உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

அ‌ந்தமா‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

                     அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணிக்கு கடுமையான ‌நில நடு‌க்க‌ம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையிலு‌ம் உணரப்பட்டது. அந்தமான், ஒரிசா போன்ற இடங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றி உடனடி தகவல் வரவில்லை. அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள தீவுகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். போர்ட் பிளேர் நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பூமி அதிர்வின் மையம் இருந்தது. இந்த பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும் 2 பேர் காயம் அடைந்ததாகவும், சில வீடுகளின் ஓடுகள் சரிந்து விழுந்ததாகவும், அந்தமான் தீவின் தலைமை செயலர் விவேக் ராய் செ‌ய்‌தியா‌ள‌ர்‌க‌ளிட‌மதெரிவித்தார்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு

சிதம்பரம்:

                      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  

                 தேர்வு முடிவுகளை http://annamalaiuniversity.ac.in/results/getdegree.php?sys=dde முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: 

                      பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி  பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ்,  இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் கருத்தரங்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பொருளாதாரப் பிரிவு சார்பில் "முதுமையில் ஏற்படும் பொருளாதார தாக்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். பொருளியல் பிரிவுத் தலைவர் டி.நமசிவாயம் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டு பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேளாண் சேவை மையங்கள்

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் 5 வேளாண் சேவை மையங்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் 100 வேளாண் சேவை மையங்களை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பம், பி.முட்லூர், தொழுதூர், பெண்ணாடம் ஆகிய இடங்களில் வேளாண் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிஞ்சிப்பாடி ஆயிக்குப்பத்தில் நடந்த விழாவில், வேளாண் சேவை மையங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை (5 மினி டிராக்டர், 5 பவர் டில்லர்கள், 2 நாற்று நடும் கருவிகள், 14 களை எடுக்கும் கருவிகள், 8 பவர் ஸ்பிரேயர்கள், 7 கைத் தெளிப்பான்கள், 11 தார்ப் பாய்கள்) அமைச்சர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

                கடலூர் மாவட்டத்தில் 106 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், பயிர் காப்பீடு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு கடலூர் மாவட்ட விவசாயிகள் 1,00,908 பேருக்கு ரூ.246.11 கோடி வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2009-10-ம் ஆண்டுக்கு 87,889 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.160.1 கோடியும், விவசாயக் கூட்டுப் பொறுப்புக்குழு கடனாக 500 குழுக்களுக்கு ரூ.5.81 கோடியும் மத்திய காலக் கடனாக 764 பேருக்கு ரூ.3.16 கோடியும், மகளிர் சுயஉதவிக்குழு கடனாக 2,468 குழுக்களுக்கு ரூ.15.69 கோடியும் பிற்பட்டோருக்கான கடன் 352 பேருக்கு ரூ.40.91 லட்சமும், சிறுபான்மையினருக்கான கடன் 650 பேருக்கு ரூ.162.5 லட்சமும் மாற்றுத் திறனாளிகள் 311 பேருக்கு ரூ.54.91 லட்சமும் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது என்றார் அமைச்சர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட  வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு

கடலுர்:

                 ஓய்வூதியர்கள் அனைவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் பா.வெங்கடேசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 2010-11-ம் ஆண்டுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஓய்வூதியக் கொடு ஆணைப் புத்தகத்துடன், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்குச் சென்று, நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும். கருவூல அலுவலரின் நேர்காணல் கட்டாயம் ஆகும். அவ்வாறு மஸ்டரிங்  செய்யாதவர்களுக்கு ஓய்வூதியத்தை கருவூலம் நிறுத்தி வைக்க ஏதுவாகும். குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவித் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் கால அவகாசம் 30-6-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இச்சலுகைத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்கள் விரும்பினால் சேரலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டி பகுதியில் மத்திய அதிரடிப்படை ஆய்வு

பண்ருட்டி:

                 பண்ருட்டி காவல் சரகத்தில் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய பகுதிகளை, கோவையைச் சேர்ந்த மத்திய அதிரடிப் படையினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். கோவையைச் சேர்ந்த 105-வது பட்டாலியன் பி கம்பெனியைச் சேர்ந்த உதவி ஆணையர் என்.சுனில்குமார், இன்ஸ்பெக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அதிரடிப் படையினர் 60 பேர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு கடந்த 25-ம் தேதி முதல் மாவட்டத்தின் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். திங்கள்கிழமை பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதியில் பிரச்னை மற்றும் பதற்றமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக பண்ருட்டி சரக காவல் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்தாளுநர்கள் கட்டாயம் தேவை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெய்வேலி:

             மருந்து கடைகளில் பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலி இந்திரா நகரில் திங்கள்கிழமை நடந்த அப்பல்லோ மருத்துவமனையின் தகவல் மையத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், அங்கு கூறியது: 

                    காலாவதியான மருந்து மற்றும் போலி மருந்து தொடர்பாக எனக்கு ஓரிரு மாதத்துக்கு  முன்பே தகவல் கிட்டியதும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது பலர் இதில் சிக்கியுள்ளனர். பல மருந்து விற்பனைக் கடைகளில் மருந்தாளுநர்களே இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே மருந்து விற்பனைக் கடைகளிலும் சோதனை செய்து, பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் இல்லாத மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசு மருத்துவமனைகளில் முறையாக டெண்டர் கோரப்பட்டு தரமுள்ள மருந்துகளாக என்பதை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர்தான் மருந்துகள் வாங்கப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான அல்லது போலி மருந்துகளோ இருக்க வாய்ப்பில்லை. நெய்வேலியில் என்எல்சி மருத்துவமனையில் விரைவில் சோதனை செய்யப்படும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Read more »

பறிபோகும் அவலம்! சேவை இல்ல மாணவிகளின் சுதந்திரம்... சமூக நலத்துறை அலுவலகத்தால் சிக்கல்

கடலூர் : 

                     கடலூர் சேவை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றியதால், அங்கு தங்கி படித்து வரும் 600க்கும் மேற் பட்ட ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிப்பதோடு, அவர்களின் சுதந் திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் அரசு சேவை இல்லம் இயங்கி வருகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், ஆதவற்ற பெண் கள், சமூக சூழலால் பாதித்த பெண் கள், பாலியல் கொடுமைக்களுக்கு உட்பட்ட பெண்கள் இந்த இல்லத்தில் தங்கி படித்து வருகின்றனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தாய், தந்தையரை இழந்த சிறுவர், சிறுமிகள் 40 பேரும், கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வந்த அன்னை சத்யா ஆதரவற்றை மாணவிகளும் கடந்த நான்காண்டாக சேவை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

                  மற்றோர் பகுதியில் உள்ள கட்டடத்தில் வளர் இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டு வந்தது. சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இந்த சேவை இல்லத்தில் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாத அள விற்கு பாதுகாப்பு இருந்தது. இதனால் அங்குள்ள மாணவிகள் சுதந்திரமாக இருந்தனர். இந்நிலையில் சேவை இல்ல வளாகத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் கடலூர் புதுப்பாளையத்தில் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தை மாற்றியுள்ளனர். இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பம் கொடுக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக தினசரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார் மீதான விசாரணைக்கு வரும் இரு தரப்பினரும் சேவை இல்ல வளாகத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், அங்கு படித்து வரும் மாணவிகளின் படிப்பு முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கும்பல், கும்பலாக வந்து செல்வதால் மாணவிகள் மட்டுமே தங்கியுள்ள சேவை இல்லத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

                   மேலும், பள்ளி முடிந்து மாணவி கள் இல்ல வளாகத்தில் சுதந்திரமாக விளையாடுவது வழக்கம். ஆனால் தற்போது மாலை 6 மணிக்கு மேலும் சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் இருப்பதாலும், அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதாலும் மாணவிகள் விளையாடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் துணி துவைப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளும் பாதிக்கிறது. சேவை இல்லத்தில் ஆதரவற்ற மாணவிகளின் கல்வியை மேம் படுத்தவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், மாணவி கள் சுதந்திரமாக செயல்பட இல்ல வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை உடனடியாக வேறு இடத் திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

போலி மருந்து வழக்கில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

கடலூர் : 

                        போலி இருமல் மருந்து விற்பனை செய்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவர் அதே பகுதியில் செல்வவிநாயகர் ஏஜென்சி என்ற பெயரில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

                    அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' 2700 பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இது குறித்து கடலூர் மாத்திரை சோதனை ஆய்வாளர் குருபாரதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஏஜென்சியை நடத்தி வந்த வள்ளியப்பனை தேடி வந்தனர். அதனை அறிந்த வள்ளியப்பன் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (3)ல் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப் பட்டார். போலி மருந்து குறித்து வள்ளியப்பனிடம் விசாரணை செய்ய அனுமதி கோரி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சுந்தரம், வள்ளியப்பனை வரும் 5ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Read more »

மாணவிகளுக்கு உடல்நலக் கல்வி குறித்த பயிற்சி


ராமநத்தம் : 

               ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, புலிகரம்பலூர் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உடல்நலக் கல்வி குறித்த பயிற்சி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு புலிகரம்பலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் செங்குட்டுவன், ஜெயந்தி, பாலாஜிராவ் முன்னிலை வகித்தனர்.

                ஆசிரியர் வீரமணி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார் வையாளர் முருகேசன் உடல்நலக் கல்வி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். ஆசிரியர் பயிற்றுனர் பன்னீர் செல்வம் மேற்பார்வையில் பட்டாக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா, ஆசிரியர் ரம்யா ஆகியோர் மாணவிகளுக்கு தினசரி பயிற்சிகள், உணவு வகைகள், சரிவிகித உணவு, ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். இதில் பட்டாக்குறிச்சி 18, கண்டமத்தான் 14, புலிகரம்பலூர் 18 மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மார்க்கஸ், தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர்.

Read more »

ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா

குறிஞ்சிப்பாடி : 

          குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் 75 விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா சென்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் (ஆத்மா) கீழ் விவசாயிகள் 75 பேர் வட்டார அமைப்பாளர் அசோகன் தலைமையில் சுற்றுலா சென்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆடு, மாடு, கோழி, காடை, வான் கோழி, ஈமு கோழி, நெருப்புக் கோழி, பன்றி வளர்ப்பு குறித்து தொழில் நுட்பங்களை அறிந்துக் கொண்டனர்.

Read more »

பென்னாகரத்தில் வெற்றி: தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கடலூர்:

                    பென்னாகரம் இடைத்தேர்தல் வெற்றியை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து கடலூர் தி.மு.க., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் சேர்மன் தங்கராசு, நகர தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் தமிழரசன், கணபதி, இளங்கோ, சம்பத், கோவிந்தசாமி, வனிதா, கோவலன், பூங்காவனம் மற்றும் தொண் டர்கள் பட்டாசு வெடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நெல்லிக்குப்பம்: 

                  எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் பழனிவேல், அங்கமுத்து, பலராமன், கவுன்சிலர்கள் தமிழ் மாறன், விஜயகுமார், வார்டு செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மதியழகன், ரமேஷ், மனோகர் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அவைத்தலைவர் முகமது அனீப், துணை செயலாளர் தனகோடி, நந்தகோபால், குணசேகரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர். திட்டக்குடி: நகர செயலாளர் பரமகுரு தலைமையில் நகர தலைவர் தங்கமணி, துணை செயலாளர் துரை, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், கவுன்சிலர் செந்தில், ராஜேந்திரன், ராசாத்தி உள்ளிட்டோர் பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர்.

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியகோஷ்டி, ஆதிவராகநல் லூர், அருண்மொழித்தேவன், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை உட்பட 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. சின்னகுமட்டி ஊராட்சியில் ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன் கணக்கெடுக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர் நாகப் பன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்: 

                   எய்தனூரில் நடந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ. நடராஜன் ஆய்வு செய்தார். துணை தாசில்தார் நாசிக் இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ரபீக்குதீன் உடனிருந்தனர். நடுவீரப்பட்டு: நைனாப்பேட்டை பகுதியில் நடுவீரப்பட்டு வி.ஏ.ஓ., குப்புசாமி, ஊராட்சி உதவியாளர் ராஜேந்திரன்,மக்கள் நலப் பணியாளர் அஞ்சாபுலி ஆகியோரும், சி.என்.பாளையத்தில் வி.ஏ.ஓ., ஜோதிமணி, மக்கள் நலப் பணியாளர் வேல்முருகன், ஊராட்சி உதவியாளர் ரவி ஆகியோர் கணக்கெடுப்பு பணியினை செய்து வருகின்றனர்.

Read more »

ஆதிதிராவிட கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி துவக்கம்

சிதம்பரம் : 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலவிடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி சிதம்பரத்தில் துவங்கியது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சி.முட் லூர் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 100 பேர் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
                     இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சிதம்பரம் ஆக்ஸ்போர்டு இன்ஸ்டியூட் நிறுவனர் ஆறுமுகம் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் துளசிராமன் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சேரமான் பேசினர். இன்ஸ்டியூட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

மேலாண்மை தேர்வில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு விழா

ஸ்ரீமுஷ்ணம் : 

             மேலாண்மை தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவரது மகன் சதன்பாபு கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் அகில இந்திய அளவில் நடந்த மேலாண்மை தேர்வில் முதலிடம் பெற்று தங் கப்பதக்கம் பெற்றார்.

                  இதனை பாராட்டி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு உதவி மின் பொறியாளர் சடகோபன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியா ளர் கண்ணகி முன் னிலை வகித்தார். கிராமப்புற உதவி மின்பொறியாளர் ரமணன் வரவேற்றார். சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் பாராட்டி பேசினார். விழாவில் சதன்பாபு பெற்றோர்கள் கவுரவிக் கப்பட்டனர். முடிவில் பாளையங்கோட்டை துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் ரவி நன்றி கூறினார்.

Read more »

பணி நிரந்தரம் செய்யுமாறு பிரிவு எழுத்தர்கள் வலியுறுத்தல்

கடலூர் : 

               அரசுத்தேர்வுகள் துறையில் 14 ஆண்டாக பணியாற்றி வரும் பிரிவு எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்ய துணை முதல்வருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறையில் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக கடலூர் மண்டலத்தில் 9 பேரும், வேலூர் மண்டலத்தில் 8 பேரும், தினக் கூலி பணியாளர்கள் 6 பேரும், சென்னை தலைமையகத்தில் 6 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

                      இவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற் போது நாளொன்றுக்கு 150 வழங்கி வருகிறது. இதே துறையில் தொடர்ந்து 14 ஆண்டு களாக பணியாற்றி வருவதால் வயது வரம்பை கடந்து வேறு அரசு பணிக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி கடந்த 10 ஆண்டாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை அன்று சட்டசபை வளாகத்தில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

Read more »

இலங்கை அகதிகள் முகாமில் மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு

சின்னசேலம் : 

               சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் நடந்து வரும் பணிகளை சென்னை மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு செய்தார்.சின்னசேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை சென்னை மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலக தனித் துணை ஆட்சியர் ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். முகாம் தலைவர் மோகன் வரவேற்றார். முகாமில் நடந்து வரும் பக்க கழிவு கால்வாய், குடிநீர், சாலை பணிகளை தனித் துணை ஆட்சியர் ரகுபதி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆர்.டி.ஓ., வனிதா, தாசில்தார் மணி, பேரூராட்சி செயல் அலுவலர் கபினி, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் செல்வராணி, வி.ஏ.ஓ., ராஜவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

உர மானிய கொள்கை மாற்றத்தால் போலி உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும்: விவசாயிகள் கவலை

கடலூர் : 

                   கடந்த 10 ஆண்டுகளாக இருந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் புதிய உர மானிய கொள்கையாக மாற்றம் அடைவதால் ஏற்படும் விலையேற்றம் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம் இனி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்து என உரங்களில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. யூரியா உரத்தை மட்டும் நாளை முதல் அதிகபட்ச சில்லறை அரசு விலை நிர்ணயம் செய்து 10 சதவீதம் உயர்த்துகிறது. அதன்படி இதுவரை 4,830 ரூபாயாக இருந்த ஒரு மெட்ரிக் டன் யூரியா நாளை 1ம் தேதி முதல் 5,310 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. யூரியாவை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிற உரங்களுக்கு அந்தந்த கம்பெனிகளே விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு வழி வகுத்துள்ளதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கூறுகையில் '

                  விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான உர கொள்கை முடிவு. அனைத்து உரங்களையும் அந்தந்த வகையான ரசாயன கலப்பினங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உரங்கள் அரசு கட்டுப் பாட்டில் இருக்கும்போதே தவறுகள் நடந்துள்ளது. உரங்கள் அனைத்தும் என்.பி.கே., எனப்படும் கலைவை சதவீதத்திற்கு மேல் குறைகள் இருந்தது.தற்போது யூரியாவை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மற்ற உரங்களின் விலையை கம்பெனியே நிர்ணயம் செய்து கொள்வது என்பது தவறான கொள்கை முடிவு. இதனால் சந்தையில் போலியாக தயாரிக்கப்பட்ட உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும். தரமான ஒரிஜினல் உரங்கள் கிடைக்குமா என சந்தேகம் எழுந் துள்ளது.

Read more »

மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயனின்றி பாழாகி வருகிறது

நெல்லிக்குப்பம் : 

              கீழ்அருங்குணம் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்படுத்தாமல் பாழாகி வருகிறது.
 

                      தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. சுய உதவிக்குழு பெண்கள் சந்தித்து பேச இடவசதியில்லாமல் சிரமப்பட்டனர். உள்ளாட்சிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே இக்கட்டடத்தை பயன்படுத்தினர். அதன்பிறகு பயன்படுத்தாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சுய உதவிக்குழு தலைவி வீட்டிலேயே கூட்டத்தை நடத்துகின்றனர். இதனால் கட்டடம் பாழாகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் அவர்களுக்காக கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி பகுதியில் மின் வெட்டு அறிவிப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி நகரம், கிராமப்புற பகுதியில் மின்நிறுத்தம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
                        பண்ருட்டி கிராமப்புற மின்பாதையில் மும்முனை மின்சாரம் முதல் பிரிவிற்கு காலை 6 மணி முதல் 12 மணிவரையிலும் இரவில் 3 மணி முதல் 6 மணிவரை வழங்கப்படும். 2ம் பிரிவிற்கு பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரையிலும், இரவில் 12 மணி முதல் 3 மணிவரை வழங்கப்படும். மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் லிங்க்ரோடு, விழமங்கலம், தட்டாஞ்சாவடி பீடரில் உள்ள பண்ருட்டி நகர் பகுதிகளில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

                திருவதிகை பீடரில் உள்ள திருவதிகை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சீரங்குப்பம்,தி. ராசாப்பாளையம் மற்றும் பூங்குணம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மணி நகர், வ.உ.சி. நகர், எல்.என்.புரம், திருவள்ளுவர் நகர், கந்தன்பாளையம், முத்தையா நகர், பூங்குணம் மற்றும் சிவராமன் நகர் பகுதிகளில் காலை 6மணி முதல் 9 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Read more »

சொத்து வரி பெயர் மாற்றியதில் குளறுபடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

கடலூர் : 

                     கடலூரில், சொத்து மற்றும் குடிநீர் வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய, நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு வேறு முகவரிக்கு மாற்றி குளறுபடி செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(45). இவர், தெற்கு கவரத்தெருவில் அருள்ஜோதி என்பவரது வீட்டை விலைக்கு வாங்கி, சொத்துவரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு, ஏற்கனவே அவரது பெயரில் உள்ள வேறு வீட்டிற்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற் றம் செய்து கொடுத்தனர். தான் விண்ணப்பித்த வீட்டிற்கு பெயர் மாற்றி தராமல், ஏற்கனவே தனது பெயரில் உள்ள வீட்டிற்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முத்துகிருஷ்ணன், கடலூர் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
               இந்த மனு மீதான விசாரணைக்கு, வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் குமார் கூறியதாவது:
 

                       வரிவிதிப்பு பெயரை முகவரி மாற் றம் செய்து கொடுத்தது மிகப்பெரிய தவறு. தற்போது, சம்பந்தப்பட்டவருக்கு சரியான முகவரிக்கு பெயர் மாற்றம் செய்து தயார் நிலையில் உள்ளது. அவர் கோர்ட் மூலமாக வாங்குகிறாரா அல்லது அவரே வாங்கிக் கொள்கிறாரா என தெரியவில்லை. தவறு ஏற்பட்டதற்காக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், துறை ரதியான நடவடிக்கை எடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் ஜெயராஜிடம் விளக்கம் கேட்கப்படும். இனி வரும் காலங்களில் சொத்து மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் குறித்து அனைத்தும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் போல் கம்ப்யூட்டர் பிரிண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

சத்துணவு ஊழியர்கள் குமராட்சியில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                 குமராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். சம்பத், நலங்கிள்ளி, குமாரராஜா, ரகுமான், தூய மணி முன் னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் மச்சேந்திரன், அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விஜயலட்சுமி, வெற்றிமணி, சுமதி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Read more »

நான்கு பேருக்கு கத்தி வெட்டு 10 பேருக்கு போலீஸ் வலை


நெல்லிக்குப்பம்:

             நெகாப்பீடு திட்ட கணக் கெடுப்பதில் பெயர் விடுபட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
 
                 நெல்லிக்குப்பம் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சியில் காப்பீடு திட்ட கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி தலைவரின் ஆதரவாளரான சேட்டு செய்தார். அதில் பனங்காட்டு காலனியை சேர்ந்த அஞ்சாபுலி பெயர் விடுபட்டது. ஆத்திரமடைந்த அஞ்சாபுலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேட்டுவை கத்தியால் வெட்டினர். தடுக்க வந்த மணிகண்டன், துளசிதாஸ், ஏழுமலையையும் கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அஞ்சாபுலி, மதியழகன் உட்பட 10 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

கல்விக்கடன் வழங்கக் கோரி மா.கம்யூ., உண்ணாவிரதம்


திட்டக்குடி : 

               கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
                     பெண்ணாடம் அடுத்த இறையூர் கிளை பஞ்சாப் நேஷனல் வங்கி எதிரில் கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் பயனாளிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கிளை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்டக்குழு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு நாராயணன், மாவட்டக்குழு காமராஜ் பேசினர்.இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கல்விக் கடன் வழங்கிட வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், வங்கி மேலாளர் உறுதியளித்ததன் பேரில் கைவிடப்பட்டது. ஆனால் மூன்று மாதமாகியும் இதுவரை எவருக்கும் கல்விக் கடன் வழங்காததை கண்டித்து பேசப்பட்டது.

Read more »

நான்கு நாட்களாக மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் : 

                      கடலூர் அம்பேத்கர் நகரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடலூர் நகாரட்சி 31வது வார்டு அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 26ம் தேதி அம்பேத் கர் நகரில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

                        இதனால் நான்கு நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் குடிநீருக்கு அவதியடைந்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதியடைந் தனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணிக்கு வண்டிப்பாளையம்-கேப்பர்மலை ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, குணசேகர் ற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கவும், டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க போலீசார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

பூட்டிய இரண்டு வீடுகளை உடைத்து ரூ.ஒரு லட்சம் நகைகள் திருட்டு

பண்ருட்டி : 

                      பண்ருட்டியில் பூட்டிய இரண்டு வீடுகளின் கதவை உடைத்து ஒரு லட்சம் மதிப்பு தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தமிழரசி(50). சத்துணவு அமைப்பாளரான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் அகிலா வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது முன் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த மூன்று சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
 
மற்றொரு சம்பவம்: 

                       பண்ருட்டி எல்.என்.புரம் கணபதி நகரை சேர்ந்தவர் தேன்மொழி. அதேபகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கேட் திறந்து கிடந்தது. கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய்.
 
                         இதுகுறித்து தமிழரசி மற்றும் தேன் மொழி கொடுத்த புகார்களின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். பண்ருட்டில் கடந்த 19ம் தேதி இரு வீடுகளில் தம்பதியினரை தாக்கி 11 சவரன் நகைகள் கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பூட்டிய இரண்டு வீடுகளில் திருடு போயிருப்பது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Read more »

மண்ணெண்ணெய் வழங்காததால் கடலூரில் ரேஷன் கடை முற்றுகை

கடலூர் : 

                      மாலை வரை காத்திருந்தும் மண்ணெண்ணெய் வழங்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். கடலூர் பீச் ரோட்டில் சரவணபவா கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தின் மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இதன் மூலம் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.வார நாட்களில் கடை வாரியாக சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

                             உரிய நேரத்தில் மண்ணெண்ணெய் வாங்காதவர்களுக்கு அந்த மாதத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் வழங்கப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் மண்ணெண்ணெய் வாங்காத 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் பில் போடுவதற்காக ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு காத்திருந்தனர். மாலை 6 மணியாகியும் பில் போட்டு தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அங்கிருந்த ஊழியர்கள் தற்போது மண்ணெண்ணெய் இருப்பு இல்லை. இன்று வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வாங்கிக் கொள்ளுமாறு டோக்கன் கொடுத்தனர். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் கல்லூரியில் விளையாட்டு விழா

கடலூர் : 

                    குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜகோபல் முன்னிலை வகித்தார். பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வணங்காமுடி வாழ்த்துரை வழங்கினார். உடற் கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெய்வேலி டி.எஸ்.பி., மணி பரிசு வழங்கினார். தமிழ் துறை தலைவர் சிவபாலன் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க., வுக்கு 2 வது இடம்;





தர்மபுரி: 

              பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் வெற்றி வெற்றார். இன்பசேகரன் பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரனை விட 36,424 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 637 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 41 ஆயிரத்து 243 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 26 ஆயிரத்து 784 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 11 ஆயிரத்து 406 ஓட்டுக்களும் பெற்றனர்.

Read more »

Facts About Animals

  • here are presently over a million animal species upon planet earth. 
  • The reptiles have 6,000 species crawling in their habitats; and more are discovered each year.
  • There are over 70,000 types of spiders spinning their webs in the world.
  • Well, there are 3,000 kinds of lice. Yes, it is the lice we are prone to get due to lack of hair hygiene.
  • This is a mind-boggling fact – for each of the 600 million people there is about 200 million insects crawling, flying...
  • Mammals are the only creatures that have flaps around their ears.
  • The world has approximately one billion cattle, of which about 200 million belong to India.
  • The life of a housefly is only 14 days.
  • A dog was the first animal to up in space.
  • A sheep, a duck and a rooster were the first animals to fly in a hot air balloon. The oldest breed of a dog known to mankind is the ‘Saluki’.
  • An ostrich is the fastest bird and can run up to 70 km/h.
  • Never get a camel angry, for he or she will spit at you.
  • There are crabs that are the size of a pea. There are known as ‘Pea Crabs’.
  • The lifespan of 75 percent of wild birds is 6 months.
  • Denmark has twice as many pigs as there are people.
  • You do not need cotton buds to clean a giraffe ears. It can do so with its own 50cm-tongue.
  • Want to known the appetite of a South American Giant Anteater? Well it eats over 30,000 ants, per day.
  • The sailfish can swim at the speed of 109 km/h, making it the fastest swimmer.
  • The Sea Horse is the slowest fish, drifting at approximately 0.016 km/h.
  • The small car on the road is probably the size of the heart of a blue whale.
  • The length of an elephant is the same as the tongue of a blue whale.
  • The crocodile's tongue is unmovable, as it is attached to the roof of its mouth.

Read more »

Builder Remanded To Judicial Custody


CUDDALORE: 

         A builder here was remanded to judicial custody on Monday on the charges of forging documents in the construction of permanent houses for the tsunami-affected people.

           Deputy Superintendent of Police G. Stalin told presspersons that the forgery had come to light following a complaint lodged by Srinivasan, Assistant Project Director (Tsunami projects) of the District Rural Development Agency. Under the Rajiv Gandhi Rehabilitation Package for the tsunami victims, a contract for construction of 125 permanent houses at Periakuppam near here had been awarded to S.V. Rajan (39) of Kondur, proprietor of the Hi-tech Engineering Constructions, Cuddalore.

         As per the government rules, Rajan should produce two bank guarantees for Rs. 10 lakh–Rs. 5 lakh at the time of application and another Rs 5 lakh at the time of allotment of the contract. Accordingly, he produced two receipts on June 14, 2007, and December 17, 2007. However, on verification the receipts were found to be false. Hence, cases were booked against Rajan. The houses were under construction and the case needed further probe to get into the details, Mr Stalin added.

Read more »

திட்டக்குடி பகுதியில் மான்களை காத்திட நடவடிக்கை தேவை! காடுகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


திட்டக்குடி : 

                 திட்டக்குடி பகுதிகளில் மான்கள் இறப்பதை தடுத்திட காட்டை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               கடலூர் மாவட்டம் ராமநத்தம், சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் நாங்கூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றி, மயில், குரங்குகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. காடுகளில் உள்ள குட்டைகளில் உள்ள தண்ணீரை விலங்குகள் குடித்து வந்தன. கோடை காலங்களில் குட் டைகளில் தண்ணீர் வற்றிவிட்டால், விலங்குகள் தண்ணீரை தேடி அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தேடி வரத்துவங்கின.

                  இதனை தடுத்திடவும், காடுகளில் உள்ள விலங்குகளை பாதுகாத்திடும் பொருட்டு கடந்த அ.தி. மு.க., ஆட்சியில் அரசுக்கு சொந்தமான காடுகளில் உள்ள விலங்குகளின் தண் ணீர் தேவைக்காக ஆங் காங்கே சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டன. அதில் கோடை காலங்களில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வந்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காடுகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளை வனத்துறையினர் பராமறிக்க மறந்தனர். இதனால் தொட்டிகள் பழுதாகி தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி காட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இவ்வாறு சிறுபாக்கம் பகுதி காட்டில் உள்ள வன விலங்குகள் உணவு மற் றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் போது காட்டையொட்டி செல்லும் சேலம்- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

                    இதனையடுத்து வன விலங்குகள் கடக்கும் சாலையென வாகன ஓட்டிகள் கவனித்து செல்ல ஏதுவாக எச்சரிக்கை போர்டுகள் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட் டது. இருப்பினும் வன விலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலையினை தடுக்க முடியவில்லை. அதேபோன்று சமீப காலமாக நாங்கூர் காட்டிலிருந்து மான்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக இரவு நேரங்களில் இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிகளுக்கு கூட்டமாக வந்து செல்கின் றன. மனித நடமாட்டம் இல்லாத நேரங்களில் வந்து செல்வதால், மனிதர்களின் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆனால் நாய்களின் பிடியில் சிக்கி இறக் கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நாய்களிடம் சிக்கிய ஒரு வயது புள்ளி மானை இளைஞர்கள் காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

                     வனப்பாதுகாப்பு சட் டம் கடுமையாக உள்ளதால் மான் உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடுவது பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் காடுகளில் உள்ள விலங்குகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வனத் துறை முன்வராததால் இந்நிலை தொடர்கிறது. நாய்களிடமும், வாகனங்களில் சிக்கி வன விலங்குகள் இறப்பதை தடுக்க காடுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக காடுகளில் உள்ள விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ''அழகுக்கு சொந்தமான மான் இனம்'' திட்டக்குடி பகுதி காடுகளில் இருந்ததாக கூற முடியுமே தவிர, காண முடியாது.

Read more »

வேலுடையான்பட்டில் பங்குனி உத்திரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


நெய்வேலி : 

                நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் உற்சவம் சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நெய்வேலி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்தும், நீண்ட அலகுகள் குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

                     கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தினமலர் மற்றும் பிராமணர் சங்கம் சார் பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப் பட்டது. வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கினர். என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தனது வீட்டிலேயே பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கினார்.

Read more »

சிதம்பரத்தை கைப்பற்றியது வாசன் அணி

சிதம்பரம் : 

                இளைஞர் காங்., தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியை வாசன் அணியும், புவனகிரியை ப.சிதம்பரம் அணியும் கைப்பற்றியது. சிதம்பரம், புவனகிரி சட்டசபை தொகுதிகளுக்கான இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் சிதம்பரத்தில் நடந்தது. அதில் சிதம்பரம் தொகுதியில் வாசன் அணி சார்பில் போட்டியிட்ட ரஜினிகாந்த்தும், புவனகிரி தொகுதியில் ப.சிதம்பரம் அணியை சேர்ந்த மன்சூர் அலி வெற்றி பெற்றுள்ளனர்.

Read more »

அண்ணாமலை பல்கலையில் இன்ஜி., வகுப்புகள் துவங்கியது

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், காலவரையற்ற விடுமுறை விடப் பட்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரியில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாண வர் கவுதம்குமார், கடந்த மாதம் 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் தண்ணீரில் மூழ்கி சுமித் குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் இறந்தனர். இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.கடந்த 11ம் தேதி எம்.ஏ., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., - எம்.எட்., இசைக் கல்லூரி, விவசாய கல் லூரி, பார்மசி, இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டன. இன்ஜினியரிங் முதலாண்டு வகுப்புகள் 17ம் தேதி துவக்கப்பட்டது. இன்ஜினியரிங் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.

Read more »

இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
                   இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு சிதம்பரத்தில் நடந்தது. இந்திய மருத்துவ கழக சிதம்பரம் கிளை, போர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான இதய நோய் (மாரடைப்பு) குறித்த கருத்தரங்கை நடத்தியது. மருத்துவ கழக கிளை தலைவர் வெற்றி வீரமணி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். பிரபல டாக்டர்கள் முருகேசன், மிஸ்ரா, சாந்தி, ரமேஷ் உள்ளிட்ட 60 டாக்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.சென்னை மலர் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் மதன்மோகன், இருதய நோய் குறித்து விரிவாக பேசினார். அப்போது, இருதய அடைப்பு நோயை மருந்து மூலம் குணப்படுத்துவதைவிட நவீன தொழில்நுட்பமான பிரைமரி ஆஞ்சியோ பிளாரிடா சிகிச்சை மூலம் நூறு சதவீதம் சரி செய்ய முடியும் என் பதை விளக்கினார். உடல் நல சேவை பிரிவு கிரிபானந்த் நன்றி கூறினார்.

Read more »

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு பாராட்டு

சிதம்பரம் : 
 
                   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது. 
 
தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், 
 
                  மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை எந்த அரசு ஊழியர் சங்கங்களும் கோரிக்கை வைக் காத நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்டதுடன், ஜனவரி 2010 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். சிவஇளங்கோ அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக் கையில், மத்திய அரசு அறிவித்தது போல் மாநிலத்தில் 1-1-2010 முதல் 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி ரொக்கமாக வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக் கும் என கூறியுள்ளார்.

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டித்தர கோரிக்கை


பரங்கிப்பேட்டை : 

                       பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்த 50 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்புகள் கட்டித் தராததால் தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் கட்டித்தர கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அங் காளம்மன் கோவில் தெரு பகுதி கடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட் டது. வெள்ளாற்றில் இருந்து 200 மீட்டர் தூரத் திற்குட்பட்ட பகுதிகளில் அரசு மூலமும், 200 மீட்டருக்கு அதிமாக உள்ள பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலமும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக் கப்பட்டது.

                ஆனால் வெள்ளாற்று பகுதியில் சுமார் 350 மீட்டர் தூரம் உள்ள அங்களாம்மன் கோவில் தெரு பகுதி சுனாமியில் பாதித்த போதிலும், இப்பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டித்தரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் குடியிருப்புகள் கட்டிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் முதல்வருக்கு மனு அனுப்பியதை தொடர்ந்து,  இதுகுறித்து விசாரணை நடத்தி சிதம்பரம் ஆர்.டி.ஓ., விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இந்தபகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம் ஷாதி மகாலில் நடந்தது. பு.முட் லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மேகலா வரவேற்றார். மருத்துவ முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். முகாமில் இருதய நோய், எலும்பு நோய், காது, மூக்கு, தொண்டை சம்மந்தப்பட்ட நோய் மற்றும் கண் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. முகாமில் தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர் காஜா கமால், ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மீரா உசேன், கமால், இசாக் மரைக்காயர், ஹபிபுர் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ரத்தம் மற்றும் உடல் தான விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் : 
 
                   விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நீதிபதி அருண்மொழிசெல்வி தலைமை தாங்கினார். நீதிபதி கணேசன், சி.எஸ்.எம்., கல்லூரி தலைவர் மகாவீர்சந்த், செயலாளர் அபிராமி முன்னிலை வகித்தார். முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார்.கோர்ட் அருகே துவங்கிய ஊர்வலம் பாலக்கரை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை சென்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரதி, துரைசாமி, ராமசந்திரன், ஞானம் அலெக்ஸாண்டிரியா உட் பட பலர் கலந்து கொண் டனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம்: வேறு இடத்தில் கட்ட எம்.எல்.ஏ., மனு

ஸ்ரீமுஷ்ணம் : 
 
                ஸ்ரீமுஷ்ணம் பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்தை மறைத்து புதிய கட்டடம் கட்ட கூடாது என எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் மற்றும் 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி கட்டும் பணியை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவில் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 88ம் ஆண்டு கட்டப்பட்டு எம்.ஜி.ராமச் சந்திரன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்திற்கு முன்பாக புதிய மன்ற அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய மன்ற அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் 20 பேர் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தார். இதனிடையே அ.தி.மு.க.,வினர் கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டனர்

Read more »

புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: புதியதாக கட்டப்படுமா?


புவனகிரி : 

                  புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

                    புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் 25 ஆண் டிற்கு முன் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டது. இதன் மூலம் நகரப் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்த காரைகள் பெயர்ந்தும், தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்வதற்கு மேலே ஏற முடியாத அளவிற்கு படிக் கட்டுகள் உடைந்துள்ளன. இந்நிலையில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப் பட்டது. அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புவனகிரிக்கு வந்து பரிசோதனை செய்துவிட்டு சென்று பல மாதங்களாகியும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் முன்பே புதிய நீர்த் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக் கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

கடலூர் : 

                      மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. கணக்கெடுப்பின் போது ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் மற்றும் நில உரிமைக் கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் (பட்டா, உரிமை பத்திரம்) கணக்கெடுப்பு குழுவினரிடம காண் பிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகவல் கிராமங்களில் சரியாக சென்றடையவில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கணக் கெடுக்க சென்றவர்களிடம் ஆவணங்களை காண்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

                   கண்ணாரப்பேட்டை பகுதியில் துவங்கிய கணக்கெடுப்பு பணியை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் நேரில் சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளர் கணக்கெடுப்பு பணிக்கு வருவது தெரியாது. அதனால் மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தற்சமயம் தன்னிடம் இல்லை என தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில்'கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணிக்காக முதல் கட்டமாக 399 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் 12 மணி அளவில் 266 கிராமங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காரைக்காடு பகுதி கண்ணாரப்பேட்டையில் நான் நேரில் சென்று ஆய்வு செய்த போது பத்திரிகை செய்திகள் அவர்களை சென்றடையவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் தண்டோரா மூலம் தெரிவிப்பது. நாளை 31ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அவர்கள் மூலம் விழிப்புணர்வு அடையச் செய்வது. அதுமட்டுமின்றி கிராமத்திற்கு கணக்கெடுக்கும் குழு செல்வதற்கு முதல் நாள் அந்த பகுதியில் டிஜிட்டல் பேனர் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

Read more »

உர சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை: வேளாண் உதவி இயக்குனர் எச்சரிக்கை


கடலூர் : 

                  உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். 

இது குறித்து கடலூர் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 

                      மத்திய அரசு 2010-11 நிதி ஆண்டிற்கு உரமானியம் உரத்தில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்க ஆணை பிறப்பித் துள்ளது. அதன்படி ஒரு கிலோ தழைச் சத்து 23.23 ரூபாய், மணி சத்து 26.28, சாம்பல் சத்து 24.49, கந்தக சத்து 1.78 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. வரும் ஏப் 1ம் தேதி முதல் ஒரு டன் டி.ஏ.பி., உரம் 16,268 ரூபாய், மானோ அம்மோனியம் பாஸ்பேட் 16,219 ரூபாய், டிரிபில் சூப்பர் பாஸ்பேட் 12,087, முயூரேட் ஆப் பொட்டாஷ் 14,692 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதே போல் காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட் உரங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. உர விலை நிலைபாடுகளில் கடந்தாண்டு கொள் முதல் செய்து இருப்பில் உள்ள உரங்கள் கணக்கெடுத்து, பழைய விலைக்கே விற்பனை செய்யவும், மானிய உரங்கள் தட்டுபாடின்றி, அரசு நிர்ணய விலைக்கு தேவையான காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கிட உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                     உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரம் பற்றி விவரங்களுக்கு கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலக தொலை பேசி எண் 04142-290658 ஐ தொடர்பு கொள்ளவும்.

Read more »

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூர் : 

                 பண்ருட்டியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி இரண்டாவது முறையாக தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாபு என்கிற புண்டேரிபாபு(40) அப்பகுதியில் சாராயம் விற்று வந்ததால் கடந்த ஜனவரி மாதம் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதத்தில் வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பாபு மீண்டும் சாராயம் விற்று வந்தார்.  இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிந்துரையை ஏற்று கலெக்டர் சீத்தாராமன் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பண்ருட்டி போலீசார், பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Read more »

தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய கான்ட்ராக்டர் கைது

பரங்கிப்பேட்டை :

                  தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் நாகர்ஜூனா ஆயில் கம்பெனி உள்ளது. அங்கு லேபர் கான்ட்ராக்டராக உள்ள தியாகவள்ளியை சேர்ந்த கொளஞ்சியப்பன் நேற்று முன்தினம் கம்பெனிக்கு சென்று முதுநிலை பாதுகாப்பு அதிகாரி ஜானகிராமனிடம், மீண்டும் லேபர் கான்ட்ராக்ட் கேட்டு தகராறு செய்து தாக்கினார். இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து கொளஞ்சியப்பனை (32) கைது செய்தார்.

Read more »

தீயில் கருகி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணை

நடுவீரப்பட்டு : 

               தீயில் கருகி இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூர் அடுத்த திருமானிக்குழியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற தென்கோவன். இவரது மனைவி பரிமளா என்கிற விஜயலட்சுமி (20). திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த 14ம் தேதி பரிமளா தனது வீட்டில் சுவற்றின் மீது இருந்த பூ பொட்டலத்தை எடுக்க முயன்ற போது, சுவற்றில் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி பரிமளா மீது விழுந்ததில் உடல் முழுவதும் தீ பரவியது. அதில் படுகாயமடைந்த பரிமளாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பரிந்துரை செய்ததன் பேரில் கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ், வரதட்சணை கொடுமையினால் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Read more »

சுனாமி வீடு கட்ட போலி ஆவணங்கள் தாக்கல்: மோசடி கான்ட்ராக்டர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

                     சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜிவ் காந்தி மறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுப்பவர்கள் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாயும், கூடுதல் வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுருத்தப்பட்டது. இந்த டெண்டரை எடுத்து, கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற் பேட்டையில் 'ஐ டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' நடத்தி வரும் கோண்டூர் ஜோதி நகர் சந்தானம் மகன் ராஜன் (29) என்பவர் 125 வீடுகள் கட்டி வருகிறார்.

                     இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டெண்டரில் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ராஜன் கொடுத்த வைப்பு தொகைக்கான ஆவணங்கள் போலியானவை என்பதும், போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி திட்ட ஒலுவலர் சீனுவாசன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றிய ராஜனை நேற்று மாலை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

நகைக்காக மூதாட்டிகள் இருவர் கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கடலூர் : 

                    மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது.

                    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் சாத்தப்பன் மனைவி அம்மணியம்மாள்(65). கடந்த 2008ம் ஆண்டு பிப். 4ம் தேதி அதே ஊரில் உள்ள கோரித்தோப்பு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அம்மணியம்மாளை மர்ம நபர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 55 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றார். அதேபோல் கடந்த 2008ம் ஆண்டு டிச. 29ம் தேதி திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி மங்களம் (70) மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.

                        ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் தனித் தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி அடுத்த தொளார் வடக்கு காலனியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்ச்செல்வன்(33) இரண்டு மூதாட்டிகளையும் நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அசோகன், இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த செந்தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். ஆயுள் தண் டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

Read more »

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்லூர் ஒன்றிய சேர்மன் ஆறுதல்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலத்தில் கடந்த 27ம் தேதி சிறுபாக்கத்தில் இருந்து வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். காயமடைந்த 31 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் விருத்தாசாலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா நேற்று சந் தித்து ஆறுதல் கூறி பிரட், பிஸ்கட் வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, துணை தலைவர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவினாயகம், வெங்கடாசலம், சீனுவாசன், மோகன்ராஜ், ஜெய்சங்கர் உடனிருந்தனர்.

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

Calendar for September 1752

Have u ever seen the calendar for September 1752???

If you are working in Unix, try this out.
At $ prompt, type: cal 9 1752


Image Hosted by ImageShack.us





Surprised????
not only in unix, u can also search it in google

Explanation for what you see:
Isn't the output queer? A month with whole of eleven days missing. This was
the time England shifted from Roman Julian Calendar to the Gregorian
Calendar, and the king of England ordered those 11 days to be wiped off the
face of the month of September of 1752. (What couldn't a King do in those
days?!) And yes, the workers worked for 11 days less, but got paid for the
entire 30 days. And that's how "Paid Leave" was born.Hail the King!!!

Read more »

குடிசைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

            டலூர் மாவட்டத்தில், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட வேண்டிய மொத்த குடிசை வீடுகள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பு 29-3-2010 (திங்கள்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 681 ஊராட்சிகளிலும் கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு, கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்புக் குழுவுக்கு 2 கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் இறுதி செய்திட திட்டமிடப்பட்டு உள்ளது. கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 2010-11ம் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும் 200 ச.அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் அலகுத் தொகை ரூ. 60 ஆயிரம். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தைப் போலவே இத்திட்டத்திலும் பயனாளிகள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வர். ஒப்பந்தப்புள்ளி ஏதும் கோரப்பட மாட்டாது. 2009 வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பில் உள்ள புதிய கதவு இலக்கமே, வீட்டின் அடையாள எண்ணாகக் கருதப்படும். கணக்கெடுப்பின்போது ரேஷன் கார்டு, மின்இணைப்பு, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்புக் குழுவிடம் காண்பிக்கத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கணக்கெடுப்பின்போது குடும்பம் கண்டிப்பாக அவ்வீட்டில் குடியிருக்க வேண்டும்.  முதல் கட்டமாக இன்று 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்குகிறது. கணக்கெடுப்புக் குழுவிடம் சரியான தகவல்களைத் தந்து, பணி சிறப்பாக அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர்:

                 கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

             குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தொட்டியில் கலக்கப் படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு

                      குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. குழு 31-ல் பார்வையிடுகிறது

கடலூர்:
        கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் குழு 31-ம் தேதி பார்வையிடுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியற்றின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிகிறது. ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆலிவர் ஷட்டர் மற்றும் அவரது குழுவினர் 31-ம் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்களது நிகழ்ச்சிகளை இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் த.குருசாமி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
              31-ம் தேதி காலை 8-30 மணி முதல் 9 மணி வரை கடலூர் டவுன்ஹாலில், ஐ.நா. சபைக் குழுவிடம் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பாதுகாப்பில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு விளக்கம் அளிக்கிறது. பகல் 12 மணி வரை, சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகிலிருக்கும்   குடிகாடு, ஈச்சங்காடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம் கிராமங்களில் மக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறது. பகல் 12-30 முதல் மாலை 4-30 வரை, கடலூர் டவுன்ஹாலில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிப்காட் முகவர்கள் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் ஆகியோரை இக்குழு சந்திக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகிய உணவு, தண்ணீருக்கான உரிமை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் தொழில்மயம் என்ற பெயரால் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை களப்பார்வையிடல் மூலம் அறிந்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கும் முயற்சி இதுவாகும்.

Read more »

வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா 86 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ்

சிதம்பரம்;
 
               வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா சிதம்பரத்தில் லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவனம், சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பா.ஜான்சன் தலைமை வகித்தார். லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார். செங்கல்பட்டு மண்டல  நகராட்சி நிர்வாக சமுதாய வளர்ச்சி அதிகாரி எம்.சண்முகப்பிரியா சிறப்புரையாற்றினார். மாணவர் எம்.நூருல்லா வரவேற்றார். 
 
                     விழாவில் இலவச கல்வி பெற்று வேலைக்கு தேர்வு பெற்ற 86 மாணவர்களுக்கு வேலை உத்தரவாத சான்றிதழ்களை பல பன்னாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை ஐஐடியின் துணை மையமான ஈஜிவிகா மையம் மூலம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பாக இலவச கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்காக சென்னை ஐஐடி நிறுவனம் நேரிடையாக நடத்தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை ஐஐடியின் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு துணை மையமான ஈஜிவிகா  ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுதாகர் துவக்கி வைத்தார். ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்கள்  சென்னை மற்றும் பெரிய நகரங்களிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் சிதம்பரத்திலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் வேலைக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றார்கள். குறிப்பாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் வேலைவாய்ப்பு மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களில் பல மாணவர்கள் வேலைக்கான இன்பிளாண்ட் டிரெயினிங்குக்கான உத்தரவாதத்தை பெற்றுள்ளார்கள் என எல்சிசி நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி தெரிவித்தார். விழா நிறைவில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற தலைப்பில் கணினி பொறியாளர் ராம்குமார் தலைமையில் விவாதமும், கருத்தரங்கும் நடைபெற்றது.

Read more »

தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி,​​ சென்னை,​​ திருச்சிராப்பள்ளி,​​ கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது.​ மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும். 30 நிமிட கால அளவிலான தமிழ்,​​ ஆங்கிலம்,​​ சமூகவியல்,​​ பொருளாதாரம்,​​ வணிகம்,​​ மக்கள் தொகையியல்,​​ அரசியல் பொது நிர்வாகம்,​​ காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகளிடையே போட்டா போட்டி! : சாலை விரிவாக்கம், மின்கம்ப பணிகள் பாதிப்பு


பண்ருட்டி : 

               பண்ருட்டி பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதில் சிக்கல்  நீடித்து வருவதால் நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணி தேக்கமடைந்துள்ளது.
 
                பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பண் ருட்டி ஒன்றியம் அலுவலகம் - முத்துநாராயணபுரம் வரையிலான 5 கி.மீ., சாலையை 2.30 கோடி ரூபாய் செலவில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தும் பணி துவங்கப்பட் டுள்ளது. அதேபோன்று வல்லம்-கீழிருப்பு 3 கி.மீ., சாலை 37 லட்சம் ரூபாய் செலவிலும், மேலிருப்பு-ஆத்திரிக் கப்பம்-பேர்பெரியான் குப்பம் 8 கி.மீ., சாலை ஒரு கோடி ரூபாய் மதிப்பிலும், காடாம்புலியூர்-சிலம்பிநாதன் பேட்டை 9.4 கி.மீ., சாலை ஒரு கோடியே 16 லட்சம் செலவிலும் அகலப்படுத்தும் பணி துவங்கப் பட்டுள்ளது.
 
                    இந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல இடங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்ற பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மின்வாரிய செயற் பொறியாளருக்கு நடவடிக்கை எடுக்க கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பினார். விண்ணப்ப கட்டணம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின், மின்கம்பம் மாற்றுவதற்குரிய திட்டமதிப்பீடு வழங்காமல் மின் வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  மின்கம்பங்கள் உள்ளபகுதிகளை தவிர்த்து சாலை அகலப்படுத்தும் பணியை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர்.
 
                மேலும், இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலைத்துறையின்    அனுமதியின்றி மின் கம்பங்கள் நடக்கூடாது என கோட்ட பொறியாளர் வெங்கடேசன்  மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து செம்மேடு, வாணியம்பாளையம், பண்டரக் கோட்டை உள்ளிட்ட பகுதியில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தடுத்து நிறுத்தினர். வேறு வழியின்றி மாளிகம்பட்டு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி மின்வாரியத்தினர்  இரவோடு இரவாக செய்து முடித்தனர்.
 
இதுகுறித்து பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், 

             இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலை துறை அனுமதியோடு மின் கம்பங்கள் நட  உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்க சீனியர் பொறியாளர் அலுவலகத் தில் அனுமதி பெற்று ஒரு வாரத்தில் மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.
 
நெடுஞ்சாலை துறை பண்ருட்டி உதவி கோட்ட பொறியாளர் சுந்தரி கூறுகையில், 
     
                    சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றக்கோரி மின் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி ஐந்து மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. அதனால், சாலை விரிவாக்க பணி குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. அதனால்,  நெடுஞ் சாலை துறை அனுமதியின்றி மின் கம்பம் அமைக்கக்கூடாது என கடிதம் அனுப்பினோம். இருப்பினும் மாளிகம் பட்டு சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் வைத்துள்ளனர் என்றார். 

Read more »

டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலூர் :

               டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந் தது.

                   மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட  செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.  கடலூர் வட்ட தலைவர் காமராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த மாநில செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டசபையில் நமது துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஸ்கரன், ஏகாம்பரம், செல்வம் உட் பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

Read more »

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது : ஆட்சியர் அசிமா மரியம் தகவல்


சேத்தியாத்தோப்பு : 

                  விவசாயிகளிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள கரும்பு அதிகாரிகள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை தடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
                 சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் அசிமா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை முன் னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கரும்பு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான ராமானுஜம், வேல் முருகன், அப்பாதுரை, குஞ்சிதபாதம், இளவரசன், ஆதிமூலம், பன்னீர்செல்வம்,  குணசேகரன்,  ராமசாமி, பாபு, செந்தில் உட்பட பலர் பேசினர்.
 
                  அப்போது, விவசாயிகளிடம் பணம் வாங்கும் நோக்கத்தில் கரும்பு அலுவலர்கள் தொடர்ந்து ஒரே கோட்டத்தில் பணியாற்றி வருவதால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு பயந்தே பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதையே விட்டுவிட்டனர். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விதைக் கரணையை சலுகை விலையில் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் சர்க்கரை வழங்க வேண்டும். கரும்பு வெட்டி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் பணத்தை வழங்க வேண் டும். சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்க ரசாயன துறையில் உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினர்.
 
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் ஆசியா மரியம் பதிலளிக்கையில், 

                   ஆலையில் இதுவரை நடந்த பல தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் உடனுக்குடன் தீர்வு காணப் பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் ஆலையின் நிர் வாக ரீதியிலான அனைத்து பிரச்னைகளையும் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்க் கரை துறை ஆணையம் மற்றும் அரசு மூலம் தீர்வுகான வேண்டிய பிரச்னைகளை தனிக் கவனம் செலுத்தி அவற்றை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரும்புத் துறை, கணக்குத்துறை, ரசாயன துறை, பொறியியல் துறை என தனித்து இயங்கியவர்களை ஒருங் கிணைத்து செயலாற்ற நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம், கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது என்றார். அலுவலக மேலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior