உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

குழந்தைகள் வயிற்றுப்போக்கு: தடுப்பூசி அறிமுகம்

சென்னை:

              ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுப்பதற்கான தடுப்பூசி சென்னையில் புதன்கிழமை (மார்ச் 16) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.எஸ்.டி என்ற தனியார் நிறுவனம் இந்த தடுப்பூசியை அறிமுகப்பட்டுத்தியுள்ளது

.இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனந்தகிருஷ்ணன், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன், நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் பெண்கள் நலப் பிரிவின் தலைவர் மோனிகா செüத்ரி ஆகியோர் சென்னையில் ம் கூறியது:

               வயிற்றுப்போக்கால் ஏற்படும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய்களால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாக ஏற்படுகின்றன. பிறந்த குழந்தைகளை தாக்கும் ஒரு வகை வைரஸ்களால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.உலகம் முழுவதும் ஓராண்டுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இறக்கின்றனர்.  இந்தியாவைப் பொருத்தவரை, ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 270 குழந்தைகள் இறக்கின்றனர்.

              உலகம் முழுவதும் இது போன்று நடைபெறும் இறப்புகளில் 23 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டும் இந்த வகை நோய்கள் தாக்குவதை தடுக்க முடியாது. அதற்கு தடுப்பூசி போட வேண்டியதும் அவசியம்.இதனால் எம்.எஸ்.டி. நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குழந்தை பிறந்த 12 வாரம் 6 நாள்களில் போட வேண்டும். அடுத்த இரண்டு தவணைகளை 4 வார இடைவெளியில் போட வேண்டும்.இந்தத் தடுப்பூசிக்கு உரிமம் பெறுவதற்கு முன்னரே சுமார் 71 ஆயிரம் குழந்தைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

                 இந்த தடுப்பூசி இப்போது பயன்பாட்டு வந்துள்ளது.இதுவரை 100 நாடுகளில் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 62 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4.4 கோடி தடுப்பூசிகள் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு சீட் இல்லை

கடலூர்:

            அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் ஆகிய இருவருக்கும், தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

              கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு செல்வி ராமஜெயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு அருண்மொழித்தேவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அருண்மொழித்தேவன் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகிக்கிறார் ஆனால் இத் தேர்தலில் செல்வி ராமஜெயம், அருண்மொழித்தேவன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது. 

              புதன்கிழமை அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த இருவர் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் தொகுதிக்கும், அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் சொரத்தூர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது.

Read more »

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியீடு

            தமிழக சட்டமன்றத்   தேர்தலில், இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்கள் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டது. 

                இவை வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை பெறப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. நேற்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதே போல், அடையாள அட்டை திருத்தம், மாற்றம் ஆகிய விண்ணப்பங்கள் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு, மார்ச் 30க்குள் பணிகளை முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான அடையாள அட்டையும் அப்போது வழங்கப்பட உள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு காசோலை

சிதம்பரம் : 

            அண்ணாமலைப் பல்கலை மாணவ, மாணவிகள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு அறக்கட்டளை சார்பில் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

            தமிழக அரசால் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் பெயரில் தலா 25 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் வாயிலாக திறமை மிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கினார். 

                எஸ்.சி., - எஸ்.டி., தனிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். கலைப்புல முதல்வர் டாக்டர் செல்வராஜி, மொழிப்புல முதல்வர் முத்து, வேளாண் புல முதல்வர் வசந்தகுமார், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன் ஆகியோர் பேசினர். விழாவில் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை சார்பில் 130 மாணவ, மாணவிகளுக்கும், திருப்பனந்தாள் காசி மடம் சார்பில் 63 முதுகலை தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுக்கும் காசோலை மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள்

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் விலாசங்கள் மாறியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு தற்போது அடை யாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் உள்ளவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெற்ற பலர் அதிர்ச்சியடைந்தனர். விண்ணப்பம் செய்தவரின் பெயருக்கு பதிலாக அவரது தந்தை பெயர் அல்லது வேறு ஒருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.மேலும் விலாசங்கள் மாறியுள்ளது. 

             கடலூரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி தனது அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அடையாள அட்டையில் ரேவதியின் படம் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் கருணாமூர்த்தி என ஆண் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று வழங்கப்பட்ட பலரின் அடையாள அட்டையில் பங்வேறு குழப்பங்கள் உள்ளதால் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வாக்காளர் கள் அதிருப்தி அடைந்தனர்.

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பெயர் திருத்தம், புதிய அடை யாள அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

           ஆர்.டி.ஓ., முருகேசன் 610 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தாசில்தார் சரவணன், தேர்தல் தாசில்தார் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்திற்கு சென்று வரும் 20ம் தேதி ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சியை அளிக்க போதிய இட வசதி உள்ளதா என ஆய்வு செய் தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச் சாவடிகளில் லேப்படாப்,வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சீத்தாராமன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் லேப்டாப், வெப் காமிரா மூலம் நேரிடையாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

                  கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு, பிறகு கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                  கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 1.7.2010 முதல் 25.1.2011 வரை 1,88,898 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 427 அடையாள அட்டைகளும் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-ல் இதுவரை 26,662-ம், பெயர் நீக்கம் செய்வதில் படிவம் 7-ல் 172-ம், பெயர் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ல் 3216-ம், தொகுதி விட்டு தொகுதி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் சோர்ப்பதற்கு படிவம் 8எ-ல் 1165-ம் பெறப்பட்டுள்ளது.

                இவை அனைத்தையும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு சம்மபந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டால் ரூ. 15 செலுத்தி மாற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  மேலும், பொதுமக்கள் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம், மருத்துவச்செலவிற்காக பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். 
              கடலூர் மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என 199 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றில் கல்லூரியில் கணினி பயின்ற மாணவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை லேப்டாப், வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1200 மேல் வாக்காளர்களைக் கொண்ட 47 வாக்குச் சாவடிகளும், 1400-க்கு மேல் 2 வாக்குச்சாவடிகளும், 1500-க்குமேல் 7 வாக்குச் சாவடிகளும் ஆக 50 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

               கிராமப்புறங்களில் அரசின் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பதற்கு 5 கிராமங்களுக்கு 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 1 உதவி பொறியாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பதற்கும் மகளிர் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

            அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக முதன் முறையாக வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவிற்கான விபரங்கள் அடங்கிய சீட்டினை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

காங்கிரஸ் மேலிடம் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை

  காங்.மேலிடம் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்;

 

செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி
 
 
 
திட்டக்குடி:
 
           காங்கிரஸ் மேலிடம் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் செல்வ பெருந்தகை போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

              பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். தொகுதி சீரமைப்பில் மங்களுர் தொகுதி தற்போது திட்டக்குடி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் திட்டக்குடி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் செல்வ பெருந்தகை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. 
 
இது தொடர்பாக  எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை  கூறியது:- 
 
        காங்கிரஸ் கட்சி மேலிடம் கட்டளையிடும் தொகுதியில் போட்டியிடுவேன். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி 74 வது வயதிலும் 24 மணி நேரமும் உழைத்து மக்களின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே அவரை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் பிரசாரம் செய்யமுடியாத நிலைதான் உள்ளது.  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. அணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற முடியும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சோனியாகாந்தி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.

                  சாதாரண ஏழை மாணவர் உயர்கல்வி படிப்பதற்காக எளிதாக வங்கி கடன் பெற வழிவகை செய்தார். மத்திய மந்திரி சிதம்பரம் மேலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கடனை ரத்து செய்தார். இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior