உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 11, 2011

அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

       சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 2010 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்சி., பகுதி நேர பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. www.annauniv.edu,  www.ExamResults.net  உள்ளிட்ட இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணைய தளத்தில் பதிவு எண்ணை சமர்ப்பித்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்காமல் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்!

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் 2010-11 கல்வியாண்டில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு ஒரு செமஸ்டர் தேர்வு முடிந்தும் மாணவர்களுக்கு கல்விக் கடனை வழங்காமல் வங்கி அதிகாரிகளால் அலைகழிக்கப்படுகிறார்கள்.

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி வேளாண்மை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்பிஏ. பிசிஏ ஆகிய வகுப்புகளில் சுமார் 3ஆயிரம் பேர் பயில்கின்றனர். இதேபோன்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். டிசம்பர் மாதத்துடன் முதல் செமஸ்ட் தேர்வு முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.

           இதனால் கிராமப்புற, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் பெரிதும் பரிதவிப்பில் உள்ளனர். கல்விக்கடன் வழங்காததை கண்டித்து சமீபத்தில் புவனகிரி, குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சில வங்கிகளில் கல்விக் கடனை விரைந்து வழங்குவதில்லை. மாணவர்களை அலைக்கழிப்பதுடன், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றதாக கூறப்படுகிறது.

           குறிப்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது. விருத்தாசலத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பெயரளவுக்கே கல்விக்கடன் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாருக்கும் கல்விக்கடன் வழங்கப்படவில்லை என முகாமில் பங்கேற்று விண்ணப்பித்த பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக்கடன் குறித்து வங்கிகளில் விளம்பர பலகை வைக்க வேண்டும். கல்விக்கடன் குறித்து சிறப்பு ஆய்வை ஆட்சியர் தொடங்க வேண்டும்.

               தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கல்விக்கடன் வழிகாட்டுதல் மையம் அமைத்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்விக் கடன் உதவி, சேவை முகாம்களை நடத்திட வேண்டும் என்பன பெற்றோர்களின் கோரிக்கையாகும். எனவே வங்கி அதிகாரிகள் மனிதநேயத்துடன் மாணவர்களை அனுகி கல்விக்கடன் வழங்க உதவ முன்வர வேண்டும் என சமூக ஆர்வவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் : 

            சுருக்கு முறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். 

          தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 1.1.2011ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப் படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல். நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25.10.2010 முதல் 13.11.2010 வரை 56 ஆயிரத்து 534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49 ஆயிரத்து 976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டது. 

அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டு கூறியது: 

             மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து தாலுகா, நகராட்சி, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கடலூர் : 

            பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் 12ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதுகுறித்து விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல பொது மேலாளர் உதயசூரியன் கூறியது: 

            தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசித்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த கிராமங்களில் கொண்டாட வசதியாக வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதிவரை கடலூர் மாவட்டத்தில் முக்கிய நகர்களில் இருந்து சென்னைக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

             இந்த சிறப்பு பஸ்கள் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று சேலம், திருச்சி, வேலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

              வரும் 19ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கும், 20ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு வடலூருக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு மண்டல மேலாளர் உதய‹ரியன் கூறினார்.

Read more »

Biotechnology Regulatory Authority on anvil, says Union Minister



Union Minister of State for Culture, Planning and Parliamentary Affairs V.Narayanaswamy and Annamalai University Vice-Chancellor M.Ramanathan at the conference in Chidambaram on Monday. 
 
CUDDALORE: 

        The Centre has proposed to set up Biotechnology Regulatory Authority of India to oversee the functions of the proliferating number of institutions in the bio-technology sector, said V.Narayanaswamy, Union Minister of State for Culture, Planning and Parliamentary Affairs.

          He was delivering the inaugural speech at the international conference on “Natural products and biomedical technology” organised by the Department of Biochemistry and Biotechnology of Annamalai University at Chidambaram on Monday.

        The Minister said that there were many players in health research viz., the public and private sectors, autonomous organisations, non-governmental organisations, and, bilateral and multi-lateral agencies. Their number was on the rise and so also was the funding and, therefore better coordination among them was needed to put the resources to judicious use and to evolve strategy to prevent and cure diseases at affordable costs.

           Mr Narayanaswamy said that the fund requirements of the bio-technology in the country for 2010-2011 were put at Rs 1,222 crore. Six new institutions in the areas of stem cell, agri-food biotechnology, animal biotechnology, health sciences, genomics and biotechnology training and education were at various stages of establishment. Two more institutions in the areas of seri-biotechnology and marine biotechnology, and three molecular medicine centres were proposed to be established. He called upon the researches to focus on evolving indigenous and affordable medicines.

             He deplored the lack of health awareness among the people, particularly among the tribals. India was facing challenges on three fronts: heart ailments, cancer and diabetes and the onus was on the institutions to bring out bio-medicines to cure these maladies. Mr Narayanaswamy lauded the vast and wide research activities of Annamalai University and offered to make use of its expertise in the spheres of space technology and atomic energy.
Vice-Chancellor M.Ramanathan said that almost all 50 departments of the university were focusing on research activity.

         He called for strengthening the research activity on Ayurvedic medicines and also on the utility of natural products. Dr. Ramanathan called for increased focus on to tapping natural sources and natural products. G.S.Lavekar, senior consultant, National Medicinal Plants Board, New Delhi, T.Balasubramanian, Dean, Faculty of Marine Sciences, K.V.Pugalendi, Professor and Head, Department of Biochemistry and Biotechnology, and P.Subramanian, organising secretary, spoke.

Read more »

Revised electoral rolls on display In Cuddalore district

CUDDALORE: 

          The revised electoral rolls were released in the districts of Cuddalore and Villupuram on Monday.

          These rolls have been displayed in the offices of the Revenue Divisional Officers, Municipal Commissioners, tahsildars and in the respective polling stations.

          In Cuddalore district, as per the revised rolls with January 1, 2011 as qualifying date for new voters, there are a total number of 16,45,134 voters, including 8,36,633 men and 8,08,501 women, in the nine Assembly constituencies of Thittakudi (Reserve), Vriddhachalam, Neyveli, Panruti, Cuddalore, Kurinjipadi, Bhuvanagiri, Chidambaram and Kattumannarkoil (Reserve).

Read more »

கடலூரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள சாலைகள் ரூ.5 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்; அஸ்வின் கோட்னீஸ்

கடலூர்: 
 
              கடலூரில் ரூ.5 லட்சம் செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீசார் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் தின விளையாட்டு போட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

                இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசின் மனைவி அதிதி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தார். இதில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும், காவலர்களின் மனைவிகளுக்கான கோலம், லக்கி கார்னர், பொங்கல் வைக்கும் போட்டி, வளையங்கள் எறியும் போட்டி, ஆண்களுக்கான பானை உடைத்தல், கைகளை கட்டிக்கொண்டு சுழலும் நீரில் உள்ள எலுமிச்சம்பழத்தை வாயால் எடுத்தல் ஆகிய போட்டிகளும், குழந்தை களுக்கான தவளை ஓட்டம், இசைப்பந்து, சாக்லட் ஓட்டம், உருளை சேகரித்தல், மரத்துண்டின் மேல் ஓட்டம், 3 கால் ஓட்டம், எலுமிச்சை கரண்டி ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

             பரிசளிப்பு விழா போட்டி களில் வெற்றி பெற்ற போலீஸ்காரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படும். அதேபோல பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் நூலகமும் அமைக்கப்படும்.

               இது தவிர காவலர்களுக்கு 110 வீடுகள் கட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார். விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீஸ்காரர்களின் மகன் மற்றும் மகள்கள் உள்பட 64 பேருக்கு பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் தொடர்ந்து கும்மி, கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், சிலம்பம், குத்துச்சண்டை, தீப்பந்தம் ஆகிய வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

               இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாண்டியன், மணி, காமராஜ், இன்ஸ்பெக்டர் மணவாளன், தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரத்தில் ரூ.75 லட்சத்தில் ரவுண்டானா பணி தீவிரம்

சிதம்பரம்:

            சிதம்பரம் மேம்பாலத்தில் அடிக்கடி நிகழும் விபத்துகளுக்கு தீர்வு காணும் வகையில் பாலத்தின் இரு முகப்பிலும் 75 லட்சம் ரூபாய் செலவில் ரவுண்டான அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை நகர் இடையே 18 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் 30 ஆண்டு கால கனவு நனவாக்கப்பட்டது.

                  பல்வேறு போராட்டங்களுக்கிடையே கட்டப்பட்ட இப்பாலம் 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். பாலத்தில் விளக்கு வசதி செய்யப்படாமல் இருண்டு கிடந்தது பெரும் குறையாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் விளக்குகள் போடப்பட்டு இரவு நேரங்களில் பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.ஆனால் பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படாமல் இரு பகுதி நுழைவு வாயிலிலும் எதிர், எதிர் திசைகளில் வருபவர்கள் வளைவில் திரும்பும்போது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்கிறது.

               பாலம் திறப்பதற்கு முன்பும், திறக்கப்பட்ட பின்பும் என இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் இருந்து பாலம் வழியாக செல்பவர்கள், பாலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வருபவர்களும் இதேபோன்று விபத்துக்குள்ளாகின்றனர். பாலத்தின் இரு பகுதி நுழைவுவாயில் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம் என பல தரப்பில் இருந்தும் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

                 அதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சார்பில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே பாலத்தின் இரு புறங்களிலும் ரவுண்டான அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதற்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி ரவுண்டானா அமைக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் துவங்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ரவுண் டானா அமைக்க உள்ள இடம் தேர்வு செய்து மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

              அந்த இடத்தில் உள்ள காந்தி சிலையை இடையூறின்று மாற்றுவது என முடிவு செய்யப்பட்டு பின்னர் அதற்கு அவசியமில்லை எனவும் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறை கடலூர் கோட்ட பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் சிதம்பரம் உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ரவுண்டானா அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டால் ரயில்வே மேம்பால போக்குவரத்து சீரமைப்புக்கு முழு தீர்வு கிடைத்து விடும்.

Read more »

Rs 17.91 crore deposited in bank accounts of flood-hit farmers

CUDDALORE:

         A relief amount of Rs 17.91 crore has been deposited in as many as 50,000 farmers' accounts in the 142 Primary Agricultural Cooperative Banks (PACBs) across Cuddalore district, according to P.Seetharaman, District Collector.

           In a statement here, the Collector stated that according to preliminary estimate agricultural crops on 23,156.80 hectares and horticultural crops on 2,999.25 ha in the district were destroyed by the recent floods.

Assessment continuing

        The assessment of crop damage was continuing and after its finalisation further relief amount would be released.
Plea to farmers
          The Collector appealed to the affected farmers to get the details of the relief amount deposited in their accounts from the respective PACBs.

Read more »

TNCSC load-men go on strike

CUDDALORE: 

           The load-men attached to the Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) godowns in Cuddalore district began their indefinite strike on Monday. They struck work in support of their demands such as regularisation of service, time scale pay and job security. It is learnt that if the strike continues the supply of essentials to the fair price shops, student hostels and central prison would be hit.

Read more »

Cuddalore Collector Declared January 20 local holiday

CUDDALORE: 

            On account of the Jyothi Darshan fete to be observed on January 20 in the Sathya Gnana Sabhai of Ramalinga Adigalar at Vadalur, Collector P.Seetharaman has declared a local holiday for all the schools and government offices in the district on that day. In lieu of it February 12 (Saturday) would be a working day, according to a statement released by the Collector.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior