உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 22, 2011

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாதனைகள்


அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  குறிஞ்சிப்பாடி தொகுதி 
 
 
நெய்வேலி : 
 
               கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு, இத் தொகுதியில் அவர் மேற்கொண்டுள்ள மேம்பாட்டுப் பணிகளால் பெரும்பாலான ஆதரவு காணப்படுகிறது.  கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் தன்னை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் என்.ராமலிங்கத்தை விட 1,915 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவர், இத்தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்.
 

 சாதனைகள்:  
 
              தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில்தான் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிஞ்சிப்பாடியை தனி தாலுகாவாக உருவாக்கியது, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, வடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை துவக்கியது.  
 
                தொகுதி மறுசீரமைப்பின் மூலம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இணைந்துள்ள கடலூர் ஒன்றிய கிராமப் பகுதியான அரிசிபெரியாங்குப்பம் எம்.புதூரில் ரூ.100 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது. தொகுதிக்குள்பட்ட நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது, பகுதிநேர நியாய விலைக்கடைகள் முழுநேர நியாயவிலைக் கடைகளாக மாற்றியது. தொகுதிக்குள்பட்ட பல இடங்களில் சிமென்ட் சாலைகள், வடலூர் நான்கு முனை சந்திப்பை அகலப்படுத்தியது, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தை அழகுப்படுத்துவதற்கான பணிகளை தொடங்கியது, மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது என பல சாதனைகள் செய்துள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.  
 
கண்டு கொள்ளாதது: 
 
            ஒவ்வொரு முறையும் பருவமழை பெய்யும்போது, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விளைநிலங்கள் பாழாவதை தடுக்க நிரந்தர திட்டம் எதுவும் மேற்கொள்ளாதது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதை தடுக்க எவ்வித திட்டமும் ஏற்படுத்தாது, வடலூர் வாசிகளுக்காக ஒதுக்கப்பட்ட மயானம், மாமிசக் கழிவுகளின் கூடாரமாக மாறிவருவது உள்ளிட்டவைகளை இவர் கண்டு கொள்ளவில்லை என தொகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.  
 
பலம், பலவீனம்:  
 
              கட்சியினர் மட்டுமின்றி தனக்கு அறிமுகமானவர் யாராக இருந்தாலும் அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் அவரது வீடுகளில் நடக்கும் சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட தவறாமல் கலந்துகொள்வது, தன் கட்சியினரைக் காட்டிலும் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வது போன்றவை இவருக்கு பலமாக உள்ளது. அதேநேரத்தில் தனது கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களை எதிரியாக பார்ப்பது, சில நேரங்களில் விழா நடைபெறும் மேடையிலேயே கட்சியினரை கடிந்து கொள்வது, இவரது பெயரில் கட்சியின் நிர்வாகிகள் செய்த கட்டப்பஞ்சாயத்தை இவர் கண்டுகொள்ளாமல் இருந்தது போன்றவை இவருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.  
 
 மீண்டும் போட்டி: 
 
                 இந்தமுறை மீண்டும் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுவதால் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் இவர் மேற்கொண்ட பணிகள் முழுமையாக பயனாளிகளை சென்றடைந்ததாக நம்பி தைரியமாக பொதுஜனம் முன்பாக கைக் கூப்பி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தி மு.க.கூட்டணி மற்றும் ஐ.ஜே.கே. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி மற்றும் ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். 

 குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி

            கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வம், பண்ருட்டியில் சபா ராஜேந்திரன், கடலூரில் புகழேந்தி போட்டியிடுகின்றனர். 

              மூவரும் நேற்று 12.45 மணிக்கு கடலூர் நகர தி.மு.க., அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் புகழேந்தி மனுத்தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) நடராஜனிடம் பகல் 1.10 மணிக்கு மனு தாக்கல் செய்தார். பண்ருட்டி வேட்பாளர் சபா ராஜேந்திரன் ,தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரியுமான திருவேங்கடத்திடம் மனு தாக்கல் செய்தார். 

சிதம்பரம்

                 சிதம்பரம் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மூவேந்தர் முன்னேற்றக்கழக ஸ்ரீதர் வாண்டையார் கூட்டணி கட்சியினருடன் தெற்கு வீதியில் இருந்து ஊர்வலமாக வந்தார். வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இந்துமதியிடம் மனு தாக்கல் செயதார். 

விருத்தாசலம்

              விருத்தாசலம் தொகுதியில் ஐ.ஜே.கே., (இந்திய ஜனநாயக கட்சி) வேட்பாளர் சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த, மாநில இளைஞர் அணி செயலர் கிருஷ்ணமூர்த்தி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபட்டார். பின் ஊர்வலமாக சென்று நேற்று மதியம் 12.40 மணிக்கு தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் மனு தாக்கல் செய்தார். 

ஐ.ஜே.கே. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

             " நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தொகுதி வளர்ச்சிக்கு நிச்சயம் பாடுபடுவேன். பொழுது போக்கு பூங்கா மற்றும் நகரை அழகு படுத்தும் திட்டம் செயல்படுத்தி விருத்தாசலத்தை அழகு நகரமாக மாற்றுவேன்' என்றார்.

Read more »

கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைக்கும் பணி தீவிரம்

கடலூர் முதுநகர் : 

             முதுநகர் ரயில் நிலையத்தில் கால அட்டவணை போர்டு, ரயில் பெட்டிகள் நிற்கும் இடம் குறித்த விவரங்கள் அடங்கிய போர்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

              கடலூர் நகரில் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது முதுநகர் ரயில் நிலையம். அகலப்பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், முதுநகர் ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டது. கடலூர் வழியாகச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் முதுநகர் ரயில் நிலையத்திலேயே நின்று செல்கின்றன. இதனால் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. விரைவு ரயில்கள் 2 நிமிடமே நின்று செல்வதால் முன் பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பெட்டிகள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

              இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், ரயில்கள் நிற்கும் பிளாட்பாரத்தின் எண், எந்தெந்த பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும், நேரம் குறித்த கால அட்டவணை அடங்கிய அறிவிப்பு பலகை அமைக்கும் பணி ஜரூராக நடக்கிறது.

Read more »

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்: கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கடலூர் : 

            கடலூர் சி.கே. பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதன்மை பெற தயாராகி வருகிறது என பள்ளி இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்தார். 

இதுகுறித்து பள்ளி இயக்குனர் சந்திரசேகர் அறிக்கை: 

         கேவின் கேர் நிறுவனம் நடத்தும் சி.கே. மேல்நிலைப் பள்ளியில் மிகவும் திறமை வாய்ந்த கல்வியில் ஈடுபாடு உள்ள நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதன்மை பெற தயார் படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
             விடுதி மாணவர்களுக்கு இரவு நேர சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஏ.சி., வசதி, மினரல் வாட்டர், சுத்தமான உணவுகளும் வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1 சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் செலவினங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்

கடலூர்:
 
 கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
              ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன்னதாக அந்தந்த தொகுதியில் உள்ள பிரதானமான ஒரு வங்கியில் தனது பெயரிலோ அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் முகவர் பெயரினையும் சேர்த்து கூட்டாகவோ வங்கி கணக்கை தொடங்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது எழுத்து மூலமாக அந்த வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவினம் யாவும் அந்த வங்கி கணக்கின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

                 வேறு எந்தவொரு வங்கி கணக்கின் மூலமும் வேட்பாளரின் தேர்தல் செலவினம் மேற்கொள்ளப்படக்கூடாது.செலவுகளுக்கு அளிக்கப்படும் தொகைகளை காசோலை மூலமாகவே பெற்று வழங்க வேண்டும். வேட்பாளர் தனது தேர்தல் செலவினங்களை தினசரி கணக்கு பதிவேட்டில் உள்ள 3 வண்ணப்பதி வேடுகளில் பதிய வேண்டும். வெள்ளை தாளில் தினசரி செலவின விவரங்களையும், பிங்க் கலர் தாளில் ரொக்கப்பதிவேடுகளையும், மஞ்சள் கலர் தாளில் வங்கி கணக்கு பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் அலுவலரால் நிர்ணயிக்கப்படும் தேதியில் கணக்கு சரிபார்க்கும் குழு விடம் கணக்கு பதிவேட்டுடன் சரிபார்த்தலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

         இக்கணக்கை வேட்பாளரோ அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட ஏஜெண்டோ ஒப்பமிட வேண்டும். குறைந்தபட்சம் 3 முறை தேர்தல் செலவின பார்வையாளரால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் வேட்பாளர்கள் கண்டிப்பாக கணக்கினை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வேட்பாளர் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அனைத்து கணக்கு பதிவேடுகளையும், அதற்கான அசல் செலவின சீட்டுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வங்கிக்கணக்கின் நகலை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரின் ஒப்பத்துடனும், செலவின கணக்குடனும் இணைத்து வேட்பாளரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

                    தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காதது, உண்மையான கணக்கினை சமர்ப்பிக்காதது, சரியான கணக்குகளை சமர்ப்பிக்காதது போன்ற 3 காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 10(அ)-ன் படி சம்பந்தப்பட்ட வேட்பாளர் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்படும்.  இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறியுள்ளார்.

Read more »

Thiruvalluvar varsity to start institute of distance education


 
A. Jothi Murugan, Thiruvalluvar University Vice-Chancellor, presenting degree certificate to a candidate at the annual convocation of the University in Vellore on Monday. A .M .Swaminathan, former Secretary, Government of Tamil Nadu; and B. Krishnamoorthy, Registrar, are in the picture.

VELLORE: 

          Starting of distance education system, establishing new colleges at Tirupattur in Vellore district and Kallakurichi in Villupuram district and taking up the phase-II construction works are among the future plans of Thiruvalluvar University, according to A. Jothi Murugan, Vice-Chancellor of Thiruvalluvar University.

          Presenting the annual report at the sixth Annual Convocation of the university on Monday, he said the Thiruvalluvar Institute of Distance Education will be started in the academic year 2011-2012.

           “Two new constituent colleges will be started at Tirupattur in Vellore district and Kallkurichi in Villupuram district with financial assistance from the Central and State governments from the academic year 2011-2012,” he said.

          Necessary plans will be drafted and implemented to obtain the several financial benefits being provided by the University Grants Commission, he said. “Steps to start the phase-II construction work of the university will be taken up soon,” he added. The V-C said immediate supplementary examinations for all arts and science colleges affiliated to the university was launched during this academic year. A total of 3,060 students appeared for the examinations. Owing to this, the undergraduate stream accounted for a pass percentage of 79 per cent, while it was 80 per cent for postgraduate students, he pointed out.

           Referring to research programmes at the university, he said the number of Ph.D scholars and M.Phil students had increased from last year. The university has also introduced a course on soft skills from this academic year at the affiliated colleges to enhance the soft skills of undergraduate students. Mr. Murugan noted that the Thiruvalluvar University Arts and Science College and Postgraduate extension centre was started at Villupuram district last year and was functioning with 235 students in five undergraduate programmes. The PG extension centre had four programmes. Meanwhile, the Thiruvalluvar University Arts and Science College was started at Tiruvannamalai district and was functioning with 243 students in five undergraduate programmes.

              Delivering the convocation address, former secretary, Government of Tamil Nadu A.M. Swaminathan, said around six per cent of students, who join schools, are able to complete college education in India. He stressed on the need for hard work among students. Mr. Swaminathan elaborated on the need for time management, knowledge of the world, overcoming obstacles and sense of humour among students among other qualities. On the occasion, degrees were awarded to a total of 23,129 students – 20,280 UG, 2,204 PG, 615 M.Phil and 30 Ph.D.

University Website:



Contact Details
THIRUVALLUVAR UNIVERSITY
FORT CAMPUS, VELLORE – 632 004. 
TAMILNADU, INDIA
Phone: (91) 416 - 221 7778, 221 3655.
Fax: (91) 416 - 222 1344



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior