உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 17, 2011

என்.எல்.சியால் வடலூர் கருங்குழி கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/6f14af6b-ae3f-4f9d-8373-2ec24ba3052b_S_secvpf.gif
 
வடலூர்:
 
           வடலூர் கருங்குழி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஒத்தை தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அங்காளம்மன் கோவில் அருகே ஆழ்குழாய் கிணறும், குடிநீர் தேக்க தொட்டியும் உள்ளது.

              நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெடிவைப்பதால் இந்த குழாய் கிணறு சேதம் அடைந்துள்ளது. எனவே கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிக்க நல்ல குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாசு படிந்த குடிநீரை மக்கள் குடிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய குடிநீர் குழாய் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஆணையருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 
 
 
 
 

Read more »

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் லோக்பால் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/9a60a220-a3ae-4de8-9180-42eb854e1f3c_S_secvpf.gif
 
கடலூர்

            அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் லோக்பால் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லியில் போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார்.

           இதை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு லோக்பால்களின் கூட்டமைப்பினர் நேற்று  உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்திற்கு சுப்புராயன் தலைமை தாங்கினார். ராமைய்யா முன்னிலை வகித்தார். அப்பாஜி வரவேற்றார். நிர்வாகிகள் குழந்தைசாமி, வசந்தகோகிலம், கதிர், மணிவண்ணன், மருதவாணன் ஆகியோர் பேசினார்கள். அன்னாஹசாரே கைது செய்யப்பட்டதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior