உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

சிறந்த மின்நூல் இணையதளங்கள்



புத்தகங்கள் எப்போதும் நமக்கு சிறந்த அறிவையும், படிப்பினையையும் தரும் அரிய மகத்துவம் வாய்ந்தது. கணிப்பொறியின் வரவேற்புக்குப் பிறகு புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பை பெரும்பாலானோர் குறைத்துக் கொள்வதுண்டு. ஆகையினால் கணினியிலேயே படிக்குமாறு நிறைய புத்தகங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அவற்றை வழங்க ஏனைய இணையதளங்கள் சேவை புரிகின்றன. எனக்குத் தெரிந்த சிறந்த தளங்கள் மின்நூல்களை தரவிறக்கம் செய்யவல்லவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளேன். ஒவ்வொன்றையும் சொடுக்கிப் சிறந்தவற்றைத் தேர்வு செய்து தரவிறக்கம் செய்து படித்துப் பயன்பெறுங்கள்.

1.FreeBookSpot



2.4eBooks


3.Free-eBooks

4.ManyBooks


5.GetFreeEBooks


6.FreeComputerBooks


7.FreeTechBooks


8.Scribd


9.Globusz


10.KnowFree


11.OnlineFreeEBooks


12.MemoWare


13.BluePortal


14.OnlineComputerBooks


15.SnipFiles


16.BookYards


17.The Online Books Page


18.AskSam Ebooks


19.Baen Free Library


20.eBookLobby


Read more »

List of Toll Nos

Airlines
 
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101

Banks

ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655

Automobiles

Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636

Computers/IT

Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
 
Railway

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralized Railway Enquiry
1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

Home Appliances

Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432

Investments/ Finance

CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101

Travel

Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344

Healthcare

Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262

Insurance

AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090

Hotel Reservations

GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825

Teleshopping

Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777

Others

Domino's Pizza - 1800 111 123

Cell Phones

BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111

Read more »

State to double hostels for Muslim women students

CUDDALORE: 

              It has been proposed to double the number of hostels for Muslim girl/women students in the State in the coming academic year, said Rev.Fr. Vincent Chinnadurai, Chairman of the State Minorities Welfare Commission.

                Addressing a press conference here on Thursday Fr. Chinnadurai said that based on the recommendations of the Justice Rajindar Sachar Committee these hostels were being set up in the Muslim dominated areas.

             At present there were five hostels for Muslim women students and the number would be increased to 10 in the coming year. Fr. Chinnadurai further said that the Vanniyars and Dalits who had adopted Christianity had made representations to the Commission to include them in the Most Backward Classes and the Scheduled Caste lists respectively. The petitioners pleaded that the classification should be based on the caste/community and not on the religion. If it were so they would not be entitled to the benefits enjoyed their fellow members of the same community.

          Fr. Chinnadurai said that the Commission would represent their views to Chief Minister M. Karunanidhi and to the Justice Janardhanan Commission. The Chief Minister had already gone on record stating that based on the recommendations of the Commission a decision would be taken on the issue.

Welfare measures

               The Chairman said that last year the State Government had sanctioned Rs.30 crore for the welfare of the minorities. Besides this, it had obtained unutilised funds from other States to the tune of Rs.6 crore, thus, raising the total to Rs.36 crore.

               The funds were utilised for giving away educational scholarships, personal loans and micro-credits. The Chairman said that as per the 2001 Census there were 1,02,508 Muslims and 73,611 Christians in Cuddalore district.

              Last year, a sum of Rs.1.63 crore was given away to 650 beneficiaries in the district which was Rs.60 lakh higher than what was sanctioned the previous year. Last year scholarships to the tune of Rs.19.56 lakh were given away to 940 students, and this year a sum of Rs.78.95 lakh was disbursed as scholarship to 2,985 students. Moreover, the Chairman appreciated the communal harmony prevailing in the district.

Read more »

Public inquiry into varsity incidents

CUDDALORE: 

             District Revenue Officer S. Natarajan will hold a sitting at the Revenue Divisional Office, Chidambaram, on March 18 at 11 a.m. to conduct a public inquiry into the incidents related to the death of some students of Annamalai University recently.

            In a statement released here the DRO, who is also the Additional District Magistrate, has said that the general public who are willing to give evidence on the incidents that took place on February 28 and March 1, 2010, at Annamalai Nagar, Chidambaram, shall appear before the him at the above mentioned venue and time.

Read more »

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூர்:

               பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார். கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:
                   பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்துள்ள போடிச்செட்டித் தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, தேரடி தெரு, வெள்ளக்கரை-குமளங்குளம் சாலை, கடலூர் - சித்தூர் சாலைகள் 1கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் (இன்று) நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், கமிஷனர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பெண்களுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் : மகளிர் தின விழாவில் நீதிபதி பேச்சு


திட்டக்குடி: 

             பெண்கள் நலனுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நீதிபதி ரமேஷ்பாபு பேசினார். திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பொன் மணி, தலைமை ஆசிரியர் தனமணி, பெண்ணாடம் சேர்மன் அமுதலட்சுமி முன்னிலை வகித்தனர். இளவரசன் வரவேற்றார். வக்கீல்கள் சங்க செயலாளர் பாபுராஜேந்திரன், மூத்த வக்கீல்கள் சோமசுந் தரம், சுப்ரமணியன் பேசினர்.

              விழாவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ரமேஷ்பாபு பேசியதாவது:அதிக செலவு ஏற்படுமென நினைத்து ஏழை மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர தயங்குவதை தவிர்க்கவே, இலவச சட்ட உதவி மையம் இயங்கி வருகின்றது. இதற்கென நியமிக்கப்படும் வக்கீலுக்கு அரசே ஊதியம் வழங்குகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் பெற கோர்ட் மூலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்க வழி உள்ளது. பெண்களின் நலனுக் காக இயற்றப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சட்டத் தின் மூலம் கணவன், தந்தையால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் அதே வீட்டில் மீண்டும் வாழ போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். வரதட்சணையாக வழங்கிய சீர்வரிசையினை திரும்ப பெறலாம். மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும் அதிகளவு படித்து முன்னேறவும், சமூகத்தில் தனித்துவம் பெறவும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பேசினார். விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. வக்கீல் பழனியாண்டி நன்றி கூறினார்.

Read more »

சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா

கடலூர்: 

                  கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா, சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா பாதிரிக்குப் பத்தில் நடந்தது.

                     தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி வணங்காமுடி தலைமை தாங்கி சட்ட உதவி ஆலோசனை மையத்தை திறந்து வைத்து பேசினார். மாதர் நல தொண்டு நிறுவன நிர் வாக இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர் ஹூசைன், முதன்மை சார்பு நீதிபதி சண்முகநாதன் ஆகியோர்  முன் னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி நர்கீஸ் கரீம், கடலூர் மாஜிஸ்திரேட்டுகள், சுதா, ரமேஷ், அரசு சிறப்பு வக்கீல் வனராசு, வக்கீல் குணவதி ஆகியோர் பேசினர். மகளிர் குழுக்களின் பணிகள் குறித்து  தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீமதி பேசினார்.நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 18 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்காக தலா 15 ஆயிரமும், நிஷா புயலில் பதித்த குழுவினர் 16 பேருக்கு இன்சூரன்ஸ் தொகை  வழங்கப்பட்டது.

Read more »

மருத்துவ முகாம்

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெங்கடசாமி, ரோட்டரி நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன், பாலசந்தர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
 
                முகாமில் 300 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் செல்வம், ராஜகோபாலன், சின்னசாமி, ஐஸ்டின்டேவிட் சிகிச்சை அளித்தனர். செயலாளர் அன்பழகன், ஜெயராமன், ரமேஷ்சந்த், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பயறுவகை பயிர்களுக்கு மானியத்தில் டி.ஏ.பி., பயன்பெற வேளாண் அதிகாரி வேண்டுகோள்


கிள்ளை:

                   பயறு வகைப் பயிர்கள் அதிக மகசூல் பெற டி.ஏ.பி., உரக்கரைசலை தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
வேளாண் உதவி இயக்குனர் தனசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


                      பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கு நல்ல திரட்சியான விதைகளை பெறவும், அதிக மகசூல் பெறவும் டி.ஏ.பி., கரைசலை அவசியம் தெளிக்க வேண்டும். பயறு வகைப் பயிர்கள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களுக்கு டி.ஏ.பி., ஒரு எக்டேருக்கு 25 கிலோ வீதம் 200 ரூபாய் மானியத்தில் தில்லைவிடங்கன், கிள்ளை, பிச்சாவரம், பி.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப் படுகிறது. தேவையான விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு  டி.ஏ.பி., உரத்தினை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழு

சிதம்பரம்:

                    சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து பிரசாரம் செய்வது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 1986 முதல் 1998 வரை 50 ஆயிரம் வழக்குகளில் சிக்கி சிறைபட்ட வன்னியர்களை மிகவும்  பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர்களை அரசு இட ஒதுக்கீடு தியாகிகளாக அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கவும்,  நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர் வரையும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கவும்  2010ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

அண்ணாமலைப் பல்கலை., வகுப்புகள் துவங்கின

சிதம்பரம்:

                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில்  விடுமுறைக்குப்பின்  நேற்று  வகுப்புகள் துவங்கின.

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., யில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு  மாணவர் கவுதம்குமார் (20) கடந்த  28ம் தேதி மோட்டார் பைக்கில் சென்றபோது லாரி மோதி காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் ஆத்திர மடைந்த வெளி மாநில மாணவர்கள், மார்ச் 1ம் தேதி  இரவு ரகளையில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பயந்து ஓடிய மாணவர்கள் முத்தையா நகர் பாலமான் வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயன்ற போது  சுமித்குமார் (22), முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20)  ஆகியோர் சேற்றில் மூழ்கி இறந்தார். இதனால் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவம் தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.

                 இந்நிலையில் நேற்று 11ம் தேதி  எம்.ஏ., எம்.எஸ்சி,. அனைத்து பாடப் பிரிவுகள்,   பி. எட், எம்.எட், பி.மியுசிக், எம்.மியுசிக், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை,. டி.பார்ம், பி.பார்ம், எம்.எஸ்.சி,.  ஐ.டி.,  சப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், பி.இ., எம்.இ., ஆகிய  பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு  வகுப்புகள் துவங்கியது.

Read more »

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
 
                   கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை அகற்றப்பட்டன. கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நெய்வேலி: 

              இருபது சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்தனர். என்.எல்.சி.,யில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக சொசைட்டி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். டில்லியில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ. டி.யூ.சி.,யின் கிளைச் சங்கமான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நெய்வேலி "க்யூ' பாலம் அருகே நடந்த உண்ணாவிரதத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.  என்.எல்.சி., ஏ.ஐ.டி. யூ.சி., சங்க தலைவர் தண் டபாணி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பொன்னுசாமி முன் னிலை வகித்தனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கான்ட் ராக்ட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

சுனாமி குடியிருப்பு : ஆர்.டி.ஓ., விசாரணை

பரங்கிப்பேட்டை: 

               பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தராதது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகிறார். சுனாமியில் பாதித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால் சுனாமியில் முழுமையாக பாதித்த பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெரு பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், முதல்வருக்கு மனு அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிபிரிவில் இருந்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., மற்றும்  துணை சேர்மன் செழியன் ஆகியோரிடம் விசாரணை நடத்த தபால் அனுப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior