உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் மே 01 உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கான்சாகிப் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலப்பு: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியள
சிதம்பரம்:
                 சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.
                   இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது.  இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பழுதடைந்துவிட்டதால் பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன. 
                அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது. சிதம்பரம் நகரில் ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் பழுதடைந்துவிட்டதால். ரூ.38 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பணிக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்பதால் தற்போது அப்பணியை செயல்படுத்த ரூ.42 கோடியாக தொகை உயர்த்தப்பட்டது. அப்படியும் இன்று வரை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. தற்போது பாதாள சாக்கடை நீர் ஆங்காங்கே திறந்தவெளி வடிகாலில் வெட்டி விடப்பட்டுள்ளன. இந்த புதை சாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் கொண்டுவிடப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
                    மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது. இந்த நீரை கொண்டுதான் விவசாயிகள் நவரைப்பட்ட சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஆர்.ஐ., விஏஓவை கொல்ல முயற்சி

 பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரிகளைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.பண்ருட்டி அருகே கன்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, இன்று அதிகாலை 3 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு, வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த ஒரு லாரியை விஏஓ ஜோதிமணி தடுக்க முயன்றபோது, அவர் மீது ஏற்றுவது போல் வந்த லாரி, வேகமாகத் தப்பிச் சென்றது.பின்னால் வந்த மற்றொரு லாரியை வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் மடக்கினர்.  அந்த லாரியில் பூபால சந்திரனை ஏற்றி லாரியை காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி  ஓட்டுனரிடம் வட்டாட்சியர் கூறியுள்ளார். லாரி எல்.என்.புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அந்த லாரியை மடக்க முயன்றிருக்கிறது. பின்னர் ரயில்வே கேட் அருகே லாரியை மடக்கிய காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், லாரியின் ஓட்டுனரைக் கீழே தள்ளிவிட்டு பூபால சந்திரனுடன் லாரியைக் கடத்திச் சென்றிருக்கிறார். கும்பகோணம் சாலையிலுள்ள அரசு மருத்துவமனை அருகே லாரி சென்றபோது, பூபால சந்திரனைக் கீழே தள்ளிவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. லாரியில் செல்லும்போது அந்த மர்ம நபர் பூபால சந்திரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.இதையடுத்து, மர்மநபர் விட்டுச் சென்ற காரைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் கே.என். நேரு




               ஸ்மார்ட் கார்டு முறை மூலம், வாகன உரிமம், வாகன பதிவுச் சான்று    (ஆர்.சி.) வழங்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். 

                   இந்த ஸ்மார்ட் கார்டு முறை சோதனை அடிப்படையில் கடலூர், சிவகங்கை மற்றும் சென்னை தெற்கு ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களில் இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசும் போது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இது குறித்து மைச்சர் கே.என்.நேரு மேலும் கூறியது:  

              வாகனங்களுக்கான பதிவுச் சான்று (ஆர்.சி.) புத்தக வடிவில் பெரிதாக வழங்கப்பட்டு வந்தது. இதைப் பாதுகாத்து வைப்பதில் சிரமமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, பதிவுச் சான்று, சான்றிதழ் வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்றிதழ் வடிவமும் பெரிதாக இருப்பதால், பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் சிறிய அட்டை வடிவில், ஒரு புறம் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமமும், மறுபுறம் வாகனப் பதிவுச் சான்றும் பதிவு செய்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. என்னென்ன இருக்கும்? இந்த அட்டையில் "மைக்ரோ சிப்' ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தச் "சிப்' தான் வாகன உரிமையாளரின் ஜாதகம் அனைத்தையும் தெரிவிக்கும். அதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனம் எப்போது வாங்கப்பட்டது, உரிமத்தை புதுப்பிக்கும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளக் கூடிய கையடக்கக் கருவிகளை வாகனத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

தேர்வில் தோல்வி: 674 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம்

 கடலூர்:

                ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததால், தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருந்த 674 கணினி ஆசிரியர்கள் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999 முதல், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2,500 ஊதியத்தில் 5 ஆண்டுகளுக்கு நியமித்து இருந்தன. 5 ஆண்டுகள் முடிந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  அவர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தி 1,800 கணினி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டது. அவர்கள் பி.எட். பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கும் போதே, அவர்களைப் பணி நியமனம் செய்வது சரியல்ல. அவர்களுக்கு பி.எட். கல்வித் தகுதி இல்லை. மேலும் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்று பி.எட். பட்டம் பெற்ற கணினி பட்டதாரிகள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனாலும் தேர்வு நடத்தி 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், 1800 பேரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் 35 சதம் மதிப்பெண்   பெற்றவர்களும் இருந்தனர். எனவே பி.எட். பட்டம் பெற்ற கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கே பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் 35 சதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பணி வழங்கப்பட்டு இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்று என்று நீதிமன்றத்தில் அச்சங்கம் தெரிவித்தது. எனவே 35 முதல் 49 சதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த  இந்தத் தேர்வின் முடிவு, புதன்கிழமை வெளியானது. இதில் தேர்வு எழுதிய 800 பேரில் 126 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்த 674 பேரையும் பணி நீக்கம் செய்து, பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் 30 பேர் தேர்வு எழுதியதில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வேளாண் கருவிகள்

 கடலூர்:

            திட்டக்குடி வட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 15 டான்வா மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வயல்களில் களை எடுக்கும் கோனோ வீடர் கருவிகள்,​​ நெல்நடவு செய்யும் மார்கர் கருவிகள் ஆகியவற்றை,​​ கடலூர் மண்டல வேளாண் அலுவலர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.​ வேளாண் கருவிகளின் மதிப்பு ரூ.1.10 லட்சம். நிகழ்ச்சியில்,​​ வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ்,​​ வேளாண் அலுவலர்கள் பரமசிவம்,​​ வெங்கடேசன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு

பண்ருட்டி: 

                 பண்ருட்டி அடுத்த ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்யப்போவதாக ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் கெüரிபாண்டியன் தலைமையில்,​​ துணைத் தலைவர் எம்.சம்மந்தம் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:​​

Read more »

Poll Roll Verification In Cuddalore


CUDDALORE: 

       Officials will soon be making door-to-door verification in regard to addition (Form 6), deletion (Form 7) and alterations (Form 8) in the electoral rolls, according to Collector P. Seetharaman. In a statement released here, the Collector requested people to cooperate with the officials. They should also keep ready two passport size photographs, and age and residential proof of prospective voters.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரயில்வே கேட்டில் கோளாறு:​ ​கடலூரில் போக்குவரத்து பாதிப்பு

 கடலூர்:

                 கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் வியாழக்கிழமை மாலை 7-25க்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது.​ வண்டி புறப்பட்டுச் சென்றதும் ரயில்வே கேட்டைத் திறக்க முடியாமல் அதில் கோளாறு ஏற்பட்டது.​ இதனால் சுமார் 30 நிமிடம் அந்த மார்க்கத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் லாரன்ஸ் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டதால்,​​ ரயில்வே கேட் திறந்த பிறகும் நெரில் காரணமாக பொதுமக்கள் அந்தப் பாதையை கடக்க,​​ 20 நிமிடத்துக்கு மேல் ஆயிற்று.​ பஸ் நிலையத்துக்கு உள்ளேயும் பஸ்கள் செல்ல முடியவில்லை.​ பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.​ போலீஸôர் வந்து பெரிதும் போராடி நிலைமையை சீராக்க வேண்டியது இருந்தது. காலையில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ரயில் நிலையத்தைக் கடக்கும்போதும் லாரன்ஸ் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.​ எனவே இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மே 10ம் தேதி விழா நடத்த முடிவு



              மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதையில் முறைப்படி மே 10 ம் தேதி ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்' என, எம்.எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் தூரமிருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை, 2006ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு டிச., 1ம் தேதி இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை வக்கீல் ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கு மூலம் கடந்த 23ம் தேதி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், மே மாதம் 10ம் தேதி முறைப்படி இப்பாதையில் போக்குவரத்தை ரயில்வே இணையமைச்சர் அகமது தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.,க்களும், ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை மயிலாடுதுறை எம். எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் மின்சாரம் தடை: குடிநீர் விநியோகம் பாதிப்பு

 கடலூர்:

                     மின்தடை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடலூர் நகருக்கு கேப்பர் மலை துணை மின்நிலையம்,​​ நத்தப்பட்டு துணை மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு கடலூருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக என்று கூறி,​​ புதன்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.​ இத்தகைய மின் துண்டிப்பு அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.​ ​
                     
                   இதனால் ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் போய்விட்டது.​ எனவே புதன்கிழமை நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.​ இருக்கிற தண்ணீரை ஆங்காங்கே பிரித்து வழங்கினர்.​ பல இடங்களில் குறைந்த நேரமே தண்ணீர் விநியோகம் இருந்தது.​ இதனால் லாரிகளில் தண்ணீர் விநியோகிப்போரை நகரில் பல இடங்களில் பார்க்க முடிந்தது.​ ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் ​ குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் கோடைக்கால வறட்சி காரணாக நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் நிலையில் மின்சார விநியோகமும் தடைபடுவதால்,​​ மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வருகிறது.

Read more »

நில ஆர்ஜிதப் பணிகள் அவசியமானவை


நெய்வேலி:

               நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின்சாரம் தயாரிக்கின்ற தலையாய பணியைச் செய்து,​​ கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒளி வீசி வருகிறது.​ எனவே மின்சாரத்தை தயாரிக்கவும் அதற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்கவும் நிலம் கையகப்படுத்துவது அவசியமானது என்றார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாராமன். கடலூர் மாவட்ட கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உய்யக்கொண்டராவி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.​ இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் 172 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி,​​ பின்னர் அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:​ இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி,​​ கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்,​​ மேலும் சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தீர்வு காணப்படும்.​ கோட்டகம்,​​ உய்யக்கொண்டராவி பகுதியில் மயானக்கொல்லை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து விரைவில் அவை முடித்துத் தரப்படும் என்றார் சீதாராமன்.​ தொடர்ந்து துறைவாரியாக ஒவ்வொரு அலுவலரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.​ என்எல்சி நிறுவனம் சார்பில் நில எடுப்புத்துறை பொதுமேலாளர் என்.எஸ்.ராமலிங்கம்,​​ நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் செய்து தரப்படும் என்றார். விழாவில் கம்மாபும் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வராஜ்,​​ கோட்டகம்,​​ சேப்ளாநத்தம்,​​ பெரியாக்குறிச்சி,​​ நெய்வேலி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,​​ கிராம நிர்வாக அலுவலர்கள்,​​ கிராம மக்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Read more »

பா.ஜ.க. ​ மாநிலத் தலைவர் நாளை கடலூர் வருகை

 கடலூர்:

                   பா.ஜ.க.​ மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கடலூர் வருகிறார்.​

​இதுகுறித்து கடலூர் மாவட்ட பா.ஜ.க.​ அமைப்பாளர் க.எழிலரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                     1-5-2010 அன்று சுவாமி சகஜானந்தா நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூருக்கு வருகிறார்.​ அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று,​​ புதன்கிழமை கடலூரில் நடந்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​ ​நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ அதைத் தொடர்ந்து இரு சக்கர மோட்டார் வாகனப் பேரணியை அவர் தொடங்கி வைக்கிறார்.​ ​பேரணி கடலூர் முதுநகர்,​​ ஆலப்பாக்கம்,​​ பெரியப்பட்டு,​​ புதுச்சத்திரம்,​​ பு.முட்லூர்,​​ ​ புவனகிரி,​​ கீரப்பாளையம்,​​ சிதம்பரம் வழியாக பகல் 12 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தைச் சென்றடையும்.​ அங்குள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ குரு பூஜையில் கலந்துகொள்கிறார்.​ பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.​ நிகழ்ச்சியில் கட்சியின் மாநில,​​ மாவட்ட,​​ நகர,​​ ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலைஞர் வீட்டுவசதித் திட்டம் 1.63 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு:​ ஆட்சியர் தகவல்

கடலூர்:

              கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை நிறைவுபெற்று இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சிய பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                 கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசை வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி,​​ 29-3-2010 முதல் நடைபெற்று வருகிறது.​ இதுவரை 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணி நிறைவு பெற்று உள்ளது.​ எஞ்சிய கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.​ ​கணக்கெடுப்பு விவரங்கள் மேலாய்வு அலுவலர்களால் ஆய்வு செய்யும் வேலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.​ கணக்கெடுப்பின்போது தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள்,​​ கால நிலைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் போன்றோர்,​​ கிராம ஊராட்சிகளில் கணக்கெடுப்புப் பணிகள் முடுவதற்குள் வந்து,​​ உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.​ கணக்கெடுப்புக் குழு அதை ஏற்றுக் கொண்டு உரிய விவரங்களை கணக்கெடுப்புப் படிவத்தில் பூர்த்தி செய்வார்கள்.​ மேலாய்வு முடிவடைவதற்கு முன்னதாக உரிய ஆவணங்களுடன் வந்து சமர்ப்பித்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.​ கணக்கெடுப்புக் குழுவினர் தயாரித்த படிவத்தில் தேவையான திருத்தங்களை இடம்பெறச் செய்வார்கள்.​ 

                  கணக்கெடுப்பின்போது ​ கதவு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மேலாய்வு முடிவுற்ற பின்,​​ மீண்டும் வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை,​​ வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தனியாக அளித்து விண்ணப்பிக்கலாம்.​ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து தகுதி குறித்து முடிவு செய்வார்.​ ​ஊராட்சிகளில் கணக்கெடுப்பின்போது ஆவணங்கள் அளிக்காமல் இருந்தாலும்,​​ பூட்டிய வீடு என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால் அந்த நபர்,​​ உரிய ஆணங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 5-5-2010க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதுச்சத்திரத்தில் ரூ.27 லட்சத்தில்போலீஸ் நிலையம் கட்டும் பணி

 பரங்கிப்பேட்டை:

                         புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் ரூ. 27 லட்சத்தில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.புதுச்சத்திரத்தை சுற்றி 49 கிராமங்களை உள்ளடக்கி கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது. அன்று முதல் போலீஸ் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சிறிய இடமான அந்த போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை வைத்து விசாரிக்க போதுமான அளவு இடவசதி இல்லை. பெரும்பாலான போலீசார் வெளியூரில் தங்கியுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட் டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து தமிழ் நாடு காவல் வீட்டு வசதி கழகம் சார்பில் புதுச்சத்திரத்தில் புதியதாக போலீஸ் நிலையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சத்திரம் மெயின்ரோட்டில் 26 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Read more »

வளர்ச்சிப்பணிகள் கலந்தாய்வு

சிறுபாக்கம்:

                     நல்லூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரவிசங்கர்நாத் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் சுலோசனா முன்னிலை வகித்தார். துணை ஆணையர் வீரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளான குளம் தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல், புதிய குளம் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்தல், பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மங்களூர் ஒன்றியத்தில் சிறந்த மாதிரி தொகுப்பு மையங்கள்- ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


திட்டக்குடி:

                      மங்களூர் ஒன்றியத்தில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாதிரி தொகுப்பு மையங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 107 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் 29 மாதிரி தொகுப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த பள்ளி ஒன்றும், சிறந்த ஆசிரியர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு 2010- 11ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ., சார்பில் பரிசு வழங்கும் விழா, நேற்று முன்தினம் மாலை இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்தது. ஆசிரிய பயிற்றுனர் இளஞ்செழியன் வரவேற்றார்.

                         தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், ஜெயராமன், முல்லையன், ஜெயபால், திருவள்ளுவன், ராதாபாய், ஆசிரியர் வீரமணி வாழ்த்தி பேசினர். விழாவிற்கு வட்டார வளமைய மேற் பார்வையாளர் முருகேசன் தலைமை தாங்கி, பரிசு வழங்கினார். இதில் சிறந்த பள்ளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சிறந்த ஆசிரியர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுனர்கள் சிவகுரு, மஞ்சு, ஆனந்தராஜ், பால்தாஸ், பன்னீர் செல்வம், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Read more »

சத்துணவு பணியாளர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு


விருத்தாசலம்:

                      முழுநேர பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்றகோரி தமிழ் நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜய பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

                   உரிய கல்வித் தகுதியுடன் 1983ம் ஆண்டு பிப்ரவரி முதல் பணியாற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து சத்துணவு பணியாளர்களையும் முழுநேர நிரந்தரம் செய்ய வேண்டும். அடிப்படை ஊதிய விகிதம், அகவிலைப்படியுடன் ஓய்வூதியம், அமைப்பாளர் காலி பணியிடங்களில் இளைஞர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரசில் நிரந்தர பணி மற்றும் இதர சலுகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் மே 1 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒன்றிய தலைநகரங்களில் பிரசார இயக்கம் நடத்துவது எனவும், மே 10ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சருக்கு சேர்மன் மனு


திட்டக்குடி:

                பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சேர்மன் அமுதலட்சுமி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

                     பெண்ணாடம் பேரூராட்சி பழைய பஸ் நிலையம் அருகில் பொது பாதையை கணபதி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுகிறார். ஆத்திரமடைந்த மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் சுவற்றை இடித்தனர். இது குறித்து கணபதி அளித்த புகாரின்படி, பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் 4 பேர் உட்பட 19 பேர் மீது ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிந்தனர். பின் ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றோம். இந்நிலையில் வருவாய்த்துறை ஆவணங்களை பரிசீலித்த தாசில்தார், பொது சந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமானது என கு.வி.மு.ச. பிரிவு 145 உத்தரவு பிறப்பித்துள்ளார்.

                     அதையும் மீறி கட்டடம் கட்டத் துவங்கிய கணபதி மீது பொதுமக்கள் சார்பாக பிரதிநிதித்துவ முறையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற் றுள்ளனர். ஆனால் பேரூராட்சி வடிகாலை இடித்துவிட்டு கட்டடம் கட்டப்படுகிறது. திட்டக்குடி தாசில்தார் மற்றும் கோர்ட் உத்தரவுகளை மீறி கட்டடம் கட்டி வருகிறார். பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சந்தை ஆக்கிரமிப்பு செய்வதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தி, பேரூராட்சி வடிகாலை இடித்த கணபதி மீது வழக்கு பதிந்து கைது செய்யவும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


கடலூர்:

                    மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கடலூர் கம்மியம்பேட்டையில் வசித்தவர் எலட்ரீஷியன் ராஜேந்திரன் (48). இவர், நேற்று இரவு 8.30 மணியளவில் போடி செட்டித்தெருவில் வசிக்கும் செல்வம் வீட்டில் மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம் போலீஸ் நிலையத்தைகண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகை


சிதம்பரம்:

                     சிதம்பரம் போலீஸ் நிலையத்தை கண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் பிரம்மராயர் கோவில் தெரு ராஜேஷ் (18). கவுதமன்(36). நண்பர் களான இருவரும் பைக் கில் சென்ற போது, சின்னக்கடை தெருவில் நின்றிருந்த கண்ணங்குடி சிவக்குமார் வழி மறித்து தன்னை தாக்கியதாக ராஜேஷ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். தகவலறிந்த கண்ணங்குடி கிராமத்தினர் சிலர், முன் விரோதம் காரணமாக பொய் புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அப்பகுதியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior