி​லும் தண்​ணீரை எடுத்து சோதனை செய்ய உத்​த​ர​விட்​டுள்​ளேன்.​ ஆய்வு அறிக்கை வந்​த​வு​டன் கார​ணம் தெரிய வரும்.​ பண்​ருட்டி மற்​றும் ஒன்​றிய பகு​தி​யில் நோய் பர​வா​மல் இருக்க மாவட்ட நிர்​வா​கத்​தி​டம் பேசி மேலும் சில மருத்​து​வக் குழுக்​களை அனுப்ப உள்​ளேன் என்​றார்.​
 
             பண் ​ருட்டி வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​​ சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன்.​ கவுன்​சி​லர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

Read more »

மத்​திய சிறை ​துப்​பு​ரவு தொழி​லாளி சஸ்​பெண்ட்

கடலூர்,​​ டிச.​ 9: 
 
                  கட​லூர் மத்​திய சிறைக் கைதி தற்​கொலை செய்து கொண்​டது தொடர்​பாக சிறைச்​சாலை துப்​பு​ர​வுத் தொழி​லாளி செவ்​வாய்க்​கி​ழமை இடை​நீக்​கம் செய்யப்​பட்​டார்.​
 
                 வி​ழுப்​பு​ரம் மாவட்​டம் கிளி​ய​னூரை அடுத்த நெற்​கு​ணம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் பாலு ​(23).​ கொலை வழக்​கில் அவர் ஆயுள் சிறைத் தண்​டனை பெற்று கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​ அவரை உற​வி​னர்​கள் யாரும் வந்து பார்க்​கா​த​தால் மனம் உடைந்து காணப்​பட்​டார்.​
 
                 திங்​கள்​கி​ழமை காலை​யில்,​​ அவர் தற்​கொலை செய்​து​கொள்​ளும் நோக்​கில் சிறை கழி​வ​றை​களை சுத்​தம் செய்ய வைத்​தி​ருந்த பினா​யிலை குடித்து விட்​டார் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு பாலு இறந்​தார்.​
 
         இ ​து​தொ​டர்​பாக சிறைச்​சாலை துப்​பு​ர​வுத் தொழி​லாளி மனோ​க​ரனை ​(35) பணி இடை​நீக்​கம் செய்து சிறைத்​துறை இயக்​கு​நர் ஷியாம் சுந்​தர் உத்​த​ர​விட்​டார்.​
 
இரு போலீ​ஸôர் இடை​நீக்​கம் ​
 
           பெண் கைதி லட்​சுமி ​(33) தப்பி ஓடி​யது தொடர்​பாக,​​ போலீஸ் காவ​லர்​கள் இந்​திரா,​​ விநோத்​கு​மார்  செவ்​வாய்க்​கி​ழமை இடை​நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ள​னர்.​
 
              வே​லூர் மாவட்​டம் ஆம்​பூ​ரைச் சேர்ந்த ராஜாவின் மனைவி லட்​சுமி,​​ திருட்டு வழக்​கில் கைது செய்யப்​பட்டு கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​ இந்​நி​லை​யில நெஞ்​சுவலி கார​ண​மாக சிகிச்​சைக்​காக கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு இருந்த லட்​சுமி,​​ கடந்த 7-ம் தேதி தப்பி ஓடி​விட்​டார்.

Read more »

சோனியா காந்தி ​ பிறந்த நாள் விழா

கடலூர்,​​ டிச.​ 9: 

             கட​லூ​ரில் புதன்​கி​ழமை,​​ அகில இந்​திய காங்​கி​ரஸ் கட்​சித் தலை​வர் சோனியா காந்தி பிறந்த தினம் கொண்​டா​டப்​பட்​டது.​

              க ​ட​லூர் இளை​ஞர் காங்​கி​ரஸ் சார்​பில் திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயி​லில் சிறப்பு வழி​பா​டும் சோனியா காந்தி பெய​ரில் அர்ச்​னை​யும் நடந்​தது.​ அதைத் தொடர்ந்து ​ அரசு மருத்​து​வ​ம​னை​யில் காங்​கி​ர​ஸôர் ரத்​த​தா​னம் செய்​த​னர்.​

                 மஞ்​சக்​குப்​பம் காது​கே​ளா​தோர் பள்ளி மாண​வர்​கள் 60 பேருக்கு உணவு வழங்​கப்​பட்​டது.​ நி​கழ்ச்​சி​க​ளுக்கு கட​லூர் மக்​க​ள​வைத் தொகுதி செய்​தித் தொடர்​பா​ளர் என்.குமார் தலைமை தாங்​கி​னார்.​ மாவட்​டத் துணைத் தலை​வர்​கள் கலை​வி​ஜ​ய​கு​மார்,​​ ஏ.ஜெய​ரா​மன்,​​ பொதுச் செய​லா​ளர் சர​வ​ணன்,​​ செய​லா​ளர் கிருஷ்​ண​மூர்த்தி,​​ விவ​சாய அணித் தலை​வர் வேலுச்​சாமி உள​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

                   மா​வட்ட காங்​கி​ரஸ் அலு​வ​ல​கத்​தில் மாவட்​டத் தலை​வர் ஏ.நெடுஞ்​செ​ழி​யன் தலை​மை​யில் நடந்த நிகழ்ச்​சி​யில் மாநில துணைத் தலை​வர் பி.ஆர்.எஸ்.வெங்​க​டே​சன்,​​ மாவட்​டத் துணைத் தலை​வர் தண்​ட​பாணி,​​ செய​லா​ளர்​கள் அலமு தங்​க​வேலு,​​ முரு​கன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

என்​எல்​சிக்கு உள​வி​யல் நிபு​ணர் பாராட்டு

​நெய்வேலி,​​  டிச.​ :​9 ​ 
 
                  சமூக பொறுப்​பு​ணர்​வோடு தொண்​டாற்​றி​வ​ரும் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் பணி​களை திருச்​சி​யைச் சேர்ந்த உள​வி​யல் நிப​ண​ரான டாக்​டர் கோபா​ல​கி​ருஷ்​ணன் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.​
 
                    இங் ​குள்ள என்.எல்.சி.​ பயிற்சி வளா​கத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற மன​வ​ளம் குன்​றி​யோ​ருக்​கான தேசிய நாள் விழா​வில் கெüரவ விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்ட திருச்சி சொள​மான்​யஸ் மன​நல மருத்​து​வ​மனை இயக்​கு​நர் டாக்​டர் கோபா​ல​கி​ருஷ்​ணன் மேலும் பேசி​யது:​÷தா ​யின் வயிற்​றில் குழந்​தை​கள் வள​ரும் போது தாய்க்​குத் தேவை​யான உணவு ஊட்​டச்​சத்து,​​ உடல்​நோய்​கள் போன்ற கார​ணங்​க​ளி​னால் தான் மன​ந​லம் குன்​றிய குழந்​தை​கள் பிறக்​கின்​றன.​ போபால் விஷ​வாயு தாக்​கிய சம​யத்​தில்,​​ அப்​ப​கு​தி​யில் போதிய மன​நல மருத்​து​வர்​கள் இல்​லா​த​தால் பல்​வேறு தரப்​பி​னர் மன​ந​லம் பாதிக்​கப்​பட்​ட​னர்.​ மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான நலன்​காக்​கும் விதி​மு​றை​கள் 1995-ம் ஆண்டு முதல் அமல்​ப​டுத்​தப்​பட்ட பிறகு அவர்​க​ளுக்​கான உரிமை பற்​றிய விழிப்​பு​ணர்வு ஏற்​பட்​டுள்​ளது.​ இக்​கு​ழந்​தை​க​ளுக்கு நமது பரி​தா​பத்​தைக் காட்​டு​வ​தைக் காட்​டி​லும்,​​ அவர்​க​ளுக்கு பொறு​மை​யு​ட​னும்,​​ இரக்​கக் குணத்​து​ட​னும்,​​ விடா​மு​யற்​சி​யு​ட​னும் உத​வ​வேண்​டும் என்​றார் கோபா​ல​கி​ருஷ்​ணன்.​
 
                       முன் ​ன​தாக,​​ விழா​வில் பங்​கேற்ற என்.எல்.சி.​ நிறு​வன தலை​வர் ஏ.ஆர்.​ அன்​சாரி பேசும்​போது,​​ மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான சினேகா வாய்ப்​புச் சேவை​கள் பள்​ளிக்கு என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் சார்​பில் ரூ.10 லட்​சம் வழங்​கப்​ப​டும் என்​றார்.​ மன​ந​லம் குன்​றி​ய​வர்​கள் நிறு​வ​னத்​தின் தொழில் பிரி​வு​க​ளில் பணி​ய​மர்த்​தப்​படா விட்​டா​லும்,​​ அவர்​கள் நிர்​வா​கப் பிரி​வில் பணி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​னர் என்​றார்.​ நிறு​வன இயக்​கு​நர்​கள் வி.சேது​ரா​மன் மற்​றும் சுரேந்​தி​ர​மோ​கன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர்.​​ முன்​ன​தாக,​​ ஸ்நேகா வாய்ப்​புச் சேவை​கள் அமைப்​பின் தலை​வர் கிஷ்​வர் சுல்​தான வர​வேற்​றார்.அமைப்​பின் உறுப்​பி​னர்​கள் டாக்​டர் உஷா மற்​றும் ஜனார்த்​த​னன் மன​ந​லம் குன்​றி​யோ​ருக்​கான உரி​மை​கள் குறித்த உறு​தி​மொ​ழி​யைக் கூற அனை​வ​ரும் எடுத்​துக்​கொண்​ட​னர்.​
 
                 அ​மைப்​பின் செய​லர் சண்​மு​க​சுந்​த​ரம் அமைப்​பின் செயல்​பா​டு​கள் குறித்த ஆண்​ட​றிக்​கையை வாசித்​தார்.​ இதைத் தொடர்ந்து மாணவ,​​ மாண​வி​க​ளின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன.

Read more »

மரபணு மாற்​றப் பயிர்​களை தடை செய்ய வேண்​டு​கோள்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 9:​ 

                    கேர​ளத்​தைப் போல் பிட்டி பருத்தி உள்​ளிட்ட மரபணு  மாற்​றப் பயிர்​களை தமிழ்​நாட்​டில் தடை செய்ய வேண்​டும் என தமி​ழக உழ​வர் முன்​னணி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.​

     இ​து​கு​றித்து அந்த முன்​ன​ணி​யின் ஆலோ​ச​கர் கி.வெங்​கட்​ரா​மன் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ 

                       மர​ப​ணுக்​க​ளின் தன்​மை​யை​யும்,​​ வரி​சை​யை​யும் மாற்​றி​ய​மைத்து உரு​வாக்​கப்​ப​டும் மர​பீனி மாற்​றப் பயிர்​களை உரிய ஆய்​வின்றி இந்​திய அரசு அனு​ம​தித்து வரு​கி​றது.​ இது ஆபத்​தா​னது.​ மர​பீனி மாற்​றப் பயிர்​கள் சாகு​ப​டிச் செலவு பன்​ம​டங்கு அதி​க​ரித்து,​​ உழ​வர்​களை கட​னா​ளி​யாக்கி,​​ கடும் பாதிப்பை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ மராட்​டிய மாநி​லம் விதர்ப்​பா​வி​லும்,​​ ஆந்​தி​ரத்​தி​லும் மர​பீனி மாற்​றப்​ப​யி​ரான பிட்டி பருத்​தியை சாகு​படி செய்த உழ​வர்​கள் கழுத்து முட்​டும் கட​னில் சிக்கி,​​ பல ஆயி​ரம் பேர் தற்​கொலை செய்து கொண்​ட​னர்,​​ ​
            
               த​மி​ழ​கத்​தில் தர்​ம​புரி,​​ சேலம் மாவட்​டங்​க​ளில் பிட்டி பருத்தி சாகு​படி செய்த உழ​வர்​கள் பேரி​ழப்​புக்கு உள்​ளா​கி​யுள்​ள​னர்.​ ஏனெ​னில் மர​பீனி மாற்​றப்​ப​யிர்​க​ளின் விதையி​லி​ருந்து அதற்​கென்று தயா​ரிக்​கப்​ப​டும் பூச்​சிக்​கொல்லி,​​ ஊக்​கி​கள் வரை அனைத்​தும் அதி​கம் செலவு கொண்​டவை.​ அந்த அள​விற்கு உரிய விளைச்​ச​லும்,​​ விலை​யும் உழ​வர்​க​ளுக்கு கிடைப்​ப​தில்லை.​ மரபணு  பயிர்​கள் ஓவ்​வாமை,​​ மலட்​டுத்​தன்மை,​​ கருச்​சி​தைவு,​​ ரத்த உறை​வைக் குறைப்​பது,​​ சிறு​நீ​ர​கக் கோளாறு போன்ற பாதிப்​பு​களை உண்​டாக்​கு​கி​றது என ஆய்​வில் கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது÷மேற்கு தொடர்ச்சி மலை​யின் பல்​லு​யிர் பன்​மையை மர​பீன பயிர்​கள் ஒழித்​து​வி​டும் என்ற கார​ண​தக்தை எடுத்​துக் காட்டி எம்.எஸ்.சுவா​மி​நா​தன் தலை​மை​யி​லான வேளாண்​மை​யில் உயி​ரித் தொழில்​நுட்ப பயன்​பாடு குறித்த செயல்​பாட்​டுக்​குழு இப்​ப​யிர்​களை அங்கு அனு​ம​திக்​கக்​கூ​டாது என எச்​ச​ரித்​துள்​ளது.​ மேற்​கண்ட அனைத்து உண்​மை​க​ளை​யும் ஏற்​றுக்​கொண்ட கேரள அரசு தங்​கள் மாநி​லத்​தில் மரபணு  மாற்​றப் பயிர்​க​ளின் ஆய்​வுப் பண்​ணை​க​ளை​யும்,​​ விற்​ப​னை​யை​யும் தடை செய்​துள்​ளது.​ இதனை கேரள முதல்​வர் 30-11-09 அன்று பிர​த​ம​ருக்கு எழு​தி​யுள்ள கடி​தத்​தில் உறு​திப்​ப​டுத்​தி​யுள்​ளார்.​

       எ​னவே இதே​போல் அழிவை ஏற்​ப​டுத்​தும் மரபணு மாற்​றப் பயிர்​கள் அனைத்​தை​யும் தமிழ்​நாட்​டி​லும் தடை செய்ய வேண்​டும் என தமி​ழக அரசை கேட்​டுக்​கொள்​கி​றோம் என கி.வெங்​கட்​ரா​மன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

கட​லூ​ரில் அரசு பஸ் ஜப்தி

கடலூர்,​​ டிச.​ 9:​ 
 
                   விபத்​தில் காயம் அடைந்த இரு​வ​ருக்கு நீதி​மன்ற உத்​த​ர​வுப்​படி அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கம் நஷ்​ட​ஈடு அளிக்​கா​த​தால்,​​ அரசு பஸ் புதன்​கி​ழமை ஜப்தி செய்​யப்​பட்​டது.​
 
                       வி ​ழுப்​பு​ரம் மாவட்​டம் ஆச​னூ​ரைச் சேர்ந்​த​வர்​கள் முரு​கே​சன் ​(27),​ வீரன் ​(43).​ கடந்த 23-6-2002 அன்று இரு​வ​ரும் திண்​டி​வ​னத்​தில் இருந்து விழுப்​பு​ரம் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்​த​னர்.​ காரை டிரை​வர் உளுந்​தூர்​பேட்​டை​யைச் சேர்ந்த செல்​வம் ​(32) ஓட்​டி​னார்.​
 
                     செண் ​டூர் அருகே அந்​தக் காரும் திருச்​சி​யில் இருந்து சென்னை நோக்​கிச் சென்ற அரசு எக்ஸ்​பி​ரஸ் பஸ்​ஸýம் மோதி விபத்​துக்​குள்​ளா​யின.​ இதில் முரு​கே​சன் இறந்​தார்.​ வீரன்,​​ செல்​வம் ஆகி​யோர் காயம் அடைந்​த​னர்.​
 
                     க ​ட​லூர் நீதி​மன்​றத்​தில் நஷ்​ட​ஈடு கோரித் தொட​ரப்​பட்ட வழக்​கில் முரு​கே​சன் குடும்​பத்​தி​ன​ருக்கு நஷ்​ட​ஈடு வழங்​கப்​பட்டு விட்​டது.​ ஆனால் காயம் அடைந்த செல்​வத்​துக்கு 1.13 லட்​சம் மற்​றும் வீர​னுக்கு ரூ.​ 93 ஆயி​ரம் நஷ்​ட​ஈடு வழங்க நீதி​மன்​றம் உத்​த​ர​விட்​டும் அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழ​கம் நஷ்​ட​ஈடு வழங்க வில்​லை​யாம்.​
 
               நஷ்ட ஈட்​டுத் தொகை வட்​டி​யு​டன் சேர்த்து தற்​போது செல்​வத்​துக்கு ரூ.​ 1.97 லட்​ச​மும்,​​ வீர​னுக்கு ரூ.​ 1.61 லட்​ச​மும் வழங்க வேண்​டி​யுள்​ளது.​
 
           எ ​னவே நஷ்​ட​ஈட்​டுத் தொகை கோரி கட​லூர் சார்பு நீதி​மன்​றத்​தில் மீண்​டும் வழக்​குத் தொட​ரப்​பட்​டது.​ நீதி​மன்​றம் மீண்​டும் உத்​த​ர​விட்​டும் அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழ​கம் வழங்​கா​த​தால் அரசு பஸ்ûஸ ஜப்தி செய்ய நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​த​ர​விட்​டது.​ அதன்​படி கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் நின்று இருந்த சென்னை-​ வேளாங்​கண்ணி அரசு பஸ் ஜப்தி செய்​யப்​பட்டு நீதி​ம​னற வளா​கத்​தில் நிறுத்​தப்​பட்​டது.​  
            
              இ​தே​போல் விபத்து நஷ்​ட​ஈடு வழங்​கா​த​தற்​காக மற்​றொரு சென்னை-​ வேளாங்​கண்ணி அரசு எக்ஸ்​பி​ரஸ் பஸ் ஏற்​கெ​னவே ஜப்தி செய்​யப்​பட்டு கட​லூர் அமர்வு நீதி​மன்ற வளா​கத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்டு உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.

Read more »

அடகு நகை வியா​பா​ரி​கள் கடை​ய​டைப்பு

நெய்வேலி, ​​ டிச.​ 9:​ 

                  கட​லூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீ​ஸôர் அடகு நகை வியா​பாரி வீட்​டில் நள்​ளி​ர​வில் அத்​து​மீறி நடந்​து​கொண்​ட​தா​கக் கூறி,​​ அதைக் கண்​டித்து அடகு நகை விய​பா​ரி​கள் புதன்​கி​ழமை கடை​ய​டைப்பு போராட்​டம்  (படம்) நடத்​தி​னர்.​

              வி​ருத்​தா​ச​லத்​தில் அடகு நகை வியா​பா​ரம் செய்து வரு​ப​வர் சாம்​பாஜி.​ இவர் திருட்டு நகை ஈட்​டின் பேரில் பணம் வழங்​கு​வ​தாக ஒரு குற்​ற​வாளி அளித்​தத் தகவ​லின் பேரில்,​​ அவ​ரது வீட்​டுக்கு செவ்​வாய்க்​கி​ழமை நள்​ளி​ரவு டெல்டா பிரிவு இன்ஸ்​பெக்​டர் அம்​பேத்​கர் தலை​மை​யில் 7 போலீ​ஸôர் சென்​ற​ன​ராம்.​ வீட்​டின் மாடி​யில் ஏறிக் குதித்து கதவை உடைக்க முயற்சி செய்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​ பின்​னர்,​​ சாம்​பா​ஜி​யும்,​​ அவ​ரது மனைவி மீனா​வும் வெளியே வந்​த​போது,​​ எவ்​வித கார​ண​மும் கூறா​மல் சாம்​பா​ஜியை போலீ​ஸôர் இழுத்​துச் சென்​ற​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​

              இச் சம்​ப​வத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடை அடைப்பு போராட்​டம் நடத்​திய அடகு நகை வியா​பா​ரி​கள் நகை அடகு வணி​கர்​கள் சங்​கத் தலை​வர் சோகன்​லால் தலை​மை​யில் அணி திரண்​ட​னர்.​ போ​லீ​ஸô​ரால் கைது செய்​யப்​பட்ட சாம்​பாஜி எங்கு,​​ எதற்​காக அழைத்​துச் செல்​லப்​பட்​டார் என்​பதை எழுத்​து​மூ​ல​மாக தெரி​விக்​கக் கோரி மாவட்ட ஆட்​சி​யர்,​​ மாவட்ட தலைமை நீதி​பதி,​​ விழு​புப்​பு​ரம் சரக டிஐஜி உள்​ளிட்​டோ​ருக்கு மனு அளித்​த​னர்.​

Read more »

அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நாளை சிறப்பு உறுப்​பி​னர் ​சேர்க்கை முகாம்

கட​லூர்,​​ டிச.​ 9: 

                அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நல​வா​ரி​யத்​தில் உறுப்​பி​னர்​க​ளைச் சேர்க்க சிறப்பு முகாம் வெள்​ளிக்​கி​ழமை ​ காட்​டு​மன்​னார்​கோ​யில் ரம்​ஜான் தைக்​கால் ஏ.ஆர்.எஸ்.​ திரு​மண மண்​ட​பத்​தில் நடை​பெ​றும் என்று மாவட்ட தொழி​லா​ளர் அலு​வ​லர் புனி​த​வதி அறி​வித்​துள்​ளார்.​

 அ​வர் புதன்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                உ ​டல்​உ​ழைப்பு கட்​டு​மா​னம்,​​ ஆட்டோ,​​ தையல்,​​ சலவை,​​ ​ பனை​ம​ரம்,​​ கைவினை,​​ கைத்​தறி,​​ காலணி,​​ ஓவி​யர்,​​ மண்​பாண்​டத் தொழில் பொற்​கொல்​லர்,​​ வீட்​டுப் பணி​யா​ளர்,​​ விசைத்​தறி உள்​ளிட்ட தொழில்​க​ளில் ஈடு​ப​டும் அமைப்பு சாராத் தொழி​லா​ளர்​கள் இந்த சிறப்பு முகா​மில் நவா​ரிய ​ உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்த்​துக் கொள்​ளப்​ப​டு​வார்​கள்.​

                  காட்​டு​மன்​னார்​கோ​யில் தாலு​கா​வைச் சேர்ந்த மேற்​கண்ட தொழி​லா​ளர்​கள் பாஸ்​போர்ட் அளவு புகைப்​ப​டம் 3,​ குடும் அட்டை நகல்,​​ வாக்​கா​ளர் அடை​யாள அட்டை நகல் ​ மற்​றும் அச​லு​டன் வந்து உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்ந்து பயன் அடை​ய​லாம்.​

             15 அமைப்பு சாராத் தொழி​லா​ளர் நல வாரி​யங்​க​ளுக்​கும் உறுப்​பி​னர் சேர்க்கை முகாம்​கள் ஒவ்​வொரு தாலுகா தலைமை இடத்​தி​லும்,​​ பிர​தி​மா​தம் 2-வது வெள்​ளிக் கிழ​மை​க​ளில் நடை​பெற உள்​ளது.​ ஆங்​காங்கே வசிக்​கும் தொழி​லா​ளர்​கள்,​​ இந்த முகாம்​க​ளில் கலந்​து​கொண்டு நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளாக ஆகு​மாறு கேட்​டுக் கொள்​ளப் படு​கி​றார்​கள் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior