உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

கண்கள் தானம்

சிதம்பரம்,நவ. 9: சிதம்பரம் தேரடிக்கடைத் தெருவைச் சேர்ந்த எம்.ஆறுமுகம் (82) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப் மூலம் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் கே.விஜய்குமார்தாலேடா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன...

Read more »

விவசாய தொழிலாளர்களுக்கு வேலையில்லா படி வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்,நவ.9: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு வேலையில்லா படி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையியால் கிராமப் புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர். மத்திய அரசு...

Read more »

வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்

கடலூர்,நவ.9: கடலூர் மாவட்டத்திóல் வெள்ள நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது. அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு: வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரத்தில் வெள்ள நிவாரணத் தொகை, மற்றும் உதவிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்....

Read more »

மின்கட்டணம் செலுத்துவோர் கவனத்துக்கு...

சிதம்பரம்,நவ.9: அண்ணாமலைநகர் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மாரியப்பாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோர்கள் சிதம்பரம் செயற் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கணினி மையங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவித்துள்ளா...

Read more »

பாதுகாப்பு ஏற்பாடு: மின்வாரியம் அறிவிப்பு

சிதம்பரம்,நவ.9: சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பாதுகாப்பு குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறிவிப்பு விவரம்: மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகே செல்லாமல் மற்றும் தொடாமல் உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மின்கம்பிகளிலோ, இழுவை கம்பிகளிலோ ஆடு, மாடுகளை கட்டுவது, கொடி கம்பிகளை கட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும், மின் மாற்றிகளிலோ,...

Read more »

மழை பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு

கடலூர்,நவ.9: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடலூர் அருகே தாழங்குடா, உப்பளவாடி கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தில் பெண்ணை ஆற்று நீர் 4 அடி உயரத்துக்கு ஓடியது. மாலையில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இந்த இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தாளங்குடா பகுதியில் உப்பனாற்று நீர் கரைபுறண்டு...

Read more »

கனமழையால் காய்கறி விலை உயர்வு

சிதம்பரம், நவ. 9: சிதம்பரத்தில் தொடர்ந்து 4 நாள்களாக பெய்து வரும் கன மழையினால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன மழையினால் சிதம்பரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் புகுந்தது. திங்கள்கிழமை காலை சற்று மழை நின்றதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியது. இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் முதல் மீண்டும் மழை தொடங்கியதால் மீண்டும் அப்பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் பகுதியில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை...

Read more »

தொடர் மழையால் அசாதாரண நிலை இல்லை: ஆட்சியர்

கடலூர், நவ. 9: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அசாதாரண நிலை ஏற்படவில்லை. மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: வடகிழக்குப் பருவமழை முன்னேற்றம் அடைந்து உள்ளது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 7287 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. 8-ம் தேதி காலை வரை ஒரு நாளில் மட்டும் 993.3 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மழைகாலத்தில் எடுக்க வேண்டிய...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 22 ஏரிகள் நிரம்பின

கடலூர்,நவ.9: கடலூர் மாவட்டத்தில் 22 ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் 15 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வடகிழக்குப் பருவமழையால் கடலூர் மாவட்ட ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரிகளில் திங்கள்கிழமை நீர்மட்டம் விவரம்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடி (மொத்த உயரம் 47.5 அடி). ஏரிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏரியில்...

Read more »

வெள்ளத்தைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படுமா?

சிதம்பரம்,நவ. 9: கடலூர் மாவட்டத்தில் மழைக்காலத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு...

Read more »

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

பண்ருட்டி,நவ. 9: கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை பண்ருட்டி நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பராமரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினார். இடைவிடாத பருவ மழையால் பண்ருட்டி நகரில் பல்வேறு இடத்தில் தண்ணீóர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.மழை நீர் தேங்கி நின்ற அம்பேத்கர் நகர், சாமியார்...

Read more »

மந்தாரக்குப்பம் குடிசைப் பகுதிகளில் மழைநீர்

நெய்வேலி நவ. 9: மந்தாரக்குப்பத்தில் தாழ்வான குடிசைப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி மந்தாரக்குப்பத்தை அடுத்த மேல்பாப்பனப்பட்டு மற்றும் மேல்பாதி ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அந்தந்த ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

Read more »

வடவாறு பாசனப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

கடலூர்,நவ.8: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வடவாறு பாசனப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் ஞாயிற்றுக்கிழமை தண்ணீரில் மூழ்கியது. வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வழங்கும் வடவாறு மூடப்பட்டாலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் கருவாட்டு ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வடவாறில் வந்து கலக்கிறது. இதனால் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகளான 11 ஆயிரம் ஏக்கர்...

Read more »

சம்பா நடவுப் பணிகள் பாதிப்பு

கடலூர்,நவ.7: கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து சனிக்கிழமை மாலை வரை இடைவிடாமல் அடைமழை பெய்துகொண்டு இருந்தது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய கனமழை சில நிமிடங்கள்கூட விடாமல் தொடர்ந்து அடைமழையாக பெய்து வருகிறது. இதனால் மக்களின்...

Read more »

சக்தி ஐடிஐயில் வளாக நேர்முகம்

பண்ருட்டி,நவ. 7: வினாயகா ஐடிஐ-ல் 2008-2009-ம் ஆண்டு பிட்டர் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காந்தி சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே உள்ள சக்தி ஐடிஐ வளாகத்தில் அண்மையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. 30 மாணவர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் திருவாண்டார் கோயில் சுவிஸ்லான் நிறுவனம் 25 பயிற்சியாளர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கியது, எஞ்சிய 5 பயிற்சியாளர்களுக்கு 18 வயது பூர்த்தியானதும் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தனர்....

Read more »

ரூ. 20 கோடியில் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு

கடலூர், நவ. 7: திட்டக்குடி வட்டத்தில உள்ள வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை பார்வையிட்டார். 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது வெலிங்டன் ஏரி. இதன் கரை 300 மீட்டர் தூரத்துக்குத் தொடர்ந்து பூமிக்குள் புதைந்துக் கொண்டு இருப்பதால், ரூ. 20 கோடியில் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் இந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படவில்லை. வெள்ளாற்றில் இருந்து ஏரிக்கு...

Read more »

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய பொதுமக்கள்

கடலூர், நவ.6: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிறுத்தங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். நெல்லிக்குப்பத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால் திறந்தது முதல் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்ஸýம் செல்லாமல் இருந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக,...

Read more »

கனமழையால் மோசமான சிதம்பரம் சாலைகள்

சிதம்பரம்,நவ.6: கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையினால் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்ட பணிகள் நடைபெற உள்ளது எனக்கூறி நகராட்சி நிர்வாகம் கடந்த ஓராண்டாக நகரில் உள்ள எந்த தார்சாலைகளையும் போடவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து சாலைகளும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior