உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 09, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

           பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வினோத் தலைமையில் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மானியக்குழு ஆணையின்படி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் தேர்வு தகுதியில் பிளஸ் 2, இளங்கலை, முதுகலை என்ற முறையை பயன்படுத்துவதை போல், ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலைக்கு நிகரானது என்ற அரசாணையுடன் பிளஸ் 2, முதுகலை என்கிற முறையை பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின் படி புதிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

          ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலை மற்றும் முதுகலையென இரண்டாக சரியான முறையில் பிரித்து வழங்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கு அரசு ஆணையிட வேண்டும், மூப்பு அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க முன்பு முடித்த மாணவர்களின் பட்ட மேற்படிப்பை பதிவு செய்த அதே ஆண்டுக்கு இளங்கலையையும் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ரங்கராஜன் (பொறுப்பு), பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் துணை வேந்தர் எம்.ராமநாதன், சென்று மாணவர் சங்க பிரிதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

         அப்போது அண்ணாமலைப் பல்கலையில் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு உள்ளதாகவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டுகள் முடித்த மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டச்சான்று வழங்குவது குறித்து அரசை அணுகி விரைவில் பதில் தெரிவிப்பதாக துணை வேந்தர் தெரிவித்ததை அடுத்த போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

பணி வழங்க இயலாது-ஆசிரியர் தேர்வு வாரியம்:

         டலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் மாணவி ஆர்.விஜி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த உதவி தொடக்கநிலை கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (5 ஆண்டு) எம்.ஏ. வரலாறு பாடத்துடன் பி.எட். படித்தவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்கப்படுமா? பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுமா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனு அனுப்பினார். 

        அதற்கு பொது தகவல் அதிகாரி பதில் தெரிவித்ததில், பணி வழங்க இயலாது என தெரிவித்துள்ளார்.  இதனால் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு தலைவர் வினோத் வேதனை தெரிவித்தார்.














Read more »

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/6b576a00-aa1b-42bb-927f-547ccadfd448_S_secvpf.gif
 
குறிஞ்சிப்பாடி:
 
          குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் அண்மையில்  நடைபெற்றது.
 
        தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.  
 
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியது:-
 
         இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.
 
         இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
 
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது 
 
          தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
             மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியீட்டு விழா

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/b937c062-a0ac-4afb-908b-9a83cb5dd680_S_secvpf.gif
 
கடலூர்:
 
             சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸின் பி அன்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியிட்டு விழா நடைபெற்றது.
 
          இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டு இசை குறுந்தகடினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பட பூஜை ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயலாளர் சிவா, தலைவர் ராமதுரை, சங்க மாநில தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலாளர் பிரசன்னா, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன், கலைமாமணி யோக ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.   இதில் கடலூரை சேர்ந்த முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து, சிவக்குமார், கணேஷ், பழனிகுமார், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
          இப்படத்தில் கதாநாயகனாக புழல், கண்டுபிடி, கண்டுபிடி படத்தில் நடித்த முரளி, கதாநாயகியாக பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் ராஜ்குமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீராகிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் திரைக்கதை மற்றும் வசனம் எஸ்.பி.எஸ். குகன் மேற்கொள்கிறார்.
 
 
 
 
 
 

Read more »

Rs.790 crore special package for Thane Cyclone hit for farmers in Cuddalore and Villupuram districts

         Chief Minister J Jayalalithaa on Saturday announced a comprehensive special package worth `790.18 crore for farmers in Cuddalore and Villupuram districts, the worst affected in Cyclone Thane. While `65.22 crore has been allotted for agricultural crops, `724.96 crore will be givenfor horticultural crops.
 
            Around 1.10 lakh farmers will benefit from the package, which includes complete waiver of land tax, resheduling of farm loans to the tune of `440.11 crore and disbursal of fresh loans, setting up of a project management unit in Cuddalore to monitor the implementation of the package and declaration of Cuddalore and Villupuram as cyclone-hit districts.
 
         For annual agricultural crops, the package includes four types of kits: mini-kits containing 20 kg paddy seeds, two bags of biofertilisers and 500 ml pesticides required for 54,490 acres; mini-kits containing six kg hybrid maize seeds, two bags of biofertilisers for 6,250 acres; mini-kits containing eight kg pulse seeds and biofertilisers for 3,83,660 acres; and mini-kits with 80 kg of manila seeds, biofertilisers and pesticides required for 3,175 acres. The kits will cost `34.86 crore.
 
 
      For horticultural crops, mini-kits with high-yielding vegetable seeds, biofertilisers and pesticides will be provided in February.  Also `16.03 crore has been allocated for coconut planters for removing trees uprooted in the cyclone, with 100 chainsaws provided without rent.  Mini-kits for short-term crops will be given to farmers who have lost their coconut trees. As many as 3,20,600 coconut saplings worth `80 lakh will be given away. Also, `13.53 crore will be spent to provide urea and potash among others. At least 7,083 coconut growers will benefit this way. The CM said `27 crore will be earmarked for setting up deep borewells.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Villagers in Cuddalore stage road block over thane cyclone relief

Cuddalore:  

        More than 1,000 residents of a village in Cuddalore district, which bore the brunt of cyclone Thane in December last, staged a road roko on the Vidudhachalam-Chennai road yesterday alleging relief amounts had not been paid to a majority of households in the region.

         Uma Maheswari, president of the Village Women's Association of Pudukuppam village, said compensation amount had been paid to only 160 of the 600 households in the village that had been damaged in the cyclone. She also alleged irregularities in preparing the list of beneficiaries of cyclone relief Even as traffic was affected for more than an hour, Virudhachalam Tahsildar, Prabhakaran, rushed to the spot and promised to distribute compensation for all the houses. The protestors withdrew their agitation following the assurance. 









Read more »

பரங்கிப்பேட்டையில் நாட்டிலேயே முதன்முதலாக சினை மீன் வங்கி திறப்பு

சிதம்பரம்:

         இந்தியாவிலேயே முதன்முதலாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சினைமீன் வங்கி  வியாழக்கிழமை (பிப்.9) திறக்கப்படுகிறது.

          அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன் இனங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு கடல்வாழ் அறிவியல் புலமாக தொடங்கப்பட்டு பல்வேறு முதுகலைப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய மீன் அபிவிருத்தி வாரிய நிதியுதவியுடன் பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அளவிலான சினை மீன் வங்கி தொடங்கப்படுகிறது. 

         இதன் திறப்பு விழாவுக்கு துணை வேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார். தேசிய மீன் அபிவிருத்தி வாரிய முதன்மை இயக்குநர் பி.கிருஷ்ணய்யா, சினை மீன் வங்கியை தொடங்கி வைக்கிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ முன்னிலை வகிக்கிறார். கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் முனைவர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்கிறார். மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இயக்குநர் ஜே.ஆர்.பட், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியரும், மூத்த ஆராய்ச்சியாளருமான டி.டி.அஜீத்குமார் செய்துள்ளார்.











Read more »

:கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் இலவச பல் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்

கடலூர் :

        கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் இலவச பல் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 

     கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த முகாமிற்கு கல்லூரியின் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். முதல்வர் ரமாமணி முன்னிலை வகித்தார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் இந்திரா காந்தி பல் மருத்துவ மையம் சார்பில் டாக்டர் செந்தில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லூரி மாணவிகளின் பற்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் பல் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் ரேணுகா, செஞ்சுருள் சங்க அலுவலர் வள்ளி, இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் சங்கீதப்ரியா, பேராசிரியர் நிர்மலா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 








Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :

      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை ஒழிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் கலாவதி, தனி தாசில்தார் காமராஜ் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மனோண்மணி வரவேற்றார். கல்லூரியில் தொடங்கிய ஊர்வலம் பாலக்கரை வழியாக ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை சென்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மதிவாணன், சிவக்குமார், ராஜசேகர், பாலசங்கு, உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

என்.எல்.சி. நிறுவனம் ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக தர வேண்டும்: ராமதாஸ்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/2c015e3b-18b3-4d67-a071-d3ad202fbaf1_S_secvpf.gif
 
கடலூர்:
 
      பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் நேற்று  பேட்டி அளித்தார்.
 
         திரைப்பட வசனம் எழுதி, பேசி மக்களை மயக்கும் வாக்குறுதிகள் கொடுத்து திராவிட கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். மீண்டும் வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் அவர்கள் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.  
 
            பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆட்சியாளர்கள் வரிச்சலுகை, தடையில்லா மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். வேளாண்மை உற்பத்தியை பெருக்க ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மானிய விலையில் உரம் வழங்கினால் உழவர் வாழ்வு மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.  
 
           இன்றைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு சென்றார்கள். இப்போது இளைஞர்கள் பாருக்கு செல்கிறார்கள். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்தி வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் மதுஒழிப்பு போராட்டம் நடைபெறும்.
 
        எத்தகைய போராட்டம் நடத்தப்படும் என்பதை பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம். தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முழுமையான கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் தரமான வீடு கட்டித்தர முடியாது. எனவே ரூ.2 லட்சம் செலவில் ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தர வேண்டும்.  
 
          நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சென்ற ஆண்டு ரூ.1,298 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒருமாத லாபத்தொகையான ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக என்.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior